திங்கள், 29 நவம்பர், 2021

"என்றென்றும் 'சூத்திரனாக' இருப்பதைவிட மானக்கேடு வேறு என்ன?" (சட்ட எரிப்பு ஏன்?)


 தந்தை பெரியார்

26ஆம் தேதி கிளர்ச்சியில்

நீதிமன்றத்தில் கூற வேண்டியது

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும்அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறதுஅரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லைஅச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன்இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டுஇதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லைஆதலால் நான் குற்றவாளியல்லஇந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லைநான் எதிர்வழக்காட விரும்பவில்லைநான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

பெரியார் அறிக்கை ('விடுதலை' 23-11-1957)

எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்பார்ப் பானை ஏன் திட்ட வேண்டும்?" என்ற சிலர் கேட்கிறார்கள்எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்ஏன் தன்னைப் பிராமணன் என்று  சொல்லிக் கொள்கிறான்ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்அவனுடைய  பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ளவேண்டும்இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்ட சபையில் சிலர் பேசுகிறார்கள்எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?

எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்புசாஸ்திரம்புராணம்சட்டம் என்றால்நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம்மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமைகிடையாது.

சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்அவற்றி லெல்லாம் கைவைக்கக்கூடாதுஎன்றால் எப்படி ஒழியும்கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமாதுஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல்மண்முள்காடு எல்லா வற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள்பாம்புகரடிபுலி எல்லாம் ஒழியும்அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக் கிறார்களோஎன்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்இவை தனிப்பட்ட உரிமைகள்இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடைகொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்இராமனைக் கொளுத்தினோம்.

சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறதுஅந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும்இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம்என்று 3ஆம் தேதி  (1957 - நவம்பர்கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர் மானம் போட்டு 15 நாள் வாய்தா (காலக்கெடுகொடுத்தோம்.

இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டதுநாம் கொடுத்த 15 நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமாசாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!

இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறதுஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்இல்லை நெருப்பு வைக்கக்கூடாது  என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்அல்லது இருந் தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.

நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய்சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களுக்கும்

ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தா விட் டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!

சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார்அரச மைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள்நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்கான சட்டம் வகுத்துக் கொண்டார்கள் அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக் கிறார்கள்ஆகவே தான் கொளுத்துகிறோம்கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?

இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதிவைத்துக் கொண்டுள்ளான்இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழ வேண்டுமென்று கொண்டு வந்து விடுவான்!

நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரேபாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரேஇது ஒரு வருடம் நடந்ததேஇத் தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும் பான்மைஒன்றும் அசைக்க முடியவில்லையேகத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார்பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார்.

நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்அந்த மாதிரியான சட்டமும்அமைப்பும்வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றனஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறதுஇன் னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான்இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!

சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும்ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள்அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?

1957 - நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6 ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சிகுளித்தலைபசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என்மீது கேசு (வழக்குபோட்டிருக்கிறார்கள்.

சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றனஎன்று; "இல்லை இல்லைகொல்லுகுத்துஎன்று பேசி யிருக்கிறார்என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசியபேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட் களைக் கொண்டு வாருங்கள்என்று பத்திரிகைக் காரர்களை மந்திரி கேட்டார்இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.

சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்றுஇதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்செய்திருக்கின்றனர்அதன் பின்னர் மேலிடத்தி லிருந்து உத்தரவு வந்திருக்கிறது!  மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்குஎடுத்து இருக்கிறார்கள்மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள்அவனுக்குத் தமிழ்நாடு சட்ட சபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள்அவனுக்கு நாடாளுமன்றத்திலே சட்டம் செய்ய வெட்கம்உலக மெல்லாம் தெரிந்துபோகுமேதமிழ்நாட்டில் காந்தி  சிலையை உடைக்கிறார்கள்அரசமைப்புச் சட்டத்தைக்  கொடியைக் கொளுத்துகிறார்கள்அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.

சட்டசபையிலேஎன்மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் (நீதிமன்றத்தில்இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லைஅதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்லமனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.

இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும்மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும்அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான்மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாதுஇந்து மதம் உள்ளவரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையைஎடுக்க மறுத்தான்அந்த ஓட்டல் (உணவகம்முன்மறியல் செய்து 800 பேர்வரை சிறைக்குச் சென்றி ருக்கின்றனர்நம்முடைய சர்க்கார் (அரசுஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள்மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத் துள்ளோமே என்கிறான்ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம்நாம் இங்கே மறியல் செய்கிறோம்அங்கே கேரள ஆட்சியில் சாதிச்சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.

நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம்மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம்நிலைமை மாறவில்லைஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம்இதில் வெற்றிபெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப் போகிறோம்.

நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் "ஜவகர் லால் நேருராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்துஇவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்றுவேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்சட்டத்தினாலேயே உயிர்வாழ்மக்களுடைய அன்பினால்திருப்தியினால் நீ (அரசாங்கம்உயிர்வாழப் போவதில்லைசுதந்திரம் (விடுதலைவந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்இன்னமும் நாங்கள் சூத்திரர்கள் தான்வடநாட்டானால் கொள்ளையடிக்கப் படத்தான்  இந்தச் சுதந்திரம் என்றால்நாங்கள்  சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?

போலீஸ்காரனுக்கு அடங்கி நடசட்டத்திற்கு அடங்கி நடஎன்று நான் சொல்கிறேன்இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்இல்லை நான் சொல்வது பொதுமக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடுஅதில் 2 லட்ச மக்கள் திரண்டனர்அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும்இல்லை பொதுஜன வோட்டு எடுசாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்றுஒன்று மில்லை வெறும் அடக்குமுறை தான் என்றால் என்ன அர்த்தம்?

அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்டமுடியுமாஇந்த நிலை யில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப்போக நாம் துணிந்து விட வேண்டியதுதானேமூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால்தானே நாம் மனிதர்!

ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26ஆம் தேதியன்று நாம் ஆயிரக் கணக்கில் கொளுத்த வேண்டும்இரகசியமாயல்லபகிரங்க மாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள்கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்குஅழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!

"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாதுஇதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்என்று சொல்லுங்கள்

முக்கியமாக உள்ள கழகத்தோழர்கள் நூற்றுக் கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண் டும்கொளுத்திய அந்தத் துண்டு காகிதங்களையும் சாம் பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.

தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர்விலாசம் (முகவரிஎல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.

"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்அதற்காக எந்த விலை கொடுக்கவும் நாங்கள் யார் என்பதை 26ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!

17-11-1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் .வெ.ராசொற்பொழிவு : ('விடுதலை'  22-11-1957)

வியாழன், 25 நவம்பர், 2021

ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை


 பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது - இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல் களும் சரியாகுமா?' என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டிலிருக்கும் வரையில் (இங்கிலீஷ்காரனைப் பின்பற்றி) இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி யைச் செய்து கொண்டுதான் இருப்பான்.

('விடுதலை' 10.1.1947)

வெள்ளி, 19 நவம்பர், 2021

கூறுவது என்ன? நடப்பது என்ன?

 


 


பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில்அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார்அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மதவேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும்கடவுள் அம்சம்தான்ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறதுஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....