ஞாயிறு, 29 மார்ச், 2015

சித்திரபுத்திரன் - 9 கேள்வியும் பதிலும்


-  -
கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.
பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படு கின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.
இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.
ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப் போகாது.
அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாகவேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
குடிஅரசு - கேள்வி பதில் - 29.10.1933

தமிழர் சமுதாயம் 100-க்கு 100 மக்கள் படித்தவர்களாக வேண்டும்; ஆக்கப்பட வேண்டும். பத்தாண்டு களிலாவது தமிழன் சமுதாயம் ஆணும் பெண்ணும் தன் ஜனத் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அரசியல், தொழிலியல் முதலிய சகல துறைகளிலும் விகிதாச்சாரம் பதவி - இடம்பெற வேண்டும். தமிழனைப் பற்றிய வேறு எந்தக் காரியத்தைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும்.
- விடுதலை28.3.15

இன்றைய நாகரிகம்


- தந்தை பெரியார்
தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப் பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள் விகளுக்குச் சரியான பதில் சொல் லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முடிவான பதில் சொல்லக்கூடிய சகலகலாவல்லவ னென்று எண்ணிவிடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம்தான் முடிவான தென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சி யின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக்கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப்படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும் படி கோருகிறேன். நியாயம் வேறு - விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக்கத்தையும், தந்திர சூழ்ச்சிகளையும், பணச் செல்வாக் கையும் பொறுத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத கார ணத்தால் - பேசும் திறமை, எடுத்துக் காட்டும் அனுபோகம் ஆகியவை இல் லாத காரணத்தால் - ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்ததாகி விடுமா? அதுபோல் உங்கள் வாய் அடங் கும்படி நான் பதில் சொல்லி விட்ட தாலேயே நான் சொன்னது சரி என்ற சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாத தாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றையதினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் இந்தியாவின் தற்கால நாகரிகம் என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகர மானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத்தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண் டிருக்கிறீர்கள்.
நாகரிகம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷய மாகும். ஒவ்வொருவரும் நாகரிகம் என்பதற்கு ஒரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ்குறளில் நாகரிகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத் தப்பட்டிருக்கிறதாக நான் 10,20 வருஷங் களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாட்சண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் எனக்கு ஞாபகம்.
நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக்கருத்தை வைத்துக்கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவ னைகளிலும் பெரிதும் மாறுபட்டிருக் கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க் கொண்டிருக் கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறி யது. மறுபடி கீழே இறங்கியது. இப் பொழுது மறுபடியும் மேலேயே போய்க்கொண்டிருக்கிறது. மேல்நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம். இப்பொழுதோ என் றால் ஆடை விஷயத்தில் மேல்நாட்டுப் பெண் களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட் டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்று தான் கருதுகிறோம்.
நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும்பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்று களை விட்டுவிட்டு (திக்ஷீமீமீயாக) சுயேச்சை யாக சீர்தூக்கிப் பார்த்தால்தான் விஷ யங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவசிவா என்று ஜெபிப்பதுதான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய காலதேச வர்த்தமானங்கள் மேல் சொன்ன விஷயத்தைக் கேலி செய்கிறது.
புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக்கொண்டாலும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக் காரியா? அடிமைப் பட்ட மாடா? ஜாக்கிர தையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் வித்வத்தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக்கத் தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கை யிருந்ததை சிலாகித்துப் பேசினோம். ஆனால் இன்றையதினம் பிரத்தியட்சமாக எதையும் எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்து வதையும் - விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.
நாகரிகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்க வாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான - வழக்கத்தையே யொட்டி நாகரிகம் காணப்படுகிறது.
காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற் றொன்று தோன்றவும் - புரட்சி ஏற்படவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்கள். எது நாகரிகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக் கொண்டு போகத்தான் செய்கின்றது.
ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத் தினால் செலாவணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம்.
நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ணவேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமுகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாக பாவிக்கப்பட்டிருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும் தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்ல லாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொதுநோக்கோடு கவனித் தால் உண்மை விளங்காமல் போகாது.
நாம் ஒரு காலத்தில் தேசம், தேசியம்-தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித்தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள் அபிமானம் (Citizen of the World) என்று கருதுவதையே பெரிதும் நாகரிக மாகக் கருதமுன் வந்துவிட்டோம்.
ஒரு காலத்தில் நாகரிகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன், தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக் கொண்டு ஒவ்வொருவரும் தாங்கள் அதிக மேல் ஜாதிக்காரனா வதற்குச் சைவ, வைணவப் போக்கைப் பற்றிக்கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால், இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்தி கெட்ட தனமென்றம், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்துவருகிறோம். ஒரு காலத்தில்   தனித் தத்துவம் நாகரிகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி. நன்மை யும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்து விட்டோம்.
தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்குக் கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை - மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர் களென்றும், லேவாதேவிக்காரர்களை-மனித சமுக நாச கர்த்தாக்களென்றும்-மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர் களையும் மனித சமுக விரோதிக ளென்றும் கண்டிக்கின்றோம்.
நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷய மென்றும் முன்பே கூறினேன். நம்நாட்டுப் பெண்கள் எப்படி (Belt) (பெல்ட்) கட்டாமல் சீலை கட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக் கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர் களைச் சேர்த்து முடிந்து கொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்குத் தினம் ஒரு இலை (Plate) எப்படிச் செலவு செய்கின் றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரி யப்பட்டு நம்மவர்களைக் கேட்ப வரையும் கேட்டிருக்கி றோம். ஒவ்வொரு வரும் அவர்களின் செய்கையைச் சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாகக் கருத நேரிடுகிறது.
நம்மிடையேயுள்ள ஜாதி அபி மானம் சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.
காந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு போதிய ஆடையின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித் தனமானதாகும். சவுகரியத் திற்காகவும்-நன்மைக்காகவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்துகொள்ளாமல் பிடிவாதத் தோடு- கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துப்போக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?
புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத் தறிவை மேற் போட்டுக் கொண்டு ஜன  சமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டி ருந்தவர்கள் கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருந்தக் கூலிதரும் என்று சொல்லி வருகிறார்கள். ஆகவே, தோழர்களே! நீங்கள் தன்நம்பிக்பிக்கை கொண்டு  மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக் கொண்டு போராட வாருங்கள்.
(ஈரோடு லண்டன் மிஷினரி சொசைட்டியின் லைப்ரரி அசோசியேஷன் கூட்டத்தில் இன்றைய நாகரிகம் என்பது பற்றிய ஆற்றிய சொற்பொழிவு)
புரட்சி - சொற்பொழிவு - 31.2.1933
- விடுதலை-29.3.15,பக்கம்-2

சனி, 21 மார்ச், 2015

பகுத்தறிவும் கடவுள் வாக்கும் தந்தை பெரியார்


வினா:- மதம் என்றால் என்ன?
விடை:- உண்மையில் நம்பிக்கை.
வினா:- உண்மை என்றால் என்ன?
விடை:- ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பரிபூரணமான ஞானமே உண்மை.
வினா:- உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன?
விடை:- அப்பேர்ப்பட்ட பூரண ஞானம் வாழ்க்கையின் உயரிய லட்சி யத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போது மானது என்ற நம்பிக்கையே உண்மை யில் நம்பிக்கை எனப்படும்.
வினா:- உண்மையில் உள்ள நம்பிக் கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது?
விடை:- தன் உயர்வான - தெளிந்த - அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதனால் நிரூபித்துக் காட்டலாம்.
வினா:- உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது?
விடை:- அனுபவத்தினாலும், பயிற்சி யினாலும் அடையலாம்.
வினா:- வேறு வழியில்லையா?
விடை:- இல்லை.
வினா:- மதத்தைப் பற்றி நீ கூறிய வியாக் கியானம் பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்ட வியாக்கியானம் தானா?
விடை:- தெய்வ நம்பிக்கையும், தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள் வகுத்த விதிகளில் நம்பிக்கையுமே பொதுவாக மதம் என மதிக்கப்படுகிறது.
வினா:- தெய்விகம் என்றால் என்ன?
விடை:- தெளிவாய் அறியப்பட்ட இயற்கை விதிகளுக்குப் புறம்பானவை களெல்லாம் தெய்விகமானவைகளே.
வினா:- அத்தகைய விஷயங்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன?
விடை:- அவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றைப் பற்றி தாராளமாக விவாதிக்க இடம் கொடுக்க வேண்டும்.
வினா:- இதர வழிகளில் அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை கடவுள் வாக்கான வேதங்கள் நமக்கு விளக்கிக் கூறவில்லையா?
விடை:- எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. எனவே எந்த வேதம் உண்மையான கடவுள் வாக்கு என்பதை நாம் முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
வினா:- வேதங்களில் சிலவற்றைக் கூறுக.
விடை:- ஜொராஸ்டிரிய வேதம், பிராம்மண வேதம், பவுத்த வேதம், யூத வேதம், கிறிஸ்தவ வேதம், முகமதிய வேதம், மார்மண் வேதம்.
வினா:- இந்த வேதங்கள் எல்லாம் தெய்வ வாக்கென உரிமை பாராட்டு கின்றனவா?
விடை:- ஆம்.
வினா:- அந்த வேதங்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்ணியம் செய் கின்றனவா?
விடை:- இல்லை. மாறாக ஒவ்வொன் றும் மற்றவை பொய்யென்று கண்டிக் கின்றன.
வினா:- அதை விளக்குக.
விடை:- எனக்கு நிகராக உலகத் திலோ, சுவர்க்கத்திலோ யாருமில்லை. நானே பூரண ஞானம் பெற்ற புத்தன் என்று புத்தர் கூறியிருக்கிறாராம்.
வினா:- வேறொரு உதாரணம் கூறுக.
விடை:- நானே உண்மையான வழி காட்டி; எனக்கு முன் வந்தவர்கள் எல்லாம் பொய்யர்கள், திருடர்கள், என்னையன்றி வேறு ஒருவருக்கும் என் பிதாவை அணுக முடியாது என்று இயேசு கூறியிருக்கிறாராம்.
வினா:- இதை விட முக்கியமாக மதிக் கக் கூடிய ருசு வேறு ஏதாவதுண்டா?
விடை:- ஒவ்வொரு மதஸ்தரும் பிற மதஸ்தரை, தம் மதத்துக்கு இழுக்க முயல்கிறார்கள்.
வினா:- மதமாற்றம் என்றால் என்ன?
விடை:- நாம் நம்புவது போலப் பிற ரும் நம்பும்படி செய்வதே மதமாற்றம்.
வினா:- அதன் நோக்கம் என்ன?
விடை:- நோக்கம் பலவாக இருக்க லாம். எனினும் அவற்றுள் முக்கியமா னது நம்மைப் போல் மற்றவர்கள் நம் பாவிட்டால் நரக தண்டனை பெறு வார்கள் என்பதே.
வினா:- மேலே கூறப்பட்ட வேதங்களில் எது உண்மையானது?
விடை:- ஒன்றாவது - முழுதும் மெய் யானதோ பொய்யானதோ அல்ல.
வினா:- அவற்றுள் எது பொய், எது மெய் என்று எவ்வாறு அறிவது?
விடை:- பகுத்தறிவினால் அறிந்து கொள்ளலாம்.
வினா:- அப்படியானால் வேதங்களை விடப் பகுத்தறிவு மேலானது என்று ஏற்படாதா?
விடை:- ஆம். ஏற்படத்தான் செய்யும்.
வினா:- அவ்வளவு உயர்வான பகுத் தறிவு நம்மிடம் இருக்கையில், மேலும் நமக்கு மதங்களும், வேதங்களும் வேண் டுமா?
விடை:- நமக்கு வேண்டாம். பகுத் தறிவுக்குப் பொருத்தமான வேதங் களைத்தான் ஒப்புக் கொள்ள முடியும்.
வினா:- ஒரு புத்தகத்தில் கடவுள் வார்த்தை அடங்கியிருப்பதாக நீ நம்பினால், அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருந்தாலும், இல்லா விட்டாலும் நீ அதைப்பூரணமாக நம்ப வேண்டியது தானே?
விடை:- நம்பத் தேவை இல்லை.
வினா:- அது எப்படி?
விடை:- நான் குருட்டுத்தனமாக நம்பினால் அந்த நம்பிக்கைக்கு மதிப்பேயில்லை. கட்டாயத்தின்பேரில் நம்பினால் அது மனப்பூர்வமான நம்பிக் கையுமல்ல. பகுத்தறிவால் தூண்டப் பட்டு நான் நம்பினால் என் நம்பிக் கைக்குப் பாத்திரமானது என் பகுத் தறிவேயன்றி வேதமல்ல.
வினா:- இதற்கு ஒரு உதாரணம் கூறுக.
விடை:- பூமி பரப்பானது என்று எந்த வேதம் கூறினாலும் நாம் நம்ப மாட் டோம். ஏனெனில், நமது அனுபவத் திலும், ஆராய்ச்சியிலும் பூமி பரப்பாக இருக்கவில்லை.
வினா:- பகுத்தறிவுப்படி தப்பானதை யும் நம்ப வேண்டுமென்று வேதம் கட் டளையிட்டால் நீ கடவுள் வாக்கான வேதத்துக்குக் கீழ்ப்படிவாயா? பகுத் தறிவுக்குக் கீழ்ப்படிவாயா?
விடை:- பகுத்தறிவுக்கு ஒத்தபடி நான் நடந்து கொள்ளாவிட்டால் நான் ஒழுக்கமுடையவன் ஆகமாட்டேன்.
வினா:- பகுத்தறிவு பொய் என்று கூறு வதை, மெய் என்று நம்புவது சாத்திய மில்லையா?
விடை:- சாத்தியமே அல்ல. பகுத் தறிவே மேலான ஆதாரம்; அதிகாரி. மெய்யானதை மெய்யென்று நம்பும்படி பகுத்தறிவைக் கட்டாயப்படுத்த யாருக்குமே அதிகாரமில்லை.
வினா:- பகுத்தறிவுக்கு முரணான விஷ யங்களை எந்த வேதமாவது போதனை செய்கிறதா?
விடை:- ஆம். எல்லா வேதங்களும் போதனை செய்கின்றன.
வினா:- உதாரணம் கூறுக.
விடை:- படைப்புக் கதை.
வினா:- வேறொரு உதாரணம்.
விடை:- பிரளயக் கதை.
வினா:- மேலும் ஒரு உதாரணம்.
விடை:- மனிதன் சபிக்கப்பட்டுப் பாபியான கதை.
வினா:- அவற்றைப் பற்றி தற்காலத்திய அபிப்பிராயம் என்ன?
விடை:- வேதங்கள் கூறுகிறபடி மனிதன் சாபத்துக்கு உள்ளாகவில்லை; பிரளயம் உண்டாகவில்லை; கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை என இப்பொழுது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது.
வினா:- வேதங்களில் உள்ள வேறு தப்புகள் எவை?
விடை:- சரித்திரப்படியும், விஞ்ஞான சாஸ்திரப்படியும் தப்பான பல விஷயங்கள் வேதங்களில் அடங்கியிருக் கின்றன. வேதங்களில் கூறப்பட்டவை எல்லாம் பரஸ்பரம் முரணாக இருக் கின்றன. பாபகரமான பல விஷயங் களையும், வேதங்கள் போதனை செய் கின்றன.
வினா:- வேதங்களில் காணப்படும் இத்தகைய தப்புகளுக்குக் காரணம் என்ன?
விடை:- மனிதன் தப்புச் செய்யக் கூடியவன்தானே!
வினா:- அப்படியானால் வேதங்கள் எல்லாம் மனிதன் வகுத்ததுதானா?
விடை:- வேதங்கள் மக்களின் அறிவும், அறியாமையும், நற்குணமும், துர்க்குணங் களும் அடங்கிய ஒரு நூலேயன்றி வேறல்ல.
வினா:- அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?
விடை:- நம்மிடமுள்ள ஒளி வழி காட்டுகிறபடி நடக்க வேண்டும்.
வினா:- அது என்ன ஒளி?
விடை:- அதுதான் பகுத்தறிவு.
வினா:- பகுத்தறிவு நம்மைத் தப்பு வழியில் செலுத்தாதா?
விடை:- ஆம். செலுத்தக் கூடும்.
வினா:- அப்படியானால் அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்?
விடை:- ஏனெனில், அதை விடச் சிறந்த வழிகாட்டி நமக்கு வேறில்லை.
வினா:- வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக் காரணம் என்ன?
விடை:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங்கெட்டு விடும் என்ற பயமே அதற்குக் காரணம்.
வினா:- அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா?
விடை:- இல்லவே இல்லை. வேதங் களின் பெயரால் எவ்வளவோ பயங்கரக் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களை நம்பாத அநேகர் உதவியாளராக இருந்திருக்கின்றார்கள்.
வினா:- எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளிய துண்டா?
விடை:- இல்லை. சுமார் 5,000 வருஷங்களுக்கு முன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது.
வினா:- அதற்குமுன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா?
விடை:- நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்கு முன் மக்களும், சமூகங் களும், தேசங்களும் இருந்தே வந்திருக் கின்றன.
வினா:- உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளினாரா?
விடை:- இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது.
வினா:- அப்படியானால் உலக மக் களில் யூதர்கள் மட்டுந்தானா ஒழுக்க முடையவர்கள்.
விடை:- இல்லவே இல்லை. கடவுள் மூலம் வேதம் பெறாத கிரேக்கர் பண்டு மிக்க நாகரிகம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
வினா:- அதனால் விளங்குவது என்ன?
விடை:- வேதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை யென்பது அதனால் விளங்குகிறது.
வினா:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போதிப்ப தனால் நன்மை ஏற்படுமா?
விடை:- ஏற்படாது. முதலில், வேதங் கள் இல்லை. இரண்டாவது வேதங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் ஆகி விட்டால் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாமல் ஆகி விடும்.
வினா:- மெய்யான விஷயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எப்படி?
விடை:- பிரதிபலனை எதிர்பாராமல் நன்மையானதைச் செய்வதனாலும், விரும்புவதனாலும் வலுப்படுத்தலாம்.
வினா:- நல்ல ஒழுக்கத்திற்கு வேறு தூண்டுதல்கள் எவை?
விடை:- முக்கியமான தூண்டுதல் சுயமதிப்பில் விருப்பம்; இரண்டாவது பிற நல விருப்பம்; மூன்றாவது கடமை உணர்ச்சி.
வினா:- கடமையைச் சரிவரச் செய்வது எப்பொழுதும் இன்பகரமாக இருக்குமா?
விடை:- கடமை ஒரு சோதனை என்றும், உத்தமர்களாக இருக்க வேண் டுமானால் நம்மையே நாம் தியாகம் செய்துவிட வேண்டும் என பழைய மதங்கள் போதனை செய்கின்றன.
வினா:- அத்தகைய மத போதனை யினால் விளையும் பயன் என்ன?
விடை:- அதனால் உத்தம வாழ்க்கை நடத்த ஜனங்கள் பயப்படுகிறார்கள். உத்தம வாழ்க்கையைப் பற்றி எண்ணும் போதும் பயமும் மனச்சோர்வுமே அவர்களுக்கு உண்டாகிறது.
வினா:- அவ்வளவுதானா?
விடை:- துஷ்டர்களுக்குத்தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களுக்கு உண்டாகிறது.
வினா:- கடமை என்பதற்குச் சரியான பொருள் என்ன?
விடை:- கடமை ஒரு சோதனை அல்ல; தியாகமுமல்ல, கடமை என்பது ஒற்றுமை, அழகு. மகிழ்ச்சி, சரீர மானச விதிகளை நாம் மீறும்போதுதான் நாம் ஆத்ம தியாகம் செய்து சோதனைக்கு உள்ளாகிறோம்.
(குடிஅரசு 19.4.1936)
.............
யார் தேசத் துரோகிகள்?
இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.
நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ இந்து தேசத்துக்குத் துரோகம் செய்ததாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும். நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.
வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும் அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும் நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா?
அவர்கள் ஒழித்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு நாங்களும் கையொப்பம் போடுகிறோம்.
அதற்குச் சக பார்ப்பனர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம்.
அதை விட்டுவிட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினை த்தால் அது முடியுமா? என்று தான் கேட்கின்றேன்.
சேலம் விக்டோரியா மார்க்கெட்டில் பெரியார் .வெ.ரா. சொற்பொழிவு குடிஅரசு 14.06.1936

-விடுதலை ஞாயிறு மலர்,21.3.15