ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கலைவாணர் பற்றி பெரியார்



புராணம், மோட்சம், நரகம், சாஸ்திரம், கடவுள்கள் ஆகியவை பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் உயிரோடு கலந்தும், வாழ்வோடு கலந்தும், மதத்தோடு கலந்தும் பலவிதமான ஸ்தாபனங்களோடு செல்வாக்காய் பத்திரமாய் அனேக காவலாளிகளோடு இருப்பதை வெறுக்கும்படியாக சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் படியில் - அதுவும் இதைப் பார்க் கவும் கேட்கவும் பணங்கொடுத்து விட்டு வந்து பகலும் இரவும் காத்துக்கிடக்கும்படியாகச் செய்து வருகிறார் என்.எஸ். கிருஷ்ணன்.
சாகும்வரை செய்துகொண் டே இருக்கப் போகிறார் என்றால் இதைவிட ஒரு புரட்சி வீரனை நாம் எங்கு காணமுடியும்? வேறு எத்தனை பேர்தான் இருக் கிறார்கள்?  நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்ப்போம்.
(பேராசிரியர் அன்புக் கொடி நல்லதம்பி எழுதிய சிரிப்பில் மலர்ந்த சிந்தனை மலர்கள் என்ற நூலிலிருந்து....)

சிரிக்க... சிந்திக்க!
ஆஸ்திகன்: (மகனை நோக்கி) ஏய் தம்பி, நரசிம்மா! கொல்லைக் கதவைத் தாளிட்டியா? குறுக்குத் தாழ்ப்பாளைப் பார்த்தியா? தெருக்கதவைத் தாளிட்டியா? ஜன்னலை ஒழுங்காக மூடுனியா? சாவிக் கொத்தை தலைகாணிக்கு அடியில் ஜாக்ர தையா வைச்சிட்டியா? ஏன் னா ஊரெல்லாம் ஒரே திருட்டுப் பயம்!
மகன்: என்னப்பா இப்படி பயப்படுறேள்? நம்ப ஜாக்ரதையிலே என்ன இருக்கு? எல்லாம் எமை ஆளும் ஈசன் செயல்! என்னதான் பாதுகாத்தாலும், எப்படியும் போறது போவத்தான் செய்யும்! நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி...
ஆஸ்திகன்: ஊம் வாயை மூடு! என் பிரசங்கத்தை என்னிடமே காட்டுறியா? அதிகப் பிரசங்கி! அதெல்லாம் முட்டாப் பசங்களுக்குச் சொல்றப் பேச்சு! கதவைத் திறந்து போட்டுண்டு, எல்லாம் கடவுள் செயலுன்னு தூங்குற ஒரு பக்தனைக் காட்டு என்னிடம். பைத்தியக்காரா! கடவுளுக்கே பூட்டும் சாவியும் வேண்டி இருக்குடா - அதுவும் பூசணிக்காய்ப் பெரிசுலே!
------------------------------------------------------
காவலர்: திருடினதுதான் திருடினாய், சாமி நகையைத் திருடலாமா?
திருடன்: பற்றற்றவனாயிற்றே பகவான்! அவனுக்கு எதற்கு இந்த நகை என்று திருடிவிட்டேன்.
காவலர்: பகவான் நகையை உன் மனைவி கழுத்தில் சூட்டலாமோ?
திருடன்: பற்றுள்ளவளாயிற்றே அவள். பற்றற்ற திலிருந்து கிளம்பி பற்றை நோக்கிச்  செல்வதுதானே ஆத்மார்த்தம்!
------------------------------------------------------
புலி: கடவுளே! உன் கருணையே கருணை! என்னையும் படைத்து, இந்த ஆட்டையும் படைத்தாயே! இல்லாட்டிப் போனா என் வயிறு என்னாவறது? ஈசனே, உன்னைப் போற்றுகிறேன்; உன் புத்தியை மெச்சு கிறேன்!
ஆடு: நாசமாய்ப் போன கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? கருத்தில்லையா? என்னைத்தான் படைத்தாய்; இந்தப் பாழாய்ப் போன புலியையும் ஏன் படைத்தாய்? உன்னை போயும் போயும் கருணாமூர்த்தி என்கிறார்களே - இந்தக் கபோதிகள்! வெட்கக்கேடு! அசல் வெட்கக்கேடு!!
-விடுதலை,28.8.15

மதம் ஏன் ஒழிய வேண்டும்?

- தந்தை பெரியார்


மதம் என்பதைப் பற்றி இதற்கு முன் குடிஅரசு, புரட்சி முதலிய பத்திரிகை களில் அநேக வியாசங்கள் பல தலைப் புகளின் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.
மதமானது இன்று உலகில் மனித சமுகத்தின் வாழ்வைத் துக்க மயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி ஒற்று மையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.
தேசிய சிங்கங்களான அலி சகோ தரர்கள் ஒரு காலத்தில் நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள் அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்தி நானே இந்து மதத்தில் உருவம்!  நான் மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!!  நான் உண் பதும், உயிர் வாழ்வதும் இந்து மதத் திற்காகவே!!! மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்ஜியம் கேட்கின்றேன்!!!! அதா வது இந்து மதம் தான் எனக்கு முதலும், கடைசியும், என்றும், பழைய காங்கிரஸ் வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி என்று சொல்லப்பட்ட, பண்டித மதன் மோகன மாளவியா எனது மதத் தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை என்றும், அதாவது வருணாசிரமத்தைக் காக்கத் தான் நான் தேசியவாதி என்றும், சொல் லும்படி செய்துவிட்டது என்றால் மதத் தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதா ரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
பெருத்த தேசாபிமானிகள், தேசத் துக்காகச் சகலத்தையும் தியாகம் செய் தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற் காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர மற்றொன்றும் அறி யாத பாமர மக்களின் யோக்கியதை யைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
வட்ட மேஜை மகாநாடு உடைந்து போனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போன தும் இந்து முலீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டி ருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேட்பதற்கும் கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேட் பதற்கும், மக்களை மக்கள் தீண்டப் படாதவராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் மனித சமுக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவை களில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறி வுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமலுக்குக் கொண்டு வரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாகச் சொல்லப்படு கின்றதா, இல்லையா என்று கேட்கின் றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக் கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து பலவித மேல் உலகங்களையும் மோட்ச நரகங் களையும் கற்பித்து அவரவர் கடவு ளுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர் மேல் உலகங்களுக்கு தனிப் பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோட்ச நகரங்களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை ஒழுக் கம், நடத்தை என்பவைகளும் அவரவர் மதத்துக்கு ஒவ்வொருவிதமாய் கற்பிக் கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?
இப்படிப்பட்ட மதத்தை மக்களுக் குள் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், முல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச் சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும், பெயர்கள் வைத்துக் கொண்டு, உலகச் செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி மக்களுக்குப் போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவேகமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்கா மல் போகாது. இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என் றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர் களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.
1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள் என்று சொல்லப்படுமானாலும்,
2. அல்லது மதம் என்பது இவ்வுல கில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகளைக் கொண்டது என்று சொல்லப்படுமானாலும்,
3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படு மானாலும், அவைகளைப் பற்றியெல் லாம் நாம் அதிகக் கவலைக் கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவ தில்லை.
அப்படிக்கெல்லாம் அல்லாமல்.
1. மதமானது மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின
ஆத்மாவைப் பொறுத்ததென்றும்.
2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தைத் துச்சமாக மதித்து விட்டு மேலுலக வாழ்வை முக்கிய மாகப் பொறுத்ததென்றும்.
3. மதமானது கடவுளுக்கும் மனித னுக்குமுள்ள சம்பந்தத்தை விளக்கு வதைப் பொறுத்ததென்றும்
4. மதமானது பஞ்சேந்திரியங் களுக்கு விளக்கக்கூடிய வது என்ற தத் துவத்தை விட்டு பஞ்சேந்திரியங்களா லும் உணர முடியாத ஆத்மார்த்தம் ஆவிதத்துவத்தை, அசரீரியை அடிப் படையாகக் கொண்டது என்றும்,
5. மதமானது உலக போக போக் கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலட்சியம் செய்து கடவுளின் பாதார விந்தத்தை அடையவும், மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறவும், ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மதத் தத்துவங்களையும் பற்றி நாம் பேசுகின்றோம், என்றாலும் முதலில் கூறப்பட்ட அதாவது,
மதம் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட் டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்கு முறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சே பணையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப் படுபவைகளில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங் களுக்காக மக்கள் செலவில் நடை பெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும் அவை களை நிறைவேற்ற நியாயதலம், தண் டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவை அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?
அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை முதலியன இல்லாமல் மனித சமுகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல் கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும். இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரம் காப் பாற்றப்படுவது மதத்தினாலா, அர சாங்க சட்ட திட்டங்களினாலா என் பதை யோசித்துப் பார்த்தாலே, மதத் தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும். மதம் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது என்று மதக்காரர்கள் சொல்லக்கூடும். ஆனால், மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றி கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா?  அல்லது அரசாங்க சட்ட திட்டமா? என்று கேட்கின்றோம். மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் அதற்காகத் தண் டனையை அடைகின்றான்.
ஆதலால் மதம் எங்கே பொது வான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்.
மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்.
மனிதனுக்கும் மற்ற ஜீவவர்க்கத் துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறை யினாலும், அறிய வேண்டுமானால், பிராணிவர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மதசம்பந்தம் இல்லாமலே அவை களைத் தெரிந்து கொள்ளலாம். அப்படி யில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக் கிடமாகத்தான் இருந்து வருகின்றன.
மதம் மனிதனுக்கு மனிதன் வித்தி யாசம் கற்பிக் கின்றது. மிருகங்களை, பட்சிகளை, பூச்சிகளை, புல் பூண்டு களை மனிதனைவிட உயர்வாய் மதிக் கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தை தாழ்வாய் கற்பிக் கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாத்திரமே முக்கியமானதும், சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக் கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத்தன மானதும், முட்டாள்தனமானது மென்றே சொல்லுவோம்.
மேற்கண்ட 1, 2, 3 விஷயங்களைப் பற்றிய வரையி லாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த் தாலும் கூட, அதுவும் அறிவுக்குப் பொருத்த மற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக் களால் பாதகமடைகின்றது. அதாவது எந்த மதக் காரனும் தன்தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கை களுமே எந்த தேசத்துக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என் றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக் கோடு கூட மாறக் கூடாது என்றும், தன்தன் மதத்துக்குத் தலை வன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும் முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமுக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது.
ஆகவே மனித சமூகக் கூட்டு வாழ் வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங் களைவிட அரசாங்கத் சட்டதிட்டங் களையே ஆதாரமாகக் கொள்வது தான் அறிவுடைமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனு பவத்தில் இருக்கின்றது என்றும் சொல் லுவோம். ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும், ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி, மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள் ளவும் உரிமை இருக்கின்றது. மதங்களில் அவை காணவே முடியாது அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கி விடுகின்றது.
எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியட்ச மனித வாழ்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களை மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி மேலுலக மனிதனுடைய கண்ணுக்கும் மனதுக் கும் பஞ்சேந்திரிங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போத னைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்ட தாக இருக்கும்?  என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட் கின்றோம்.
மற்றபடி மதம் சட சம்பந்தத்தை விட்டு விட்டு ஆன்மாவைப் பொறுத் தது என்று சொல்லப்படுவதைப் பற்றியதென்றால் இந்தக் காரணத்துக் காகவே மதங்களை எல்லாம் அடி யோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக் கின்றோம்.
ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அர்த்தத்தோடு உறுதிப் படுத்தவேயில்லை.
4+3=10 என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவரித்துக் கொண்டி ருக்கின்றது போலவே, அதாவது 10அய் யார் யாருக்கு எப்படி பங்கிடுவது எங்கு எங்கு வைப்பது என்று வேண்டு மானால் பேசு. அதற்கு மேல் 4+3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக்கூடாது என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது.
அதாவது ஆத்மா என்றால் என்ன?  அது எப்படி சரீரம் பெற்றது?  அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று?  அதன் நடத்தைக்குக் காரணம் என்ன?  அது எப்படி மோட்சம் போகின்றது?  அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகின்றது?  மனித ஆத்மா, மிருக ஆத்மா. பட்சி ஆத்மா, புழு பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன?  என்பனவற்றைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம். வால்யூம், வால்யூமாக புத்தகம் எழுத லாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன?  அது எப்படிப்பட்டது?  அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாத்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாதிரம் இடம் கொடுக்கின்றதா?  என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன்னார்,... என்று சொல்லி விடுவதும் ஆத்மாவை நம்பாதவர் கடவுளை நம்பாத நாத்திகனை விடக் கேடானவன். மடையன், மட்டி என்றும் கடவுளை நம்பாவிட்டால் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங் களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.
இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாத வது  தத்துவமில்லாத மனதுக் குப் புரியாத விசயத்துக்காக இவ்வுலக பிரத்தியட்ச வாழ்க்கையையும், அடை யும் இன்ப துன்பங்களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக்கவலையை விட ஆத்மா கவ லையே பிரதானமென்றோ, பெரிய தென்றோ சொல்லப்படுமானால் அப் படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்.
நிற்க மதமானது மேல் உலக வாழ் வுக்கு ஆதாரமானது என்று சொல்லப் படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி, இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.
பூகோள சாதிர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக்கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லட்சக் கணக்கான மைல் ஏன் கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு நிபுணத் துவர்கள் என்கின்ற நிலையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவி களின் உதவியைக் கொண்டு கண்டு பிடித்தும் சொன்ன பிரத்தியபடி அனுபவ ருஜுப்பிக்கக் கூடிய உண் மைகளே ஒழிய ஞான திருஷ்டி அதா வது ஒரு மனிதனுடைய புத்திக்கு திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப் பட்டதல்ல. அன்றியும் பள்ளிக் கூடங் களில், அல்லது பூகோள புதகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப் படாததுமான விஷயங்களுமல்ல.
அப்படியிருக்கும்போது இந்த பிரத்தியட்ச உலக விஷயத்தை விட்டு விட்டு மேலுலக விஷயத்தை பற்றிப் பேசுவது என்றால் அதில் அடங்கியிருக் கும் மவுடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடு வது என்பது நமக்கு விளங்கவில்லை.
இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டுபிடித்தான்?  அதன் விதீரனத் தன்மை என்ன?  என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் முதலில் மேல் உலகத்தை நம்பு. பிறகு எப்படி வேண்டுமானாலும், அதாவது மோட் சம் எப்படிப்பட்டது? நரகம் `எப்படிப் பட்டது?  தண்டனை எப்படிப்பட்டது?  அது யாருக்குச் சொந்தம்?  பரம பிதாவா, அல்லாவா, வைகுண்ட நாதரா?  கைலாச வாசரா?  யார் அதற்கு எஜமான்?  என்பதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய் என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை, அல்லது அறிவு டைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்.
அதுபோலவே மதம் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது என்று சொல்லப்படும் வார்த்தையும், அர்த்தமற்றதாகவே இருக்கிறது.
கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு ஆத்தீகனாவது, அல்லது கடவுள் தன்மை பெற்ற பெரியவர் களாவது விளக்கினவர்களே அல்ல. கடவுள் என்றால் கண்ணுக்கும், மன துக்கும் எட்டாதது. ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லு கின்றவர்களே அந்தக் கருத்தை நம் பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங் களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவுகள் இருந்து வந்திருக்கின்றன.
மனத்துக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரி யத்தினால் உணர்ந்தான் என்று கேட் டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வதுக்குச் செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை. சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை, தீமை, துன்பம் - இன்பம், மேல் - கீழ், சுகம் - துக்கம், மோட்சம் - நரகம், எப்படி உண்டா யிற்று என்று கேட்டால் இதற்கு பதில் இல்லை. அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் நாத்திகன் நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை - ஆஸ்திகர்கள் கண்டனம் கிடைக்கும் என்று மிரட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக் கமே இல்லை.
சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை?  ஏன் கடவுளே இல்லை?  என்று சொல்லுகிறேன், என்று ஒருவன் கேட் டால், அது உன்னுடைய அகம்பாவம், உன்னுடைய மடமை, உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லிக் கட வுளைவிட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதாயிருக்கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.
இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள் வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேட்கின்றோம்.
மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங் களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற் படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.
கிறித்தவ மதத்தைப் பற்றி எழுதி னோம் என்பதற்குக் குடிஅரசு பத் திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி, எழுதின தற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப் பட்டு போயிற்று.
இந்து மதத்தைப் பற்றி எழுது கிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்கு சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தி யோகஸ்தர்களைக் கொண்ட போலீஸ் இலாகா, போடல் இலாகா, ரயில்வே இலாகா, நீதி இலாகா, நிர்வாக மற்றும் அனேக துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட் நிர்வாகசபைவரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம், சித்திரவதைக் கொப் பாக இருந்து வருகின்றது.
நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக் கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.
மதமானது பணக்காரத் தன் மையைப் பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக் கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால்; அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை. ஆதலாலே யேதான் மதங்கள் ஒழிக்கப்படுவ தாலேயே மனித சமுகத்துக்கு ஒற்று மையும் சாந்தியும் ஏற்படும் என்று கரு துவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருது கின்றோம்.
சென்ற வாரத்தில் சென்னைக் கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்தி விட்டானாம். முஸ்லீமும் அத னால் செத்துவிட்டான். நாளைய தினம் ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மை கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான் என்றாலோ அதில் அதிசய மில்லை. ஒரு கிறிஸ்தவன் முகம்மது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகம்மதியர்களுக்கு ஆத்திரம் வரு கின்றதும், ஒரு முகம்மதியன் கிறிஸ்து வைப் பற்றி எழுதிவிட்டால் கிறிஸ்தவ னுக்கு ஆத்திரம் வருவதும், இது போலும் இந்துக்களுக்கும், கிறிஸ்து முகம்மதியர்களுக்கு நேருவதும், அதற்காக கொலை, கொள்ளை, கொடு மைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் அய்ரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங் களிலும் நடந்து வருகின்றது என்றும் மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க் கையையும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும் வாழ்க்கை ஒழுங்கு களையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்றும் கேட்கின்றோம்.
மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி முறையை கற்பித்து இருக்கின்றது என்று மத பக்தர்களைக் கேட்கின்றோம்.
- பகுத்தறிவு - தலையங்கம் - 09.09.1934
-விடுதலை,30.8.15

திராவிடர் இயக்க சாதனை இதோ


-விடுதலை ஞா.ம.29.8.15

சனி, 29 ஆகஸ்ட், 2015

தொழிலினால் ஜாதி கற்பிப்பது பொருந்துமா?



(இது சென்னை லவுகீக சங்கத்தில் ஒருவராகிய ம.மாசிலாமணியவர்களால் இயற்றப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் (1905) அச்சிடப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருக்கும் “வருண பேதவிளக்கம்” என்னும் பழைய புத்தகத்தில் உள்ள 4ஆவது அதிகாரம்)
வேதம் ஓதுபவர்களை வேதியர் எனவும், சாத்திரம் சாதிப்பவர்களை சத்திரியர் எனவும், வேளாண்மை வாணிபம் முதலியவற்றைப் புரிவோரை வைசியர் எனவும், மற்றைய தொழில்களை இயற்றுவோரைச் சூத்திரர் எனவும் இவ்வாறு தொழிலினாலே வருண பேதம் ஏற்பட்டதெனின், இந்நாற்கிரியைகளையும் இயற்றுவோர் மற்றெல்லாத் தேசங்களிலும் இருக்க அவ்விடங்களில் ஏன் வருணபேதம் ஏற்படுத்தப்படவில்லை?
மேலும் வேதங்களை ஒழுங்குபடுத்தின வலைச்சியின் புத்திரராகிய வியாசரும், இந்திரலோகத்துப் பொதுமகளாகிய ஊர்வசியின் கெர்ப்பத்தினின்று உதித்த அருந்ததி யென்னும் மாதை மணம்புரிந்த வசிட்ட முனியும், சத்திரியகுல மரபின ருக்கு சண்டாளச்சி கெர்ப்பத்தினின்று உதித்துத் தமது தபோ பலத்தினால் திருசங்கு மகாராஜனை ஸ்தூல தேகத்துடனே சொர்க்கத்திற்கனுப்ப அங்ஙனமே அவன் தூல தேகத்துடனே செல்ல,
அச்சொர்க்க வாசிகள் மண்ணுலகினின்று இவ்விடம் வருகின்றவன் யாரெனச் சினந்து அவனைத் தலைகீழாகத் தள்ள, தள்ளுண்ட அவர் அபயம்! அபயம் என ஓலமிட்டுக் கொண்டு அந்தரத்தில் வருவதை நோக்கிக் கோபித்து அனுஷம், கேட்டை, மூலம், பூராடம்,
உத்திராடம் ஆகிய தேவர்கள் என்னும் இந்நட்சத்திரங்களைப் பிடுங்கித் தென்றிசையில் நாட்டித் திருசங்கு சொர்க்கமென்னும் ஓர் நவீன சொர்க்கத்தையமைத்த விசுவாமித்திரனும், தொழிலி னால் பிராமணர் ஆனது போல் சூத்திரருக்கு சமையல் செய்யும் பிராமண சுயம்பாகிகளும், கள் விற்கும் பிராமணர்களும் சூத்திரர்களாக வேண்டுமே?
மேலும் பிராமணர் மது மாமிசங்கள் அருந்தாதிருப்ப தனால் உயர்த்தப்பட்டார்கள் எனின், பூர்வகாலத்தில் அனேக பசுக்களைக்கொன்று விற்று ஜீவனம் செய்துவந்த பிராமணகுலத்தில் தோன்றிய அலீகர்த்தன் என்னும் முனியும்,
நாயின் மாமிசத்தைப் புசித்த பிராமணராகிய வர்ம தேவரும், விருதுவென்னும் தச்சனிடத்தில் அனேக பசுக்களை விலைக்கு வாங்கியுண்ட பிராமணராகிய பரத்துவாச மகாமுனியும், சண்டாளன் வீட்டில் செத்துக் கிடந்த நாயின் மாமிசத்தைக் கேட்டு வாங்கிப்புசித்த விசுவாமித்திரரும் சூத்திரர்களாக வேண்டுமே?
பூர்வ காலத்தில் உண்டு வந்தார்களேயன்றி இக்காலத்தில் உண்பதில்லை எனின், இக்காலத்தில் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், மாட்டின் மாமிசத்தால் செய்து வரும் பானங்களையும் உண்ணுகிறார்களே!
அன்றியும் மாமிசத்தின் சாரமாகிய பால், தயிர், வெண்ணெய், நெய் முதலியவற்றை உண்பதும் அன்றி யாகம் செய்து செய்து அஸ்வம் (குதிரை) முதலியவற்றின் உடலையும் உண்டு வருகிறார்களே!
பிராமணர், பால் கறந்து கொள்வது ஜீவ வதை அல்லவென்றும், மாமிச போஜனம் செய்வது ஜீவ வதையென்றும், பால், ஊன் இனத்தைச்சேர்ந்ததல்லவென்றும் சொல்லின், கன்றுக்காக சுரக்கும் பாலை கன்றை வஞ்சித்துக் கறந்து கொள்வதும்,
தங்கள் சுகத்தையேயன்றி மற்ற பிராணி களின் சுகத்தைக் கருதாது வனங்களில் சுயேச்சையாக தன்னிஷ்ட ஆகாரத்தை யுண்டு ஓடி உலாவித்திரிந்து வரும் விலங்குகளைப்பிடித்து தங்களிஷ்டப்படி ஒழுக வண்டியிற் பூட்டி தங்களைச் சுமந்து செல்லும்படி ஒடுக்கி நடத்துவதும் ஜீவஹிம்சை யல்லவா?
பால் கறந்து கொள்ளு வதற்கும், சுமைகளைச் சுமப் பித்துக் கொள்ளுவதற்கும் பிரதி யாக அவற்றிற்கு வேண்டிய ஆகாரத்தை வருத்திச் சம்பாதித்தது அளிப்பது கறந்து கொண்ட பாலுக்கும் பெற்றுக்கொண்ட வருத்தத்திற்கும், அவ்வாகாரம் பிரதிபலனாவதால் அது குற்றம் அல்ல எனின், அவ்விலங்குகள் தங்கள் பாலையும், வருத்தத்தையும் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஆகாரம் அளிக்கும்படி வேண்டிக் கொள்ள வில்லையே?
மேலும் பால், ஊன் இனத்தைச் சேர்ந்ததும் அல்ல, தாவர இனத்தைச் சேர்நததும் அல்லவெனின், அதுபிறிது என்ன இனத்திற் சேர்ந்தது? அதனில் ஜீவன் இல்லை எனின், கோழி முதலியவற்றின் அண்டங்களிலும் (முட்டை) ஜீவன் இல்லையே! ஆகவே அவற்றினை ஏன் உண்பதில்லை?
ஆகையால் அமிர்தம் அவற்றின் ஆகாரத்தின் அளவே அதிகரித்தும், குறைந்தும் இருப்பதால் அது மாமிசத்தின் ஓர் கூறு என்றும், பிராமணரும் மாமிச போஜனர்களேயென்றும் தெளிவாக விளங்குவதும் அன்றி பூர்வகாலந்தொடங்கி பிராமணர் சோமபானமும் செய்து வருவதாக அவர்கள் வேதாகமங்களினாலே தெளிவாவதால் அவ்வகுப்பினரை மட்டும் போஜனத்தினால் உயர்ந்த ஜாதியார் என விசேஷித்துப் பேச வேண்டியது என்ன?
புளிப்பும், நாரும் உள்ள சிறு மாங்கொட்டையை நாட்டி, அது மூன்று, நான்கு அடி உயரம் வளர்ந்த பின் அதனை மற்றொரு மரத்துடன் ஒட்டுவதனால் அக்கனியின் நிறம், மணம் பருமன் முழுதும் மாறிவேறுபடுவது போல,
பிராமணர் உதித்த ஐந்தாம் வயது வரையில் சூத்திரராக இருந்து ஆறாம் வயதில் செய்விக்கப்படும் உபநயனத்திற்குப் பின் பிராமணர்கள் ஆகிறார்கள் எனின், ஒட்டுமாங்கனியின் குணங்கள் யாவும் வேறுபட்டிருப்பது போல உபநயனம் பெற்ற பிராமணருக்கும் புலன் பொறிகளிலும் அகக்கருவி, புறக்கருவிகளிலும் ஏ«னும் பேதம் இருக்க வேண்டுமே?
அதன்றி ஐந்து வயது வரையில் சூத்திரராக இருக்கும் பிராமணப்பிள்ளைகள் உபநயனத்திற்குப் பின்பிராமணர் ஆகிறார்கள் எனின், ஆறுவயதிற்குட்பட்ட சூத்திரப்பிள்ளை களையும் உபநயனம் செய்து ஏன் பிராமணர் ஆக்குவ தில்லை?
பிராமணச் சிறுவர்களே உபநயனம் செய்து பிராமணர் ஆக்கப்படுவர் எனின், அது ஜாதி அபிமானம் அன்றோ?
சூத்திர குலத்தினராக உதித்த ஆண் பாலருக்கு உபநயனம் செய்து பிர்மகுலத்தினர் ஆக்குவது போல, பிராமண ஸ்திரீகளுக்கு உபநயனஞ்செய்து பிரம்ம குலத்தினர் ஆக்குவதில்லையே! ஆகையால் அவர்கள் சூத்திர குலத்தினராக வேண்டுமே?
பிராமண ஸ்திரீகள் உபநயனத்தினரால் அல்ல, பிரம்ம குலத்தினராகவே உதித்து மாத சூதகம் ஆகும் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் சூத்திரகுலத்தினராக மாறி, மாதசூதமான அய்ந்தாம்நாள் செய்யும் ஸ்நானத்தினால், சூத்திரத்துவம் மாறி மீளவும் பிராமணர் ஆகிறார்கள் எனின், ருதுவதியான நாள்முதல், முப்பது வருடகாலம் அல்லது ஸ்திரீக்கு 44, 50 வரைக்கும் வியக்கத்தக்க கிரமமாய் ஒவ்வொரு மாதமும் மாத சூதகம் கண்டுகொண் டேயிருக்கும், இம்முப்பது வருட காலமும் நகமும் சதையும் போல சூத்திரத்துவம் பிராமண ஸ்திரீகளை விட்டுப்பிரியாது இருக்கின்றதே!
மேலும் பிர்மகுலத்தினராகவே யுதித்த பிராமண ஸ்திரீ களுக்கு பாப சம்பந்தமாகிய சூத்திரத்துவம் பற்றினது எவ்வாறு? மாத சூதகமாகிய இழிவு பிராமண ஸ்திரீகளிடத்தில் அபின்ன    மாகவே இருக்கிறதெனின், அசுத்தமும் ஈனமும் பொருந்திய மாத சூதகத்தையுடைய பிராமண ஸ்திரீகளை பரிசுத்த தேகத்தையுடைய பிராமணர் அங்கீகரித்துக் கொள்வது எப்படி?
ஆகையால் பிராமணர் அவர்களைத் தீண்டாமலும், அவர்கள் யாகம் செய்யும் போஜனத்தை உண்ணாமலும் அல்லவோ  இருத்தல் வேண்டும், அவ்வாறு அன்றி பிராமணர், மாதரைத் தங்களுக்குச் சமப்படுத்தி இருப்பதால் (யாதொரு பொருளின் கூறுகள் நம் முதற் பொருளின் லட்சணமுடையன வாயிருப்பது பிரத்தியட்சமாயிருப்பது போல) உபநயனத்திற்கு முன் பிராமணரும், மாதந்தோறும் பிராமண ஸ்திரீகளும் சூத்திரராகவே இருப்பதால் அவர்களையும் சூத்திரர்கள் என்றே அங்கீகரிக்க வேண்டும். அல்லவெனின் சூத்திரராக இருக்கும் பிராமண ஸ்திரீகளுடன், பிர்ம குலத்தைச் சேர்ந்த பிராமணர் சேந்திருப்பது எங்கனம்? நீரோடுநீர் சேர்வதன்றி நெய் சேராதே.
பருத்தி நூலை முப்பிரிவாகக் கத்தரித்துப் பூண்டிருக்கும் பூநூலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், வள்ளுவர் கோமுட்டிகள், வணிகர், கம்மாளர் முதலியவர்களும் பூண்டிருக்கிறார்களே! ஆகவே பிராமணர்களுக்கு மட்டும் பூநூலினால் உயர்வு எப்படி உண்டாகும்?
பிராமணர் வேதம் ஓதுதலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், இக்காலத்தில் பறையர் முதலிய சர்வ ஜாதியாரிலும் அனேகர் சுற்றியிருப்பதும் அன்றி மாக்ஸ்முல்லர், சர், உவில்யம் ஜோன்ஸ் முதலியவரும் சதுர்வேதங்கள் முழுவதையும் சுற்றிருக்கிறார்களே! பிரம்மக்கியானந்து பிராமண என்னும் வாக்கியத்தின்படி பிரமத்தியானம் உள்ளவர்களாக இருக்கும் மற்றய மூவினத்தவரையும் ஏன் பிராமணர் எனவும் பிரமத்தியான மற்றவர்களாயிருக்கும் பிராமணரைச் சூத்திரர் எனவும் மொழிவதில்லை?
ஆகையால் பூலோகத்தில் உள்ள சமஸ்த மாந்தரும், ஏக ஜாதியாராக இருக்க இத்தேசத்தவர்கள் மட்டும் தொழிலினால் ஏற்றத்தாழ்வான நால்வகைச் சாதியாராக கடவுளால் உருவாக்கப்பட்டார்களெனச் சாதிப்பது தாஷ்டாந்த திருஷ்டாந்த வழுவாய் சமரசப்படாது ஆதலின் அச்சாதனை யைக் கொண்டு வருண பேதம் உண்டு என்று சாதித்தல் கூடாது. ஆகையால் அது சாதனை வழுவேயாம்.
(குடி அரசு - 1935)
-விடுதலை,28.8.15

அய்ரோப்பிய தொழிலாளர் போராட்டங்களும் பெரியாரும்

அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தின்போது தொழிலாளர் போராட்டங்களுடன் பெரியாருக்கு ஏற்பட்ட தொடர்பும் அனுபவங்களும்

- ஆ.இரா.வேங்கடாசலபதி

பெரியாரின் அய்ரோப்பிய சுற்றுப்பயணம்
பெரியார் ஈ.வெ.ராமசாமி 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அய்ரோப்பிய சுற்றுப்பயணமாகப் புறப்பட்டுச் சென்றார். அடுத்த ஒராண்டில் சோவியத்ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின்,  போர்ச்சுகல், இங்கிலாந்து முதலான அய்ரோப்பிய நாடுகளில் எல்லாம் பயணம் மேற் கொண்டார். அக்காலத்தில் ஓங்கியிருந்த பல முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள்வதற்கு இந்தச்சுற்றுப் பயணம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. உலகமே பொருளாதார மந்தத்தில் சிக்கித்தவித்து வந்த சமயத்தில், தொழில்துறையிலும் சமூகக்களத்திலும் சோவியத் குடியரசு நிகழ்த்தியிருந்த சாதனைகளை, அவர் அந்நாட்டில் தங்கியிருந்த மூன்று மாதங்களில் கண்ட பெரியாருக்கு அந்நாட்டைப் பற்றிய ஒரு பெருமிதமான உணர்வை அளித்தது. காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகெங் கும் நேரு உள்ளிட்ட தேசியவாதி களிடையே உணர்வை ஊட்டி வளர்த்து வந்த கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்ட, முதலாளித்துவத்திற்கு எதிரான என்ற லீக் ஆகெய்ன்ஸ்டு இம்பீரியலிஸ்டு அமைப்பினரை பெரியார் ஜெர்மனியில் சந்தித்தார். மேலும் இந்தப்பயணத்தின்போது, நிர்வாணிகள், சுதந்திரச் சிந்தனையாளர்கள், நாத்தி கர்கள், புலம்பெயர்ந்த புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் என்று பற்பலரைப் பெரியார் சந்தித்தார்.. இச் சந்திப்புகள் மனக்கிளர்ச்சி தருபவையாக இருந்தன என்பதில் அய்யமேதுமில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் போதுதான் முதன் முதலாக இனப்பிரச்சினையைப் பற்றி பெரியார் எதிர்கொள்ள நேர்ந்தது என்பது இதுவரை எவரும் அறியாதது.
இங்கிலாந்து நாட்டில் பெரியார்
1932 ஆம்ஆண்டு கோடைகாலத்தில் இங்கிலாந்தில் 20 நாட்கள் பெரியார் தங்கி இருந்தபோது, இங்கிலாந்து நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப் பினரான ஷாபூர்ஜிசக்லத்வாலா அவர் களையும்,  இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யில் பங்காற்றிய செல்வாக்கு செலுத்திய புகழ் பெற்ற ரஜனிபாமிதத் என்பவரின் அண்ணனும், இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவ ருமான க்ளமென்ஸ்பாமிதத் என்ப வரையும் பெரியார் சந்தித்தார். முதலாளித் துவத்திற்கு எதிரான கூட்டமைப்பு,  தொழிலாளர்களுக்கான அனைத்துலக நிவாரண சங்கம், இங்கிலாந்து கம்யூனிஸ் கட்சியின் நாளிதழான டெய்லி வொர்க்கர் அலுவலகம் போன்ற பல்வேறுபட்ட கம் யூனிச அமைப்புகளின் அலுவலகங்களுக் கும் பெரியார் சென்றிருந்தார்.
இங்கிலாந்தில் காலடி எடுத்துவைத்த நான்காவது நாள் பெரியார் (பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்) சக்லத்வாலாவைச் சந்தித்தார். அதுமுதற் கொண்டு, போலீஸ் கெடுபிடியால் இங்கிலாந்தை விட்டு வெளியேறும்வரை பெரியார் சக்லத் வாலாவுடனேயே தனது பெரும் பகுதி நேரத்தைச் செலவழித்தார். ஒருமாபெரும் தொழிலாளர் பேரணியில் பேசிய பெரியார் இங்கிலாந்து தொழிற்கட்சியின் தலைவர் ஜார்ஜ்லேஸ்ட்பரியைக் கடுமையாகச் சாடி விமர்சித்தார்.
இங்கிலாந்தில் பெரியார் தங்கியிருந்த இந்தக் குறுகியகாலத்தில்தான், புகழ்பெற்ற ஸ்காட்ஸ்பரோ சிறுவர் வழக்கைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. டூ கில் எ மாக்கிங் பேர்டு என்ற ஹார்பர்லீயின் புகழ்பெற்ற புதினத்தை எழுதுவதற்கு இந்தவழக்குதான் தூண்டுதலாக அமைந்தது என்று கூறப் படுகிறது.
அநீதிக்கு உள்ளான அமெரிக்க கருப்பின இளைஞர்கள்
அமெரிக்க நாட்டு டென்னசி மாநிலத் தின் சட்டனூகாரயில் நிலையத்தில் இருந்து 1931 மார்ச் 25 அன்று ஒன்பது ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்கள் ரயில் ஏறினர். ஆண்களைப்போல் உடைஉடுத்தி பராரி யான இரண்டு வெள்ளைப் பெண்களைக் கற்பழித்த குற்றத்திற்காக விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இனப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்தக் கால கட்டத்தில் நீதிபதி வெள்ளையர்; ஜூரிகள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருப்பினத்தவரானால வழக்கு ஜோடிக்கப்படுவது வழக்கம். நீதிமன்ற வாசலில் கருப்பின கைதிகள் அடித்துக் கொல்லப்படுவது சாதாரணம். இந்த வழக்கில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டது. என்றாலும், இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க கம்யூனிஸ்டுகட்சி தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதற்காக பெரும் பங்காற்றியது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரான 14 வயது ராய், 17 வயது ஆண்டி ஆகி யோரின் தாய் ஆடாரைட் என்ற பெண் மணியை அணுகிய கம்யூனிஸ்டு கட்சி, நீதிமன்றத்தில் சட்டப்படியான போராட் டத்தை மேற்கொள்ள துணை நின்றது. மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவியஒரு மாபெரும் பிரச்சாரம் துவக்கப்பட்டது. ஸ்காட்பரோவிலிருந்து முனிச்வரை - 1930 களில் இங்கிலாந்தில் நிலவிய இன, அரசியல் கலாச்சாரம் என்ற நூலில் இதை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் சூசான்டி. பென் னிபேக்கர் இதை விரிவாகப் பகுத்தாய்வு செய்திருக்கிறார். இந்தப் பிரச்சாரத்தின் நட்சத்திரமாக ரைட் அம்மையார் அமைவார் என்று எவருமே கருதியிருக்க மாட்டார்கள். 1890 பிறந்த அவர் ஒரு அடிமையின் பேத்தியா வார். ஹார்பர்லீயின் புதினத்தில் வரும் கல்புரினாபோல இவரும் வீட்டு வேலைக் காரியாவார். ஆழ்ந்த கிறித்துவமதப்பற்று கொண்டவர். அதுவரை அரசியல் என்றால் என்ன என்பதையே அறிந்திராதவர். சூழ லின் கட்டாயத்தின் காரணமாக, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்தவரும், அதுவரை சொந்த மாகாண எல்லையைக் கூடததாண்டியிராதவருமான அந்த அம்மையார் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளத் தொடங் கினார். இங்கிலாந்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தகாலத்தில்,  அவருக்கு ஆதரவளிக்க இங்கிலாந்து கம்யூனிஸ்டு கட்சிபல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்தது. சக்லத்வாலா இதில் முக்கியப் பங்காற்றினார்;  பென்னிபேகர் தனது நூலில் அவருக்கென ஒருதனி அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார். 1932மே 7 அன்று ஸ்காட்ஸ்பரோநாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று டெய்லி வொர்க்கர் நாளிதழில் ரைட்அம்மையார் வருகை தருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே செய்தி வெளியிடப்பட்டது. ஜூன் 19 ஆம் தேதியன்று டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டது.  நீக்ரோநலவாழ்வு சங்கம், முதலாளித்துவத் திற்கு எதிரானகூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்களும் இப்பேரணியில் பங்கேற்க விருந்தனர். ஆனால், ரைட் அம்மை யாரினால் அவ்வளவு எளிதாக இங்கிலாந்து மண்ணில்காலடி வைக்க முடியவில்லை. முதலில் அனுமதி மறுத்த அயல் துறை அதிகாரவர்க்கத்தினர் பின்னரே மனமிள கினர். கடைசியில் 10 நாள் விசா மட்டும் வழங்கப்பட்டது.
பெரியார் இங்கிலாந்திலிருந்த கால கட்டத்தில் தான்ரைட் அம்மையாருக்கு விசாவழங்கப்பட்ட பத்துநாட்களும் அடங்கி இருந்தன. பாரிசிலிருந்துரைட் அம்மையார் இங்கிலாந்து வந்தவுடனேயே, ஸ்காட்ஸ் பரோ சிறுவர்களுக்கு ஆதரவாக ஒரு தொழி லாளர் கூட்டம் லண்டன்க்ளர்கன்வெல் பகுதியில் இருந்த க்ளப்அன்ட் இன்ஸ்டிடி யூட் மன்றத்தில்  1932 ஜூன் 28 இல் நடத்தப்பட்டது. ரைட் அம்மையார் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய போது, மனதைநெகிழச் செய்யும்பல காட்சிகள் நடந்தேறின. பேசுவதற்காக மேடைக்கு அவர் சென்றபோது, அவருக்கு பாதுகாப்பாகக் கருப்பின மக்களும், இந்தியர்களும் உடன்சென்றனர். பெரும் உணர்ச்சிவயப்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வெகு நேரத்துக்கு கரவொலி எழுப்பியதுடன், சர்வதேசத் தொழிலாளர் கீதத்தைப்பாடத் துவங்கினர். உழைத்து ஓடாகிப்போன அந்த கருப்பின அம்மையார், ஒரு தாயார் என்ற நிலையில் தனது கதையை மனம் உருகும் படி கூறினார். வீட்டில் சாதாரணமான ஒருவாழ்க்கை, வேலை தேடி மகன்கள் சென்றது, அவர்கள் அநியாயமாக சிறையில் இடப்பட்டது, அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மரணதண்டனை என்ப தாக அவர் கதை விரிந்தது.
500 பேருக்கும் மேலானவர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் 53 வயது பெரியார்,  சக்லத்வாலாவுடன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசப் பட்ட ஒவ்வொரு சொல்லையும் அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. ரைட்அம்மை யாரின் தனது மென்மையான, இழுத்து இழுத்து அமெரிக்க தென்பகுதியினரின் பாங்கில் பேசியதில்இருந்து பெரியார் எவ்வளவு புரிந்து கொண்டிருப்பார் என்பது தெரியவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எனது இருமகன்களையும் அவர்களுடன் தண்டிக்கப்பட்ட ஏழுபேரையும் விடுவிக்க இன்றிரவு இங்கு கூடியிருக்கும் நீங்கள், உங்களால் இயன்ற உதவியைச்செய்ய வேண்டும்என்று வேண்டிக்கொள்கிறேன்; ஸ்காட்பரோ சிறுவர்களுக்காக நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் போது,  உலகெங்கும் உள்ளவர்க்கப் போர்க் கைதிகளுக்காகப் போராடிக் கொண்டிருக் கிறீர்கள் என்று ரைட்அம்மையார் பேசியது பார்வையாளர்கள் மனத்தை வெகுவாகநெகிழச் செய்தது.
ஸ்காட்பரோவுக்கு இணையான இந்தியப் போராட்டங்கள்
சக்லத்வாலா அக்கூட்டத்தில் உரை யாற்றும் போதுஸ்காட்பரோவைப் போன்ற பல ஸ்காட்பரோக்கள் (போராட்டங்கள்) இந்தியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். கறுப்பினத் தொழிலாளர் களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளாத அமெரிக்க தொழிற்சங்கங் களை வெகுவாகச் சாடிய அவர்,  இனவேறுபாடு இன்றி அனைத்துத் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் சேர்த்து வருவது பற்றிப் பெருமையுடன் பேசினார். இங்கிலாந்து கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர்கள் பலரும் அக்கூட்டத்தில் பேசினர். இக்கூட்டத்தின் தீர்மானத்தைத் தெரியப்படுத்துவதற்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வதற்காக ஒரு பிரதிநிதிக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு பேசிய அனைவரது பேச்சுக் களிலும், அனைத்துலக தொழிலாளர் நிவாரணஅமைப்பின் இசபெல்பிரவுன் அவர்களதுபேச்சே பெரியாரை வெகு வாகக் கவர்ந்தது. இப்போராட்டத்தை தொழிற்சங்கங்களால் எத்தகைய நடை முறை சாத்தியமான முறைகளில் மேற் கொள்ள இயலும் என்பதை அடிக் கோடிட்டுக்காட்டி அவர் தனது உரையை முடித்தார்.
அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய லண்டன் கருப்பின கடற்பணியாளர்கள் அமைப்பின் ஜிம்ஹீட்லி, ரைட் அம்மை யாரின் போராட்டத்திற்கான நிதி வழங்கு மாறு கோரிக்கை ஒன்றை விடுத்தார். மொத்தம் 13 கினியாக்கள் நன்கொடை கிடைத்தது. அதனைத்தொடர்ந்து பொருள்கள் ஏலம் விடப்பட்டன. எப்போதுமே செலவு செய்வதில் மிகுந்த சிக்கனமாக இருக்கக்கூடிய பெரியார்கூட ஜெர்மானிய வெள்ளிச் சங்கிலி ஒன்றை அரை பவுனுக்கு ஏலம் எடுத்தார்.
உலகெங்கும் உள்ள முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள் வதன்மூலம், புதியதாகத் துவங்கப் பட்டுள்ள தனது சுயமரியாதை இயக் கத்திற்கு வளம் சேர்க்கும் நோக்கத்தி லேயே இந்த அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தைப் பெரியார் மேற் கொண்டார். ஆனால், ரைட் அம்மை யாருடனும் மற்றும் ஸ்காட்பரோ சிறுவர்களின் வழக்குடனும் பெரியார் தொடர்பு கொள்ள நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்ததேயாயினும் இந்த உலகைத் துன்புறுத்திக் கொண் டிருந்த சமத்துவமின்மை களைப் பற்றி மற்றொரு கோணத்தைப் பெரியார் புரிந்துகொள்வதற்கு இது வாய்ப்பளித்தது.
நன்றி: தி ஹிந்து (ஆங்கில நாளேடு)  22-8-2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை,28.8.15

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

யார் கெட்டிக்காரர்கள்?

சந்திரலோகத்தைக் கண்டு விடமுடியும்
இந்தப்பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 250000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல்தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு  2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம்  போகக்கூடிய பறக்கும் யந்திரத்தின் மூலம்  100 நிமிட நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை  நமது இந்திய  மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும் பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக்கோட்டையென்றோ, வீண்கனவென்றோ தான் சொல்லுவார்கள்.
ஆனால் மணி ஒன்றுக்கு  700 மைல் வேகம் போகக்கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது. இனியும் இதிலிருந்து பல அபிவிருத்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள்.
ஆகவே மேல் நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்தமாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன. நம்முடைய முயற்சிகள்  கிருஷ்ணன் மனிதனா -கடவுளா ?
ராமாவதாரம் முந்தியா -கிருஷ்ணாவதாரம் முந்தியா ?
பூமியை ஆதிசேஷன்  தாங்கினால், ஆதிசேஷயைர் தாங்குகிறார் ?
உலகத்தை இரணியாஷதன் பாயாய்ச்சுருட்டிக்கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான். என்றால் அப்போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது ?
மகாவிஷ்ணு, பன்றி அவதாரமெடுத்தபோது  என்ன ஆகாரம் சாப்பிட்டார்?
சிவனும் விஷ்ணும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால்  பிள்ளை எப்படி பிறந்திருக்கும்?
இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா? அப்படியானால், இப்போது ஏன் அப்படி  எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை? என்பது போன்ற  முட்டாள்தனமானதும்  போக்கிரித் தனமானதுமான பிரச்சினையில் நமது சாஸ்திரிகளுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. இவ்வளவோடு நின்றுவிடுகின்றோமா ?
சந்திரலோகத்தைப் பார்க்க இப்போது தான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகிவிட்டதென்றும், நம்முடைய குருவின்மார்  மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து, புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும் அதற்காகப்புருஷர்கள் அந்தச்சந்திரன்  மீது  கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும்,
வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அதுமாத்திரமல்லாமல்,  சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத் திலிருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு  ஒரு  முறையானது (ராகு) கடிக்கச்செய்து அந்த விஷமிறங்க நம்ம  சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள்.
என்றும் சொல்லி விடுகிறோம். ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறிவுக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும்  யார் கெட்டிக்காரர்கள் புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டு பிடியுங்கள். (குடிஅரசு - 1935)


சமூகப் புரட்சி
ஒரு பெரிய சமூகப் புரட்சி உண்டாகாமல் அபேத வாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.
ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.
வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தா லொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள்.
ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.
- டாக்டர் அம்பேத்கர்
-விடுதலை,3.7.15

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

- தந்தை பெரியார்
தோழர்களே!
தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந் நியாசம் இருக்குமென்று எதிர் பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள்.
முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தமிழ் பாஷை
நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும்.  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங் கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன்.  என்னை என் வீட்டார் படிக்கவைக்கக் கருதிய தெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்க மாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போது மென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட் டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ்வொரு மாணவனும் எச்சில் துப்பிவிட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டு மென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்பு வார்.  அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழை யறக் கூட எழுத முடியாது என்பதுதான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத் துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
பொதுவாகவே பள்ளிக் கூடங்களி லும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்பந்த முண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப் பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரியதரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேச வேண்டியவனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும்போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும் படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசு வதைக்கொண்டு திருப்தி அடை யுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்
தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற் காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினி டத்திலும் பற்று கிடையாது. அது மூடப் பற்று - மூடபக்தியே ஆகும். குணத்திற் காகவும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக் காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்றுவைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.
எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார் களுடையது என்பதற்காக அல்ல.
அன்பு என்பது...
உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரி டத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன் களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும்.  புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும் வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக் கும்.  மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும்.  தகப்பனுக்கும் - பிள்ளைக் கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்து விட்டால் பிள்ளையைப்பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை  இறந்து போனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசி களில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண்பிள்ளை இறந்து போனால் படுவ தில்லை.  மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச் சியோ, இன் பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுப விப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ் வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.
அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என் றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர் பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந் தால் அதனால் நஷ்டமேற்படும் அளவை யும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்.
அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க் கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு வித பழக்க வழக்கமும், அவைகளிடத்தில் சில விருப்பு வெறுப்பும் இருந்துவருவது டன் விருப்பமானதைப் பெருக்கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப்பது முண்டு.  ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.
ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடிய தாகவும் இருக்கலாம்.  ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழையது - புதியது என்பதற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக்காக அவன் போராடவேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.
இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னியில் போற்றப் படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என் பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித் துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன் னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத் தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக் கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன் னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக் கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.
பழங்காலம்
பழம் பெரியார்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும்.  யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர் களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம்.  ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன.  இதன் மூலம் நாம் எவ்வளவோ முற்போக் கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக் கிறோம்.  இனியும் எவ்வளவோ காரியங் களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.
முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்த தாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள்.  இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறை கூறவில்லை.  அக்கால  மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந் தது.  இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என் கிறேன்.
இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமை யர்கள் கேட்கலாம்.  பழங் காலத்தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச்சார்புகளும் இருந்திருக்கலாம்.  ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன்களும் உடைய னவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்கலாம்; பூகம்பத்தால் மறைந் தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம்.  இப் போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத்திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்துதான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப் பதைக் காண்கிறோம். ஆகையால், பெரும்பான் மையான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.  இவற்றை யெல்லாம் மாணாக் கர்களாகிய உங்களுக்குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர் களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.
தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள்.  நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது.  நாம் பயன்படுத்துவதுமில்லை.  உதாரண மாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற் றுக்கு சோச்சி என்றும், படுத்துக் கொள்வதற்கு சாச்சி என்றும் சொல் லிக்கொடுத்தார்கள்.  இன்று நாம் அவற்றையா பயன்படுத்து கிறோம்?  அது போலவே பாஷைகள் காலத் துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்க படி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.
தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத் தில் இல்லாத பல காரியங்கள் அரசி யல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரணமாகவும் இப்போது ஏற்பட்டு, அவற்றிற்காக பல அந்நிய பாஷை வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இருக்கின்றன.  இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா?  அவசியமானவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.  அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப் பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விட லாம்.
கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும்.  இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப் பதும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
தோழர்களே!  இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன்.  இதற்கு மேற் பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ் வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.
(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 06.08.1939
-விடுதலை,20.7.14