திங்கள், 24 ஜூலை, 2017

தமிழனுடைய கடவுளை பார்ப்பான் கும்பிடுகிறானா?


தந்தை பெரியார்



பாரதமும், ராமாயணமும், கந்த புராணமும், இவைகளில் வரும் கதைகளும் கடவுள்களும் மற்றும் அவை சம்பந்தமான பண்டிகை விரதங்களும் தமிழனுக்குச் சம்பந்தப்பட்டவையா? இவை தமிழனுடைய கலைகளா? தமிழர் சமய சாஸ்திரங்களா? என்று கலையுணர்ந்த சகல வல்ல பண்டிதர்களைக் கேட்கிறேன். ராமனும், கிருஷ்ணனும், சுப்ரமணியனும், கணபதியும், அவர்கள் அப்பன்களாகிய - லட்சுமி புருஷனான மகா விஷ்ணுவும், பார்வதி புருஷனான பரமசிவனும் தமிழர்களுடைய கடவுள்களா என்று கேட்கிறேன்.


தலைவரவர்களே, தோழர்களே,

சிறை சென்ற தலைவர்களை பாராட்டுவதற்கு ஆக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் தலைவர்களை பாராட்டிப் பேசினவர்கள் அவ்வளவு பேரும் அரசியலில் காங்கிரஸ்காரர் செய்த கொடுமையை எடுத்துச் சொல் லியும், அவர்கள் ஒழிந்துவிட்டதற்கு மகிழ்ச்சி அடைந்தும், இனி பார்ப்பனர் ஆட்சி தலை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெகு உருக்கமாகவும் உற்சாகமாகவும் பேசி னார்கள். அவர்களது உற்சாகத்தை நான் பாராட்டுகிறேன். ஆனாலும் இன்றுள்ள நிலையில் பார்ப்பனர் களை அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விரட்டி விட முடியுமா? ஒரு சமயம் முடிந்துவிட்டாலும் அதனாலேயே பார்ப்பனிய எல்லாக் கொடுமைகளில் இருந்து நாம் விடுதலை அடைய முடிந்து விடுமா?

பார்ப்பனியக் கொடுமை

உதாரணம் சொல்லுகிறேன். பார்ப்பன ஆதிக்கம் அரசியல் ஆதிக் கத்தைக் கைப்பற்றி இந்த 30 மாத காலத்தில் செய்த கொடுமை அளவற் றது என்று நீங்களே இப்பொழுது எடுத்துக் காட்டினீர்கள். நமது கல்வியை அழிக்கக் குழி வெட்டி விட் டது. உத்தியோகத்திலுள்ள பார்ப்பன ரல்லாதார்களை ஒழிக்கப் பல சூழ்ச் சிகள் செய்தது. பார்ப்பனர்களுக்கு ஆயிரக்கணக்கில் உத்தியோகம் கொடுக்க 10 புது வரிகளைப் போட்டு பணம் திரட்டிக் கொண்டது. அதற் காகப் பல கொடுமைகள் செய்து, பல இலாகாக்களைச் சிருஷ்டித்து, உத்தி யோகங்களைச் சிருஷ்டித்துக் கொடுத் திருக்கிறது. இதற்காக நமது பேரால் 6 கோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு இருக்கிறது. நம்மவர்களை - நான் உட்பட 1300 பேர்கள் - சிறையில் தள்ளிக் கொடுமை செய்தது. மற்றும் பல அட்டூழியங்கள் நடத்திற்று.

இந்த விஷயம் நம் நாட்டிலுள்ள ஆண், பெண், கூன், குருடு, மொண்டி, முடம் வரை எல்லோரும்தான் அறிந் திருக்கின்றனர். அதனால் துன்பமும் அடைகின்றனர். கிராமம் சந்து பொந்து எங்கும் இதே பேச்சாய் இருக்கிறது. இதை யாராலாவது மறுக்க முடியுமா? மறுப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு சமா தானம் சொல்லுகின்றேன். அதாவது, இம்மாதிரி பொது ஜனங்கள் பேசி ஆத்திரம் கொண்டிருப் பதால்தான் மந்திரிகள் செல்லுமிடங்களில், அதுவும் முதல் மந்திரியும், முஸ்லிம் மந்திரியும் செல்லுமிடங்களில்கூட என்றாவது எங்காவது கறுப்புக் கொடி, போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல் செல்ல முடியாமலும், 144 போட்டு எதிர்ப்பு களை அடக்கி போலீஸ் படை வைத்து ஊர் ஜனங்களை மிரட்டியும் அல் லாமல் எங்கும் மந்திரிகள் நடமாட முடியாமலும் இருந்து வருகிறது. இதுவே போதுமானதாகும்.

இப்படியெல்லாம் இருந்து சமீப காலத்தில் நடந்த 5 ஜில்லா போர்டு தேர்தல்களில் பார்ப்பன ஆதிக்கத் திற்கே பெரு மிதமான வெற்றி ஏற்பட் டிருக்கிறது. தோழர் ஆச்சரியார் வைஸ்ராய், கவர்னர் ஆகியவர்களி டம் தனது வகுப்பாருக்கும், தனது ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் ஆதரவும் செல்வாக்கும் இருப்பதாகச் சொல்லி இந்தத் தேர்தலையே உதாரணமாகக் காட்டியதோடு, சட்டசபையிலும் ஆணவமாகப் பேசி இவ்வளவு மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக் கையில் நாங்கள் எப்படி இந்தப் பதவிகளை விட்டுப் போவது என்று கேள்வி கேட்டிருக்கிறார். அவர் சொல்வதற்கு நாம் என்ன பதில் சொல்லுவது?  அவர்கள் தேர்தலில் செய்த சூழ்ச்சிகளும் நாணயக் குறை வான காரியங்களுமே காட்டப்பட் டால் போதுமானதாகி விடுமா? இனி யும் அந்தச் சூழ்ச்சிகளும், நாணயக் குறைவுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நம்மிடம் என்ன இருக்கிறது?

இனி மேல்?

ஆகவே, இனி பார்ப்பன ஆதிக்க ஆட்சியின் கொடுமை களையும் சூழ்ச்சிகளையும் மாத்திரமே பொது மக்களிடம் சொல்லிக் கொண்டிருந் தால் போதாது. பல தடவை எடுத்துச் சொன்ன பிறகும்தான் இந்தப் பலன் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால், இனியும் தோழர்கள் ஆச்சாரியாரையும், சத்திய மூர்த்தியாரையும்பற்றிய குறையையும், அவரது ஆட்சி கொடுமையையும் மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு பயனும் ஏற்படாது. ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் அரசி யலில் இல்லாத காலத்தில் நாம் என்ன நல்ல யோக்கியதையில் இருந்து விட்டோம்? இவர்கள் போய்விட்டால், இவர்களது ஆட்சியை ஒழித்து இவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டால் இனி வேறு ஆச்சாரியும், சத்திய மூர்த்தியும், ஸ்ரீநிவாச சாஸ் திரியும் வர மாட்டார்களா அல்லது உற்பத்தி ஆக மாட்டார்களா என்று கேட்கிறேன்.

ஆகவே, இனி நாம் ஏதாவது பயன்படத்தக்க வேலை செய்ய வேண்டுமானால் ஆச்சாரிகளும், சாஸ்திரிகளும் விரட்டப்படுவது மாத்திரம் பயன்படாது. சிறிதும் பயன் படாது. இனி மேலும் ஆச்சாரியார், சாஸ்திரிகள் உற்பத்தி ஆகாமல்  பார்த் துக்கொள்ள வேண்டும். அவர்கள் உற்பத்தி ஆவதற்கு நாம் தான் உரம் போட்டு, தண்ணீர் விட்டுக் காப்பாற்றிக் கொடுக்கிறோம். வெள் ளாமை செய்து பயிர் வளர்த்துக் கொடுத்து விட்டு விளைந்த விளைவால் நாம் துன்பப்படு கிறோமே என்று சொல்லுவது முட்டாள்தனமா இல்லையா என்று கேட்கின்றேன்.

அஸ்திவாரத்தில் கை வைக்க வேண்டும்

ஆதலால், அஸ்திவாரத்தில் அடி வேரைப் பறித்து வெந்நீர் ஊற்றி, அந்தப் பயிர் முளையிலேயே கருகிப் போகும்படி செய்யவேண்டும், அனா வசியமாகப் பார்ப்பனர்மீது குறை சொல்லி வருத்தப்படுவதில் பய னில்லை. அவர்கள்மீது  ஒரு தப்பித மும் இல்லை. நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி நமக்கு இல்லாத தப் பிதத்தைத் திருத்திக்கொள்ள வேண் டும். நம்மைப் பார்ப்பனிய பிளேக்கும், உளமாந்தையும் அழிக்காமல் பார்த் துக்கொள்ள நமக்குச் சக்தி இல்லை.  நோய்க்கு இடம் கொடுத்துவிட்டு நோய் வந்த பிறகு மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில் நம் வாழ்நாள் பூராவையும் கழித்துக் கொண்டிருப் பதைவிட நோயினால் செத்துப் போவதே மேல் என்பேன்.

ஆகையால், நோயே ஏற்படுவதற்கு வகை இல்லாமல் செய்ய வேண்டும் இனி அதுவும் நமது வேலையாய் இருக்க வேண்டும்.

ஆரிய மதம் காரணம்

இன்று இப்பார்ப்பன விஷ நோய் நம் நாட்டில் பெருகியதற்கும், நம் மக்கள் அதற்கு பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல. நாம்தான் நம்முடைய அறிவீனம் என்னும் அசுத்தத்தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும். தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ, ஆரி யனைத் தமிழன், என்று தன்னுடைய நாட்டான் தோழன் என்று  கருதினானோ அன்றே தமிழனுக்கு உள மாந்தையும், பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும், வீரமும், அறிவும், ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் - ஆண் பெண் அடங்கலும் அடிமை, வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும் படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த ஆதாரங்களே தமிழனுக்கு அரசி யல் சட்டமாகவும் ஆயின. அந்த - அதாவது தமிழன் ஏற்றுக் கொண்ட ஆரிய மதமும், அவன் ஏற்றுக் கொண்டு நடக்கும் ஆரிய மதக் கொள்கையும்தான் இன்று ஆயிரக்கணக்கான ஆச்சாரியார் களையும், டாக்டர் ராஜன்களையும், சத்தியமூர்த் திகளையும், வரதாச்சாரி ஆலாசியம் என்கின்றவர்களுமான நோய்ப் பூச்சிகளையும், நோய்களையும் உற்பத்தியையும் செய்து வருகின்றன.
தமிழன் ஆரிய மதத்தைவிட்டு வெளியே வந்தாலொழிய தமிழன் வேறு, ஆரியன் வேறு; தமிழன் மதம், கடவுள், கலைகள், வேறு;

ஆரியன் மதம், கடவுள், கலை, சாஸ்திரங்கள் வேறு என்ற உணர்ச்சி வந்து உண்மை அறிந்தாலொழிய இந்த பார்ப்பனிய உளமாந்தை, பிளேக் நோய்களிலிருந்து தப்ப முடியாது; அந்நோய்ப் பூச்சிகளையும் அழிக்க முடியாது. ஆச்சாரியாரும், சத்தியமூர்த்தியாரும் எங்கிருந்து தொப் பென்று குதித் தார்கள் அவர்கள் என்ன ராமன் கிருஷ்ணன் போல் ராட்சதர்களை (தமிழர்களை) அழிக்க அவதாரமெ டுத்தவர்களா? இல்லை இல்லை. அவர்கள் தகப்பன் மார்களுக்கு நாம் திதி, திவசம், சங்கல்பம், அஷ்டோத் தரம், சகஸ்ரநாமம், அபிஷேகம், உற்சவம், கல்யாணம், சாந்திமுகூர்த் தம், எட்டு எழவு, கல்லெடுப்பு என்னும் பேரால் அழுத பணங்களும் காசுகளும், அரிசி, பருப்பு, செருப்பு புடவைகளும் அல்லவா இன்று ஆச்சாரியார், சாஸ்திரியார், அய்யங் கார், அல்லாடியார், மூர்த்தியார் என்கின்ற விஷக் கிருமிகளாக நம்மை அரித்து தின்கின்றன என்று கேட்கிறேன்.

தமிழனுக்கு மானம் வேண்டும்

தமிழனுக்கு இந்த இடத்தில் தெளிவும் மானமும் ரோஷ மும் ஏற்பட்டா லல்லவா இவ்விஷ நோயிலிருந்து இனியாவது தப்ப முடியும்? வீணாக பார்ப்பனத் தோழர்களை குறை சொல்லுவதில் பயன் என்ன என்றே மறுபடியும் கேட்கிறேன்.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  கட்சி ஏற்படுத் துங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் ஸ்தாபனத்தைப் பலப் படுத்துங்கள். இந்த அஸ்திவார வேலையையும் செய்யாமல் தமிழன் ஒரு நாளும் மானமுள்ள மனிதத் தன் மையுள்ள தமிழனாக வாழ முடியாது என்பது எனது பலமான உறுதி.

ஆத்திரமுண்டு - ஆனால்?

தமிழர் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சி யிலும் உள்ள அனேக தமிழர்களை எனக்குத் தெரியும். பார்ப்பனர்களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சலாமா என்கின்ற ஆத்திரத்தோடு அனேகர் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அத்தமிழர்கள் தங்கள் வீட்டில் பெண்டு பிள்ளை களுடன் பார்ப்பான் காலைக் கழுவின நீரை உட்கொண் டால்தான் மோட்சம் உண்டு; அவன் காலில் தங்களது குடும்ப மக்களின் உச்சித் தலை பட்டால்தான் ஜன்மசாபல்யம் ஆகும் என்று கருதி இருக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இக்காட்சியை சென்னையில் அதிகமாகக் காணலாம்.

சனாதனப் பார்ப்பனர்களோடு நான் பேசினேன். என்பதற்கு ஆகவும், உண்மையான சனாதனிகள் தாங்கள் தங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாய்ச் சொல்லி விடுகிறார்கள் என்று பாராட்டியதற்கு ஆகவும் என்மீது கோபித்துக் கொண்ட சென்னைத் தமிழர்களும் - பார்ப்பன ரல்லாத தலைவர்களும், பலர் தங்கள் வீட்டில் இன்றைக்கும் பார்ப்பான் வந்தால்தான் வீடு புனிதமாகுமென்றும் அவன் காலில் தங்கள் தலைமுட்டினால்தான் தங்கள் பெற்றோர்கள் மோட்சமடைவார்கள் என்றும் கருதிக் கொண்டிருக்கிற அநேக முட்டாள் களைப் பார்க்கிறேன்.

நாம் இங்கு கிளர்ச்சி செய்து ஒரு ஆச்சாரியையும், ஒரு சாஸ்திரியையும், ஒரு அய்யரையும் ஒழிப்பதானால் நமது மக்களில் ஏழை முட்டாள்களும், பணக்காரமடையர்கள் கற்றறிந்த மூடர்களும் ஆயிரக்கணக்கான ஆச் சாரியும், அய்யரும், சாஸ்திரியும் உண் டாகச் சடங்குகள்மூலம் நன்றாய் உழுது, தட்சணை அரிசி பருப்பு சாமக்கிரியைகள் மூலம் நல்ல எருப் போட்டு அவர்கள் கடவுள்களையும், பண்டிகைகளையும் கொண்டாடு வதன் மூலம் நல்ல மணியான விதை விதைத்து ஜாதிகள் மூலம் பயிர்களைக் காப்பாற்றி ஆச்சாரி, சாஸ்திரி அய்யர் அய்யங்கார் என்ற நல்ல அறுவடை உண்டாகி குதிர் நிரப்பும் படி செய்து விடுகிறார்கள். இந்த மடஜனங்களைக் கொண்ட தமிழர் சமுகம் என்றுதான் மானமடையும் - என்று தான் மனிதத் தன்மை அடைந்த மனிதனாக  வாழ முடியும் என்பதை தயவு செய்து சற்று சிந்தித்துப் பாருங்கள்; வீணாகப் பார்ப்பனர்கள்மீது குறை கூறாதீர்கள். அவர்களைத் துவேஷிக் காதர்கள். அவர்களால் நாமடையும் கொடுமைக்கு அஸ்தி வாரம் இன்னது என்று கண்டுபிடித்து அதை அடியோடு அழிக்க முயற்சி செய்யுங்கள் என்பதற்கு ஆகத்தான் இதைச் சொல் லுகிறேன் ஒழிய வேறில்லை. இதை 15 ஆண்டுகளாகவே சொல்லி வருகி றேனே ஒழிய, இன்று மாத்திரம் அல்ல. நம் ஈன நிலைக்கு உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். இன்னும் சிறிது நாளில் தீபாவளி என்னும் ஆரியப் பண்டிகை வருகிறது. அத்தீபாவளிக்கும் கலப்பில்லாத தமிழனுக்குப் பிறந்த தமிழனுக்கும்  என்ன சம்மந் தம்? தமிழர் சமயத்திலோ தமிழர் கலைகளிலோ சங்க இலக்கியங் களிலோ தமிழன் தீபாவளி கொண்டா டியதாக ஆதாரமிருக்கிறதா? கொண் டாடுவதற்குத் தேவை இருக்கிறதா?

தமிழன் சாஸ்திரமும், கடவுளும்

பாரதமும், ராமாயணமும், கந்த புராணமும், இவைகளில் வரும் கதைகளும் கடவுள்களும் மற்றும் அவை சம்பந்தமான பண்டிகை விரதங்களும் தமிழனுக்குச் சம்பந்தப்பட் டவையா? இவை தமிழனுடைய கலைகளா? தமிழர் சமய சாஸ்தி ரங்களா? என்று கலையுணர்ந்த சகல வல்ல பண்டிதர்களைக் கேட்கிறேன்.

ராமனும், கிருஷ்ணனும், சுப்ரமணி யனும், கணபதியும், அவர்கள் அப்பன் களாகிய - லட்சுமி புருஷனான மகா விஷ்ணுவும், பார்வதி புருஷனான பரமசிவனும் தமிழர் களுடைய கடவுள்களா என்று கேட்கிறேன்.

தமிழர்களுடைய கடவுளானது முஸ்லிம்களுடைய கடவுள் போலவும், கிறிஸ்தவர்களுடைய கடவுள் போலவும் உருவம் குணம் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டும் தோற்றம் ஆகியவை இல்லாதது என்றல்லவா தமிழர் கலை ஆராய்ச் சியாளர்கள் சொல்லுகிறார்கள். வேண்டுமானால் அப்படிப் பட்ட கடவுளையல்லவா தமிழ் மக்கள் தொழவேண்டும்.  பிரார்த்திக்க வேண்டும்.

மனித உருவம், அதுவும் பார்ப்பன உருவம் 2 பெண்டாட்டி பல பெண்டாட்டி, மற்றும் வைப்பாட்டி, தாசி, தனக்குப் பிறந்த குழந்தைகள், தாசிக் குப்பிறந்த குழந்தைகள், விபசாரத்தில் பிறந்த குழந்தைகள் அவைகளும் கடவுளாகவும்; தினமும் கட்டிலில் அம்மனுடன் படுத்து உறங்கும் கட வுளும், அதற்காக சீனா கற்கண்டும், சாரப்பருப்பு பாதாம் பருப்பு சத்துக் கலந்த சுண்டின பாலையும் தன் கட் டிலடியில் வைத்துவிட்டுப் போகும் படி குருக்களுக்குச் சொல்லும் கடவுளும் ஒரு மணி நேரம் பொறுத்து அதே குருக்கள் வந்து அதை எடுத்து குடிக்கப் பார்த்திருக்கும் கடவுளும் தமிழனுடைய கடவு ளாகுமா என்று கேட்கிறேன்.

ராமனும் கிருஷ்ணனும், கந்தனும் பட்சி மீதும் மிருகம்மீதும் சவாரி செய்து கொண்டிருக்கும் கற்பனை உருவங்களும், மற்றொருவனும் தமிழனுக்கு எப்பொழுது எப்படி கடவு ளானார்கள் என்றும், நமக்கு உருவமுள்ள பெண்டு பிள்ளை உள்ள கடவுள்கள் எப்படி வந்தன. எப்பொழுது வந்தன? இம்மாதிரி கடவுள் வைக்கப்பட்டிருக்கும் கோவில் களுக்கு நல்ல ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஏன் போக வேண்டும் என்றும் நான் முட்டாள்களைக் கேட்கவில்லை. பட்டை நாமமும் சூட்டுக்கோல் விபூதியும் அணிந்து வெட்கமில்லாமல் வெளி யில் தலை காட்டித் திரியும் சமயப் பண்டிதர்களைக் கேட்கிறேன். இக் கூட்டத்தால் அல்லவா தமிழ் மக்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக பாவிக்கப்பட்டான். இதை ஒழியுங்கள் முதலில். பின்னால் தானாகவே தமி ழனுக்கு மானம் முளைக்கும் என்கிறேன். இதனால் நான் சமயத் துரோ கியா, கடவுள் துரோகியா என்று கேட்கின்றேன். நான் சொல்வதெல்லாம் சமயத்துறையில் இந்துமுஸ்லிம் என்ற பிரிவு இருப்பது போல ஆரியன் தமிழன் என்று பிரிவு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

தீபாவளியும் நரகாசூரனும்

நரகாசூரன் என்பவன் யார்? அவன் செத்ததால் யாருக்கு லாபம் ஏற்பட்டது? யாருக்குக் கேடு ஏற்பட்டது? அதற்கு ஆக தமிழன் ஏன் கொண்டாட வேண்டும்? அதற்கு ஆக பார்ப்பானுக்கு சங்கல்பத்திற்கும் தட்சணைக்கும் தமிழன் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? என்று ஆராய்ந்து பார்க்கும்படி தமிழர்களை வேண்டிக் கொள்வதற்கு ஆகவே இவைகளைப்  பேசுகிறேன். எங்காவது ஒரு பார்ப் பான் மதுரை வீரனையோ, காத்தவராயனையோ கும்பிடுவதைக் காண்கிறீர்களா? பச்சையம்மனையோ, மாரியம்மனையோ பண்டிகை கொண்டாடுவதைப் பார்க் கிறீர்களா? நாம் ஏன் அவர்களுக்கு மாத்திரம் உயர்வையும் நமக்கு இழிவையும் கொடுக்கும் கடவுள்களையும், பண்டிகைகளையும், சடங்குகளையும் கொண்டாட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.

மானமுள்ள தமிழர்கள் இனி தங்கள் வீட்டில் ராமன் சீதை, கிருஷ்ணன், ருக்மணி, ரங்கநாதன், கந்தன், வள்ளி, தெய் வானை, சுப்பிரமணியன், பார்வதி, பரமசிவன் முதலிய உருவப் படங்கள் தொங்கவிடக் கூடாது என்றும், அக்கதைகளையும் புஸ்தகங் களையும் தங்கள் கலைகளாக சமய ஆதாரங்களாக கொள்ளக்கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.

பார்ப்பன ஆதிக்க ஆட்சி தற்காலமாக ஒழிந்துவிட்டது. இனி பெரிதும் நமக்கு இந்த வேலையும் இருக்க வேண்டும். பார்ப்பன ஆட்சி வந்தால் அப்புறம் மறுபடியும் பார்த்துக் கொள் ளலாம். அதற்குள் நாம் உண்மைத் தமிழர்களாகி ஆரிய சம்பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆரியர் வேறு - தமிழர் வேறு என்பதை உணர்ந்து தமிழ்நாடு தமிழருக்கு ஆக்கும் சுய மரியாதைப் பாதையில் நடப்போமாக.

(03-11-1939 அன்று ஈரோடு தியாகராயர் கட்டடத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு பாராட்டு கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 12.11.1939

நரகாசூரன் என்பவன் யார்? அவன் செத்ததால் யாருக்கு லாபம் ஏற்பட்டது? யாருக்குக் கேடு ஏற்பட்டது? அதற்கு ஆக தமிழன் ஏன் கொண்டாட வேண்டும்? அதற்கு ஆக பார்ப்பானுக்கு சங்கல்பத்திற்கும் தட்சணைக்கும் தமிழன் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? என்று ஆராய்ந்து பார்க்கும்படி தமிழர்களை வேண்டிக் கொள்வதற்கு ஆகவே இவைகளைப்  பேசுகிறேன். எங்காவது ஒரு பார்ப்பான் மதுரை வீரனையோ, காத்தவராயனையோ கும்பிடுவதைக் காண்கிறீர்களா? பச்சையம்மனையோ, மாரியம்மனையோ பண்டிகை கொண்டாடுவதைப் பார்க் கிறீர்களா? நாம் ஏன் அவர்களுக்கு மாத்திரம் உயர்வையும் நமக்கு இழிவையும் கொடுக்கும் கடவுள்களையும், பண்டிகைகளையும், சடங்குகளையும் கொண்டாட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.


-  விடுதலல,23.7.17

பெரியார் செய்த புரட்சி-The Week, 22.3.1992,

The Tanjore experience of 1971-72 also brought home the point that political support can work wonders. In a bid to raise contraceptive acceptance and to popularise the small family norm, the district administration, with the help of the rural development and agriculture department, organised functions and colourful processions. In all these, the political leaders were in the forefront.

The state had infact benefited from an awareness movement set in motion by the social reformer Periyar Ramaswamy Naicker in the mid-20s. Shocking a caste-ridden society, which he revelled in doing, he had ridiculed the concept of a woman being just a child-bearing machine. He spoke powerfully for contraception, status of women and late marriage. Poet-patriot Bharatidasan at about the same time wrote poems on prevention of un-wanted pregnancies and the need to check population growth. This was long before family planning programmes were even thought of.

Rashmi Saksena, The Week, 22.3.1992,

தஞ்சாவூரில் 1971-1972 ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அளவான குடும்பம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களால் மக்களிடையே மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஒரு அக்கறை ஏற்படத் துவங்கியது.

மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை மற்றும் இதர துறையினரும் உள்ளூர்அரசியல் தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை பிரச்சாரமாக செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இது போன்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆனால், தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரித்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நீண்ட காலத்திற்கு முன்பே மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது. சமூகப் புரட்சியாளரான பெரியார் ராமசாமி நாயக்கர் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர், இவர் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் சுதந்திரமே சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று உணர்ந்தவர். தன்னுடைய எழுத்துக்களில் பெண்கள் வெறும் குழந்தை பெறும் கருவியாக இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் பெண்கள் தங்களின் சமூக பொருளாதார நிலையை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்றதுடன் திருமணம் குழந்தைபெறுவதை பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உறுதியுடன் கூறினார்.  

அதேபோல் பெரியார் வழிவந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய கவிதைகளில் மக்கள் தொகை அதிகரிக்கப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து எழுதிவந்தார். இந்தியாவில் குடியாட்சி ஏற்பட்டு 30 ஆண்டுகள் வரை மக்கள் தொகைப் பிரச்சினையை தீர்க்க தீர்வுகளைத் தேடிக்கொண்டு இருக்கும் போது தென் இந்தியாவில் நீண்டகாலத்திற்கு முன்பே மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்.   

இந்தியாவின் மக்கள் தொகை குறித்த பிரச்சாரம் தொடர்பாக ‘‘தி வீக்'' என்ற ஆங்கில நாளிதழில் அதன் பொறுப்பாசிரியர் ரேஷ்மி சக்சேனா மார்ச் 22, 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தி வீக் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையின் ஒருபகுதியின் தமிழாக்கமே இது).

-விடுதலை,24.7.17

வெள்ளி, 21 ஜூலை, 2017

மாமாங்கத்தின் அற்புதம் -சித்திரபுத்திரன்


26.02.1933 - குடிஅரசிலிருந்து...

புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக் காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். 
சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா? 

பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்தபோதிலும்,  கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவ தில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.

சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீ ரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும். 
பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
-விடுதலை,21.7.17