ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கடவுளை நம்பும் முட்டாள்களே!


அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்; அவரன்றி ஓர் அணுவும் அசை யாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார். என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்? பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?
இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?
கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்ற வனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடிவில்லையே. ஏன்?
கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ்போடா மலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லை, ஏன்? மனிதன் எதனால் கெட்ட காரியங்களைச் செய்கின்றான்?
ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?
கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?
மனிதரிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ் தர்கள் யார்?
ஒரு மனிதனுக்கு அவன் கெட்ட காரியம் செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் கெட்ட காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?
கெட்ட காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்ப தானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்த வனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?
மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம், துக்கம், திருப்தி, அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும், இருந்தும் வரவேண்டும்?
மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திருவிளையாடலா?
நரகத்தைப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனை யாகச் சிருஷ்டித்த கடவுளை விட அயோக்கியன், கொடி யவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?
இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?
ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்தாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.
ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி. (14.7.1970 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!
ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண்ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது, அவர்களின் ஒருவனுக்குக்காலில் மிதியடியிருக்கிறதா இல்லையாவென்கிற சந்தேகமுண்டாகி மற்றொருவனை நோக்கி தம்பி, சுப்பு!
என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,
- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்) தகவல்: ஆ.கணேசன், சென்னை -21 :

யார் காரணம்?
ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமா ரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள்,
வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
ஈ.வெ.ரா. பகுத்தறிவு
-விடுதலை,6.3.15

மாமாங்கத்தின் அற்புதம் -சித்திரபுத்திரன்-


புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன்
பதில்: என்ன அற்புதமய்யா?
பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,  கூழாய் இருந்தபோதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.
சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள்.
ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும்.
இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.
பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?
சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே
இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள்.
எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும்.
அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.
பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?
சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள்.
ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள்.
ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
குடிஅரசு - உரையாடல் - 26.02.1933

காந்தியின் மிரட்டல்
காந்தியவர்கள் உயிர்விடுகிறேன்! உயிர் விடுகிறேன் என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப் பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம், ஆனால், பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது.
ஏனென்றால் இந்த மகாத்மா உயிர் விட்டால் அவருக்குச் சமாதி கட்டி குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்குப் பிழைப்பு ஏற்படுத்திக்கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர் களால் முடியும், ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர் களிடம் மாத்திரம் செல்லாது.
ஆகையால் காந்திமகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன் என்று உப்புக்காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும் படி செய்யும் வேலைக்கோ,
ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லாவிட்டால் எப்படியாவது ராஜி செய்துகொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்ல தாகும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.02.1993
.விடுதலை,7.3.15

மனிதன் செத்தால்... பிறகு? - தந்தை பெரியார்



மனிதன் செத்துப் போனான் என்பதற் குப் பொருள் மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனி தன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்று விட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல் லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிண மாகி விடுகிறான். இந்தக் காற்றுப் போக்கு வரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய் விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.
இந்த நிலையைத் தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என் றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள் அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை.
உதாரணமாக, ஒரு மனிதனின் மூக்கை யும், வாயையும் காற்றுப் போகாமல் வரா மல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோ மானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகி விடுவதில் ஆத்மா பிரிகிறது? எங்கே இருக்கிறது? ஆத்மாவைச் சொன்ன வன் ஆத்மாவிற்கு உருவமில்லை. அரூ பம் கண்ணுக்குத் தெரியாதது. சூட்சமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்து வாக்கவில்லை.
இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உரு வெடுத்து அதே மனிதனாகிக் காமத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக் கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதில் கொஞ்சம் மாற்றம்  செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும் விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன் பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து,  புகுந்து தீர்ப்பை ஏற்கிறது (ஜட்ஜ் மென்ட் டே) என்பதாகக் கருதுகிறார்கள்.
இப்படி எல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் கடவுளுக்கு மனிதன்மீது ஒரு அதிகாரம் (வேலை வேண்டுமென்பதற்காகவேயாகும்.
மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகி விட் டால் கடவுளை எவன்தான் சட்டை செய் வான்? ஏன் எதற்காக? சட்டை செய்வான்?
ஆனதினாலேயே  கடவுள் பெயரால் முட்டாள்களும் பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரித்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறு ஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலை வதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப் பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?
செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நிராகர மண்ணாக ஆகி விடு கிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டு மில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய், மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்து விடுகின்றன.
ஆகவே செத்த மனிதன் எப்படி இருப் பான் எதை அனுபவிப்பான் எங்கே இருப் பான் என்பவற்றையும் இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம்தானா மற்ற ஜீவன்களுக்கும் மற்றும் செத்துப் போன பட்டுப் போன மரம், செடி, கொடி புல், பூண்டுகளுக்கும்  உண்டா என்பதை யும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.
-விடுதலை,1.3.14

சமுக சீர்திருத்தமும் - சமயக் கொள்கையும்

- தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! இளைஞர் களே!! சகோதரர்களே!!!  2 மணி நேரத் திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட் டார்.  இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப் பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவ தெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன்.  ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப் பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர் களுமாய் இருப்பதால் நான் சொல்லு வதை திடீரென்று நம்பி விடாதீர்கள்.  நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு  வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
நண்பர்களே சமுக சீர்திருத்தம் என்றால் எந்த சமுகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என் பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள் வது இங்கு  அவசியமாகும். நான் இப் போது பொதுவாக மனித சமுகம் என் பதையும் பொதுவாக மனித சமுகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங் களையும் எடுத்துக் கொள்ளுகிறேன்.  பிறகு அவசியமிருந்தால் தனிச் சமுகம், தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.  பொதுவாக சம யங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமுகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற் படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க் கைக்கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படு வதுமாகும்.
ஒரு வாசக சாலையிலேயோ, உல் லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண் டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத் தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந் திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற் காகவும் ஏற்படுத்திக்கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும்.
இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக் கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும்.  ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு  இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததே யாகும். அதாவது, எப்படி ஒரு குழந்தை யானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன் னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில்போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும்படியான பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்றும்,  பேய், பூதம்  பிடித்துக் கொள்ளும்  என்றும், துண்டித்தக்காரன் பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய்  சொல்லுவ தோடு கையையும், முகத்தையும் ஒருவித மாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற் கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப் பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய் திருக்கிறார்கள்.  அந்த நிபந்தனை மிரட் டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன் றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும்.  மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப் பட்டவைகளுமாகும்.  அது மாத்திரமல் லாமல் மேற்கண்ட முறையில் சொல்லு பவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதி விட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறி வுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவை களையெல்லாம் கடவுள் சொன்னார்.  பகவான் சொன்னார், முனிவர் சொன் னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல் லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக் கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங் களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப் பிடியாய் பிடித்து சிறிது கூட காலத்திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக்குத் தகுந்த படியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருந்த இடம் கொடுத்துக் கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று.  ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச் சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்ட தென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌகரியமுமுடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமா யினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.
அப்படிக்கில்லாமல், அதாவது மனித னின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக் குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமுக சீர்திருத்தத் தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.
ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்ட வைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமுகத்தையும், இந்து சமயத் தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமுகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டி ருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப் பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமுக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள் கைகளையெல்லாம் விட்டுவிட்டு அக் கொள்கைகளை நிறைவேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத்திற் காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கை களைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.
காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங் களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந் தால் இந்திய மனித சமுகம் இன்றும் சுய அறிவற்று சமயத் தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது?  என்ப வைகளைக் கவனிக்காமல் கீழ் நிலை யிலேயே இருந்து கொண்டு சீர்திருத்த மடையவோ, முன்னேற் றமடையவோ முடியாமல் தவிக்கின்றன.  உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்து கொள்ளும் பான்மை யும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண் கின்றோம்.  ஆனால், ஆண்களைப் பார்த் தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக் கிறார்கள்.  இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன்  இந்து, இவன் சைவன், இவன் வைண வன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.  ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரி யாகத்தான் இருக்கும். ஆகவே, மதம் என்ப தும் சமயம் என்பதும் யாருக்கும் அநேக மாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதே யொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக்  கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு கொள்கைகளை அடி யோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள்  பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை  வற்புறுத்தாததேயாகும்.  எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான்  பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான், எந்த சமய மக்களிடம் சமய உண்மைக் கொள்கை களைப் பார்க்க முடியாமால்  போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள் கையைச் சொன்னாலும்  லட்சியம் செய் யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத் திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம்  நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவித மாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி  ஆகியவைகள் என்பவைகள்  எல்லாம் மேல்கண்ட வேஷ மாத்திரத்தாலே  கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டு விட்டதாலும் வெறும்  வேஷத்தை போடுகின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான  சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனை களையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலை விதி, கடவுளின்  பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப்  பிறக்கலாம்  என்பவைகளையும்,  சமய வேஷங் களையும் அடியோடு அழித்தாக வேண் டும்.  அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப் பட்ட நல்ல கொள்கையுள்ள சமயம் என் றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும்,  பிரத்தியட்ச அனுபவத் தையும்   பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர்களையே நடந்து  கொள்ளும்படி விட்டு விடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும்  பாட்டிக்கதைச் சமயங்கள்  இன்றைய சமுக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது  என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி  அறிவு சௌகரிய மில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர்  பிரயாணம் போய் வரட்டு மென்று கருதி அந்த ஊருக்குப போனால் புண்ணியம்,  இந்த சாமியை தரிசித்தால்  மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்  பிறப்பான் என்றெல்லாம்   சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக்  கதைகள் எழுதி  வைத்ததுடன் ஜீவ காருண்யம் என்பதையும்  உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக் காமல் இருக்கட்டும் என்று  கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம்  கிடைக்கு மென்று  எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார்,  ஆகாயக்  கப்பல் ஆகி யவைகள் ஏற்படுத்தப்பட்டு  மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போக  வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவேதான் அநேக  விஷ யங்களை சமயத்தின்  பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி  அடிமைகளாய்  கஷ்டப் படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டு மானால் சமயத்தின் உண்மை தத்து வத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும்.  அதன் போலித் தத்துவங் களை தைரியமாக அழிக்க வேண்டும்,
அதோடு போலிக்கற்பனை  நிபந்தனை களுக்கு  ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம் , புண் ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என் கின்ற உபத்திர வங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லா விட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல் லுவேன்.  இந்த உபத்திரவங்களும்  மடத் தனங்களும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்ற தென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து  சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும்படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடி யாக சீர்திருத்தம் செய்ய சற்றும்  ஒன்று படாததாக இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது  ஒரு முடிவுக்கு வந்து உங் களால் சமுகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன் படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.
(சென்னை - பச்சையப்பன் கலாசாலையில் சமுக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
குடி அரசு -சொற்பொழிவு - 25.01.1931
-விடுதலை,27.9.15

சனி, 19 செப்டம்பர், 2015

சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்?


- தந்தை பெரியார்


அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!
எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய் திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரி கின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க் கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.
உதாரணமாக இவ்வளவு கிளர்ச்சியா வது இங்கு நடத்திருக்கா விட்டால் அதிசய மாகத் தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள்.  அநேகமாக நாங்கள் போகின்ற ஊர்களில் எல்லாம் எதிர்க் கிளர்ச்சியே எங்கள் பிரச்சாரத்திற்கு மொத்த அனுகூலமளித்து வருகின்றது.  நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக்காக செய்யப்படும் மரியா தைகளில் முதலாவது அங்குள்ள கோவில் களை, அடைத்துப் போலீஸ் காவல் போடு வதும் நாஸ்திகர்கள் வருகிறார்கள் என்று ஊருக்குள் பிரச்சாரம் செய்து  எங்கள் கூட்டத்தை நடத்த விடக்கூடாதென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளு வதுமேயாகும்.  இந்தக் காரியங்கள் செய்யப் படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி பொது ஜனங்கள் அப்ப டிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள்  என்பவர்கள் எப்படியிருப்பார்கள்? அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும் நாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஏற்பட்டு விடுகின்றது.  இந்தக் காரணங்களால் எதிர்க்கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசியமாகப் போயும் அங்குள்ள எதிர்க்கிளர்ச்சிக்காரர் களின் செய்கைகளின் பயனாய் மலே யாவில் இதுவரை பிரச்சாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய சௌ கரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது.  அங்கு சுமார் 150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாகா தலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும், மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித்தார்களாம்.  அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும் படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்டகாரியம் செய்வார்கள்? என்று கேட்டாராம்.  அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்களாம், அதற்கவ்வதிகாரி சீதை என்றால் என்ன? என்று கேட்டாராம், அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார் களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசுநாதரின் தாயாராகிய மரியம் மாளைச் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள்.  அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வரு பவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்ல வென்று சொல்லுங்கள்.  அதற்கு தைரிய மும் ஆதாரமும் இருந்தால் பயப்படத் தேவையில்லை என்று சொல்லி வருகின்ற வர்களின் சுற்றுப்பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களு டையது என்றுச் சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.  ஆகவே, அதுபோலவே இங்கும் எங்கள் பிரச் சாரத்திற்கு சில மக்கள் பயந்து விட்டது  ஆச்சரியமாக இருக்கின்றது.
நிற்க, சகோ தரர்களே, என் வார்த்தைகளையெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச் சுதந்திரமுண்டு.  ஒருவரு டைய அபிப்பிராயத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது நியாய மாகாது.  என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திரமுண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.  அதைத் தடுப்பது என்பது ஒருக்காலும் மனித தர்மத்தில் சேர்ந்ததா காது.  நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள். சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனப் பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதா காது.  எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும்? நாங்களும் மனிதர்கள்தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினு டைய தனிப்பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லையே. பொதுப்பட்ட காரியங் களில், பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லோருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்களுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும் விட்டுக்கொடுக்க இசையோம்.  எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட வர்கள் தக்கப் பதிலையும், ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ, எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது.  ஆதாரமற்ற வர்கள் தந்திரத்தில் வாழ்பவர்கள். அமட்ட லிலும் மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத்தான் எங்களைப்பற்றிய பயம் ஏற்படக்கூடும். கோபமும் ஆத்திரமும் வரக்கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? அஸ்திவாரமற்றவைகளும் புரட்டுகளும் என்றைக்கும் இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாய்ந்து விழுந்துதான் தீரும்.
அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கும் நாளெல்லாம் வீண் நாளாகத்தான் முடியும். வெகு நாளைப்புரட்டு என்பதாலேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள், முரடர்கள், தந்திர சாலிகள் ஆதரிக்கிற அபிப்பிராயங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது.  அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது.  சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப் பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளி விடமுடியாது.  ஆதலால் தடைப்படுத்த முயற்சிப் பதிலோ, கோபிப்பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
சகோதரர்களே, நாங்கள் இங்கு எந்த விதமான மதப்பிரச்சாரம் செய்யவோ, ஏதாவது ஒரு மதத்தைச் குற்றம் சொல்லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வர வில்லை. அதுபோலே கடவுள் விஷயத்திலும் கடவுள் உண்டு.  இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்களுக்கும் மதக் காரர்களுக்கு முள்ள சம்பந்தத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங் களையும் உலகத் தோற்றங்களையும் அந்நியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுப வமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரீட்சித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக் கின்றோம்.  இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பதும் எங்களுக்கு விளங்கவில்லை.  இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை.  உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக்கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? மக் களை முட்டாள்தனமும், முரட்டுப் பலமும் ஆட்சி செய்ய  வேண்டுமா? அல்லது அறிவு நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.
மனிதனின் அறிவுக்கு மேற்பட்டதொன்று உண்டு என்று ஒன்றைக் கற்பித்து மக்களுக் குள் புகுத்தி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் நம்பித் தானாக வேண்டும் என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப் போட்டு நாசமாக்கி, மனித சமுகம் முழுவதையுமே அடிமைப்படுத்திவிட்டதா லேயே இன்று மனித சமுகம் இவ்வளவு தொல் லைக்கும், கவலைக்கும் ஆளாகி ஆகாரத் திற்கே திண்டாட வேண்டிய நிலைமையேற் பட்டு விட்டது.
சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று ஆகாய வாணி சொன் னாள், ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக் கற்பித்து எழுதி வைத்துக் கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டு இருப்பதும் அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத் துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவது மான காரியங்கள் எப்படி மனிதத் தன்மை யானதும் நியாயமானதுமானவை ஆகும்.
ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்னதானால், அசரீரி சொன்னதானால். ஆகாய வாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒருவருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப்ப தெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறி முகப்படுத்துவதெதற்கு? என்பவைகளை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை.  ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லி விட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான். ஆண்டவன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப்படாதென் கிறார்கள்.
தப்பித்தவறி யாராவது கேட்டு விட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின்றனவேயொழிய சமாதான மான திருப்தியான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமுகம் முற்போக்கடைவற்கே இடமில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரைச் சிலர் ஏமாற்றஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும், பித்தலாட்டங்களை யும் ஆரம்பித்த இடமே இந்த இடம்தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விட வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம். ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீட்சிக்க வேண்டு மென்று மேலும் மேலும் வலியுறுத்துகின் றோம்.  இன்று உலகத்திலுள்ள பெரும் பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்குத் தனித்தனியாக பற்பல விதமான கொள்கை களையும், வாசகங்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும், வாசகங் களையும் ஆண்டவன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றை பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்திவிட் டார்கள். அதனாலேயே மக்களுக்குள்  பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப் பிராயங்களும் காணப்படுகின்றன. இவ்வ பிப்பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரையொருவர் சந்தே கிக்கவும், வெறுக்கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க்கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன்படுகின்றன.  எந்த மார்க்கமாக என்றுப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம், ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியது தான் மேலானதென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக்  கொண்டு அதை நிலை நிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமேயாகும்.  இந்த உணர்ச்சியையும் செய்கையையும் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமுகத்திற்குள் ஒரு வித பொதுவான  ஒற்றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை.  ஆகையால் தான் இந்த இடத்திலேயே மனிதன் முதன் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.
நாம் இப்போது எந்த மதக்காரர்களுடைய கொள்கைகளையும் உபதேச வாசகங் களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்பதாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம் முடைய வேலையும் கவலையும் அவையல்ல, மற்றென்னவெனில் எல்லா மதக்காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக்கொள்ளுகின்றவர்களானதால்  ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கை களையும், உபதேச வாசகங்களையும் அந்த ஆண்டவனே சொன்னான் என்று சொல்லுவ தால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மையென்றும், எந்த அவ தாரப் புருஷர்கள் எந்த தூதர்கள் முதலான வர்கள்  சொன்னது உண்மையாகியிருக்கக் கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீட்சை என்பவையேயாகும்.
மேலும் இவைகளை எல்லாம் ஆண் டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப் படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலையில் எங்கு இருந்து கொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல்லுகின்றார்கள் என்று கண்டுபிடிப்ப தற்குமே யாகும்.  மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்ல வேண்டுமென் கின்ற கொள்கையையோ, உபதேசத் தையோ மற்றும் ஏதோ ஒன்றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துக் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப் பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டி ருந்தால் அவைகள் ஒவ்வொரு மனித னுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும் படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவைகளை ஆண்ட வன் தான் சொன்னான் என்று கருதும் படியாகவோ அல்லது குறைந்தளவு விவாத மாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்டவனால் செய்யமுடிய வில்லை? என்று இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப் பட்டது என்று சொல்லப்படுவது உண்மையா யிருக்க முடியுமா என்னும் சந்தேகங்கள் தோன்று வதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும். அன்றியும் இவற்றையெல்லாம் ஆண்டவன் சொன் னார் என்று கண்மூடித் தனமாய் நம்புவது அவசியமா? அல்லது ஆண்டவன் சொல்லி இருந்தால் நமக்கு ஏன் தெரிந்தி ருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.
நிற்க. இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும், மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப் பார்த்து சமாதானம் கூறுகிறார்கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டுமென்பதற்காகவோ, ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று நம்பச் செய்வதற்காகவோ உலகத் திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச் சியையும், சுதந்திரத்தையும், இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா? என்று கேட் கின்றோம்.  இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்க வொட்டாமல் அழுத்திவைத்து விடுவதா? என்றும் கேட்கின்றோம்.
மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர்களுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.  பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தைத் தாராள மாய் வெளியிலெடுத்துச் சொல்ல இடம ளிக்க வேண்டும்.  தனக்கே விளங்காததை யும், மற்றொருவனுக்கு விளங்கவைக்க முடியாத தையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும் படியோ எதிர்ப்பார்ப்பதும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவதும் கண்டிப் பாய் கூடவே கூடாத  காரியமாகும்.  அது போலவே உலக மனிதர்கள் ஒற்றுமைப் பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல்லை யும் அவர்களின் உபதேசங்களின் தொல் லையும் ஒழிந்தாக வேண்டும் .  இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும்.  இது செய் யப்படாத வரை மனிதன் காட்டுமிராண் டித் தனத்திலிருந்து மனிதத் தன்மைக்கு ஒருக்காலமும் திரும்ப மாட்டான்.
(01.03.1931 புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 08.03.1931
-விடுதலை,13.9.15

சித்திரகுப்தன் -வினா விடை


வினா: இந்தியா அடிமையானதற்கு காரணம் என்ன?

விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுளும் ஆகும்.
வினா: கிருஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தாலும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
விடை: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.
வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?
விடை: மதவிஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையில் அவர்கள் (பாப்பார்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மதவிஷயத்தில் பார்ப்பனர் களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடையவேண்டிய வர்களாவார்கள்.
வினா: ஆண் விபசாரகர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் வியபாசாரத்திற்கு என்ன செய்வார்கள்?
விடை: அதற்காக எந்த விபசாரகனும் விபூதிபூசுபவரும் பயப்பட வேண்டியத்தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக்கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலை கூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.
(குடிஅரசு, 16-11-1930)
விடுதலை,18.9.15

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தற்காலக் கல்வி வயிற்றுப் பிழைப்பு கல்வியே




- தந்தை பெரியார்

திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவ னாக இருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரிய மாயிருக்கிறது. ஏனென்றால் இது கல்வி என்பது சம்பந்தமான ஆசிரியர் மகா நாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்ச மாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான். நான் என்னுடைய ஒன்பதாவது, பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத்திலேயும் வாசித் தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உட்பட்ட காலத்திலும் என்னைப் பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்குத் தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டு ஓர் இடத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத் தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன்.
அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும், பிள்ளை களுக்கும் தொல்லை விளைவிப்பதும், அவர்களிடம் அடிபடுவதுமான காலந் தான். நான் ஏதாவது இரண்டொரு எழுத்தை கற்றக் காலமாயிருக்கும். இதை நான் அநேக சந்தர்ப்பங்களில் பல பொதுக் கூட்டங்களில் சொல்லியி ருக்கின்றேன். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டே தான் ஒரு சிலர் அதாவது என்னுடைய கொள்கை களுக்கு முரண்பட்டவர்களோ, அத னால் நஷ்டப்பட நேரிடுகிறவர்களோ என்னைக் கண்டிப்பதற்கு இதை உப யோகித்துக் கொள்கிறார்கள். என்ன வென்றால், நான் கல்வி அறிவு அற்றவ னென்றும், அதனால் எனது கொள் கைகள் அறிவு அற்றதென்றும் சொல் லியும், எழுதியும் வருவதைப் பார்க் கின்றேன். ஆனாலும், உங்கள் ஜில்லா போர்டு தலைவர் திரு. எம். கே. ரெட் டியார் அவர்களுக்கு என்மீதுள்ள அன் பும் நம்பிக்கையும், நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே மகாநாட்டுக்கு தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியதால் வேறு வழி யில்லாமல் நான் ஒப்புக்கொள்ள வேண் டியதாயிற்று. நீங்கள் எந்தவிதமான சிறந்த உபந்நியாசத்தையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஜில்லா போர்டு தலைவர் இந்த மகாநாட்டை திறந்து வைக்கும்போது செய்த வரவேற்புப் பிரசங்கமானது மிகவும் அற்புதமாக வும், ஆணித்தரமானதாகவும், பெரிய அநுபோகமும், ஆராய்ச்சியும் பொருந் தியதாகவும் இருந்தது. அது உங்கள் நிலையை விளக்கியதுடன் நீங்கள் செய்ய வேண்டியதையும் நன்றாய் எடுத்துக் காட்டி இருக்கின்றது. அவ்வு பந்நியாசம் உங்களுக்கு மாத்திரமல் லாமல் உங்கள் மாணாக்கர்களுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் கிராமவாசிகளுக்கும் பொதுநல சேவைக்காரர்களுக்கும் மிகுதியும் பயன்படக்கூடியது.
அதுபோல நான் எதையும் எடுத்துச் சொல்ல முடியாது. தவிர,  அக்கிராசனம் வகித்தவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அதுபோல் ஆராய்ச்சியோடு ஒன்றும் சொல்ல முடியாது என்றும், ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய விஷயம் எதை யாவது என் சொந்த முறையில்தான் சொல்லக் கூடும் என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என் கின்றவர்கள் ஒருவித தொழிலாளி களே.  அதாவது ஜீவனத்திற்காக வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக் காரர்களே அல்லாமல் உண்மையான ஆசிரியத் தன்மையுடையவர்கள் அல்ல என்பதே எனது அபிப்பிராயம். எப்படி ஒரு மனிதன் தன் ஜீவனத்திற்கு மூட்டை தூக்குகிறானோ, மாடு மேய்க் கின்றானோ, வண்டி ஓட்டுகிறானோ, வக்கீல் வேலை செய்கிறானோ, குமாஸ் தாவாக இருக்கிறானோ அப்படியே உபாத்தியாயர் வேலை என்பதும் ஒரு தொழிலாகவே ஏற்பட்டு விட்டது. ஒவ் வொரு உபாத்தியாயரும் தங்கள் தங் களை உபாத்தியாயர் வேலைக்குத் தகுதி ஆக்கிக் கொண்டதின் கருத்தே அவர் களின் ஜீவனத்திற்கு ஏதாவது தொழில் வேண்டாமா என்கின்ற கருத்து கொண்டுதானேயல்லாமல் ஏதாவது ஆசிரியத் தன்மையில் ஆசை இருந்து ஏற்பட்டதாக எனக்குத் தோன்றுவ தில்லை. ஆதலால் இம்மாதிரி மகாநாட் டுக்கு உபாத்திமைத் தொழிலாளர் மகாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமான பெயராகும். அது போலவே உங்களிடம் தங்கள் பிள்ளை களை படிக்கவிடும் பெற்றோர்களும், பிள்ளைகளின் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது வழி ஏற்பட சற்றுப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் தமது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களேயொழிய, அவர்களும் படிப்பை வயிற்றுப் பிழைப்பைத் தவிர,  வேறு காரியத்திற்குக் கருதுவதில்லை. உங்கள் ஜில்லா தாலுகா போர்டுகளும், முனிசிபாலிட்டிகளும் கூட அந்த கருத்துடன்தான் பள்ளிக்கூட நிர்வாகம் செய்து வருகின்றார்கள். கடைசியாக சர்க்காரும் கூட இவ்வளவு வரிப் பணத்தைப் படிப்புக்காக செலவு செய் தும், படிப்பு இலாகா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெற கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய் கின்றார்கள். அதனால்தான் பலவழி களிலும் தற்கால கல்விக்கு வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது. மனி தனுக்குக் கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும், அவ்வறிவால் தான் இன்புறவும், மக்கள் இன்புறவுமான தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே. இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாததாகவே இருக்கின்றது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலை யாகவும், தொழிலாகவும் போய்விட் டதே அல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை. ஒரு நிமிஷத்திற்கு 100 கவிபாடக் கூடிய வித்வானானாலும் அவன் அக்கவி பாடுவதில் அதாவது ஒரு நிமிடத்திற்கு நூறு அச்செழுத்தைக் கோர்க்கும் ஒரு கம்பாசிட்டருக்குச் சமானமான தொழிலாளிதானே ஒழிய, அவனை ஒரு பெரிய அறிவாளி என்று சொல்லி விட முடியாது. அதுபோலவே ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லக் கூடிய ஒரு பண்டிதனோ ஒரு பாஷ்யக் காரனோ என்பவன், ஒரே தோலில் நூறு விதமான செருப்புத் தைக்கக் கற்றுக் கொண்ட ஒரு சக்கிலிக்கு மேலான வனென்று சொல்லிவிட முடியாது.
ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லும் பண்டிதனுக்கு எப்படி செருப்பு தைக்க தெரியாதோ அது போலவே சக்கிலிக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாது. ஆனால், இருவரும் இரு தொழிலில் இரு வித்தையில் சிறந்தவர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக சில பெரிய சட்டம் படித்த வக்கீல்களை விட சிறிய சட்டம் படித்த வக்கீல்கள் கெட்டிக் காரர்களாய் இருக்கின்றார்கள். சிலருக் குப் படிப்பெல்லாம், நெட்டுருப்போட்டு ஒப்புவிக்க முடிகிற தல்லாமல் தங் களுக்கு ஒரு காரியத்திற்கும் உப யோகப்படுவதில்லை.
உதாரணமாக, ஒரு பெரிய விஞ் ஞான சாஸ்திரி அதாவது சைன்ஸ் படித்த பண்டிதன் ஒரு புளியமரத் தடியில் பேய் இருப்பதாக யாராவது சொல்லிவிட்டால் அந்தப் புளிய மரத் தடியில் நடக்க நேரும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுக்கத் துடன் நடக்கின்றான். தன் பெண் ஜாதியைப் பேயோட்ட கோயிலுக்கு அனுப்பிக் கொடுக்கிறான், உடற்கூறும் அதன் சிகிச்சையும் படித்த பெரிய பண்டிதனான டாக்டர் கூட தன் பெண்ஜாதியோ, மகளோ வீட்டிற்கு தூரம் என்றால் உடனே வெளியில் உட்கார வைத்து விடுகிறான்; அல்லது கோழிக்கூடு போன்ற சிறு அறைக்குள் இருக்கச் செய்துவிடுகின்றான், அல்லது நிழல் மேலே பட்டால் தீட்டு என்று சொல்லிவிடுகின்றான். இரவில் வெளி யில் தள்ளி கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே படுத்துத் தூங்குகிறான். தனது குழந்தை நொண்டியாய்ப் பிறந்தால், தான் முன் ஜென்மத்தில் செய்த வினை என்று வருத்தப்படுகின்றான்.
பெரிய வான சாஸ்திர பண்டிதன் கிரகணத்தின் போது ஊறுகாய்ச் சட்டியில் அருகம்புல்லைப் போட்டு விட்டு கிரகணம் ஆரம்பிக்கும்போது ஒரு முழுக்கும், நீங்கும்போது ஒரு முழுக்கும் போடுகிறான். பெரிய ஞான சாஸ்திர பண்டிதன் என்பவனும் குறிப் பிட்ட நாளில் குறிப்பிட்ட ஊருக்குப் போனால் மோட்சம் என்றும், குறிப் பிட்ட குளத்துத் தண்ணீரில் (அது எவ்வளவு அழுக்காயிருந்தாலும்) முழு கினால் தான் செய்த அக்கிரமங்களின் பலன் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் நினைத்துக் கொண்டு முழுகி விட்டு இதுவரையில் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தன்னை தைரி யப்படுத்திக் கொண்டு புதுக்கணக்கு போட்டு மறுபடியும் அக்கிரமங்களைச் செய்ய தைரியவானாகி விடுகிறான். பெரிய தாவர சாஸ்திரமும், ஜீவ ஜந்து சாஸ்திரமும் படித்தவன் நாயைக் கொன்றால் பாவம் இல்லை, நரியைக் கொன்றால் பாவம் இல்லை, கரு டனைக் கொன்றால், குரங்கைக் கொன் றால் பாவம் என்கிறான். பால் சாப் பிட்டால் மாமிச பட்சணமல்ல, ஆடு, கோழி சாப்பிட்டால் மாமிச பட்சணம் என்கின்றான்.
இம்மாதிரி எத்தனையோ காரியங் களில் படித்தவர்கள் என்பவர்களின் நிலைமை அறிவுக்கும், படிப்புக்கும் சம்பந்தமில்லாமலே இருக்கின்றது. எப்படிப் பல புஸ்தகங்கள் நிறைந்த அலமாரிக்கு ஒரு சிறிதும் புஸ்தகங் களின் தன்மை தெரியாதோ அது போலவே பல புஸ்தகங்களையும் அலமாரிக்கு பதிலாக அவைகளை உள்ளத்தில் வைத்து இருக்கிறதாகக் காணப்படும் நகரும் அலமாரிகளான பண்டிதர்கள் கடுகளவு பகுத்தறிவும், புஸ்தகத்தின் தன்மையும் அறியாத வர்கள் அனேகர்கள் இருப்பது எனக்குத் தெரியும். எனவே கல்வி என்று பெயர் வைத்துக் கொண்டு நாம் செய்யும் இம்மாதிரியான அநேக பிரயத்தனங்கள் மக்களின் ஒரு சிறு பகுத்தறிவிற்கும் உபயோகப்படாமலே இருந்து வருகின்றது. உதாரணமாக நமது நாட்டின் சரித்திரம் என்பதாக சொல்லப்படும் எந்தப் பழஞ்சரித் திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மற்ற நாட்டார் எல்லோரையும் விட நாம் மேல் நிலையில் இருந்த தாகவே காணப்படுகின்றது. ஆனால்,  இன்று நாம் இருக்கும் நிலையானது மற்ற எல்லா நாட்டாரின் நிலைமையை விட தாழ்மையாகவே இருக்கின்றது. இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாகப் பதில் சொல்லிவிடுகின்றார்கள். இப்படிப் பதில் சொல்லுபவர்களேதான் பெரும் பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும், தெய்வ நம்பிக்கை உடைய வர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்கள். இம்மாதிரி தொட்டதற்கெல் லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும், கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம்பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயல்பாகவும், பெரியோரின் ஞானமாகவும், ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக்கும் மற்ற நாட்டார் எல்லோ ரும் தங்கள் புத்திக்கும், முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தி யாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளை களையும் கொண்டு வரவேண்டும். இம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம் எந்த விதத்திலும் முன்னேற்றம் அடைந்தே தீரும்.
இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பலவிஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம சீர்திருத்தம், இயற்கைப் பாடம், சாரணர் இயக்கம் முதலிய விஷயங்கள் முக்கிய மானவை. அவைகளைப் பற்றி எனது அபிப் பிராயங்களையும் சிறிது சொல்கிறேன். கிராம சீர்திருத்தம்
உபந்யாசகர் தமிழ்நாட்டில் மட்டும் 27 இலட்சம் கிராமங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். அவை உண்மையா கவே இருக்கலாம். அக்கிராமத்தின் நன்மைக்கும், கிராமவாசிகள் முன்னேற் றத்திற்கும் இதுவரை அரசாங்கமோ, அரசியல் இயக்கமோ, கிராம சீர்திருத் தக்காரர்களோ, அரசியல் ஜனப் பிரதி நிதிகளோ ஏதாவது ஒரு சிறிது நன்மை செய்திருக்கிறார்களா? ஆனால்,  ஒவ் வொருவரும் தத்தம் நலனுக்காக வேண்டி கிராமத்தார்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லியே மக்களை ஏமாற்றிப் பிழைப்பை வலுப்படுத் தியோ, தாங்கள் ஓட்டுப் பெற்றோ, மக் களின் நம்பிக்கை பெற்றோ சுயநல மடைந்து வருகிறார்கள். கிராமத்தின் நிலைமைகள் மாத்திரம் நாளுக்கு நாள் கீழ் நோக்கிக் கொண்டே போகின்றது.
கிராம சீர்திருத்தம் என்பது வீதி கூட்டுவதும், பள்ளிக் கூடம் கட்டு வதும், பஜனை மடம் உண்டாக்குவதும், உற்சவங்கள் செய்விப்பதும், அதிக வெள்ளாமை விளையச் செய்வதுமான காரியங்களைச் செய்து விட்டால் போதும் என்று பலர் நினைக் கிறார்கள். இக்காரியங்களினால் எந்தக் கிராமமும் முற்போக்கடைந்துவிடாது. கிராமக் குடித்தனக்காரருக்கு பகுத்தறி வையும், சிக்கனத்தையும், ஏழை மக்கள் நிலை மையையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும்.
கிராமவாசிகள் கள்ளுக்கடையை ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்து சுவாமி கோவில் கட்டுகிறார்கள். பரம்பரையாய் திருடுகின்ற ஜாதியார் என்கின்றவர்களுக்குத் திருட அனுமதி கொடுத்து, அவர்களைப் போலீசார் கண்டுபிடித்துத் தண்டிக்க இடம் கொடுக்காமல் இருப்பதாக வாக் களித்து அபயம் கொடுத்து அவர் களிடம் திருட்டில் பங்குவாங்கி உற்சவம் செய்கிறார்கள். வெறும் புராணப் படிப்பைச் சொல்லிக் கொடுத்து தங்கள் பணங் காசையெல்லாம் பஜனைக்கும், உற்சவத்திற்கும் கல்யாணத்துக்கும், கருமாதிக்கும், கும்பாபிஷேகம் முதலிய காரியங்களுக்கும் செலவு செய்யச் செய்வதும், யாத்திரைக்கும், உற்சவத்திற்கும், சமராதனைக்கும் செலவு செய்து அவற்றில் போட்டி போட்டு தங்கள் வரும்படியையும், மேற்கொண்டு கடன் வாங்கியும் செலவு செய்யப் பழகிவிடுகிறார்கள். மற்றும் பக்தி என்றும், மதம் என்றும் முட்டாள்தனமாக கிரகித்துக் கொண்டு பட்டை நாமங்கள் போட்டுக் கொண்டும், சாம்பலைப் பூசிக் கொண் டும் குடும்பத்தைக் கவனிக்காமல் பாஷாண்டிகளாய் திரிவதும், புது நாகரிகம் என்னும் பேரால் தங்கள் தங்கள் வாழ்க்கைச் செலவை அதிகப் படுத்திக் கொண்டு மோட்டார் வண்டி என்றும், அனுபவிக்க உயர்ந்த சாமான் கள் என்றும், உயர்ந்த ஆடைகள் என்றும் பல வழிகளில் தங்கள் தேவை களுக்கு மேலும் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுகத்திற்கு மேலும் போட்டி போட்டுக் கொண்டு முட்டாள்தனமாக தங்கள் பணங்களைச் செலவு செய்து விடுகின்றார்கள்.
போதாக் குறைக்கு அரசியல் புரட்டால் ஏற்பட்ட தொல்லையாகிய ஜனப் பிரதிநிதித்துவம் என்று சொல் லப்படும் ஸ்தானங்களாகிய யூனியன், பஞ்சாயத்து, தாலுகா ஜில்லா போர்டு, முனிசிபாலிடி சட்டசபை முதலிய ஸ்தானங்களின் தேர்தல்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு 1000, 5000, 10000, 50000 ரூபாய் வரை தேர்தல்கள் செலவும், அவைகளினால் தங்கள் வாழ்க்கை கவனிப்பு கெடுதலும் ஏற்படுகின்றன. மற்றபடி ஒழுக்கங் களிலும் மிராசுதாரர்களாயிருக்கிற வர்கள் தாசி, வேசி, வைப்பு முதலிய விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் வீட்டு பெண்களைக் கவனியாமலும், அவர் களுக்கு வாழ்க்கையில் இன்பமில்லா மல் கொடுமைப்படுத்துவதும் அத னால் இம்மாதிரி மிராசுதாரர்கள் வீட்டுப் பெண்கள் பெரிதும் தங்கள் இயற்கை உணர்ச்சியை கட்டுப்படுத்த சக்தியற்றவர்களாகி தங்கள் வேலை யாட்கள், வெளியாட்கள் முதலானவர் களுடன் இன்பம் அனுபவிக்கத் துணிவு கொள்ள வேண்டி ஏற்படுவதும், இதனால் குடும்ப கவனம் குறைந்து அவரவர்கள் இஷ்டம் போல் அவர வர்கள் கையில் சிக்கின பணத்தைப் பாழாக்குவதுமான வழிகளால் அநேக குடும்பங்கள் கெடுவதும், மற்றும் விவகார வியாஜியங்கள் முதலிய காரி யங்களில் வக்கீல்களுக்கும், அதிகாரி களுக்குமாக தங்கள் பொருள்களை அள்ளிக் கொடுத்து பாப்பராவதும், அதிகாரிகள் சினேகத்திற்காகவும், பட்டம், பெருமை, முதலியவைகளுக் காகவும் பொருள்களைக் கவலையின்றி வாரி இறைத்துக் கடன்காரர்களாவதும் ஆகிய எத்தனையோ விதங்களில் கிராமங்களும், கிராம மிராசுதாரர் களும் 100க்கு 80 பேருக்கு மேலாகக் கடன்காரர்களாகவும், ஒழுக்கமில்லாத வர்களாகவும், குடும்பங்களில் கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வரு வதை நாம் தினமும் பார்த்து வருகின் றோம். இக்குறைகள் நீங்கினாலன்றி வேறு எந்தக் காரணத்தாலாவது நமது கிராமங்கள் முற்போக்கடைந்து விட முடியுமா என்று கேட்கின்றேன். எனவே, இக்குறைகள் நீங்க எந்த அரசியலோ, மத இயலோ, கிராம சீர்திருத்த இயலோ இதுவரையில் ஏதாவது செய்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றேன்.
உண்மையாய் ஏதாவது ஒரு கிராமம் சீர்திருத்தமடைய வேண்டு மானால் மேற்கண்ட குற்றங்கள் நீங்கத் தகுந்த கொள்கை கொண்டதாக கிராம சீர்திருத்தத் தன்மை ஏற்பட்டாலொழிய வேறு எந்த விதத்திலும் சீர்திருத்தம் ஏற்படாது. இவைகள் எல்லாம் என்னு டைய 35 வருஷ கிராமவாசிகளுடைய வும், மிராசுதாரர்களுடையவும் சினேக அனுபவத்தினாலேயே சொல்லுகிறேன். இந்த மேற்கண்ட காரணங்களால் வருஷம் பத்தாயிரம், இருபதாயிரம், அய்ம்பதாயிரம் ரூபாய் வரும்படி உள்ள பெரிய பெரிய குடும்பங்கள் கடனுக்கும் சொத்துக்கும் சரி என்றும், சொத்துக்கு மேற்பட்ட கடன் என்றும் சொல்லும்படியான நிலையில் இருந்து வருகின்றது.
இயற்கைப் பாடம் இனி, இயற்கைப் பாடம் என்பதைப்பற்றி சில வார்த் தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்த இயற்கைப் பாடம் என்பதை நமது சிறு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பற்றி உபாத்தியாயர்கள் மிகவும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது மக்களின் அறிவு வளர்ச் சிக்கு மிக்க அவசியமானதாகும். ஆனால், அநேக உபாத்தியாயர் களுக்கு இயற்கைத் தத்துவம் இன்ன தென்றே தெரியாது என்பது எனது அபிப்பிராயமாகும். நமது மக்கள் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்குக் காரணம், இயற்கையின் தத்துவம் இன்னதென்று அறிய முடியாமல் போனதேயாகும். மேல் நாட்டார்கள் குறிப்பாக வெள்ளைக்காரர்கள், நம் மால் தெய்வத் தன்மையென்றும், அதிசயம் என்றும், அற்புதம் என்றும், சொல்லத்தக்கதான அநேக ஆச்சரியப் படத்தக்க காரியங்களை செய்து கொண்டும், இனியும் அநேக ஆச்சரி யங்களைக் கண்டுபிடித்துக் கொண்டும் வருவதற்கு அவர்கள் இயற்கையின் தத்துவத்தை அறிவதில் பெரிதும் கவலை எடுத்துக் கொண்டதே காரண மாகும்.
நமது பிள்ளைகளுக்கு நாம் இயற்கையின் தத்துவம் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும், மேல் நாட்டார் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கையின் தத்துவத்தைச் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் ஒன்றுக்கொன்று நேர் விரோதமானது. நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே, எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது; கடவுள் சம் மதமில்லாமல் நம்மால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆகையால் இதில் நம்பிக்கை வைத்து எல்லா பொறுப் பையும் கடவுள் மீது போட்டுவிட்டு பக்தியாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றோம். மேல் நாட்டாரோ அப்படி இல்லாமல், மனிதனால் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. முயற்சி செய்; பலன டைவாய்; உனது சக்தியில் நீ சந்தேகம் கொள்ளாதே; உன்னால் ஆகுமோ ஆகாதோ என்று பயப்படாதே; சகல அற்புதங்களும், அதிசயங்களும், உனது நம்பிக்கைக்குள்ளும், உனது முயற்சிக்குள்ளும், சிக்கிக் கிடக்கின்றது என்று சொல்லிக் கொடுக்கின்றார்.
மழை பெய்யாவிட்டால் பார்ப் பானுக்குப் பணம் கொடுத்து வருண ஜெபம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லிக் கொடுக்கின்றோம்.
மேல் நாட்டார் மழை பெய்யாத தற்கு மேகத்தில் உள்ள கோளாறு என்ன என்று கண்டுபிடித்து, மேகத் தைக் கலக்கிவிட்டு மழை பெய்யச் செய்யும்படி சொல்லிக் கொடுக் கிறார்கள். இயற்கைத் தத்துவம் அறியத் தக்க அறிவுப் பெட்டகத்திற்கு நாம் குழந்தைகளைப் பழக்குவதில்லை.
குழந்தைகள் இயற்கை விசார ணையில் இறங்கினால் நம்மவர்கள் மிரட்டி நாஸ்திகம் என்றும், அதிகப் பிரசங்கம் என்றும் பயப்படுத்தி அடக்கி விடுகின்றோம்.
இவ்விதம் அடக்கும் தன்மையைப் பெரும்பாலும் நாம் மதத்தின் பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடி மைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், நாஸ்திகம் ஆகும் என்றும் சொல்லிப் பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடு மையேதான் முக்கியக் காரணமாகும்.
மதத்தையும், கடவுளையும் நினைத் ததற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம், தொட்டதற்கெல்லாம், சம்பந்தப்படுத்தி எல்லாம் கடவுள் செயல்; எல்லாம் கடவுள் செயல் என்பதையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளை களுக்குச் சொல்லிக் கொடுக்கும் தன்மையை அடியோடு நிறுத்திவிட வேண்டும். 19.05.1928 இல் செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர்  மகாநாடு தலைமைச் சொற்பொழிவு
(குடிஅரசு (27.05.1928, 03.06.1928)
-விடுதலை,6.9.15

காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான்



டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள், பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல் லுகின்றேன் என்றால் நெருப்பு வைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமு தாயத் தலைவர்கள் டில்லியில் இருந்து இருக்கின்றார்கள்; தவிரவும் சன்னி யாசிகள் (சாதுக்கள்) என்னும் பேரால் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சன்னியாசிகளை பார்ப்பனர்கள் என் கின்றேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) ஜாதிக்கு சன்னியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனை சாது வென்றோ, சன்னியாசி என்றோ சொல்ல மாட்டார்கள்.
ஆகவே அன்றைய கலவரத்துக்கு, காலித்தனத்துக்கு நேரடியாக சம்பந்தப் பட்டவர்களும், தூண்டிவிட்டவர்களும், ஆதாரமாக இருந்தவர்களும், தலைமை வகித்தவர்களும் பார்ப்பனர்கள் தவிர, மததர்ம சம்பிரதாயங்களில் பார்ப்பனர் களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் தான் காரணஸ்தர்கள் ஆவார்கள் என்ற உறுதியால்தான் சொல்லுகின்றேன். மற்றும் இராஜாஜி எலெக்ஷனுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தாக வேண் டும் என்றும், எந்த அதர்மத்தைச் செய் தாவது ஒழித்தாக வேண்டும் என்பதாகச் சொன்னதும், அகிம்சையைக் கடை பிடிக்க வேண்டியதில்லை என்பதாகப் பேசியதும் எனது உறுதிக்கு ஆதாரம் ஆகும்.
வருணாசிரம தர்மத்தை ஒழித்ததை எதிர்க்கவே இக்கலவரம்
பசுவதைத் தடுத்தல் என்பது ஒரு பொய்யான காரணமேயாகும். உண்மைக் காரணம் பார்ப்பனருடைய வருணாசிரம தர்மத்துக்குக் கேடுவந்து விட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக் கினது. காமராஜர் என்கின்ற ஒரே காரணம் தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கியமான காரணமாகும். பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்கறை இருக்கின்றது என்பது அப்துல்காதர் ஆடி அமாவாசை அன்று தன் தகப்பனாருக்கு தர்ப்பணம் கொடுத் தார் என்பது போன்ற கதையேயாகும். இந்த சாதுக்கள், சங்க ராச்சாரியார்கள், மற்றும் சர்வ பார்ப் பனர்களுக்கும் முன் னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், தேவர்கள், இராமன், கிருஷ் ணன் முதலிய எல்லா ஆரியர்களுக்கும் மாடு தான் முக்கிய ஆகாரமாய் இருந் திருக்கின்றது! இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகின்றது.
உலகில் உள்ள மக்கள் 100-க்கு 100 பேர் மாட்டின் பாலைக் குடிப்பதும், மாட்டு உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதும் 100-க்கு 50 பேருக்கு மேலாக மாட்டு மாமிசம் உண்பதும், 100-க்கு 90 பேர் வேறு பல மாமிசம் உண்பர்களாகவே இருந்து வருகின் றார்கள்.
இப்படிப்பட்ட மக்களுக்கு பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன் தான் உண்மை என்று நம்புவான்? எப்படி அது யோக் கியமான காரியமாய் இருக்க முடியும்? காமராசர் பார்ப்பனரை வதை செய்யும் காரியத்தை உண்டாக்கியவர் அதுதான் சமதர்மம் என்பது. காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான் தத்துவார்த்தமாகும்.
காமராஜர் சமதர்மத்தில் எல்லோ ருக்கும் படிப்பு, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் சம அந்தஸ்து ஏற்பட்டுவிடும் பிறகு இதில் மனித பேதம் எப்படி இருக்க முடியும்? மனித பேதம் தானே பார்ப்பனியம் என்பது.
முற்றிலும் பார்ப்பனர் - ஆதரவாளர் செய்த சதியே!
ஆகவே இதனால்தான் இந்த பார்ப் பனியக் கலவரத்துக்கும், காலித் தனத் திற்கும் பார்ப்பன குருமார்கள், பார்ப்பன சாதுக்கள், பார்ப்பன அதிகாரிகள், பார்ப் பனர்கள், பார்ப்பனப் பத்திரிகைக்காரர்கள், பார்ப்பன தர்மிகள் காரணமாக, காரிய சித்தர்களாக இருந்திருக்கின்றார்கள் என்ப தோடு, பிர்லா, பஜாஜ், டாட்டா முதலிய செல்வர்கள் பலபேர்கள் கூட்டமும், மற்றும் சொல்ல வேண்டுமானால் நந்தாக்கள் முதலிய மந்திரிகள் கூட்டமும் உடந்தை யாயும் ஆதரவாளர்களாகவும் இருந்திருக் கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
நேரு தங்கைக்கும், மற்றும் நேரு ஜாதிக் கும் இந்த சமதர்மம் எதிர்க்கப்பட வேண்டி யதாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் நந்தாக்கூட்டம் பெரிய அழுக்கு மூட்டைக் கூட்டமாகும். இந்திய பிரதமர் தேர்தலுக்கு நடந்த போட்டியில் ஒருவராக நிற்க முனைந்தவர் நந்தா! அது வும் ஒரு பிரபல ஜோசியர் கட்டளைப்படி நின்றவர். தேதி மாற்றத்தால் விலகிக் கெண்டவர்! இப்படிப் பட்ட அவர் எப்படி சமதர்மத்துக்கு உடந் தையாக இருக்க முடியும்? எனவே, டெல்லி கலவரமும் காலித் தனமும் பார்ப்பனரின் மனுதர்மத் துக்கும் காமராஜரின் மனித(சம) தர்மத்திற்கும் ஏற்பட்டு நடந்துவரும் பலாத்காரப் போராட்டங்களில் ஒன்றேயாகும். எல்லாப் போராட்டங்களையும், கலவரத் தையும், காலித்தனங்களையும் விட நேற்று நடந்த டில்லி போராட்டத்தின் குறிப்பிடத் தகுந்த முக்கியம் என்னவென்றால்; காமராஜர் தங்கி இருந்த வீட்டை காமராஜர் உள்ளே இருந்து தூங்கிக் கெண்டு இருக்கும்போது நாலுபுறமும் சூழ்ந்து கொண்டு நாலு புறத்திலிருந்தும் நெருப்பு வைத்துக் கொளுத்தினதுதான் முக்கியமாக குறித்துக் கொள்ளதக்கதான சம்பவமாகும். இந்தச் செய்கை காலிக்கூட்டத்தினரால் இலக்கு வைத்துத் திட்டமிட்டு நடத்திய செய்கையாக இருக்க முடியாது, பார்ப்பன சங்கராச் சாரியார்கள் பலரும், சாதுக்களும், ஆனந்தாக்களும், பிர்லாக்களும், பஜாஜ், டாட்டாக்களும் அழுக்கு மூட்டை நந்தாக் களும் கூடி, கலகம் நடத்திட திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் உதவி, பல அதிகாரி களைச் சரிப்படுத்திக் கொண்டு நடத்திய சதித் திட்டமேயாகும்.
போலீஸ் 7-8 பேர்களை சுட்டது என் றால், ஏதோ அனாமதேயக் காலிகளைத் தான் சுட்டு இருக்குமே ஒழிய மேற்கண்ட கூட்டத்தினரில் ஒரு வரைக்கூட சுட வில்லை. சுட நினைக்கவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் 3ஆம் தேதி எழுதி 4ஆம் தேதி சென்னைக்கு பதிப்பிக்க அனுப்பிய, விடுதலை பெயர்போட்டு 6ஆம் தேதி எழுதிய சாதிப்பிரிவுகள் என்ற தலையங்கத்தின் நல்லவண்ணம் விளக்கிக் கூறி இருக்கின்றேன்.
அதில் இனி நடக்க வேண்டியது மந்திரி களைக் கொல்ல வேண்டியது தான் என்று எழுதி இருக்கின்றேன், ஆனால் டில்லி செய்கை மந்திரி களைக் கொல்லுவதாய் இல்லை.
மந்திரிகள் பல மாகாணங்களில் இச் செய்கைகளுக்கு ஆதரவானவர் களாக இருக்க நேர்ந்து விட்டதால் (காங்கிரஸ்) தலைவரையே கொல்லத் திட்டமிட்டு அவர் இருந்த வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது வீட்டைச் சுற்றி 4 புறத் திலும் நெருப்பு வைக்கச் செய்து விட் டார்கள், காமராஜர் தங்கியிருந்த வீட்டிற்கு புழக்கடைப்பக்கம் வெளியேற ஒரு வழி இல்லாதிருந்தால் காமராஜரின் கதி அன்று என்ன ஆகி இருக்கும்?
நாடெங்கும் கலவரம் பரவும் ஆபத்து
இனி இது தேசத் தலைநகரில் மாத்திரம் அல்லாமல் மாகாணங்கள் முழுவதிலும் இக்கொலை, நெருப்பு வைத்தல் காரியங்கள் பரவும் என்பதிலும் ஆட்சேபணை இல்லை. இன்று பல மாகாண ஆட்சித் தலைவர்கள், பார்ப்பன அடிமைகள் வருணாசிரமக் காவலர்கள், சமதர்ம விரோதிகள் என்று சொல்லும்படியாகவே அமைந்து விட் டார்கள்! ஆதலால் இந்த மாடல் டில்லிக் காலித்தனங்கள் இனி எல்லா மாகாணங் களிலும் ஏற்பட்டே தீரும் பலவற்றில் ஏற்பட்டே விட்டதே!
அதாவது பார்ப்பன எதிரிகள், பார்ப் பனரின் எதிரிக் கட்சித் தலைவர்கள் என்பவர்களைக் கொல்லவும் அவர்கள் வீட்டையும் நெருப்பு வைத்துக் கொளுத்த வுமான நிலை ஏற்படலாம். அவற்றிற்கு அரசாங்கம் பாதுகாப்பும் அதற்கு ஏற்ற அளவில் தான் இருந்து வரும். எதிர்க் கட்சிக்காரர்கள் (பார்ப்பன அடிமைக்கட்சிக் காரர்கள்) இப்போதே அடிக்கல் நாட்டிக் கொண்டு விட்டார்கள். அதுதான் அண்ணா துரையைத் தாக்கினார்கள் என்பது போன்ற கற்பனைகளாகும்.
தமிழ்நாட்டு ஆட்சி அமைப்பை மாற்றாவிட்டால் காமராஜருக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடுமே என்றுதான் கருதுகின்றனர். என்னைப் பற்றி கவலை இல்லை, எனக்கு ஒரு கால் நாட்டிலும், ஒரு கால் சுடு காட்டிலும் என்ற பருவத்தில் இருக் கின்றேன். ஆதலால் என்னைப் பற்றிக் கவலை இல்லை.
நாட்டின் ரட்சகர் காமராசர் இன்றேல், நாதியற்ற நிலைதானே?
காமராசர் இன்று இந்த நாட்டுக்கு இரட்சகராக இருக்கின்றார். அதனால் தான் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் காமராசர் மீது கண் வைத்து இருக்கின்றார்கள் - அவர் வீட்டைக் கொளுத்தினார்கள்.
காமராசருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள் அவ்வளவுதான். பிறகு நம்நாடு வருணாசிரம தர்ம நாடாகி விடும்!
அதுமாத்திரம் அல்ல, இன்றைய பார்ப்பனக் கூலிகளான காங்கிரஸ் எதிர்கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு, பலர்களுக்கும் நாதியற்ற நிலை ஏற்பட்டு விடும். பழைய கருப்பர்களாக ஆகி விடு வார்கள், பிறகு நாடு என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? எப்படியோ இருக் கட்டும்; இனி காமராஜர் தக்க பாது காப்புடன் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொரு வருக்கும் 6 அங்குல நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றை தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக சீக்கியர்களது மததர்மம் போல், கத்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த காரியம் காமராஜரைப் பாது காக்க அல்ல. நம்நாட்டில் உள்ள 3 கோடி கீழ்ச்சாதி (சூத்திரனை) மக்களை இழி வில் இருந்தும், அடிமை நிலையில் இருந் தும், படுகுழிப்பள்ளத்தில், இருந்தும் வெளியாக்கிப் பாதுகாக்கவே ஆகும்.
நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல ஓர் இரட்சகர் இது வரை தோன்றியதே இல்லை. புராணங் களில் இரண்யர்கள், இராவணர்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள், அவர்கள் எல்லாம் கொல்லப்பட்டதாக - பிரகலாதன், அனுமார், விபீடணன்களைக் கொன்று அழிக்கப்பட்டதாக எழுதி புராணங்களை முடித்திருக்கின்றார்கள்.
அந்தக்காலம் அப்படி; ஆனால் இந்தக் காலம் அதுபோன்ற புராண - சரித்திர காலம் அல்ல; உண்மை பிரத் யேக நடப்புக்காலம். இதில் அந்த வித் தைகளைப் பலிக்க விடக்கூடாது.
கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காம ராஜரை பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.
கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள் ளுங்கள்! - காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து...
-viduthalai,26.7.15