வெள்ளி, 31 மே, 2024

பிள்ளையார் உடைப்புப் போராட்டம் [27.5.1953]


இந்நாள் – அந்நாள் 


Published May 27, 2024, விடுதலை நாளேடு

எல்லா கடவுள்களும்  ஒழிந்தே தீரும்!

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்ப தற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என் பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக சர்க்கார் விடுமுறையும் விட் டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பும் ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்த்து உடைக்கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லாப் பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்த தால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.
சும்மா கிடந்த பிள்ளையாருக்கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந் திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப் போது புதிதாக இந்த 3000 பிள்ளை யார்கள்போல் உற்பத்தியானதால் இந்த    2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!
சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளை யாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?
ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.
இந்தச் சாமிகள் என்று கொண்டாடப் படுபவைகள் ஆபாசமானவை, அசிங்க மானவை! அக்கிரமமானவை, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கின்றன. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத் திருப்பது இந்தக் கடவுள்கள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண் டும் என்றால், இக்கடவுள்கள் என்ப வைகள் ஒழிய வேண்டும் – என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக் கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெற்றுக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண் டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன் தானே புதிய சாமிகளையும் உண்டாக்கு வான்! இது வரையிலே சாமி கும்பிடாத வன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டி ருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உடைக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட் டுமே! இதில்

புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையாரை உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப் பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங் களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புரா ணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவை களில் உள்ள ஆபாசங்களை, அநியா யங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட் டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லு கிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங் களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவை களின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!
நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

– தந்தை பெரியார்
– ‘விடுதலை’ 11-07-1953.

திங்கள், 27 மே, 2024

வைதிகப் பொய் மூட்டைகள் சுயமரியாதைப் பிரச்சாரத்தால் சிதறட்டும் – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published May 19, 2024

உலகமெங்கும், ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத் துவம்’, விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சியினால், மதக் கோட்டை களும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணா சிரமத் தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவு குண்டுகளால் அடியோடு பெயர்த்தெறியப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதிகப் பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளையும், பழைய பஞ்சாங்க கட்டுகளையும், சாஸ்திரக் குப்பைகளையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக் கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதிகப் பிடுங்கல்களின் போக்கையும், மனப் பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20-06-1932ல் தஞ்சை ஜில்லா திருவிடை மருதூரில் கூடிய பிராமணர் மகாநாட்டின் தீர்மானங்களைக் கொண்டு உணரலாம். இனி அம்மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்களையும் அவைகளின் மூலம் அந்த மிரட்சியடைந்த மூளையையுடைய வைதிக மக்களின் போக்கையும் கவனிப்போம்.

பெண்ணடிமைத்தனம்

பெண்கள் விஷயமாக அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில், பெண்கள் மகாநாடுகளை யெல்லாம் கண்டித்தும், பெண்கள் மகாநாடுகளெல்லாம் மேல்நாட்டு கல்விகற்ற பெண்களால் கூட்டப்படுகின்ற தென்றும் அவர்கள் விரும்பும் சுதந்திரங்கள் மதத்திற்கும் சமுக பழக்க வழக்கங்களுக்கும் விரோதமானவை என்றும், ஆகவே, அவர்களுடைய அபிப்பிராயங்கள் இந்திய பெண்களின் அபிப்பிராயம் அல்லவென்றும், ஜன சமுகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வைதிகர்களின் புத்தியற்ற தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இன்று பெண்கள் விரும்பும் சுதந்திரமும், சொத்துரிமையும் கல்வியறிவும், சுகாதார வாழ்க்கையும் ஆண்களைப் போல் வயது வந்தபின் தங்கள் விருப்பப்படி மணஞ்செய்து கொள்ளும் உரிமையும் விதவைகளாகிவிட்டால் மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமையும், கணவனுடைய கொடு மையோ நடத்தையையோ சகிக்கமுடியாதபோது மண விடுதலை செய்து கொள்ளும் சுதந்திரமும், தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங் களிலும் இடம் பெறும் உரிமையும் கேட்கின்றார்கள். இவ்வுரிமைக ளெல்லாம் இன்று ஆண்களுக்கு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறு பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இளம் வயதில் மாடு, கன்றுகளை விற்பனை புரிவது போல பெண்களை மணம் செய் வித்து தாலியறுத்த பின் வீட்டின் மூலையில் உட்கார வைத்து, அவர்கள் தங்கள் இயற்கை உணர்ச் சியை அடக்கிக் கொள்ள முடியாமல் திருட்டுத்தனமாக அந்நிய புருஷ ருடன் இன்பம் அனுபவித்து கர்ப்ப மாகி குழந்தை பிறந்த பின் அதை கழுத்தை முறித்து கள்ளிக் காட் டிலோ, சாக்கடையிலோ, கிணற் றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எறியும்படி செய்வது மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம் மதமா? கணவனால் வெறுக்கப்பட்ட சொத்துரிமையும், கல்வியறிவும், ஆதரவும் அற்ற பரிதாபகரமான நிலைக்குரிய பெண்கள் விபசார வாழ்க்கையில் ஈடுபட்டு மானத்தை விற்று ஜீவனஞ் செய்யும் காரியந் தான் மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? மதம், பழக்கவழக்கம் என்று கண்மூடிக்கதறிக் கொண்டிருக் கும் அறிவிலிகளால் தான் பெண் மக்கள் மேற்கூறிய கொடிய வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருக்கிற தென்பதைப் பகுத்தறிவாளர் மறுக்க முடியுமா? இவற்றையுணராத வைதிகர்கள் பெண்கள் விரும்பும் சுதந்திரத்தால் மதமும், பழக்க வழக்கங்களும் போய் விடும் என்று ஏன் பாழும் குரலெடுத்துக் கத்துகிறார்கள்?

ஆலயப் பிரவேசம்

அடுத்தப்படியாக ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர் மானத்தில் குருவாயூர் முதலிய இடங்களில் நடை பெறும் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகங்களைக் கண்டித்தும், தீண்டாதார் ஆலயங்களில் நுழைந்தால் ஸநாதன தர்மமும் இந்துமத சம்பிரதாயமும் அழிந்து விடுவதுடன் இந்து சமுகத்தில் கலகமும் வேற்று மைகளும் உண்டாகுமென்றும் ஆகையால் காங்கிரஸ் இவ்வியக்கத்தை ஆதரிக்கக் கூடாதெனவும் எச் சரிக்கை செய்வதாகவும் குறிப்பிடுகின்றார்கள். கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டும் என்கின்றவர்கள் இதைக் கவனிக்க வேண்டுகின்றோம். கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறச் சத்தியாக்கிரகம் பண்ணுகின்ற கஷ்டத்தையும் கோயில் பிரவேச உரிமை கிடைத்தபின், அந்தக் கல்லுச் சாமிகளுக்காகத் தாங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வங்களைப் பாழாக்கும் முட்டாள்தனத்தை போக்க பாடுபடவேண்டிய கஷ்டத்தையும் ஆலோ சித்துப் பார்த்தால், இப்பொழுதே இக்கஷ்டங்களுக்கு இடம் இல்லாமல் தடுத்து விடலாமல்லவா? கோயில் பிர வேசத்திற்காகப் பாடுபடுவதைவிட, கோயில்களின் பயனற்ற தன்மைகளையும் அவைகளால் உண்டாகும் கஷ்டநஷ்டங்களையும் எடுத்துக்கூறி எவரையும் கோயிலுக்குப் போகாமலும், அதற்காக செலவு செய்யாமலும் தடுக்க முயற்சிப்பது எவ்வளவோ பயன்தரக் கூடிய தென்பதே நமது அபிப்பிராயமாகும். ஜனங்கள் கோயில் களுக்குப் போவதையும் அங்கே கொண்டு போய் பணத்தைப் பார்ப்பனர்கள் வயிற்றில் போடுவதையும் நிறுத்தி விடுவார்களானால் கோயில் களும் அழிந்து போகும்; அவைகளைக் கட்டிக் கொண்டு அழும் வைதிகர்களும், பார்ப்பனர்களும் கொட்டம் அடங்கி மூலையில் உட்கார்ந்து விடுவார்கள். இதைவிட்டு, கோயில் பிரவேசத்திற்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் கோயில் களுக்கு மதிப்பும், பாமர மக்களின் செல்வங்களுக் குக் கேடும், சோம்பேறி வைதிகர்களுக்கும், பார்ப்பனர் களுக்கும் பிழைப்பும் இருந்து கொண்டுதானிருக்கும் ஆகையால் கோயில்களை ஒழிப்பதற்கு வழி தேடுவதே சாலச் சிறந்ததென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த வகையில் பார்ப்பனர்களே கோயில்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் நமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், கோயில்களாகட்டும், குளங்களாகட்டும்; மற்ற எந்த பொது ஸ்தலங்களா கட்டும்; அவைகளில் எல்லோரும் பிரவேசிக்கக் கூடிய உரிமையை நிலை நாட்டும் பொருட்டுச் செய்யப்படும் எந்த முயற்சியையும் நாம் முழு மனத்துடன் ஆதரிக் கின்றோம் பார்ப்பனர்கள் எதையும் தங்களுடைய ஏகபோக உரிமையாக அனுபவிக்கச் சுதந்திரம் பெற் றிருந்த காலம் மலையேறி விட்டதென்று எச்சரிக் கின்றோம்.

சோம்பேறிகளின் ஆதிக்கம்

அடுத்தப்படியாக, ‘மத உரிமை’ பற்றி நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் மத உரிமைகளுக்கு விரோதமாகச் சட்டங்கள் ஏற்படுத்த கூடாதென சர்க்காருக்கும் சட்டசபைகளுக்கும் தடையேற்படுத்த வேண்டும் என்றும் மதச் சம்பந்தமான பழக்க வழக்கங்களில் அரசாங்கமும் சட்டசபைகளும் தலையிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த வைதிகர்களின் மனப்போக்கின்படி பார்த்தால், அரசாங்கம் என்று ஒன்று இருக்க வேண்டிய தேவையே இல்லை என்று கூறலாம். தேசமக்களின் கொடிய பழக்க வழக்கங்களைப் போக்கி அவர்களை நலமுடன் வாழச் செய்ய வேண்டியதே அரசாங்கத்தின் முக்கிய கடமை யாகும். இக்கடமையைச் செய்யாத அரசாங்கம் இருந்தும் பயனில்லை; இறந்தும் பயனில்லை. தன் மதத்தினர் தவிர அந்நிய மதத்தினரை யெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறும் ஒரு மத உரிமைக்கு அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? புருஷன் இறந்த பின் அவன் மனைவி யையும் கஷ்டத்தில் ஏற்றிக் கொலை செய்யும் மத உரிமையை அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? பெண்களை பொட்டுக்கட்டி விட்டு விப சாரத் தொழில் நடத்தச் செய்யும் மதவுரிமையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரமும் நெற்றி வேர்வை நிலத்தில் வரும்படி உழைப்போர் உணவின்றி வருந்திச் சாகவும் நகத்தில் அழுக்குப்படாமல் வெல்வெட்டு மெத்தையிட்ட சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கும் சோம்பேறிகள் ஆதிக்கம் செலுத்தும் மதவுரிமைக்கு, அக்கிரமத்திற்கு அரசாங்கம் எப்பொழுதும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க முடி யுமா? ஆகையால் தேசம் நன்மையடைய வேண்டு மானால், மதவுரிமை, ஜாதிஉரிமை, பழக்க வழக்கம் என்பவற்றையெல் லாம் மூட்டைக்கட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் போட்டு விட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத்தகைய அரசியல் சீர்திருத்தம் வருவ தாயிருந்தால்தான் சுயமரியாதைக்காரர்கள், அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதிகர்கள் விரும்புகின்றபடியும் காங்கிரஸ் காரர்கள் கேட்கின்ற படியும், மதபாதுகாப்புள்ள சீர் திருத்தம் எது வந்தாலும் அதைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரிக்கப் போவதில்லை. ஒரு சமயம் ஆதரிக்கும் படியான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மதப்பாதுகாப்பை ஒழித்துச் சமுக சீர்திருத்தச் சட் டங்களை ஏற்படுத்தவே முன்வருவார்கள் என்பதில் அய்யமில்லை. ஆதலால், வைதிகர்கள் வேண்டும் மதப் பாதுகாப்புப் பூச்சாண்டி இனிப் பலிக்காதென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

பால்ய விவாகம்

அடுத்தப்படியாக சாரதா சட்டத்தைக் கண்டித்தும், இச்சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதைக் கண்டித்தும் பால்ய விவாகத்தைத் தடை செய்வது மதத்திற்கு விரோத மென்றும் ஆதலால், சாரதா சட்டத்தைத் திருத்தவோ, ரத்து செய் யவோ, ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானித் திருக்கின்றார்கள். இவர்கள் தீர்மானத் திலேயே சாரதா சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதாக குறிப்பிட்டிருக்கும் போது சிலராகிய வைதிகர்கள் ஏன் கூச்சலிட வேண்டும்? இச் சட்டம் உண்மையிலேயே ஜனசமுகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதென்பதை அறிந்துதானே பலரும் ஆதரிக்கின் றார்கள், அப்படி இருக்க ஏன் இவ்வைதிகர்கள் இதை எதிர்க்க வேண்டும்? மதம் என்ற குருட்டுத்தனம் தானே இவர் களுடைய அறிவை நன்மைதீமைகளை ஆராய்ந்து பார்க்க முடியாமல் தடை செய்கின்றது? ஆகையால் இந்த வகையிலும் இவர்களுடையத்தீர்மானம் ஒரு செல்லாக் காசு என்றுதான் நாம் கூறுவோம்.

புரோகிதப் புரட்டு

கடைசியாக மற்றொருத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதாவது வேதம் ஆகமம் முதலிய வைகளை பிரசாரம் பண்ணுவதற்கும், புரோகிதர் கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைதிகக் காரியங்களுக்கு அழிவுவராமல் காப்பாற்றுவ தற்கும் வருணாசிரம தருமசபைகள் ஏற்படுத்துவதற்கும் இந்துமத தத்துவங்களைப் பிரசாரம் பண்ணுவதற்கும் மாணாக்கர்களிடம் வைதிக ஒழுக்கங்கள் உண்டாவதற்காக சிறு விடுதிகளை ஏற்படுத்தவும் தர்ம ஊழியர் சங்கம் என்னும் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமுகத்தினரும் வேதாகமப் புரட்டுகளையும், புரோகிதப் புரட்டுக் களையும், அர்ச்சகர்களின் அயோக்கியத் தனங்களை யும், வருணாசிரம தர்ம அக்கிரமங்களையும், பழைய குருட்டுப் பழக்கங்களையும் ஒழிக்க முயற்சி செய்யும் இக்காலத்தில் நமது பார்ப்பனர்கள் இவற்றை வளர்க்க முயற்சி செய்வது எவ்வளவு புத்திசாலித்தனமென்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். உண்மையில் இவர்களுக்குத் தேசத்தின் மீது கவனமோ, ஏழைகளின் மேல் அனுதாபமோ மற்ற தேசங்களைப்போல் நமது தேசமும் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசையோ இருந்தால் இவ்வாறு மகாநாடுகள் கூட்டி பிற்போக் கானத் தீர்மானங்களைச் செய்வார்களா? என்றுதான் கேட்கிறோம்.

பணபலமும், பத்திரிகை பலமும், செல்வாக்குப் பலமும் படைத்த வைதிகப் பார்ப்பனர்கள் இப்போழுது தீர்மானிக் கிறபடி, பலதுறைகளிலும் நுழைந்து பிரசாரம் பண்ணவும் பார்ப்பனர்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாமர மக்களில் பலர் இவர்கள் பிரசாரத்தினால் ஏமாறவும் கூடும்.

சுயமரியாதைப் பிரச்சாரம்

ஆனால் இது எப்பொழுதும் நிலைத்து நிற்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயம். காலச்சக்கரம் வெகுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந் நிலையில் பார்ப்பனர்களின் வைதிகப் பிரசாரம் ஒரே முறையில் செய்யப்படும் சுயமரியாதைப் பிரசார சண்டமாருதத்தால் சிதறிப் போய்விடும் என்பது நிச்சயம். ஆகையால் எங்கும் பகுத்தறிவும், விடு தலையும், சுதந்திரமும் உதயமாகிவரும் இக்காலத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் இவ்வாறு இன்னும் ஏமாற்றி கொண்டிருக்க நினைப்பதும் அதற்காக மகாநாடு கூட்டுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் வீண்! வீண்! வீண்! என்று எச்சரிக்கை செய்கின்றோம். இத் தகைய அழுக்குமூட்டை வைதிகர்களைக் கண்டித் ததைத் தேசியப் புலிகள் நம்மைத் ‘தேசியத்துரோகிகள்’ என்றும் ‘சுயராஜ்ய விரோதிகள்’ என்றும் கூறுவது வடிகட்டின அயோக்கியத்தன மல்லவா? இனியேனும் யார் உண்மையான சுதந்திரத்திற்குப் பாடுபடுவர் களென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

– ‘குடிஅரசு’ – துணைத்தலையங்ம் – 26. 06. 1932

ஞாயிறு, 26 மே, 2024

லட்சியத்தை நிறைவேற்ற புத்திசாலிகளல்ல – போராளிகளே தேவை



Published July 2, 2023, விடுதலை நாளேடு

தந்தை பெரியார்

பெரியோர்களே! தோழர்களே! தாய்மார்களே! தூத்துக்குடியில் மாநாடு நடத்த இவ்வூர்த் தோழர்கள் அனுமதி கோரியபோது இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பஞ்ச காலத்தில் இவ்வளவு தொலைவில் நடத்தப்படும் மாநாட் டிற்கு வெகு சொற்ப நபர்களே வரக்கூடும் என்றும், மாநாடு ஏதோ ஒரு சடங்குமுறை மாநாடாகவே இருக்கக் கூடும் என்றும் பலர் நினைத்திருந்தனர். ஆனால், இதுவரையில் நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கடற் கரைக் கூட் டங்கள் தவிர்த்த வேறெந்தக் கூட்டத்திற்கோ, மாநாட் டிற்கோ இவ்வளவு பேர் எப்போதுமே கூடிய தில்லை! இந்தியாவிலேயே கூட ஒருவேளை அகில இந்தியக் காங் கிரஸ் மாநாட்டுக் கூட்டங்கள்தான் இவ் வளவு பெரியதாக இருக்கக் கூடுமோ என்னவோ அறியேன். அதுவும் இவ் வளவு  உற்சாகத்தோடும், துடிதுடிக்கும் ஆர்வத்தோடும், பத்தாயிரக்கணக்கில் தாய் மார்களும், இளைஞர்களும், தோழர்களும் கூடியிருக்கும் இப்பெரிய ஜன சமுத்தி ரத்தைப் பார்க்கும்போது நான் உள்ளபடியே மிகமிக மகிழ்ச்சியடைகிறேன். ரயில் தொந்தரவால் பல ஆயிரக் கணக்கான மக்கள் வர இயலாமல் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுங்கூட இவ்வளவு பேர் கூடியிருப்பது, அதுவும் எவ்வித அசவுகரிய குறிப்போ ஏமாற்று குறிப்போ இல் லாமல் மகிழ்வுடன் கூடியிருப்பது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கிறது. பிரம்மாண்ட உற்சவங்கள் தவிர்த்த மற்ற இடங்களுக்கு  இதுவே ரிக்கார்ட் என்று கூடக் கூறலாம்.

குரல் உள்ளவரை பேசவேண்டும்!

நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாகவேண்டும், தவுலாயிருந்தால் அடிபட்டுத்தான் ஆகவேண்டும் என்பதுபோல், எனக்குத் தொண்டை, குரல், உள்ள வரை யில் பேசியாகவேண்டும், பிரசங்கம் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காண்பதால் ஏற்பட்டுள்ள உள பூரிப்பும், ஒரு தனியான அகம்பாவமும் என் உள்ளம் பூராவையும் கவர்ந்து நிற்கிறது. இருந்தாலும் முயற்சித்து ஏதோ சொல் லுகிறேன்.

சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில புரட்சி கரமான தீர்மானங்களால் சர்க்கார் சம்பந்தம் நீங்கப் பெற்று, கழகத்தின் பேரும் மாற்றம் அடைந்து, திராவிட நாடு பிரிவினையும், லட்சியமாக்கப்பட்டதிலிருந்து நமது செல்வாக்கு அனுதினமும் பெருகிக் கொண்டே வருகிறது. இதைக் காணும் சில பொறாமைக்காரர்களும், மேதாவிகள் என்று தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் சில புத்திசாலி களும் நம்மீது ஏதேதோ குற்றங்குறை கூறி வருகிறார்கள். நம் கழகத்தைப் பின்பற்றி நடந்து வருபவர்களை இவர்கள் பயித்தியக்காரர்கள் என்றுகூடக் கருதி வருகிறார்கள்.

புத்திசாலிகள் அல்ல! 

பொறுப்பான லட்சியப் போர் வீரர்களே வேண்டும்!

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறை வேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டாள்களா, பயித்தியக்காரர்களா, கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்ஸிக்யூடிவ் என்ஜினீயராய் இருந்தபோது, அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக் கூடிய புது மாதிரியான கவலை ஒன்று செய்ய தனக்கு இரண்டு கொல்லர்களை தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து, இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின் – அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள், பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.

அப்போது அவர் சொன்னார், “கொல்லன் – கெட்டிக் காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால் அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும், அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள், என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்துகொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய, ஒரு படிமானமுள்ள, சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், சுத்தியும் பிடித்துப் பழகிய ஒரு சாதாரண ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாய் இருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

சேரு முன்பு சிந்திப்பீர்! 

சேர்ந்த பிறகோ அதை மறப்பீர்!

புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப் போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடா மங்கலம் மாநாட்டின்போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே நான் இப்போது கூறுகிறேன். நீடா மங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறு கிறது என்று நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானா லும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!

ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத் தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர் களாகச் சேர்ந்து விட்டீர்களோ உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை.

ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, ‘அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா’ என்று கூறினால், ‘என் மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே?’ என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்ட்ரிக்ட் சூப்ரன்டெண்ட் ‘சுடு!’ என்று போலிஸ்காரனுக்கு உத்தரவு போட, அவன் ‘என் மனச்சாட்சி அதற்கு இடங் கொடுக்க வில்லையே’ என்று கூறினால், அந்தச் சூப்ரன்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன் ‘அந்த ஆட்டை வெட்டுடா!’ என்று எஜமான் உத்திரவிடும்போது, ‘அய்யோ என் மனச்சாட்சி மாட்டேன் என்கிறதே; நான் என்ன செய்யட்டும்?’ என்று கூறினால், ‘ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரி யாமற் போனதென்னடா?’ அப்போது உன் மனச்சாட்சி எங்கேடா போயிருந்தது? என்று கேட்பானா? இல்லையா அவனை?

குதர்க்கம் பேசுதல் விஷமமல்லவா?

ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷமத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம் தான் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால், தோழர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்; இந்த சர்வாதி காரம் எதற்குப் பயன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதி காரத்தைக் கழக லட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக் காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

என் சொந்த விளம்பரத்திற்காக, என் சொந்தப் பெரு மைக்காக இதுபோன்ற மாநாடுகள் கூட்டப்படுகின்றன என்று சிலர் கருதுவதற்கொப்ப, இம்மேடையின் கண் பேச நேரும் தோழர்களும் என்னைப்பற்றிப் புகழ்ந்து பேசு வதிலேயே தமது சொற்பொழிவுக்குக் கொடுக்கப்படும் நேரத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்கின்றார்கள். இதை நான் அறவே வெறுக்கிறேன். சிறிதும் விரும்ப வில்லை. ஆகவே, சொற்பொழிவாளர்கள் என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசாமல் இருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இருந்த காந்தியார் வேறு!  இறந்த காந்தியார் வேறு!

சென்ற மாநாட்டிற்குப்பின் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பேசப்பட வேண்டியது காந்தியாரின் மறைவைக் குறித்தாகும். காந்தியார் உயி ரோடிருந்தவரை அவருடைய போக்கைப் பெரும் அளவுக்குக் கண்டித்து வந்த எனக்கு, காந்தியார் மறைவுக் குத் துக்கப்படவோ, அவரது மறைவிற்குப் பின் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசவோ என்ன உரிமை யுண்டென்று சிலர் கேட்கலாம். சில காங்கிரஸ்காரர்களின் நல்லெண் ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே நான் இவ்விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதியிருக்கலாம். ஆனால், தோழர்களே! இவை உண்மையல்ல. காந்தியார் மறைவுக்கு ஆக எந்த காங்கிரஸ்காரர் துக்கப்பட்டார்? அழுதார்? வேதனைப்பட்டார்கள்? காங்கிரஸ்காரர்கள் பண்டிகை கொண்டாடினார்கள். காங்கிரஸ் முக்கிய ஸ்தர்களாக இருந்த பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கி னார்கள். எனக்கு உண்மையிலேயே இப்பொழுதும் துக்கம் மேலிடுகிறது.

காந்தியாரின் மறைவுக்கு அனுதாபப் பட, மற்றவர்களைக் காட்டிலும் அதிகத் துக்கப்பட வேறுபல காரணங்கள் உண்டு. முதலாவதாகக் காங்கிரஸ் காரர்கள் பலரும் பார்ப்பனர்களும் கருதி இருந்த காந்தியார் வேறு, இறந்த காந்தியார் வேறு என்று நான் கருதுகிறேன்.

இருந்த காந்தியார் ஆரிய காந்தியார்! ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தி யார். நம் எதிரிகளின் காந்தியார். ஆனால், இறந்த காந்தியார் நம் காந்தியார். ஆரியம் அழிந்துவிடுமே எனப் பயந்து ஆரியரால் கொல்லப்பட்ட கொலையுண்ட காந்தியார். அதனால் தான் நாம் மற்றவர் களுக்கும் மேலாகத் துக்கப்படுகிறோம். அதனால்தான், மற்ற வர்களைவிட நமக்குத்தான், அவர் மறைவுக்காக துக்கப்படவும் உரிமை யுண்டு என்று கூறிக் கொள்கிறோம். ஒருவர் தம் மறைவு காலத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ, அதைப் பொறுத்துத்தான் அவருடைய மறைவுக் குத் துக்கப்படுபவர்களும், சந்தோஷப் படுபவர்களும் அமைவார்கள். உதா ரணமாக, நான் காங்கிரஸ் ராமசாமியாக ஒரு காலத்திலும், சுயமரியாதை ராம சாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக ராமசாமியாகத் தற்காலத்திலும் இருந்து வருகிறேன். காங்கிரஸ் ராம சாமியாக இருந்த காலத்தில் நான் இறந் திருந்தால், ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் உள்பட, ‘ஹிந்து’ ஆசிரியர் உள்பட பல காங்கிரஸ்காரர்களும் அய்யர், அய்யங் கார்களும் துக்கங் கொண்டாடியிருப்பார்கள். சுய மரி யாதை ராமசாமியாக இறந்திருந்தால் சுயமரியாதைக் காரர்களும் மற்றும் சில அறிவாளிகளும் மட்டும் துக்கம் கொண்டாடியிருப்பார்கள். ஒரு சில சுயமரியாதைக்கார பார்ப்பனர் தவிர்த்த மற்றப் பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

இருந்தவர் ஆரியக் காந்தியார், 

இறந்தவர் திராவிடக் காந்தியார்!

ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கங் கொண்டாடலாம் என்று கருதுகிறேன். இதேபோல், காந்தியாரும் தம் மறைவின் போது திராவிடர் கழகக் கொள்கைகளை ஒப்புக்கொண்ட காந்தியாராகத் தான் மறைந்தாரே ஒழிய, ஆரிய தர்மத்தை ஒப்புக்கொண்ட காந்தியாராக மறையவில்லை. இந்து மத தர்ம அநீதியைக் கண்டிக்கப் புகுந்ததால், அதற்கான பலனையடைந்தார். சூத்திரன் தலை எடுத்தால் பார்ப் பானுக்கு ஆபத்து என்ற மனுதர்ம விதிப்படி, அவர் பார்ப்பனனால் கொல்லப் பட்டார். இராமாயண கதையில் சம்பூகன் அடைந்த கதியை அவர் அடைந்தார். சம்பூகன் கொல்லப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் அகமகிழ்ந் ததாக, இறந்த பார்ப் பனர்களெல்லாம் உயிர்த்தெழுந்ததாக, கதையில் காணப் படுகிறது. காந்தியார் கொல்லப் பட்டதற்குப் பார்ப்பனர்கள் மிட்டாய் வழங்கியதை நாம் நேராகப் பார்த்தோம். காந்தியார் மறைவுக்குப் பார்ப் பனர்களே காரணம் என்று வடநாட்டில் பார்ப்பனர்கள் வீடுகள் சாம்பலாக்கப்பட் டதையும், பார்ப்பனர்களின் வீடுகள் சூறையாடப்பட்ட தையும், பார்ப்பன தாய்மார்கள் அவமானப்படுத்தப் பட்டதையும், பார்ப்பனர்கள் தங்க இடமின்றி ஓடி தவித்ததையும் நாம் பத்திரிகையில் பார்த்தோம். அதற்கு நஷ்ட ஈடாகப் பம்பாய் மாகாண சர்க்கார் ஒவ்வொரு பார்ப்பனனுக்கும் ரூ.2000 இனாமாகவும், ரூ.25,000 வரை ரொக்கக் கடனும் கொடுத்து உதவியதாகவும் நாம் பத்திரிகையில் பார்க்கிறோம். இங்கு பார்ப்பனர் களுக்கு அத்தகைய கேடு நேரவில்லை. இதற்கு நம் கழகம் தான் காரணமே ஒழிய, காந்தியார் மறைவுக்குத் துக்கப்படுபவர் இந்நாட்டில் இல்லாமல் போனதால் அல்ல.

எங்களால் வந்த வாழ்வு! 

இன்றோ நமக்குச் சவால்!

இதை அறியாத பார்ப்பனர்கள் ஆணவத்தோடு அந் தணர் மாநாட்டைக் கூட்டி நமக்குச் சவால் விடுகிறார்கள். இந்தப் பார்ப்பனர்களை, இன்று மட்டுமல்ல, என்றுமே காப்பாற்றி வரு பவர்கள் நாம்தான். இந்நாட்டிலிருந்து பார்ப்பனர்களை அறவே ஒழித்துக் கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த (ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியில்) ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தெருவில் வரக்கூட யோக்கியதையற்றுக் கிடந்தார்கள். அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் ஒழிக்க, நான் தேசியத்திற்கு முதல் அடிமையானேன். தோழர் வரதராஜுலு நாயுடு அடுத்த அடிமையானார். தோழர் கல்யாண சுந்தர முதலியார் மூன்றாவது அடிமை யானார். ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனு வாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் போன்ற வர்களுக்கு மேடையில் இடம் வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தமிழ்ப் பேசக் கற்றுக் கொடுத்தவர் களும்கூட நாங்கள்தான்.

அக்காலத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு, வீடு பிரித்துப் போட்டுக் கிடக்கிறது என்று கூறத் தெரியாது. வீடு அவுத்துப் போட்டுக் கிடக்கிறது என்றுதான் கூறுவார். சத்தியமூர்த்தி அய்யருக்கு நேக்கு, நோக்கு, அம்மாஞ்சி, அம்மாமி, அவா, இவா இவை தவிர வேறு தமிழ் வார்த்தைகள் பேசத் தெரியாது. ரங்கசாமி அய்யங்கார், டாக்டர் ராஜன், சுதேசமித்திரன் ஆசிரியர் இவர்கள் ஒரு சிலர் தவிர்த்து, அந்தக் காலத்தில் பார்ப்பனர்களில் தமிழ்ப் பேச ஆள் கிடையாது. கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குப் பேச உரிமை வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தியாகம் செய்ய (ஜெயிலுக்குப் போக) கற்றுக் கொடுத் தவர்களும் நாங்கள்தான். ராஜகோபாலாச்சாரியாரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். இது உண்மையா அல்லவா என்று. நாளைக்கு கவர்னர் ஜெனரலாகப் போகிறார். என்னையும் காண்பார். கண்டால் வெட்கப்படப் போகிறார். கட்டியழப் போகிறார். ‘நான் இப்படியானேன்; நீ அப்படியே இருக்கிறாயே’ என்று கேட்பார். நாங்கள் இல்லாதிருந்தால் இந்த நாட்டில் ராஜகோபாலாச்சாரி ஏது? கவர்னர் ஜெனரல் பதவிதான் ஏது? சர்வம் பார்ப்பனிய சுயராஜ்யம் ஏது? பெற்ற பதவியில் நான் பங்கு கேட்கவில்லை.

சுயராஜ்யம் வந்ததென்றால், குறைகளைச் சொல்லக் கூடவா உரிமை இல்லை

உங்களுக்குச் சுயராஜ்யம் வந்துவிட்டது, பதவி வகிக்கிறீர்கள் என்றால், எங்கள் குறைபாடுகளை எடுத்துச் சொல்லக்கூடவா எங்களுக்கு உரிமை இருக்கக் கூடாது? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால், சுயராஜ்யத்தில் பதவி வகிக்க நேர்ந்த சுயராஜ்யப் புலிகள் மற்றவர்களை ஆடுகளைப் போல் கொன்று அழித்துத்தான் தீர வேண் டுமா? கொள்ளைக்காரர்களும், வஞ்சகர்களும், காலி களும் எப்போதும்போல் சாதுக்களை, யோக் கியர்களை, ஏழைகளை வஞ்சித்துத்தான், கொள்ளையடித்துத்தான் வாழ்ந்து வரவேண்டுமா? சுயராஜ்ய சர்க்கார் இதைத் தடை செய்தல் வேண்டாமா? சுயராஜ்ய சர்க்காரில் ஏழை கள்தான் அதிக வரி செலுத்தவேண்டுமா? சுயராஜ்யம் வந்து ஏழைகள் பட்டினி கிடக்கவேண்டுமா? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால் ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு முக் கால்படியும், ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு இரண்டே கால்படியுமா விற்பது?

உண்மையாக கூறுகிறேன்; தோழர்களே! உங்களுக்கும் கேட்க அதிசயமாயிருக்கும். நமது மாநாட்டிற்குத் தேவை யான அரிசியை விலை சரசமாயுள்ள (அதாவது ரூபாய்க்கு இரண்டே கால்படி விலையுள்ள) தஞ்சை ஜில்லாவில் வாங்கிக் கொள்ள அனுமதி தரவேண்டுமென்று மந்திரி யாருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு மந்திரியார் பதில் எழுதியிருக்கிறார்.’ இந்த மாகாணத்தில் அந்த ஒரு ஜில்லாவில் தான் நெல் அதிகமாக (ஏனோ) விளைந்து விட்டது.  ஆகவே, அந்த அரிசியை வாங் கிக் கொள்ள உங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம். வேறு எந்த ஜில்லாவில் வேண்டு மானாலும் 50 மூட்டைகள் வரைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று எழுதியி ருக்கிறார். அதிக மாக விளைந்துள்ள ஊரில் நெல்லும், அரிசியும் மக்கிப் புழுப் புழுக்கவேண்டுமாம்! பற்றாக்குறை ஜில்லாவில் மேலும் அரிசி வாங்கி மேலும் அந்த ஊரில் பஞ்சத்தை அதிகமாக்க வேண்டுமாம்!

‘குடிஅரசு’ 29.05.1948

தூத்துக்குடி கழக மாநாட்டில் 

தந்தை பெரியார் அவர்களின் உரை

சனி, 18 மே, 2024

பகுத்தறிவுக்குத் தடைகள்!

விடுதலை ஞாயிறு மலர்
Published April 6, 2024

– தந்தை பெரியார்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி, உயிர்நாடி ஆகும்.
ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக் கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.
பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவை அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள்.
மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

இதைப் போலவே மதத்திற்கும் என்ன? எப்படி? என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.
இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக் கொள்வது என்பது பொருள்.
நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டிய தில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாக சிந்தித்தால் போதும்.

நமது கொள்கை பகுத்தறிவு
பகுத்தறிவு என்றால் நாஸ்திகம் என்பது பொருள். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாஸ்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது.
எல்லா விதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்துக்கு ஒன்றுதான்.
ஆனால், நமக்குத்தான் ஆயிரக் கணக்கில் கடவுள்கள்!
நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை;
நமது கடவுளுக்கோ பல்லாயிரக் கணக்கான உருவங்கள்.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
நமது நாட்டுக் கடவுளுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்.
மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் – யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கியிருக்கிறார்கள்.
நமது நாட்டுக் கடவுளுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது.
மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ, அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏராளமான பேதங்களையும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்கு கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.
இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை. நல்ல வண்ணம் சிந்தித்து, ஆராய்ந்து ஏற்க வேண்டியதை ஏற்றுக் கொண்டு மற்றதைத் தள்ளி விடுவதுதான் பகுத்தறிவு!
நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை.
உண்மையில் ஒரு கடவுள் இருக்கு மானால், நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
அந்தக் கடவுள், தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

– தலையங்கம், ‘விடுதலை’, 20.6.1973
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

மே தினம் என்றால் என்ன? பெண்களுக்கும் – தொழிலாளர்களுக்கும் ஓய்வும் – சந்தோஷமும் வேண்டும் – தந்தை பெரியார்


விடுதலை நாளேடு

Published April 28, 2024

தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண் டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.

வெவ்வேறான தன்மைகள் ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை. ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.
இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷ்யாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும். ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள் கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள். அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப் பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந் தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக் காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதி யானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வ மாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99வு பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித் துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் – அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக் கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப் படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர் களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின் றார்களா இல்லையா என்று பாருங்கள்.
ஜாதி அடிப்படையில் மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளி களாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளி களாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டி ருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமை களாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

ஊரான் உழைப்பில் இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம். ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப் படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின் றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க இல்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசி விடுவதனாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர் களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

பெருத்த வித்தியாசம் இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்து வத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கு பெருத்த வித்தியாசம் இருக் கின்றது என்று சொல்லுகிறேன்.
இந்த முதலாளி, தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர், கருப்பர்கள் என்கின்ற நிற வித்தி யாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தி யர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும். ஆகையால், இதில் வெள்ளையர், கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.

இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப் பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.
இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல் லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந் தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.
கொடுமை ஒழிய வேண்டும்

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னது போல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதல £ளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வரு கிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்ப தற்கு பிறவி காரண மாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந் தனைகள் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக் குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய விழா போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது விழாக்களில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும்.
ஓய்வும் சந்தோஷமும்
பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிது கூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்து கிறோம். அவர்களுக்கு விழாக்கள் உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண் ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படு வதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ் வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், விழாக்களும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட விழாக்கள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான விழாக்கள், உற்சவம் ஆகிய வைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமா யிருக்கும். ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

(காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)
குடிஅரசு – சொற்பொழிவு – 12.05.1935

உலகில் ஆஸ்திகம் என்பது இல்லாதிருக்குமானால் மேல் ஜாதிக்காரனுக்கு இடமேது? – தந்தை பெரியார்




Published April 7, 2024, விடுதலை நாளேடு

இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாத்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆத்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது.

இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம் உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக்காரணமாய் இருந்து சோம்பேறிகளுக்கும், பேராசைக்காரர்களுக்கும், முரடர்களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும் பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆத்திகமே” யாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆத்திகம் என்பதாக ஒன்று இல்லாதிருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக் காரனுக்கு இடமேது? குருமார்கள், முல் லாக்கள், பாதிரிமார்கள் அர்ச்சகர்கள் புரோகிதர்கள் பண்டாரசன்னதிகள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர் களுக்கு இடமேது? பிரபுக்கள் முதலாளிகள் லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள், ஜமின்தாரர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள் ஆகியவர்களுக்கு இடமேது?

அன்றியும் இந்த ஆத்திகம் என்பது இல்லா திருக்குமானால் கீழ் ஜாதிக்காரன், ஏழை, பிச்சைக்காரன், கூலி வேலையாள் முதலிய இழிவுபடுத்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமேது? என்பவைகளைக் கூர்ந்த அறிவு கொண்டு நடுநிலை என்னும் கண்ணாடி மூலம் பார்த்தால் யாவருக்கும் இதன் உண்மை நன்கு விளங்கும்.
அன்றியும் இன்றைய ஆத்திகப் பிரசாரகர்கள் எல்லாம் எங்கு பார்த்தாலும் சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல், நோகாமல் உட்கார்ந்து கொண்டு ஊரார் உழைப்பில் உண்டு உடுத்தித் திரியும் சோம்பேறிகளும் நயவஞ்சகர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய வேறு யாராவது இவ்வளவு இருக்கிறார்களா? என் பதைக் கவனித்தாலும் உண்மை விளங்காமல் போகாது.
மேலும் இந்த ஆத்திகக் கூட்டம் எல்லாம் நாத்திகத் திற்கு அணுவளவாவது பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல் இருந்தாலும் நாத்திகம் பரவுவதற்குக் காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடித்து அதை சரிப்படுத்துவதற்கு யோக்கியதையோ இஷ்டமோ இல்லாமல் இருந்தாலும் அதைப் பற்றிக் கவனிப்ப தென்பதில்லாமல் ஒரே அடியாய் “இது ரஷியப் பிரசாரம், போல்இவிக் பிரசாரம், இவை மக்களை மிருகப் பிராயத்திற்குக் கொண்டு வரும் பிரசாரம், என்று சொல்லிப் பாமர மக்களின் மடமையை உப யோகப்படுத்திக் கொண்டு அவர்களை வெறியர் களாக்கி அதனால் ஆத்திகத்தை நிலைநிறுத்தி விடலாம் என்றே கருதுகிறார்கள் பாமர மக்களும், ஏழை மக்களும் தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்ட மக்களும் என்றென்றைக்கும் மூடர்களாகவே இருப் பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகத் தான் முடியுமே அல்லாமல் மற்றபடி அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி.

நாத்திகம் “ரஷ்யாவிலிருந்து பரவுகின்றது” என்று சொல்லிவிடுவதன் மூலமாகவே ஆத்திகர்கள் நாத்திகத்திற்கு ஒரு இழிவு கற்பிக்க முயற்சிக்கின்றார்கள் அதற்கு உதாரணமாக ரஷியாவின் நாத்திக திட்டத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.ழ

அதாவது “ரஷிய சர்க்கார் தங்கள் நாட்டில் 5 வரு ஷங்களுக்குள் கடவுள், மதம், கோயில் ஆகியவைகள் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த 5 -வருஷ நாத்திக திட்டத்தைப் பற்றி லண்டன் பார்லிமெண்டு மெம்பர் தோழர் ஆதல்டச்சஇ என் பவர் பேசிய ஒரு விருந்துப் பேச்சில் குறிப்பிட்ட தென்னவென்றால்
1. முதல் வருஷத்தில் கோவில்களையும், மார்க்க ஆராதனைகளையும் இடங்களையும் மூடிவிடுவது.
2. இரண்டாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் பிரார்த்தனைக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுடன், சர்க்கார் உத்தியோகத்தில் மத சம்பந்தமான எண்ணமுடையவர்கள் யாவரும் இல்லாமல் செய்து விடுவது – மத சம்பந்தமான புத்தகங்கள் ஆதாரங்க ளெல்லாம் அழிக்கப் பட்டாகவேண்டும். நாத்திக படம், நாடகம், சினிமா முதலியவை நூற்றுக் கணக்காக நடத்த வேண்டும்.
3. மூன்றாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் கடவுள் என்ற உச்சரிப்பே இல்லாதபடி செய்து விடுவது. இந்த உத்தரவுக்கு கீழ்ப் படியாதவர்களை தேசத்தை விட்டு வெளியாக்கி விடுவது.
4. எல்லாக் கோவில்களையும் பிரார்த்தனை ஸ்தலங்களையும் பொது நன்மைக்கு பயன்படும்படி சினிமா இளைப்பாறும் மண்டபம், காலப் போக்கு ஸ்தலம் ஆகியவைகளாக மாற்றுவது.
5. அய்ந்தாவது வருஷத்தில் அதாவது 01-05-1937க்குள் கடவுளுக்கு வீடோ வணங்க இடமோ நினைக்க உள்ளமோ ரஷிய எல்லைக்குள் இருக்கக் கூடாது. என்பதாகும். இந்த காரியங்களில் ரஷியர் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு இப்போதே அங்கு பல அறிகுறிகள் காணப்படுகின்றன. அன்றியும் ரஷ்யா இந்த நிலை எய்தி விட்டால் அங்குள்ள மனித சமுக விடுதலையும் சமத்துவமும் சுதந்திரமும் பெற்றுக் கவலை இன்றி மேன்மையாய் வாழ்வார்கள் என்பதற்கும் அங்கு அநேக அறிகுறிகள் தோன்றுகின் றன. எப்படியெனில் ரஷியர்கள் கடவு ளையும் மதத்தையும் அழிக்கவேண்டும் என்று கருதியது இன்று நேற்றல்ல வெகு காலமாகவே கருதிவந்திருக்கிறார்கள்.

என்றைய தினம் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏழை மக்களுக்கு, தொழிலாளிகளுக்கு தங்கள் கஷ்டத்தையும் இழிவையும் பசிக் கொடுமையையும் நீக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற உண்மையான எண்ணம் உதிக்கின்றதோ அன்றே கடவுளும் மதமும், ஒடித்தான் தீர வேண்டும், மறைந்துதான் ஆகவேண்டும்.

ஆகவே, ரஷிய ஜனங்கள் கொடுங்கோன்மை யாலும், முதலாளிகள் பிரபுக்கள்மார் ஆதிக்கத் தினாலும் அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து மீள வேண்டும் என்று கருதிய நிமிடமே கடவுள் பேரிலும், மதத்தின் பேரிலும் பாய்ந்து அவற்றின் பிடித்தத்தை மக்களிடையே இருந்து தளர்த்தி விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது வெற்றி முரசொலி “கடவுளை ஒழிப்பது பணக்காரர்களை ஒழிப்பதாகும்” “மதத்தை ஒழிப்பது, உயர்வு தாழ்வை அழிப்பதாகும்” என்பதேயாகும்.

இந்த முரசை ரஷியாவெங்கும் அடித்து ரஷிய மக்களின் உள்ளத்தில் கல்லின் மேலேழுதிய எழுத்துப்போல் பதியவைத்த பிறகு தான் கொடுங் கோன்மை வேறுடன் சாய்ந்தழிந்தது பணக்காரத் தன்மை அதன் கிளைகளுடனும் சுற்றங்களுடனும் மறைந்தொழிந்தது.

கடவுளும், மதமும் ஒழிந்து விட்டதால் “மக் களுக்கு” ஆபத்து என்பது ரஷியாவில் ஓரளவுக்கு ருஜுப்படுத்தப்பட்டதை நாமும் நன்றாய் மனப் பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் எந்த மாதிரியான மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். எனவே எப்படிப்பட்ட மக்களுக்கு ஆபத்து வந்து விட்டது என்றால், இன்றைய தினம் இந்தியாவில் ஆத்திகப் பிரசாரமும், மத பிரசாரமும் செய்யும் மக்களைப் போன்ற மக்களுக்குத் தான் ரஷியாவிலும் கடவுளும் மதமும் ஒழிந்ததால் ஆபத்து வந்துவிட்டது. இப்படிப்பட்ட மக்கள் அங்கு 100க்கு 5 பேர்களோ 7 பேர்களோ தான் அதாவது சக்கிரவர்த்திகளாகவும், அரசர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும், முதலாளி களாகவும் பெரியபெரிய உத்தியோகஸ்தர், டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற பல ஊரான் உழைப்பில் கொள்ளை அடிப்பவர்களாகவும், பாதிரிகளாகவும் முல்லாக்களாக வும், குருமார்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருந்து வந்த மக்களுக்கே தான் ஆபத்து வந்து விட்டது.

மற்றபடி இவர்கள் தவிர்ந்த மற்ற 100க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஏழைகள் தொழிலாளிகள் கீழ்மைப்பட்டவர்கள் என்று சொல்லத்தக்க மக்கள் யாவருக்குமே மேன்மை கிடைத்து விட்டது.
அதுவும் தூங்கும் போது கீழ் மகனாய் கூலியாய் அடிமையாயிருந்து விழித்தெழும்போது மேன்மகனாய் விடுதலை பெற்றவனாய் சமவுரிமை அடைந்தவனாய் ஆனதுபோல் நிலைமை உயர்ந்து விட்டது.

ஆகவே, கடவுளும் மதமும் ஒழிவதின் மூலம் மக்கள் சமூகத்திற்கு எந்த நாட்டிற்கும் இவ்வித “ஆபத்து” நிலைமைதான் ஏற்படகூடும். இந்தப்படி யான “ஆபத்து” நிலையை தாழ்த்தப்பட்ட அடிமைப் படுத்தப் பட்ட ஏழைத் தொழிலாளி மக்கள் அதுவும் இந்தி யாவில் மாத்திரமல்லாமல் ரஷியா தவிர உலகமெங்கணும் 100க்கு 90 பேர்களாயிருப்பவர்கள் மேளதாளம் வைத்து வருந்தி வருந்தி அழைத்து வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை இனி ஹரிபஜனையினாலும் ஆண்டவன் மகிமையினாலும் – அடியார்கள் தூதர்கள் பெருமையினாலும் ஒரு நாளும் மறக்கடித்து விட முடியாது.

உலகத்தில் எந்த ஆண்டவனை நம்பின சமூகமும் எற்த மதத்தை ஏற்ற சமூகமும், இந்த கதியில்தான் இருந்து வருகின்றதேயொழிய “ஆண்டவனையும் அவனை அடையும் மார்க்கத்தையும்” ஒழித்த ரஷியாவைப்போல் மனித சமூகம் உயர்வுதாழ்வு இல்லாமல் சமதர்மமாய் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா?
பணக்காரர்கள் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் கட்டியதினாலும், வேத பாட சாலைகள், யுனிவர் சிட்டிகள் மதராசாக்கள் கட்டி விட்டதினாலேயும், பத்திரிகைகாரர்கள் வேதத்தின் பெருமையையும், புராணத்தின் மகிமையையும், பக்கம் பக்கமாய் எழுதி “ஆண்டவனையும் மார்க்கத்தையும்” புகழ்ந்து கொண்டு “நாத்திகர்”களை வைவதி னாலேயும் ஏழை மக்கள், இழிவுபடுத்தப்பட்ட மக்கள், பாடுபட்டுப் பட்டினி கிடக்கும் மக்கள் எழுத்து வாசனை அறிய வகையில்லாமல் தடுத்து தாழ்த்திவைக்கப் பட்டிருக்கும் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு விடமுடியுமா? என்றுதான் கேட்கின்றோம்.

இப்படிப்பட்ட மக்கள் எந்த நாட்டில் எந்த மார்க்கத்தில் எந்த ஆண்டவன் படைப்பில் இல்லாம லிருக்கின்றார்கள்? என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம். இந்த குறை களுக்கு கொடுமைகளுக்கு ஆண்டவன் செயல்” என்பதல்லாமல் வேறு என்ன பதில்? இந்த ஆத்திகர்கள் சொல்லக் கூடும் என்று பணிவாய்க் கேட்கின்றோம். உலகம் தோன்றி பல “லட்சக்கணக்கான” காலங்களாகி விட்டன. “கடவுள்கள்” தோன்றி வெகு காலம் ஆகிவிட்டன. மார்க்கங்கள் தோன்றி ஆயிரக்கணக்கான வருஷங்களாகி விட்டன. இத்தனை கால கடவுள் – மத ஆட்சியிலும் மனித சமூகம் சீர்படவில்லை கவலை யல்லாமல் வயிற்றுக்கு ஆதாரமில்லை. மனிதனுக்கு மனிதன் அடிமைப் பட்டு உழைக் காமல் வாழ முடியவில்லை என்கின்றதான நிலைகள் இன்னமும் இருக்குமானால் இந்த கடவுள்களும், மார்க்கங்களும் இனி அரை நிமிஷ மாவது உலகில் இருக்க அருகதை உண்டா? என்றுதான் கேட்கின்றோம்.

160 வருஷ காலம் இந்தியாவை பிரிட்டிஷார் ஏகபோக சர்வாதிகார சக்கரவர்த்தியாய் ஆண்டும் இந்தியாவில் 100க்கு 90 தற்குறிகளும், 100க்கு 97க்கு கீழ் ஜாதியாரும், மற்றும் தீண்டாத ஜாதியும், தெருவில் நடக்காத ஜாதியும் இன்னும் இந்தியாவில் இருப்பதினால் அவர்கள் இந்தியாவை ஆள ஒரு சிறிதும் யோக்கியதை கிடையாது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அவர்களை விரட்டி அடிக்க எப்படி பாடுபடுகின் றோமோ, அதுபோல் தான் ஏன்? இன்னும் அதற்கும் மேலாகத்தான் இந்தக் கடவுள்களையும், மார்க்கங் களையும் விரட்டி அடிக்க கடமைப்பட்டிருக்கின்றோம் எப்படி எந்த மதமும் எந்த மார்க்கமும் மக்களை சமமாக பாவிக்காது சமமாக ஆக்காது. இதுவரை பாவிக்கவும் இல்லை ஆக்கவும் இல்லை என்று சொல்லுகிறோமே அதுபோல் தான் இன்று உலகில் வேறு அந்த அரசும், ஆட்சியும் மக்களை சமமாக பாவிக்க வில்லை – நடத்த வில்லை என்று சொல்லி எப்படிப்பட்ட ஆட்சியும் வேண்டியதில்லை சமதர்ம ஆட்சியே வேண்டும் என்கின்றோம். இதனால் யாருக்கு என்ன கஷ்டம்? என்பது நமக்கு விளங்க வில்லை. யாராவது “எங்கள் ஆண்டவன் கட்டளை, எங்கள் மார்க்க கொள்கை, எங்கள் அரசியல் முறை இதுதான்” என்று சொல்ல வருவார்களானால் குஷா லாய் வரட்டும் மண்டியிட்டு வரவேற்க காத்திருக் கிறோம். அவர்களோடு ஒன்றுபட கலர முன்னிற் கிறோம். அதில்லாமல் “இது போல்ஷவிக் பிரசாரம்”, “இது மனித சமுகத்திற்கு ஆபத்து”, “இது தேசியத்திற்கு ஆபத்து”, “இது சுயராஜ்ஜியத்திற்கு ஆபத்து”, “இது சட்டத்திற்கும் நீதிக்கும் அமைதிக்கும் ஆபத்து என்கிறதான பூச்சாண்டிகளைக் கொண்டு ஏழைகள் பட்டினி கிடக்கின்றவர்கள் – கீழ்மைப்படுத்தப்பட்ட வர்கள் கண்களில் மிளகு பொடியைக் தூவ முற்பட்டால் கண்கள் போனாலும் உயிர் போனாலும் எத்தனை காலமாவதானாலும் எப்பாடு பட்டாகிலும் இதைச் சாதித்துத் தீர வேண்டுமென்றுதான் சொல்லுவோம் – அவர்களுக்கு இதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லுவோம்.”

‘குடிஅரசு’ – தலையங்கம் – 04.12.1932

புதன், 15 மே, 2024

நீதி தாமதமாகவோ தவறாகவோ கூடாது – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published May 5, 2024

தந்தை பெரியார்

நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டுப் பார்ப் பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள்.

சீட்டு மேஜை

அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்குக் கொடுத்திருந் தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்றுசேர்த்து அவ்வாட்டத்திற்கு அனுகூலமான சாமான் களையும் ஆடவசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக்காக என்றும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு, சூது ஆடவருகிறவர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்துவருவதுண்டு. சாதாரணமாக காலைமுதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக்கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசியாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன் காரராய் எழுந்து போவதும் இருவர் சம்பாதித்தவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும், சம்பாதித்தவர் என்பவர்களுக்கு அவர்கள் அசலும் மேல்கொண்டு கால்ரூபாயோ அரை ரூபாயோ லாபமிருப்பதாகத் தெரியும். அதுவும் தோற்றவர்கள் மேல் கடன் விட்டிற்கும் தொகையா யிருக்கும். ஆனால் தோற்றபணமும் கடன்காரராக்கிய பணமும் எங்கு போய்விட்டதென்று பார்ப்போமேயானால் வீட்டு வாடகை காரனுக்கும் சீட்டாட வசதி செய்து கொடுத்த சீட்டுமேஜைக்காரனுக்கும், அந்த இடம் தெரிந்து அங்குவந்து மிரட்டிய போலீஸ்காரனுக்கும் தான்போயி ருக்குமே ஒழிய ஆடினவர்களுக்கு லாபமிருக்காது, இப்படியே தினப்படி வந்து சூதாடுவதும் தினப்படிபலர் தோல்வியடைவதுமாயிருக்குமே ஒழிய ஜெயித்தவர்களுக் குத் தோற்றவர்கள் பணம் அவ்வளவும் வந்திருக்காது. அதுபோலவே கோர்ட்டு நீதி என்பது இடம் கொடுத்தவர் களுக்கு சமானமாகிய அரசாங்கத்திற்கும் ஆடவசதி செய்து கொடுத்து சீட்டுமேஜை வாங்கியவர்களுக்குச் சமான மாகிய வக்கீலுக்கு மிரட்டி காசுவாங்கும் போலீசுகாரனுக்குச் சமானமாகிய கோர்ட்டு சிப்பந்திகளுக் கும் தூணுகளுக்கும் போய் சேர்ந்துவிடுகிறதே தவிர உண்மையான விவகாரக் காரனுக்கு ஒன்றுமே மீதியாவதில்லை.

தோற்றாலும் கெடுதி – ஜெயித்தாலும் கெடுதி

விவகாரத்திற்கு வரும் வாதி தோற்றால் அனேகமாய் பாப்பராய் விடுகிறான். ஜெயித்தால் செலவு செய்த தொகையை அடைந்தவனாகிறான். அதுபோலவே பிரதி வாதியும் ஜெயித்தாலும்தோற்றாலும் அநியாயமாய் கெட்டுப்போகிறான். இதன் காரணம் என்னவென்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் கோர்ட்டுகள் என்று சொல்வது பலருக்கு உத்தியோகம் கிடைக்கவும் வக்கீல்கள் பிழைக்கவும் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டனவே அன்றி குடிமக்கள் நீதி அடைய அல்லவே அல்ல என்பதுதான்.
நியாயம் கிடைக்கும் தன்மை
வக்கீல்களின் புரட்டுகளாலும் தந்திரங்களாலும் விவகாரக்காரனுக்குக் கையில் பணமிருக்கிறவரை “நியாயம்” கிடைக்கும் மாதிரி வசதி செய்யப் பட்டிருக்கிறது. சிற்சில சமயங்களில் சில விவகாரகாரனுக்குக் கைப்பணம் தீர்ந்துபோனபிறகுகூட கடன் கிடைப்பதாயிருந்தால் மறுபடியும் கூட நியாயம் கிடைக்க வழியிருக்கிறது. பெரிய விவகாரங்களில் நியாயம் என்பது சட்டத்தைப் பொருத்த தாகவே இல்லை. மாதிரி கேசுகளில் இதற்கு முன் உள்ள ஜட்ஜுகள் என்ன அபிப்பிராயம் கொடுத்திருக்கிறார். இன்ன ஊர் ஜட்ஜு எப்படி தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்று பழைய ஜட்ஜுகளின் அபிப்பிராயமே சட்டமாயி ருக்கிறது. சில கேசுகளில் அந்தந்த ஜட்ஜுகள் கொள்ளும் அபிப்பிராயமே சட்டமாகும். நீதி ஸ்தலங்கள் என்பவை வரிசைக் கிரமமாய் முன்சீப் கோர்ட், ஜில்லா ஜட்ஜு அல்லது சப்ஜட்ஜு அப்பீல், ஹைக்கோர்ட் அப்பீல், புல்பெஞ்சு அப்பீல், லட்டர்ஸ்பேட்டெண்ட் அப்பீல், ரிவிஷன் பிரிவி கவுன்சில் என படிப்படியாய் பல ஸ்தானங்கள் விவகாரக் காரன் அறிவீனத்திற்கும் ஆணவத்திற்கும் பணத்திமி ருக்கும் தக்கபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் தூண்டுகோலென வக்கீல் கூட்டங்களும் இவர்களை நத்திப் பிழைக்கும் இவர்களது புரோக்கர்களும் மலிந்து வருகின்றன. இவ்வித நியாய ஸ்தலமுறையும் நியாயவாதி முறையும் நியாயங் கிடைக்கு முறையும் நீங்காமல் மக்கள் சுயராஜ்ஜிய மடைந்துவிடலாம் என்பது சமுத்திர நீரை எல்லாம் குடித்துவிடலாம் என்பது போலவே ஆகும்.
கோர்ட்டு ஏற்படுத்தினதின் கருத்து
பொதுவாய் நோக்குமிடத்து இம்முறைகள் நாட்டின் விடுதலைக்கு விரோதமாகவும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் சர்க்காரும் பார்ப்பனரும் கூடிசெய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறல்ல.

தற்கால தேசாபிமானம்

தற்கால “தேசாபிமானி” என்பவருக்கும் பொது நல சேவை செய்பவர் என்பாருக்கும் இம்மாதிரி கோர்ட்டுகளையும் நியாயம் கிடைக்கும் முறைகளையும் இன்னும் அதிகமாக உற்பத்தி பண்ணுவதே யோக்கிய தாம்சமாயிருக்கிறது. சமீபத்தில் சட்டசபைக்கு நின்ற கனவான்களில் ஒருவர் தன்னுடைய யோக்கிய தாம்சத்தை வெளிப்படுத்திய ஒரு அறிக்கையில் நான் இன்ன ஊருக்கு கோர்ட்டுகள் வைக்கும்படி செய்தேன். இன்னஊரில் எடுக்கப்பட்டுவிட இருந்த கோர்ட்டை நிலை நிறுத்தினேன். ஆதலால் எனக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று வெளியிட்டிருந்தார். இதுபோலவே ஒரு ஒட்டர் ஒரு சட்டசபை அபேட்சகருடைய யோக்கியதையைப் பரிசீலிக்கையில் அவ்வபேட்சகரைப் பார்த்து நீர் இந்த ஊரில் ஏற்பட இருந்த சப்- கோர்ட்டை வேண்டாமென்று சொன்னீராம். ஆதலால் உமக்கு தேசபக்தி இல்லை. ‘நீர் பொதுநலசேவைக்காரராக மாட்டீர் உமக்கு ஓட்டு செய்ய முடியாது’ என்று சொன்னாராம். அதற்கு அந்த அபேட்சகர் ‘நீர் தப்பாய் நினைத்துக் கொண்டீர், நான் இந்த ஊருக்கு ஒரு ஜில்லா கோர்ட்டே வரவேண்டுமென்கிற ஆசையினால் சப்கோர்ட் வேண்டாமென்று சொன்னேன். இந்த ஊர் நிலைமைக்கு இங்கொரு ஜில்லா கோர்ட்டு வேண்டாமா? அனேக ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா கோர்ட் இருப்பது போல் இந்த ஜில்லாவுக்கும் இரண்டு கோர்ட் வேண்டும். அதற்கு இந்த ஊர்தான் தகுதி’ என்று சொன்னாராம். இதிலிருந்து இம்மாதிரி ஓட்டர்களுக்கும் அபேட்சகர் களுக்கும் எவ்வளவு தேசபத்தியும் பொதுநல சேவையும் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.

சட்டமென்பது தேசபக்தி

அரசாங்கத்தாரின் மற்றபடி சட்ட சம்பந்தமான இலாகா சட்டமெம்பரின் வேலை தான் என்ன? இவ்வருஷம் சட்ட கலாசாலையில் (லாகாலேஜில்) படித்துதேறிய பிள்ளைகள் தொகை எவ்வளவு? இறந்து போனவக்கீல்கள் தொகை எவ்வளவு? அதுகளுக்கு பதில் செய்து சரிகட்டின பிள்ளைகள் போக மீதி தொகை எவ்வளவு? இவர்கள் பிழைப்புக்கு புதிதாய் உற்பத்தி பண்ணின உத்தியோக மெவ்வளவு? போக பாக்கியுள்ள பிள்ளைகளின் வயிற்று பிழைப்புக்கு எந்தெந்த ஊரில் நிரந்தர முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் நிரந்தர சப்- கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் தற்காலசாந்தியாக முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர ஜில்லா கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சப்ஜட்ஜ் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஜில்லாவுக்கு உதவி சப் ஜட்ஜுகளையோ குறிப்பிட்ட காரியங்களுக்கு என்கிற ஜட்ஜுகளையோ நியமிக்கலாம் என்கிற கவலையே தவிர வேறென்ன இருக்கிறது?

சட்ட மெம்பரும் வக்கீல் பேட்டியும்

சட்ட மெம்பரை வக்கீல்கள் கூட்டம் கூடி பேட்டி காணுவதிலும் என்ன வேண்டுகோள் இருக்கிறது? “அய்யா எங்களுக்கு பிழைப்பு குறைந்து போய் விட்டது, ஒரு கோர்ட்டிலேயே எல்லா வக்கீல்களும் வந்துமுட்டிக் கொள்கிறார்கள், இதனால் வக்கீல் பிழைப்புக்கும் மரியாதை குறைகிறது, ஆதலால் இக்கூட்டத்தை கொஞ்சம் குறையுங்கள் அல்லது இன்னும் ஒரு கோர்ட்டாவது ஏற்படுத்துங்கள், பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாகி விடுகிறார். ஆதலால் வக்கீல் பரீட்சையை இன்னும் கொஞ்சம் அதிக செலவு கட்டணம் ஆக்குங்கள். நம்மை போல் பிச்சை எடுத்து அவர்கள் படிக்கமுடியாது . வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாய் வரக்கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் 2வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் 1வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் எடுத்தும்கூட பி.ஏ.பி.ஏல்., வகுப்பிலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து வருகிறார்களே இதை எப்படியாவது ஒழித்து இன்னும் கொஞ்சம் செலவும் அதிகமான கஷ்டமும் வைத்து அவர்களை இந்த செய்யமுடியாதா” என்பதாகிற இதுகள் தான் வேண்டுகோளாயிருக்கிறதே தவிர வேறன்ன என்பது யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.

கோர்ட்டுகள் அதிகமாவதினாலே
வழக்குகள் அதிகமாகிறது

எத்தனைக்கெத்தனை கோர்ட்டுகள் அதிகமாய் வைக்கிறார்களோ அத்தனைக்கத்தனை வழக்குகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் வழக்கு களும் விவகாரங்களும் உற்பத்தியாவதற்குக் கோர்ட்டுகளே காரண மல்லாமல் வேறென்ன? உதாரணம் வேண்டு மென்றால் கள்ளுக்கடைகளையும், தாசி வீடுகளையும், மோட்டார் வசதிகளையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நாம் ஏன் கள்ளுக்கடைகளைக் குறைக்கும்படி சர்க்காரை வேண்டுகிறோம். கடை குறைந்தால் குடிகாரரின் எண்ணிக் கையும் குடிக்கும் அளவும் குறையும் என்று தான் தவிர வேறென்ன? நாலு தாசிகள் இருக்கும் ஊரில்நடக்கும் விபசாரத் தனத்துக்கும் 40 தாசிகளிருக்கும் ஊரில் விபசாரித்தனத்துக்கும் கணக்கு பார்த்தால் அதிக தாசிகள் உள்ள ஊர்களில் நடக்கும் விபசாரித்தனம் செய்கிற ஆள்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்குமா அல்லவா? அதுபோலவே ஒரு ஊருக்கு ஒரு தரம் போய் வரும் போக்குவரத்து வசதிகளுக்கு பதிலாக நான்குதரம் போய் வரும்படி போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தினால் அதற்கேற்ற பிரயாணிகள் அதிகமாக ஏற்படுவார்களா இல்லையா? அதுபோலவே கோர்ட்டுகள் அதிகமாகவும் ஊர் ஊராகவும் ஏற்பாடு செய்தால் விவகாரம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
பழைய நிலைமையும் புதிய நிலைமையும்
ஆதியில் கோயமுத்தூர் ஜில்லாவுக்கு இரண்டு முன்சீப் கோர்ட்டுகளும் ஒரு சப்-ஜட்ஜுகோர்ட்டும்தான் இருந்தன. இப்போது கொள்ளேகாலம் உட்பட 8 முன்சீப் கோர்ட்டுகளும் 3 சப் ஜட்ஜு கோர்ட்டுகளும் இருக்கின்றன. இரண்டு ஜில்லா கோர்ட்டும் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜு வேண்டுமென்று பலரும்,இனியும் ஒரு ஜில்லா கோர்ட்டு வேண்டுமென்று பலரும் விரும்புகிறார்கள்.

கோர்ட்டுக்கு அவசியமுண்டா?

இதிலிருந்து நாம் அறியவேண்டியதென்ன? இவ்வளவு நீதி ஸ்தலங்கள் ஏற்படும்படியான அளவுக்கு இந்த ஜில்லாவில் சென்ற 40, 50 வருஷத்தில் ஜனத்தொகை பெருகிவிட்டதா? அல்லது இவ்வளவு கோர்ட்டுகள் ஏற்படும் படி ஜனங்கள் அவ்வளவு அயோக்கியர்களாகி விட்டார்களா? என்று பார்த்தால் ஜனத்தொகை ஏறக்குறைய முன் இருந்த அளவுக்கு 4இல் ஒரு பாகம்தான் அதிகமாகி இருக்கிறது இந்த அளவுக்கு சுமார் ரு (கால்) முன்சீப் கோர்ட்டு அதிகமாகியிருந்தால் போதும். அதிகமானால் ஒரு முன்சீப் கோர்ட்டு அதிகமாகலாம் என்றே வைத்துக் கொண்டாலும் 5 அல்லது 6 முன்சீப் கோர்ட்டு களும் ஜில்லா ஜட்ஜு அதிகாரமுள்ள ஒரு மேல்கண்ட ஜட்ஜுயும் 2 சப்ஜட்ஜுயும் அதிகமாகக் காரணமென்ன? இதைப் பார்க்கும் போது இவ்வளவு கோர்ட்டுகளுக்கும் வக்கீல் களுக்கும் வேலை உண்டாக்க தக்க மாதிரிக்கு ஜனங்களை அயோக்கியர்களாகவும், சர்க்காரும் பார்ப்பனர்களும் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? அல்லாமலும் முன் காலங்களில் முன்சீப்புகள் 5 மணி வரை வேலை செய்வார்கள், சம்ப ளமும் அவர்களுக்கு 200, 300 தான். இப்போது 11.30 மணிக்கு கச்சேரிக்கு வந்தால் 2 அல்லது 3 மணிக்கு வீட்டுக்கு போய் விடுகிறார்கள். சம்பளம் 500, 600 வாங்குகிறார்கள்.

இனியும் ஒரு கோர்ட்டு வேண்டுமாம்

இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப்ஜட்ஜு கோர்ட்டு வேண்டு மென்றால் இவ்வயோக்கியத்தனத்திற்கு எதைச் சமமாகச் சொல்லுவது. இதையும் நமது ஜில்லாவில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊருக்கு வரும்படி எதிர்பார்க் கிறார்களாம்.
கோர்ட்டு வந்தால் வந்த ஊருக்கு ஏற்படும் கெடுதி
எந்த ஊரில் வைத்தாலும் வேலை ஏற்படும் என்கிற விஷபத்தில் நமக்கு சந்தேகமில்லை. அப்பீல் செய்ய இஷ்டமில்லாதவனுக்கெல்லாம் அப்பீல் செய்து பார்க்கலாம் என்கிற ஆசை வந்துவிடும். விவகாரத்தில் ஆசை இல்லாமலும், அசலூருக்குப்போய் விவகாரம் செய்வதில் சவுகரியமில்லாமல் தங்களுக் குள்ளாகவே பைசல் செய்து கொள்ளலாம் என்கிறவர்களுக்கெல்லாம் உள்ளூரில் கோர்ட்டு வந்துவிட்டால் பிராது செய்து விடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டு விடும். அலட்சியமாகவும் அனாவசிய மாகவும் மறதியில் இருந்த வழக்கு களுக் கெல்லாம் வக்கீல்கள் முதன்மை ஸ்தானம் கற்பித்துக் கொடுத்து வழக்கிலிழுத்து விட்டுவிடுவார்கள். இன்னமும் எவ் வளவோ கஷ்டங்கள் அவ்வூரிலுள்ள ஏழை மக்களுக்கு ஏற்பட்டுவிடும். முதலாவது வீட்டுவாடகை உயர்ந்துவிடும். காய், கறி, மோர், தயிர், பால், நெய், விறகு விலைகள் உயர்ந்துவிடும். கூலிஆட்களின் கூலி அதிகமாய் விடும் ஜனங்களுக்குள் கட்டுப்பாடும், பெரியவர் சிறியவர் என்கிற மரியாதையும் மாறிவிடும். இவ்வளவு அக்கிரமங்களோடு நாணயமும் குறைந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படு வதாயிருந்தாலும் ஒரு வகுப்பாரின் வயிற்றுப்பிழைப்புக் கோர்ட்டுகளை அதிகப்படுத்துவதே தேசசேவையாயும் இதற்கு அனுகூலமாய் இருக்கும் அதிகாரிகளே பூரண கும்பம் எடுக்கத்தக்க யோக்கியதை உள்ளவர்களாவும் போய்விட்டது. இந்த கூட்டத்தார் தான் நமக்கு சுயராஜ்யம் வாங்கிகொடுக்கத்தக்க யோக்கியர்களாம்.

விவகாரக்காரருக்கு ஏதாவது வசதி உண்டா?

இவ்வளவு அக்கிரமங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் கோர்ட்டுகளில் விவகாரக்காரர்களுக்கு ஏதாவது கடுகளவு சவுகரியமோ யோக்கியதையோ அல்லது அவர்களையும் மனிதர்களாய்கருதத்தக்க நிலைமையோ இருக்கிறதா என்று பார்த்தால் அது கொஞ்சமாவது நினைக்கத்தக்க காரியமே அல்ல. நியாயதிபதியாருக்கிறவர் பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதம் 500, 1000, 2000, 3000 சம்பளம் வாங்கிகொண்டு மோட்டாரில் வந்து இறங்குவதும், தனி அறையில் இளைப் பாறுவதும், பங்கா வீசுவதும் பக்கத்தில் சேவகர்கள் கைகட்டிக்கொண்டு நிற்பதும், தனி கக்கூசு, தனி சிற்றுண்டி அறை ஆகிய போக போக்கியமும் விவகாரக்காரரை ஏமாற்றி 50, 100, 1000, 2000 என்பதாக பீசுவாங்கும் வக்கீல்கள் குதிரை வண்டிகளிலும், மோட்டார் கார்களிலும் வந்து இறங்குவதும், பங்காவின் கீழ் உட்காரு வதும் தங்களுக்கென இளைப்பாறும் அறைகளுமாக போகபோக்கியங்களும் அடைவதுமாயிருக்கிறார்களே ஒழிய விவகாரக்காரரைப் பற்றியோ, விவகாரத்தின் பொருட்டு சாட்சிக்கு வருகிறவர் களைப்பற்றியோ, கொஞ்சமாவது கவலையே இல்லை, கோர்ட்டுகளில் விவகாரக் காரருடைய பரிதாபம் அவர்கள் உட்கார சவுகரியமில்லை. தங்க இடமில்லை. ஒதுங்க மார்க்கமில்லை. வாய்பேச மார்க்கமில்லை, கோர்ட்டு எல்லைக்குள் இருக்கும் வரை ஜெயிலில் கைதிஇருப்பதுபோல் பயந்து ஒடுங்கி நிற்கவும் ஏதாவது ஒருவருக்கொருவர் வாயைத்திறந்தால் அங்குள்ள சேவகர்கள், ‘உஸ்’ ‘அஸ்’ என்று இடையன் ஆடு மாடுகளை ஓட்டுவது போலவும் ‘பேசாதே’ என்று மரியாதைஇல்லாமல் கட்டளையிடுவதுமான ஹீனத்தன்மைக்கு ஆளாக வேண்டியதேயல்லாமல் அங்கு வாதியாகவோ, பிரதிவாதி யாகவோ, சாட்சியாகவோ வருகிறவர்கள் மனிதர்கள் என்று எண்ணியமாதிரியாய் ஏதாவதுகாணப்படுகிறதா? அல்லா மலும் கோர்ட்டுகள் மெத்தைமீது சிலதும் சந்துகளில்சிலதும் இருப்பதால் கூப்பிட்டாலும் காது கேட்கத் தக்க அவ்வளவு தூரத்திலாவது நிற்கக்கூட இடமில்லாமல் இருப்பதோடு வக்கீலிடம் பேசவோ, ஏதாவது ஒரு விஷயத்தை சொல் லவோ இடமில்லை.

வாய்தாக்கள்

இத்தனையும் போதாமல் ஒரு விவகாரத்தை 3 வருடம் 4 வருடம் நீட்டி 25 வாய்தா 30 வாய்தா போடும் உபத் திரவங்கள் அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணிவரையில் நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும், சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று தெரிந்தாலும் 5 மணிவரை வாய்தா எப்பொழுது என்பது தெரிவதற்காக காத்திருக்கவேணடும் எப்போதுநடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள் கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்குக் கட்டும் சாட்சி படி, போக வர செலவுமெனக்கெடு எவ்வளவு என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஜட்ஜு பெண்சாதிக் காலில் எறும்பு கடித்துவிட்டால் அன்றையக் கேசுகள் முழுவதும் வாய்தா போட்டாய்விடும். வக்கீல் வீட்டில் அமாவாசை சமையல் நேரமாய் விட்டால் குமாஸ்தா வாய்தா வாங்கி விடுவார். வக்கீலுக்கு வேறு கோர்ட்டுக்குப் போக வேலை யிருந்தால் கேசை மாலையில் எடுத்துக்கொள்ளும்படி ஜட்ஜைக் கேட்டு வாய்தா வாங்கிவிடுவான். இப்படி எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. நிற்க, சாட்சிக்கு உடம்பு சவுகரியமில்லா விட்டால் டாக்டர்களுக்கு ரூ. 20, 30 கொடுத்து சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும் வேறு அவசர வேலை இருந்தால், ரூ. 20,30 கொடுத்து வயிற்றுகடுப்பு என்று பொய் சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும். இப்படியாக எவ்வளவு கொடுமைகள் விவகாரக்காரருக்கு இருந்து வருகிறதென்பதும் வாய்தாக்கள் ஏற்படுவது கட்சிக் காரர்களாலா அல்லது வக்கீல்களாலா ஜட்ஜுகளாலா என்பதை பார்த்தால் 100-க்கு 90 விவகாரங்களுக்கு ஜட்ஜுகளும் வக்கீல்களுமேயல்லாமல் வாதி பிரதிவாதி காரணமேயில்லை என்பது விளங்கும்.

மேல் அதிகாரிகளோ?

இவற்றைப்பற்றி மேல் அதிகாரிகளுக்கு எழுதினால் ‘அசல் அநியாயம்’ ,’அப்பீலில் அதுவே காயம்’ என்பதுபோல் ‘இதெல்லாம் சகஜம்தான்’ என்று சொல் வார்கள். காரணம் என்னவென்றால் முனிசீப்பு ஸ்தானம் முதல் ஹைக்கோர்ட்டு ஜட்ஜு, சட்டமெம்பர் ஆகிய ஸ்தானம் வரையில் இந்த வக்கீல் கூட்டத்திலிருந்தும் இதனாலே வயிறு வளர்க்கக் கூடிய கூட்டத்திலிருந்துமே ஆள்பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. வக்கீல் கூட்டத்திலிருந்து நியாயாதிபதிகளை நியமிப்பது என்கிற அக்கிரமம் ஒரு நாட்டில் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும் விவகாரமும் வலுக்கவும், குடியானவர்கள் நாசமாய்ப் போகவும் நாடு குட்டிச் சுவராகவும்தான் ஏற்படுமே அல்லாமல் ஒரு நாளும் நாம் உருப்படியாக சுயராஜ்யம் பெறப்போவதில்லை என்பது உறுதி.
– ‘குடிஅரசு’ – கட்டுரை – 06.03.1927

ஒரு விவகாரத்தை 3 வருடம் 4 வருடம் நீட்டி 25 வாய்தா 30 வாய்தா போடும் உபத்திரவங்கள்
அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணிவரையில்
நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும், சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று
தெரிந்தாலும் 5 மணிவரை வாய்தா எப்பொழுது என்பது தெரிவதற்காக காத்திருக்க
வேணடும். எப்போது நடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள்
கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்குக் கட்டும் சாட்சி
படி, போக வர செலவுமெனக்கெடு எவ்வளவு என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.