வெள்ளி, 26 ஜூன், 2020

உரிமையைத் தர ஒப்புமா?

பெரியார் கேட்கும் கேள்வி-26!
மனுதர்மங்களால் மக்கள் நான்கு வகையாகவும், பல்வேறு ஜாதிகளாகவும் பிரித்து ஒருவனை மற்றொருவன் வேறென மதிக்க வைத்து, ஒருவனைக் கண்டால் மற்றொருவன் துவேஷிக்கும்படியாகவும் ஒரு ஜாதிக்கொரு நீதி வகுத்து ஒருவன் நடக்கும் பாதையில் மற்றவன் நடவாதபடிக்கும் ஒருவன் குளிக்கும் ஓடையில் மற்றவன் குளிக்காதபடிக்கும் நாம் சிதறுண்டு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இதை நமக்குத் தந்த அந்த வர்ணாசிரமத்திடம் நம்பிக்கை வைத்து அதில் மாற்றம் ஏற்பட்டால் தமது உயர்வும் உயர்வால் ஏற்படும் உல்லாச வாழ்வும் உருக்குலையும் என்ற அச்சத்தோடு வாழும் கூட்டம் ஒரு போதும் தீண்டாமையைப் போக்க முன்வராது எனத் தைரியமாய் கூறுவோம்.

மாட்டை செக்கில் கட்டி ஓட்டுவோனுக்கு திடீரென ஜீவகாருண்ய உணர்ச்சி தோன்றி மாட்டை அவிழ்த்து விட்டுவிட ஒப்புவானா? அவன் மாடு பூட்டி ஓட்டுவதை விட்டாலன்றி மாட்டின் விடுதலையை அவன் எங்ஙனம் தர முடியும்? வேண்டுமானால் அந்த மாட்டைக் குளிப்பாட்டி, புதிய மூக்கணாங்கயிறு மாட்டி அலங்காரம் செய்வான். அஃதேயன்றி உள்ளபடி அவன் மூலமாக மாடு எங்ஙனம் தனது 'கர்மபலனை' நீக்கிக் கொள்ள முடியும்.

அதனைப்போலவே எந்த நாளும், ஆண்டு வர வேண்டு மெனவும், பிறப்பை மார்க்கமாக வைத்துக்கொண்டே உயர வேண்டுமெனவும் கருதிக் கொண்டிருக்கும் வைதிகக் கும்பல் தமது 'சீட கோடிகளுக்கு' உரிமையைத் தர ஒப்புமா? உரிமை யைத் தந்து விட்டால் இவர்களுடைய குருத்தன்மை ஏது?

- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.6.1939

- ‘மணியோசை’

வெள்ளி, 12 ஜூன், 2020

அய்யா அரிச்சுவடி

1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சுமாறிகள் பேச்சு .
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி .
3. இதிகாசமென்பது - மதிமோச விளக்கம் .
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே !
5. ஊழ்வினை எள்பது - ஊக்கத்தைக் கெடுப்பது .
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம் .
7. கல்லைத் தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம் .
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது .
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம் .
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல் .
11 சூத்திரன் என்றால் - எட்டி உதை
12. திதி கொடுப்பது - நீதியைக் கெடுப்பது .
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்குக் கேடு ,
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க .
15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற்கொள்ளைக்காரர்கள்
16. புராணங்கள் - பொய்க்களஞ்சியங்கள் .
17. பேதகமென்பது - வேதியருக்கணிகலம்
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள் .
20. மதக்குறி என்பது - மடையர்க் கறிகுறி .
21 முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே .
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது .
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது .
24. ஜாதி வேறுபாடு -ஜன சமூகத்திற்குக் கேடு
25 ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு
- விடுதலை நாளேடு, 10. 5. 2003

செவ்வாய், 2 ஜூன், 2020

விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!

June 1, 2020 • Viduthalai • 

"ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடுதலை" என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஏனெனின் 2, 3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும், இரவும் பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!!  என்கின்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந் ததும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சி யமாய் இருந்ததும், அதன் பயன்களைச் சமீப காலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறு படியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்குச் சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல.
பாக்கியம் கிடைத்த மகிழ்ச்சி !
அப்படிப்பட்ட நிலையில் 'விடுதலை' என்னும் பேரால் பத்திரிகை வெளியாய்ப் இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு "பாக்கியம்" கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகின்றது? என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்.
ஆதலால் நாம் மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், வந்து விட்டது! தமிழ்ப் பத்திரிகை!! என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.
"விடுதலை" பத்திரிகை இன்று வாரம் இருமுறையாக வெளிவந்தாலும்; கூடிய சீக்கிரம் தமிழ் மக்கள் ஆதரவுக்கு ஏற்பத் தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை.
பத்திரிகையானது நல்ல மாதிரியில் பார்ப்பன விஷமப் பிரச்சாரங்களுக்கு மார்பைக் காட்டும் முறையில் விஷயங் களைக் கொண்டு வெளியாகி வருவதால் அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் எந்த விதத்திலும் குறைவாகக் காணப் படவில்லை என்றே சொல்லுவோம்.
இப்பத்திரிகைக்கு உள்ள கஷ்டம், எதிர்ப்பு, சூழ்ச்சி, தொல்லை ஆகிய விஷயங்களைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை.
இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு இடையே ஒரு பத்திரிகை வாழ்வதென்றால் மிகவும் ஆச்சரியமான காரியமாகும்.
பார்ப்பனரை எதிர்த்து வாழ முடியுமா?
இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமானது என்று காணப்பட்ட பத்திரிகைகள் எதுவும் நமது நாட்டில் வாழவே இல்லை.
எவ்வளவோ வீரமாக ஆரம்பித்த பத்திரிகைகள் எல்லாம் வருடாந்திரம் ஆவதற்குள் ஒன்று பார்ப்பனர்களுக்கு அடிமை யாக வேண்டியது அல்லது மறைந்து போக வேண்டியது என்கின்ற நிலையில் இருந்து வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் "குடிஅரசு" ஏதோ பாஷாணத்தில் புழுத்த புழுப்போல் உயிர் வைத்துக் கொண்டு வருகின்றது என்றாலும் அதுவும் இதுவரை அடையாத கஷ்டமோ, தொல்லையோ இனிப் புதிதாக ஒன்று இருப்பதாகத் தோன்ற வில்லை.
இப்படிப்பட்ட நிலையில் "விடுதலை" தோன்றி இருக் கின்றது என்பது ஒரு விதத்தில் சந்தோஷம் என்றாலும், மற்றொரு விஷயத்தில் எந்த நிமிஷத்திலும் அதற்கு ஆபத்து வரப்போகின்றதோ என்று பயப்பட வேண்டியதாகவே இருக்கிறது.
“விடுதலை"யை ஆதரிப்பது தமிழ் மக்களின் கடமை
எப்படியோ ஒரு விதத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்தபடி தமிழ் பத்திரிகை வந்து விட்டது. அதைஆதரித்துத் தினசரி யாக்கி நிலை நிறுத்த வேண்டியது தமிழ் மக்ள் கடமையே ஒழிய, இனித் தலைவர்களைக் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அதன் நோக்கம், அதன் தொண்டு ஆகியவைகளைப் பற்றி யாரும் சந்தேகப்படவேண்டிய காரணமே யாருக்கும் கிடையாது. அகையால் அதைப்பற்றி கவலைப்படாமலும், அதற்கு யாரும் புத்தி புகட்டும் வேலையில் இறங்காமலும் ஒவ்வொருவரும் சந்தாதாரர்களாகச் சேர்ந்துவிட வேண்டும். சந்தாத் தொகை வாரம் இரு முறைக்கு வருஷம் 3-10-0 ஆகும்.
உண்மை "விடுதலை"யைக் கொடுக்கட்டும்
இதைவிடக் குறைந்த தொகைக்கு தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ ஒரு வாரம் இருமுறை 10 பக்கம் விஷயம் கொண்ட பத்திரிகை ஒன்று இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ரூ. 3-10-0 நாளையே மணி ஆர்டர் அனுப்பி விடவேண்டியது அவசியமான காரியம் ஆகும். 3 மாதத்திற்குள் 2000 சந்தாவாவது சேர்ந்தால் "விடுதலை" தினசரி ஆகிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.
அதன் பத்திராதிபர் தோழர் டி.ஏ.வி.நாதன் அவர்கள் ஜஸ்டிஸ் பத்திரிகையை நடத்தி வந்தவர். ஆனதால் அப்பேர்ப் பட்ட அறிவாளியால் நடக்கும் பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும் பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலக மக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
- 'குடிஅரசு', 7.6.1935