திங்கள், 24 நவம்பர், 2014

நமது உயிரைக் கொடுத்தேனும் ஜாதியை ஒழிப்பொம்

ஜாதி ஒழிப்பைக் காங்கிரஸ் கட்சி தன்னுடைய இலட்சியமாகக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் இராஜ-கோபாலாச்சாரி சொன்னார், நாயக்கரே! (திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்) இது வீண்வேலை; புத்தனெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போனான்; முஸ்லிம் 700 ஆண்டு முயற்சி செய்து தோற்றுப் போனான்; நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்? என்றார்.

நான் தோற்றாலும் கவலையில்லை; இது நல்ல வேலையாகத் தெரிகிறது; அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு; மக்களுக்கு அறிவுவர ஆரம்பித்துள்ளது; மேலும் இன்னும் எத்தனை காலம் நாங்கள் சூத்திரராக (தேவடியாள் மக்களாக) இருப்பது என்றேன் நான்.
பிறகு காங்கிரசை விட்டு 1925 இல் காஞ்சிபுரம் மாநாட்டிலே வெளிவந்தேன்; நான் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தைச் சூழ்ச்சியாக ஒழித்துக் கட்டினார்கள். காங்கிரஸ் ஸ்தாபனம் (கட்சி) பார்ப்பனரல்லாதாருக்குத் துரோகம் செய்து அவர்களைப் பார்ப்பனருக்குக் காட்டிக் கொடுக்கும் அமைப்பு என்பதை நன்றாக உணர்ந்தவுடன் நான் வெளியே வந்தேன். வந்தவுடன் (1925) சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தேன்; இந்த 32 வருடங்களாக ஜாதிகள் ஒழிய வேண்டும் என்றே பிரச்சாரம் செய்து வருகிறேன்.
1938 ஆம் ஆண்டில் இராஜகோபாலாச்-சாரியார் சென்னைக்கு முதன்மந்திரியாக வந்தபோது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடாமாக்கினார். அதை எதிர்த்து 2000 பேரைச் சிறைக்கு அனுப்பினேன்; எனக்கும் 2 வருட தண்டனை விதித்தார்கள். அப்போது சொன்னேன்: நான் தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ் மக்களின் கைக்கு வந்து ஆகவேண்டும் என்பதை; அப்போதே நான் உணர்ந்தேன்; காங்கிரஸ்காரன்கூட விடுதலை கேட்காத காலம். ஏதோ கொஞ்சம் அதிகமான அதிகாரத்தை வெள்ளைக்காரன் கொடுத்தால் போதும் என்று சொல்லி வந்த காலம்.
நம்முடைய இயக்கம் நாளுக்கு நாள் நல்லமுறையில் வளர்ந்து வருகிறது; நம்முடைய உண்மையான பலத்தை அறிந்தவர்கள் வடநாட்டவர்களே. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு மிகுந்த பாதுகாப்பைத் தேடிக்கொண்டார்கள்.
இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைக்க வைக்க சூழ்ச்சி செய்ததுதான் இந்த அரசமைப்புச் சட்டம்! தமிழ்நாட்டைப் பற்றிப் பார்ப்பனருக்கு மிகவும் சந்தேகம்; பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இங்கு மிகுதியாக உண்டு; நாட்டு ஆட்சி தமிழர்கள் கைக்குப் போனால் தங்களை ஒழித்துக் கட்டிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே யாரை விட்டாலும் விடலாம். இந்தத் தமிழ்-நாட்டவரை மட்டும் தனியாக விடக்கூடாது. அவர்களை என்றென்றும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி விட்டார்கள்.
பெயருக்கு ஏதோ இது கூட்டாட்சி (திமீபீமீக்ஷீணீறீ ஷிணீமீ) என்று பெயர். ஆனால் இது உண்மையல்ல. பலமான சர்வாதிகார ஆட்சியே கூட்டாட்சி என்று சொல்கிறானே ஒழிய சட்டத்தில் பிரிவதற்கு இடம் இல்லை. அந்தப் பிரச்சினைக்கே அதில் இடம் கிடையாது. சேர்வது வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். கோவாவைச் சேர்த்துக் கொள்ளலாம். பாண்டிச்சேரியைச் சேர்த்துக் கொள்ளலாம்; பாகிஸ்தான் மீதுகூட சண்டைக்குப் போகலாம்! ஆனால் நம்முடைய தமிழ்நாடு பிரிவதற்குச் சட்டத்தில் இடமில்லை; ஆகவே கூட்டாட்சி என்று சட்டத்தில் போட்டிருப்பதெல்லாம் பித்தலாட்டம்.
ஜாதியினுடைய இழிவை மக்கள் உணர்வதில்லை; அந்த அளவுக்கு அதில் ஊறிப்போய் விட்டார்கள்; ஏதோ பகவான் செயல், பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டுள்ளனர் நம்முடைய மக்கள். என்றைய தினம் மதம், கடவுள் இவற்றில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ அப்போதே இந்த இழிவை இவர்கள் உணராத நிலைக்கு வந்து விட்டார்கள்.
இந்த ஜாதி முறையைக் கண்டித்தவர்கள்  இரண்டொருவர். அவர்களில் புத்தர் ஒருவர். அவருடைய கொள்கையை இந்த நாட்டை-விட்டே ஒழித்துவிட்டார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கை தோன்றிய நாட்டில் வாழ்கிறார்கள். புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்தார் அம்பேத்கர்! உடனே அரசாங்கம் புத்தக் கொள்கையில் சேர்ந்தவர்-களுக்குச் சலுகையில்லை; வேலைக்கு இடம் ஒதுக்கி வைக்கமாட்டோம் என்று சொல்லி-விட்டார்கள். அந்தக் கொள்கைக்குப் போனவன் இரண்டொருவனும் இப்போது திரும்பி வரப் பார்க்கிறான்.
புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்த அம்பேத்கரைக் கொன்று போட்டு ஒழித்து விட்டார்கள். அவர் எப்படிச் செத்தார் என்பதற்கு இன்றைய தினம் வரை தகவல் ஏதும் இல்லையே! ஏதோ இரவு பத்து மணிவரை படித்துக் கொண்டிருந்தார்; படுக்கைக்குப் போனார்; பொழுது விடிய படுக்கையில் பிணமாகக் கிடந்தார் என்பதைத் தவிர எப்படிச் செத்தார் என்று யாரும் சொல்லவில்லையே? இந்து மதத்திற்கு விரோதமாக (பகையாக) இருந்த அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது-தானே இவர்களுடைய எண்ணம்? அதன்படி அவரைக் கொன்றுபோட்டு விட்டார்களே! இதைப்பற்றிக் கேட்கக்கூட இன்று நாதி இல்லையே?
வெள்ளைக்காரனுக்கு இந்த நாட்டில் ஆதிக்கத்திற்கு  வசதி செய்து கொடுத்தவன் பார்ப்பனன். நீங்கள், காங்கிரஸ் சரித்திரம், என்ற புத்தகத்தை வாங்கிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்; காங்கிரசின் முதல் தீர்மானமே வெள்ளைக்காரன் ஆட்சி என்றென்றைக்கும் நீடிக்க வேண்டும் என்பதுதான். வெள்ளைக்காரனுக்கு உதவி செய்து தங்களுக்கு வேண்டியபடி அவனுடைய காலத்திலேயே சட்டத்தை ஏற்பாடு செய்து-கொண்டுவிட்டார்கள் பார்ப்பனர்கள்.
நம்மை இன்று ஆள்கின்ற இந்து லாவை (இந்து சட்டம்) வாங்கி அதன் முதல் பக்கத்தை முகவுரையைப் படித்துப் பாருங்களேன்.
இந்து லாவானது இந்துமத வேதசாஸ்திரங்-களை அடிப்படையாகக் கொண்டது. பராசரர், நாரதர், யாக்ஞயவல்கியர் மனு ஆகியவர்-களுடைய ஸ்மிருதிகளை (கருத்துகளை) அடிப்படையாகக் கொண்டது; வருணா-சிரமத்தை அடிப்படையாகக் கொண்டது; இந்து லாவில் ஏதாவது சந்தேகம் வந்தால் சொந்தப் புத்தியை உபயோகப்படுத்தக்கூடாது. சாத்திரங்-களில் வல்லவர்களைக் கூப்பிட்டுத்தான் சந்தேகம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தானே போட்டிருக்கிறது இந்து லாவில்? யாராவது இல்லை என்று சொன்னால் நான் மாற்றிக் கொள்ளுகிறேன்; கொஞ்ச நாள்களுக்கு முன் சுயமரியாதைத் திருமணம் சம்பந்தமாக அய்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) வழக்கு  ஒன்று வந்தபோது வேத சாஸ்திர அடிப்படையில்தானே தீர்ப்புக் கூறப்பட்டது? வேதத்தின் சூத்திரத்தையல்லவா ஜட்ஜ்-மெண்டில் (தீர்ப்பில்) எடுத்துக்காட்டி அதன் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவதாக எழுதியிருக்கிறார் நீதிபதி.
-ஜாதிப் பிரிவினையால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? இருக்கவேண்டிய அவசியமென்ன? வேண்டுமானால் இந்தப் பார்ப்பான் பாடுபடாமல், உடம்பை வளைக் காமல் வாழமுடிகிறது. மற்றவர்கள் அடைந்த, அடைகின்ற இலாபம் என்ன?
நம்முடைய மக்கள் பிறவித் தொழிலாளர் களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும் இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்க நாம் முயற்சிகள் செய்துள்ளோம். எங்களுடைய முயற்சிகள் போதிய பயனளிக்காததற்குக் காரணம் சட்டம் குறுக்கே நிற்கிறதுதான்.
உயிருக்கு நாங்கள் துணிந்துவிட்டோம். முதலாவதாக அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப்போகிறோம். இந்தச் சட்டத்துக்குக் காரணமான காந்தியை அடுத்தபடியாக ஒழிக்கப்போகிறோம், பிறகு உயிரைக் கொடுப்போம்.
(23.10.1957 அன்று நெல்லை மாவட்டம் ஏரலில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை 4.11.1957)

ஞாயிறு, 23 நவம்பர், 2014

முப்பெரும்கேடுகள்


- தந்தை பெரியார்
இப்போது உள்ளபடி நானும்நீங்களும் கீழ்சாதி. இந்த இழிநிலை நீங்க, கிளர்ச்சி நடந்து  தீரவேண்டும். ஆகவே இப்போது எனக்கு அளித்த வரவேற்பு எல்லாம் நாம் எல்லோரும் மீண்டும் சிறை செல்ல வழி யனுப்பு உபசாரமே என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது! சிறைமீண்ட பெரும் பாலான நம் தோழர்களும், மீண்டும் சிறை ஏகத் தயார்! போராட்டத்துக்குத் தேதி கொடுங்கள்! என்று சொல்கிறார்கள்.
சிறை சென்றவர்களில் சில பேர் செத்தனர், இவர்களெல்லாரும் சாகாதிருந் தால் ஆயிரம் ஆண்டுகளுக்கா இருக்கப் போகிறார்கள்? நோயால் தூக்குப் போட்டுக் கொண்டா செத்தோம்? இல்லை! பின் எதற்காக? இலட்சியத்திற்காகச் செத்தனர். எனக்கும் உங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். எந்த நேரத்திலேயோ சாகும் நாம், இந்த உயர்வான இலட்சியத் துக்காகச் சாவோமே! செத்தவர்களைக் கண்டு  நாம் வெட்கப்பட வேண்டும். நாமும் இலட்சியச் சாவு பெறத் துணிய வேண்டும்.
நமது இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். காரணம் விளங் கினால்தான் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்! தோழர்களே!  இந்த நாட்டிலே மனித சமுதாயத் துக்கு மூன்று பெரிய கேடுகள்!  மக்கள் நன்மை தீமை உணர இவற்றை  ஒழித்தாக வேண்டும்.
முதலாவதாக மேல்சாதி.... கீழ் சாதி; ஒருவன் பார்ப்பான், கடவுளுக்குச் சம மானவன்! அவன் சாமி! பிராமணன் என அழைக்கப்பட வேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந் தவர்கள்.
மனிதனில் எதற்கு மேல்சாதி.... கீழ்சாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே!
மேல்சாதி என்பது பாடுபடாத சோம் பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ் சாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் சாதி. பாடுபட்டதைச்  சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.
இரண்டாவதாகப் பணக்காரன், ஏழை. இது எதற்காக? பணக்காரன் - ஊரார் உழைப்பை அனுபவித்து, பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப் படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடு படுகிறான்? ஏழை என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?
மூன்றாவதாக - ஆண் எஜமானன்! பெண் அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணி யானாலும் சரி பெண் அடிமைதான்! சில நிர்ப்பந்தம், அடக்குமுறை ஆண்களுக் குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங் களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் எசமான்; பெண் அடிமை; இந்த வேறுபாடு தேவை யில்லாதது; அக்கிரமமானதுங்கூட; பொருத் தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.
இங்கு மூன்று பேர் மேல் சாதி; 97 பேர் கீழ்ச்சாதி! அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மை யினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்து கிறார்கள்.
காரணம் 1. கடவுள்; 2. மதம் - சாஸ்திரம்; 3. அரசாங்கம்.
கடவுள் பெயரால் ஏன் மேல் சாதி கீழ்சாதி என்றால் மதம் சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா, வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக் கிறார்கள் திராவிடர் கழகத்தைத் தவிர?
திராவிடர்கழகம் என்றால் கடவுள் இல்லை, மதத்தை  எதிர்க்கிறது, நேரு அர சாங்கம் ஒழிய வேண்டு மென்பது தானா? என்கின்றனர்.
பாடுபடாத சோம்பேறிக் கொள்ளைக் காரன்களுக்கு அனுமதி அளிக்க இந்த மேல் சாதி பாதுகாப்பென்றால் ஏன் இவற்றை ஒழிக்கக் கூடாது? சூழ்ச்சி சுயநலக்காரன் வாழவே இந்த ஆட்சி; இதை ஒழிக்கப் பாடுபடாவிட்டால் நமக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? இவற்றை ஒழிக்க, நாம் மனிதத் தன்மையை அடைய முடியாதபடி செய்ய, இம்மூன்று தன்மைகளும் மக்களை ஏமாற்றி துப்பாக்கி, இராணுவம் பேரால் மிரட்டுகின்றன.
இதற்குக் கிளர்ச்சி என்பது சாதாரண மானது; போதாது. இரத்த ஆறு ஓட வேண்டும். நேர்மையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். இந்த மாதிரியான நிலை ஏன் ஏற்பட்டதென்றால் நமக்குக் கோழைத் தனம்; அறிவில்லாத தன்மையால் ஏற்பட்ட குறைகள்! பின் எதற்காக இம்மாதிரி வேறு பாடுகள் இருக்க வேண்டும்?
மத-சம்பிரதாயங்களால்தான் இந்த வேற் றுமைகள் ஏற்படுகின்றன. இவை ஒழிய, ஆணும், பெண்ணும் பாடுபடவேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் இக்காரி யத்தில் இறங்க வேண்டும்.
உலகத்தில் 30 கோடி மக்களைக் கொண்ட ரஷ்யா, 65 கோடி மக்கள் உள்ள சைனாவில் கடவுள், மதமில்லை! சாஸ்திர சம்பிரதாயமில்லை! ஆண், பெண் பேத மில்லை! உத்தியோகத்தில், பட்டாளத்தில், போலீசில் இரு பிரிவினரும் சமம். அங்கு ஆண்கள் செய்யும் வேலையைப் பெண்கள்  பார்க்கிறார்கள்.  அங்கெல்லாம் எப்படி இந்த நிலைமை  வந்தது?
இராஜாவைப், பாதிரியை வெட்டி வீழ்த்தினார்கள்; கோயில்களை இடித்துத் தள்ளினார்கள்! எனவே அங்கு ஆண் எசமானுமில்லை. பெண் அடிமையுமில்லை.
இந்த நிலையிலே ஒன்று நீயா! அல்லது நானா! என்பதுதான் நமது முடிவாக இருக்க வேண்டும்; இந்த இழிநிலையை நீக்க எல்லோருமே தான் சாவோமே! என்ன முழுகி விட்டது? கடவுள் அப்படிச் சொன் னார்! சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது? என்றெல்லாம் மனிதன் பயங்காளிப் பழக்க வழக்கத்தில் ஊறிப்போய்விட்டான்.
இம்மாதிரி முயற்சி, நமது கிளர்ச்சி சாதி ஒழியவேண்டுமென்பது.  இதற்கு எவ்வளவு தூரம் போக வேண்டும்? முதலாவது சாதியைப் பாதுகாக்கும் கடவுளை ஒழிக்க வேண்டும்.
நாம் ஏன் 4-ஆவது 5-ஆவது சாதி? ஏன் பறையனென்றால் கடவுளையும், மதத் தையும் நம்புகிறான். இதை நம்புவனெல் லாம் சாதியில் பறையன், எனவே நாம் சாதியையும் கடவுளையும் ஒழிக்க வேண் டும். நீ என்ன மதம் என்று கேட்டால், நான் அறிவு. மதமென்று சொல்ல வேண்டும். கடவுள் இல்லை, சாஸ்திரமில்லை என்று சொல்லவேண்டும்; கடப்பாறையை விழுங்கி விட்டுச் சுக்குக் கஷாயம் குடித்தால் போதுமா? ஏன் என்று கேட்க வேண்டாமா? மதம், கடவுள் இப்படி! இதைப் பாதுகாக்க இப்படி அரசாங்கம் ஒன்று இருக்கிற தென்றால் இதை ஒழிக்க வேண்டாமா?
காந்தி இவற்றையெல்லாம் நினைத் திருப்பாரா? இல்லையே, இதனால்தான் காந்தி பார்ப்பானுக்கு மகான்! எனக்கு அவர் சாதாரண மனிதன்! சாணியையும், கல்லை யும் கடவுளாக்குபவன் மனிதனை மகாத்மா என்றால் நம்பத்தானே செய்தான்? இதை எதிர்க்க  திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எவன் பாடுபட்டான்? சொல்லப் பயப் படுகிறானே? சொல்பவனைச் சிறையில் போடுவதும், கொடுமைப்படுத்துவதுமா அரசாங்கம் என்பது? மக்களை நேர் மையாக ஆள்வதல்லவா அரசாங்கம்!
பணக்காரனைக் காப்பாற்றுவதற்குத் தான் அரசாங்கம் உள்ளது; சட்டதிட்டம் மீறினால் போலீஸ், பட்டாளம், ஜெயில், துப்பாக்கியெல்லாம்.
இந்தக் கொடுமைகளை மாற்ற வேண்டுமென்று ஒருவனும் சொல்ல வில்லை. பாடுபடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் சொன்னார்! சொன்னவரை ஒழித்தார்கள்!  புத்த நிலை யங்களைக் கொளுத்தினர். திருவள்ளுவர் இவையெல்லாம் அக்கிரமமென்றார்.
அவர் சொல் இன்று குப்பையில்! இராமாயணம், கீதை முதலிய கசுமாலம் (மலக்கழிவு)  இம் மாகாணத்தில் முன்நிற்கின்றன. இவற்றைக் கொளுத்து என்று சொல்ல ஒருவனு மில்லை, திராவிடர் கழகத்தைத் தவிர! இவனில்லையென்றால் உங்கள்  கதி இன்று எப்படி இருக்கும் என்று நினையுங்கள். வேறு எவன் இதைச் சொல்லி இருக்கிறான்?
காங்கிரஸ்காரன் அவ்வளவு பேரும் கடவுளை நம்பணும், மதத்தை நம்பணும், அதைக்காப்பாற்ற அரசாங்கம் தேவை, என்பவர்கள், கடவுள், மதம் வேண்டு மென்கிற காங்கிரசை எதிர்ப்பவன், எதிர்க் கிற எதிர்கட்சி என்று கூறி, காங்கிரசுக் காரனுக்குப் பாதுகாப்பான சட்டசபையில், பார்லிமெண்டில் (நாடாளுமன்றத்தில்) இருந்து கொண்டு வயிறு வளர்க்கிறான். வெளியிலும் சொல்லிக் கொண்டுமிருக் கிறான்.
திரு. ம.பொ.சிவஞானம் நம்மை எதிர்த்துப் பார்ப்பானிடம் பொறுக்கப் போகிறார். நாம் தமிழர், என்னும் கட்சிக் காரர்கள் கடவுளைச் சாதியைப் பற்றிப் பேசினால் வாய் சுட்டுவிடும் என்கின்றனர்! ஆனால் ஒரு  காரியத்தில்  - தனிநாடு தேவை என்பதில் ஒத்து வருகிறார்கள்; பாடுபடுகிறார்கள்.
கண்ணீர்த்துளிகள் பார்ப்பானைப் பற்றி, கடவுளைப் பற்றி, சாமியைப்பற்றி மூச்சு விடுகிறார்களா? பார்ப்பான் தயவில் ஓட்டுப் பிச்சைப் பெற்றுப் பதவிக்குப் போக வேண் டுமென்றே கட்சி வைத்துக் கொண்டிருக் கிறார்கள். கம்யூனிஸ்டும் அப்படியே; தலைவர்கள் பார்ப்பான் (சிரிப்பு)! அங்கு வேறு என்ன இருக்க முடியும்? மதத்தைக் காப்பாற்றணும், கட்சியைக் காப்பாற்றணும், பார்ப்பன ரல்லாத பணக்காரனை மாத்திரம் ஒழிக்க வேண்டும்  என்கிறான்.
காங்கிரஸ் கருதுவதோ பார்ப்பானுக்குச், சாதிக்குக், கடவுளுக்கு, மதத்துக்குக், காங்கிரசுக்குப் பாதுகாப்பு தந்து, பதவி ஒன்றே போதும் என்கிறது. கடவுள், சாஸ் திரம் ஒழிய வேண்டுமென்று  கூற வேறு யார் இருக்கிறார்கள்? நாங்கள் இல்லா விட்டால்  பள்ளர், பறையர், சூத்திரன், பார்ப்பான் காலில் விழுவார்கள். அவன் நட்ட கல்லில் முட்டிக் கொள்வார்கள். எவனாவது  இனி கடவுள் மதத்தைப் பற்றி பேசினால் ஒழிக்க வேண்டாமா? கொள் ளையடிக்கிறார்கள், கொடுமை செய் கிறார்கள்.
இம்மாதிரி செய்பவர்களே கீழ்ச்சாதி - அயோக்கியனென்பதானால் அது பார்ப்பானைத்தான் பெரிதும் சொல்ல வேண்டும்; நோகாமல் வஞ்சித்துச் சாப் பிடுகிறான். மனிதனுக்குத் தேவையான  காரியங்களை நாம் செய்வது. அதன் பலனை நாம் அனுபவிப்பதில்லை. ஆனால் இவை ஒன்றும் செய்யாத பார்ப்பான்தான் அனுபவிக்கிறான்.
ஆகவே பார்ப்பான்தான் கீழ்ச்சாதியாகும். வலுத்துவன் இளைத்த வனைச் சுரண்டாமல், உதைக்காமல் பாது காத்தலே அரசாங்கக் கடமை.  இப்போது அப்படி இல்லாமல் வலுத்தவனுக்காத்தானே அரசாங்கமிருக்கிறது! அறிவு, உணர்ச்சி இருக்கிறவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலையில், நாம் அறிவிலிகள், உணர்ச்சி யற்றவர்களாதலால் சும்மா இருக்கிறோம்.
புத்தி, மானம் உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பாற்றுமென்று நினைக்க லாமா?..... பார்ப்பான் மேல் சாதியா? அவன் கடவுள், சாஸ்திரத்தைக் காப்பற்ற வேண் டுமா? அதற்குப் பாதுகாப்பான அரசாங் கத்தை ஆதரிக்க வேண்டுமா? நாம் இவைகளை முட்டாள் தனம் என்று உணர வேண்டும். சைனா, ரஷ்யா மாதிரி ஆக வேண்டும். இவற்றைச் செய்யப் பகுத்தறி வாதியாக வேண்டும்.
மொத்த உலக ஜனத்தொகை 250 கோடி. சைனா, ஜப்பான், ரஷ்யா, போன்ற நாட்டு 100 கோடி மக்களுக்கு மேல் கடவுளில்லை என்பவர்கள். அவர்கள் மற்றும் 100 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம் கிறிஸ்தவர் களுக்குக் கடவுள் உண்டு; மதமுண்டு. அவர்கள் கடவுள் எப்படி இருக்கிற தென்றார்கள்?
நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் கட வுளை? அன்பு, ஒழுக்கமான, நேர்மையான ஒரு கடவுள்; அதற்கு உருவமில்லை அது ஒன்றும் வேண்டாத கடவுளென்கிறார்கள்.
இந்துக்களையெடுத்துக் கொள்ளுங்கள். குரங்கு, பாம்பு, கழுகு, பன்றி, குதிரை, ஆடு, மாடு, எலி, மரம், ஆறு, குளம், அசிங்கக் குட்டை, எல்லாம் கடவுள். (பைத்தியக்கார னுக்கு கள் ஊத்தினது மாதிரி  கடவுள்கள்)
செருப்புக் கடவுள் - கரூர் பக்கம் சக்கிலி, கதவு அளவு செருப்பு செய்து அதற்குச் சூடம் காண்பிக்கிறான்.
கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப் பாட்டி. வேறு எந்த நாட்டுக் காரனாவது செய்கிறானா? நமதென்கிற கடவுளுரு வத்தைத் துலுக்கன் உதைப்பான். பார்ப்பான் சுங்கம் வசூலிக்கவே தவிர வேறு எதற்கு? அவனுக்குக் கடவுள் பக்தி உண்டா உங்களைப்போல்? இந்த இராமன் சிவன், கிருஷ்ணன், நம் கடவுள்களா?
எல்லாம் வடநாட்டில் இருந்து பார்ப்பான் கொண்டு வந்த கடவுள்களே! இவற்றை நம் நாட்டில் கொண்டு வந்து வைத்துள்ளான். உதைத்து நம்பவைத்து, காசு பறிக்கிறான். இராமன், கிருஷ்ணன் எவனுக்கோ பிறந்து செத்தவன்களை நமக்குக் கடவுளென்றால் பிறந்தான், செத்தான் என்றால் கடவுள்களா அவன்கள்? இறப்பு, பிறப்பு இல்லாதவன் கடவுள் என்று கிறிஸ்தவர், முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
பாகவதத்தில் கிருஷ் ணனுக்கு இலட்சம் பெண்டாட்டிகள், பல லட்சம் வைப்பாட்டிகள்! பல பெண்களை அவமானப்படுத்திக் கெடுத்தவன். அவன் படத்தை நம் பெண்கள் துடைப்பத்தால் அடித்துக்  காறித்துப்ப வேண்டாமா? ஆண் களுக்குத் தான் புத்தியில்லை என்றால், பெண்களாவது நினைத்துப் பார்கக வேண் டாமா? அவன் படத்தை வீட்டில் வைக்க லாமா? கொலைகாரனைக், கொள்ளைக் காரனைக் கடவுளென்று அவன் அயோக் கியத்தனத்தைப் போற்றிக் கும்பிட்டால் பார்ப்பான் நம்மை சூத்திரன், பறையன், பள்ளனென்று  ஏன் சொல்லமாட்டான்? இராமாயணமும், பாரதமும் மனித சமு தாயத்துக்குப் பித்தலாட்டத்துக்கு ஆதாரம்.
இவை கடவுள் கதைகள். இவற்றை இராசகோபலாச்சாரியும், சங்கராச்சாரியும் வானளாவப் புகழ்ந்து  இவை கடவுளால் கொடுக்கப்பட்டவை என்கிறார்கள். அது அந்தச் சாதியின் ஒழுக்கம். திரௌபதி அய்ந்துபேர் போதாதென்று ஆறாமவனை யும் காதலித்தவள்! சீதை இராவணனுடன் போனவன். அவள் சினையானது இலங் கையில்! இராமன்  பிள்ளைத்தாய்ச்சியுடன் கூட்டி வந்தான். அகலிகை ரிஷி பெண் டாட்டி, தேவகுரு பெண்டாட்டி.
இருவரும் (தாரை, அகலிகை)  விபசாரத்தனம் செய்து, தடயம்  கண்டுபிடித்து, கேசு (வழக்கு) ருசுவாகித் தண்டனையும் ஆகியுள்ளது. இம்மாதிரி ருசுவான கேசுள்ளவர்களுக்குப் பதிவிரதைப் பட்டம் என்பது டாக்டர் இராஜனுக்கு மந்திரி வேலைகொடுத்தது போல் அல்லவா? அவர்கள் மோசமான சாதி.
ஆனதால் அவர்களுக்கு அந்த ஒழுக்கம் பொருத்தம். நாம் அப்படி சொல்லலாமா? புத்தி, மானம் இல்லா விட்டால் இவ்வளவு அவுசாரிகளைக் (விபசாரிகளை) கும்பிட்டால் ஏன் நம்மைச் சூத்திரன் என்று கூறாமலிருப்பான்? இவற்றைக் கண்டிக்க வேண்டும். இவற்றைக் கும்பிடலாமா? இந்தப் புத்தியை நாம் மாற்ற வேண்டாமா?
கிறிஸ்தவனில் சாதி உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம்களில் பார்ப்பான்  துலுக்கன், பறை துலுக்கன் இல்லை. ஒரே பைபிள்; ஒரே குர்ஆன்; ஒரே ஏசு. ஒரே நபி தலைவன். உனக்கு (திராவிடனுக்கு) யார் தலைவன்? இராசகோபாலாச்சாரி, சங்க ராச்சாரி உனக்குத் தலைவனா? இப்பொழுது நடைமுறையிலுள்ள ஆண்டு எண்ணிக் கைக்கு அவர்களுக்கு ஆதாரம் உண்டு. உனது ஆண்டுக்கு ஆதாரம் ஏது? இராமா யணமா? பாகவதமா? உன்னை அதில் அரக்கன், சூத்திரன், தேவடியாள் மகன் என் கிறான் - ஏற்கலாமா நீ? அதன்படி இந்த ஆட்சிக்காரன் சட்டத்திலும்  சூத்திரன் என்கிறான்.
ஆகவே தோழர்களே! முதலில் கூறிய மூன்று கேடுகளையும்  ஒழிக்க வேண் டாமா?
மணியம்மை திருவண்ணாமலை பஸ்ஸில் வரும்போது நான்கு பார்ப் பனர்கள் இந்த  இராமசாமி ஆரம்பத்தில் ஈரோட்டிலிருந்து செல்லாக்காசாகி, திருச்சி வந்து, நான்கு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு, பல லட்சம்  பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். நமது நேரு வந்து 4000 பேர்களை உதைத்துஜெயிலில் போட்டு ஒழிக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  அதனால் ஒழிந்தார்கள் என்று பேசிக் கொண்டு வந்தார்களாம். இதிலிருந்து நம்மை ஒழித்துக்கட்டி விட்டதாக அவன் களுக்குள் எண்ணம்.
தீபாவளிபண்டிகை விமரிசையாக நடப்பதாக எண்ணி நம்மைக் கிண்டலாக தினமணிக்காரன் எழுதுகிறான். இந்தக் கதைப்படி உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளிந்தானென்றும்கடவுள் பன்றி அவதாரம்  எடுத்து மீட்டு, அசுரனைக் கொன்று, தேவர்களைக் காப்பாற்றினான் என்றும் கூறுகிறான். இது எப்படி என்றால் உன் அப்பன் எங்கே என்றானாம்? ஒருவன். என் அப்பன் வானம் ஓட்டையாகி விட்டது. ஆகையால் எறும்புத் தோலை உரித்து அடைக்கப் போயிருக்கிறான் என்றானாம்!
இதைப் போன்று பெரும் புளுகு அல்லவா அந்தக் கதை?அடுத்து வரும் கிளர்ச்சிக்கு அறிகுறியாக அதிகமான பேர் தமிழ்நாடு நீங்கிய இந்தியநாடு படத்தைக் கொளுத்தத் தயாராயிருக்க வேண்டும்.  நம் நாட்டை  நாம் பார்த்துக் கொள்வோம். அவனவன் நாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அரசாங்கத்துக்கு வாய்தா கொடுப்போம். நீங்கள் நிறைய ஆதரவு தரவேண்டும்.
12-11-1958 அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 7-1-1959)
விடுதலை, ஞாயிறு, 23 நவம்பர் 2014 


சனி, 22 நவம்பர், 2014

சித்திரபுத்திரன் -1-இரண்டிலொன்று வேண்டும்


இரண்டிலொன்று வேண்டும் - 




சித்திரபுத்திரன் 

ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.
1. கைபலம் (பலாத்காரம்)
2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)
மொகலாயர் கை பலத்தால் ஆண்டார்கள்.
வெள்ளையர் புத்தி பலத்தால் ஆண்டார்கள்.
இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லறை சில்லறை யாய் ஆண்டிருப்பார்கள்.
ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை
திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்கு வதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்க கூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளு வார்கள்.
ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.
பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம்  என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 25.10.1931
விடுதலை,சனி, 22 நவம்பர் 2014 

சனி, 15 நவம்பர், 2014

பிறந்த நாள் பாமாலை

தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த




நாள் பாமாலை

தரணி போற்றும் தந்தை பெரியார்
தமிழினக் காவலர் பெரியார்
வெண்தாடி வேந்தர் பெரியார்
பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
ஈரோட்டுச் சிங்கம் பெரியார்
சுய சிந்தனையாளர் பெரியார்
சுயமரியாதையே சுக வாழ்வு என்ற பெரியார்
வகுப்புரிமையை வகுத்த பெரியார்
பொதுவுடைமையை புகுத்திய பெரியார்
பெண்ணுரிமைப் போராளி பெரியார்
சாதி, மதம் சாய்த்த பெரியார்
கடவுளை எதிர்த்த பெரியார்
பார்ப்பனீயத்தைத் தோலுரித்த பெரியார்
சங்கராச்சாரிகளின் ஆணவத்தை அடக்கிய பெரியார்
மனிதனை மனிதனாக்கிய பெரியார்
தொழிலாளர் தோழர் பெரியார்
வைக்கம் வீரர் பெரியார்
தாழ்த்தப்பட்டோர் உரிமைக் காவலர் பெரியார்
குழந்தை திருமணத்தை குழி தோண்டிப் புதைத்த பெரியார்
வருணாசிரம சூழ்ச்சியை வாட்டிய பெரியார்
தேவதாசி முறையை ஒழித்த பெரியார்
சதியை சட்டத்தின் மூலம் முறியடித்த பெரியார்
ஆண், பெண் சமத்துவம் சமைத்த பெரியார்
ஆணாதிக்க ஆணவத்தை அழித்த பெரியார்
தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் பெரியார்
இந்திய சட்டத்தை முதன் முதலில் திருத்திய பெரியார்
தமிழ்மொழிக் காவலர் பெரியார்
எழுத்துச் சீர்த்திருத்தச் செம்மல் பெரியார்
திருக்குறள் வாழ்வியல் என்ற பெரியார்
வடலூர் வள்ளலாரை ஆதரித்த பெரியார்
புத்தரின் போதனையைப் போதித்த பெரியார்
பார்ப்பனரின் சூழ்ச்சியை அம்பலப் படுத்திய பெரியார்
கல்வியின் அவசியம் கருதி கல்விச் சோலையமைத்த பெரியார்
குலக்கல்வித் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைத்த பெரியார்
குருகுலப் போர் புரிந்த படைத்தளபதி பெரியார்
முதலில் குடும்பக் கட்டுப்பாட்டை முன்மொழிந்த பெரியார்
அம்பேத்காரின் அருமை நண்பர் பெரியார்
மானமும் அறிவும் மனிதனுக்கழகு என்ற பெரியார்
கருப்புச் சட்டைக் காவலர் பெரியார்
புராண ஆபாசங்களைப் புரட்டிப் போட்ட பெரியார்
சமுதாய இயக்கம் கண்ட பெரியார்
வேதத்தை வேரோடு சாய்த்த பெரியார்
இந்துமத இழிவை எடுத்துரைத்த பெரியார்
உண்மை வரலாற்றை உணர்த்திய பெரியார்
திராவிடர் நாகரிகம் விளக்கிய பெரியார்
ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார்
மத வெறியை மாய்த்த பெரியார்
தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்
தூய தாடி மார்பில் விழுந்த பெரியார்
உலகு போற்றும் உத்தமர் பெரியார்
சாதிமறுப்புத் திருமணம் சாதித்த பெரியார்
விதவை மறுமணத்திற்கு வித்திட்ட பெரியார்
மணவிலக்குப் பெற்றோரின் மறு வாழ்வுக்காக போராடிய பெரியார்
வரதட்சணை வன்கொடுமை எதிர்த்த பெரியார்
சமூக சிந்தனைக் காவலர் பெரியார்
கடவுளை மற மனிதனை நினை என்ற பெரியார்
சமத்துவ சமுதாயம் காண விரும்பிய பெரியார்
சித்திர புத்திரன் புனைப் பெயரில் சிந்திக்க வைத்த பெரியார்
சுயமரியாதைத் திருமணத்தைத் தூண்டிய பெரியார்
புரோகித திருமணத்தைப் பூண்டோடு ஒழிக்க நினைத்த பெரியார்.
பண்பாட்டு படையெடுப்புகளை பாடையில் ஏற்றிய பெரியார்
இனத்தின் மீட்புக்கான இரட்சகர் பெரியார்
தலைவிதித் தத்துவத்தைத் தகர்த் தெறிந்த பெரியார்
சொர்க்க, நரக பித்தலாட்டங்களை மாய்த்த பெரியார்
பாவ, புண்ணியப் பசப்புகளை வெளிப்படுத்திய பெரியார்.
பழைய பஞ்சாங்கம் பார்ப்பன பித்தலாட்டம் என்ற பெரியார்
சகுனத்தை சாட்டையால் அடித்த பெரியார்
நல்ல நேரம், கெட்ட நேரம் நெருப்பி லிட்ட பெரியார்
திதி, திவசமெல்லாம் திருடன்கள் திட்டம் என்ற பெரியார்
கிரகப்பிரவேசம் எல்லாம் பார்ப்பன மோசம் என்ற பெரியார்
சாணிப் பிள்ளையாரைச் சாடிய பெரியார்
பகுத்தறிவு பாதையினை வகுத்த பெரியார்
பகுத்தறிவு சுடர் ஏந்தி நின்ற பெரியார்
பகுத்தறிவு தீ பரவட்டும் என்ற பெரியார்
தமிழ்நாடு தமிழருக்கே என்ற பெரியார்
ஏன், எதற்கு, எப்படி என கேள்வி எழுப்பிய பெரியார்
பேய், பில்லி, சூன்யம் பித்தலாட் டத்தை புரட்டியெடுத்த பெரியார்
பெண் ஏன் அடிமையானாள் என வினவிய பெரியார்
பெண்களுக்கு சொத்துரிமையைப் பெற்றுத்தந்த பெரியார்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்பட்ட பெரியார்
இனி வரும் உலகம் பற்றி இயம்பிய பெரியார்.
தமிழா! இனவுணர்வு கொள் என்ற பெரியார்
கோயில் நுழைவு உரிமை அறப்போர் அறிவித்த பெரியார்
இந்தி என்ற மந்தியை விரட்டிய பெரியார்
பச்சை தமிழர் காமராசரை ஆதரித்த பெரியார்
உற்ற நண்பர் இராசாசியை உருக் குலைத்த பெரியார்
எளிமையின் எடுத்துக்காட்டு பெரியார்
அஞ்சா நெஞ்சன் தந்தை பெரியார்
பெண்களால்  பெரியார் பட்டம் பெற்ற பெரியார்
சொல், எண்ணம் செயல்படுத்திய பெரியார்
கடவுள் இல்லவே இல்லை என்ற பெரியார்
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற பெரியார்
கடவுளைப் பரப்பியவன் அயோக் கியன் என்ற பெரியார்
கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்ற பெரியார்
ஆரிய மாயையை அம்பலப்படுத்திய பெரியார்
தீண்டாமையைத் தீயிட்டுப் பொசுக் கிய பெரியார்
தாலி தான் பெண்களுக்கு வேலியா? என்ற பெரியார்
மனுதர்ம சாஸ்திரத்தை அணு அணு வாகப் பிளந்த பெரியார்
கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் என்ற பெரியார்
சாமியார்களின் சல்லாப உல்லாசத்தைச் சாடிய பெரியார்
பேதம் கற்பிக்கும் பிராமணாள் கபே ஒழித்த பெரியார்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக் கலம் தந்த பெரியார்
கைவிடப்பட்ட மூத்தோர்களுக்கு முகவரியான பெரியார்
சாதனைகள் பல பல படைத்திட்ட பெரியார்
சரித்திரம் பல கண்ட நாயகன் பெரியார்
தள்ளாத வயதிலும் தொண்டு செய்த பெரியார்
தடம் புரண்ட கொள்கைகளை தடி கொண்டு விரட்டிய பெரியார்
தான் கொண்ட கொள்கை சரியே என பறைசாற்றிய பெரியார்
அழுக்குருண்டை பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார்
பார்ப்பன ராமனைச் செருப்பாலடித்த பெரியார்
மூடநம்பிக்கையின் முடைநாற்றம் போக்கிய பெரியார்
அறிவிலிகள் கூறிய ஆபாச புராணத்தை கிளறிய பெரியார்
நெஞ்சுரம் கொண்ட நேர்மையாளர் பெரியார்
தன் பட்டறிவால் மக்களைப் பண் படுத்திய பெரியார்
புரையோடிய அநாகரிகத்தை  புதைத்த பெரியார்
ஆக்கபூர்வ சிந்தனைக்கு ஊக்கம் தந்த பெரியார்
கேள்விக் கணைகளுக்கு அய்யம் நீங்க பதில் தந்த பெரியார்
மாற்றுக் கருத்தாரும் மதிக்கத் தகுந்த பெரியார்
எதிரிகளும் ஏற்கும் வண்ணம் தெளிவுபடுத்திய பெரியார்
அயராது உழைத்து அரும்பாடுபட்ட பெரியார்
பூணூலார் புரட்டை பூண்டோடு ஒழிக்க பாடுபட்ட பெரியார்
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார்
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற பெரியார்
சமூக நீதி சமத்துவம் காண களம் கண்ட பெரியார்
சாதி ஒழிப்புச் சட்டஎரிப்புப் போர்ப் படைத்தளபதி பெரியார்
தை முதல் நாள்தான் தமிழர் புத் தாண்டு என்ற பெரியார்
பார்ப்பனியத்தை சமஸ்கிருதத்தை சம்காரம் செய்த பெரியார்
அன்னை மணியம்மையாரின் மணி மகுடம் பெரியார்
நாகம்மை, கண்ணம்மாள் நானிலம் அறியச் செய்த பெரியார்
வெங்கட்டப்பரும், சின்னத்தாயம் மையும் விதைத்த வித்து பெரியார்
வள்ளுவன் வகுத்த 133 அதிகாரம் போல் வாழ்ந்த பெரியார்
சமத்துவபுரம் சாதனைக்கலைஞர் கருணாநிதி கண்ட பெரியார்
பாவேந்தர், அறிஞர் அண்ணாவின் ஆசான் பெரியார்
ஆல மர விழுதுகளில் வீரமணியைக் கண்ட பெரியார்
ப. முனுசாமி, நகரத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், ஓசூர்

- விடுதலை நாளேடு,15.11.14

Read more: http://www.viduthalai.in/page5/91153.html#ixzz3J9vjymF6