புதன், 3 ஜனவரி, 2018

தேர்தல், ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா? பித்தலாட்ட வியாபாரத்திற்கா?




நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது இந்திய சட்டசபை தானங்களுக்குத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது. சட்டசபைகள் மாயையென்றும்,  அங்கு சென்று மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யமுடியாதென்றும், சட்டசபைகள் அரசாங்கம் தங்களுடைய பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அரண்களென்றும், சட்டசபையில் சர்க் காருடைய வலுவு பிரதிநிதிகள் வலுவைவிட எவ்வளவோ மடங்கு மேல்பட்டதென்றும், அரசாங்கத்தின் வலுவைச் சட்டசபைமூலம் சிறிதாவது அசைக்கக்கூட முடியாதென்றும் தோழர்கள் காந்தியார், தாஸ், நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் மாத்திரமில்லாமல் இன்று சட்டசபைக்குக் காங்கிரசில் மாறலாய் நிற்கும் அபேட்சகர்களுள்பட எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த அபிப்பிராயமானது சட்டசபைக்கு வெளியிலிருந்து கொண்டுசொன்னதென்றுஎண்ணிவிடமுடியாதபடிகாங் கிரஸ் தலைவர்கள்,தியாகிகள்,மேதாவிகள்,பலர் சட்டசபைக் குள் தக்க பலத்துடன் சென்று ஒரு கைபார்த்துவிட்டு வெளியில் வரும்போதும், வந்த பின்பும் சொன்னது என்பதை நாம் வாசகர்களுக்கு நினைப்பூட்ட வேண்டியதில்லை.

அன்றியும்சட்டசபைகளும்,அதற்குள்சென்றுநாம் செய்யக்கூடியகாரியங்களும் அரசாங்கத்தாரால் ஏற்படுத் தப்பட்டு அனுமதிக்கப்பட்டதென்பதும், அங்கு செல்பவர்கள் அதற்குள்ள அதிகார வரம்புக்கும், சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடந்து தீர வேண்டுமென்பதும், அப்படிக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பதன் மூலம் கூட அதனால் அடையக் கூடிய அளவு அதாவது அதிகாரம் இருக்கும் அளவு முழுவதையும் கூட அடைய முடியாதென்பதும், அவற்றிற்கு மேற்பட்டு ஒரு காரியம் கூடச் செய்யச் சட்டப்படி இடமில்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறதென்பதும் பகுத்தறிவுள்ள வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவையெல்லாம் பளிங்கு போல் ஏற்கனவே தெரிந்ததுதான். அதன் பலாபலன்களைப்பற்றி அனுபோகதர்கள் அப்போதே சொல்லி அதையணுகாம லிருந்தார்களென்று சொல்லலாம். இந்த நிலையில் அதா வது காங்கிரஸ்காரர்கள் பகிஷ்கரித்த பிறகு, அதைவிட்டு வந்தபிறகு, வெளியேறின பிறகு அந்தச் சட்டசபைகள் இப்போது ஏதாவது மாறுதலடைந்து விட்டதா?  அல்லது ஏதாவது அங்கு போய்ச் சாதிப்பதற்குத் தகுந்த மாதிரி திருத் தியமைக்கப்பட்டு விட்டதா என்பவைகளைக் கவனித்தாலும் அந்தப்படி ஒன்றும் நடந்து விடவில்லையென்பதும் நன்றாய் விளங்கும்.

அப்படியிருக்க இப்போது திடீரென்று சட்டசபைகளுக்கு அந்தப்படியெல்லாம் பேசிய காங்கிரஸ்காரர்கள் செல்ல வேண்டுமென்று சொல்வதற்கும், அபேட்சகர்களாய் நிற்ப தற்கும் என்ன காரணமென்பதைப் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள்.

ஆகவே நாளது வரையும் காங்கிரஸ்காரர்கள் இந்தப் பிரச்சினைக்கு எந்த  காரணங்களையும் சொன்னதாகத் தெரிய வில்லை. ஆனால் தோழர் காந்தியவர்கள் இம்மாதம் 15ஆம் தேதிதான் காங்கிரசை விட்டு விலகிவிட தீர்மானித்திருப்பது சம்பந்தமாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்ட சபைக்குக் காங்கிரஸ்காரர்கள் போக வேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வாக்கியத்தில் சட்டசபைப் பிரவேச விஷயமாக நான் இதற்குமுன் என்ன சொல்லியிருந்த போதிலும் சரி, காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போக வேண்டியது அவசியமென்று இப்போது கருதுகிறேன். என்று எழுதியிருக்கிறார்.

இதனால் நாம் தெரிந்து கொள்ளக் கூடியதென்னவென்று பார்ப்போமானால் அப்பொழுது எனக்கு இஷ்டமில்லை. இப்போது எனக்கு இஷ்டம் என்று சொல்லுகிறாரென்பதைத் தவிரவேறொன்றும்காணப்படவில்லை.ஆகவேதோழர் காந்திஅவர்கள்ஊரார்செலவில்ஊரார்கஷ்டத்தில் அரசியலில்கிஙிசிஞி படித்து அனுபவம் பெற்று வருகிறா ரென்று தான் இதிலிருந்து கருத வேண்டியிருக்கின்றது. இந்தப்படிக் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போக வேண்டுமென்பதிலும், அங்கு போய்ச் செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை நிர்ணயிக்காமலும், சமுக சீர் திருத்தமானவிஷயங்களில்பிரவேசிப்பதுமில்லை,அவை களுக்குஇடம்கொடுப்பதுமில்லைஎன்றுமுடிவுசெய்து கொண்டும்போகும்படிசெய்வதும்,அந்தப்படிகாங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போன பின்பும் அவர்கள்சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண் டும், எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதைத் தான் இருந்து நடத்தாமலும், கவனிக்காமலும், இப்போதே காங்கிரசிலிருந்து காந்தியார் விலகிக் கொள்ளப் போவதுமாய்ச்சொல்லுவதுமாகியகாரியங்களில் ஏதாவது புத்திசாலித்தனமோ, பொறுப்போ இருக்கின்றதா என்பதையும், இப்படிப்பட்ட கூட்டத்தாரைச் சட்டசபைக்குப் போக விடுவது பொறுப்பான காரியமோ புத்திசாலித்தனமோ ஆகுமாவென்பதையும் யோசித்துப் பார்க்கும்படி பொறுப் புள்ள ஓட்டர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.

இந்தலட்சணத்தில்மற்றொருவிஷயம்மிகவும்முக்கிய மாய்க் கவனிக்க வேண்டியதாகுமென்பது நமது அபிப் பிராயம். அதாவது:

சட்டசபைத் தேர்தல்களில் அபேட்சகர்களாய் நிற்கும் ஆசாமிகளைப் பற்றி யாரும் கவனிக்காதீர்கள், அவர்கள் நிற்கும் கட்சிகளைப் பற்றி கவனியுங்கள் என்கின்ற பல்லவியின் மீது எலக்ஷன் பிரச்சாரம் நடத்துவதும், கட்சி சம்பந்தமான விஷயங்களில் விவகாரம் வரும் பொழுது கட்சிகளைக் கவனிக்காதீர்கள் மகாத்மா காந்தியைக் கவனியுங்கள், கட்சியைப் பற்றியோ, நபரைப் பற்றியோ கவனிக்காதீர்கள் என்பதும், காந்தியார் இன்ன இன்னபடி நடந்து கொண்டு இன்ன இன்னபடி சொன்னவராயிற்றே. ஆதலால் அவரைக் கவனித்து ஓட்டுக்கொடுக்க முடியுமா?  என்ற பிரச்சினை வரும்போது சட்டசபைக்கு நாங்கள் போனால் இன்ன இன்ன விஷயங்கள் செய்ய மாட்டோமென்று தனிப்பட்ட முறையில் காந்தியார் கொள்கை என்பவைகளுக்கு விரோதமாக வாக்கு கொடுப்பதுமாகிய காரியங்கள் இன்று காங்கிரஸ் எலக்ஷன் பிரச்சாரமாய்ச் செய்யப்பட்டு வருகின்றன. இவை தக்க பொறுப்புள்ள ஆட்களாலேயே நடைபெற்று வருகின்றன.

ஆகவே இந்த நிலையில் காங்கிரஸுக்கு எந்த ஆதா ரத்தின் மீது எந்தக் கொள்கைகளை வைத்து எந்த வேலைத் திட்டத்தை எதிர்பார்த்து யாரிடம் நம்பிக்கை கொண்டு ஓட்டர்கள் ஓட்டுச் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை.

இவை ஒரு புறமிருக்க, மற்றும் ஒரு சில பிரச்சாரக்காரர்கள் காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் சட்டசபைக்குப் போய் வெள்ளையறிக்கையை நிராகரித்து விடுவோம். அடக்கு முறை சட்டங்களை ரத்து செய்து விடுவோம் என்று சொல் லுவதாகத் தெரிகிறது. இதையாவது உண்மையா?  சரியா? என்று யோசிப்போமேயானால் இதுவும் அர்த்தமற்ற பேச்சு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

வெள்ளையறிக்கைக்கு இன்னமும் முழு ரூபமும் ஏற் பட்டு விடவில்லை. அது அமலுக்கு வர அதற்கு இன்ன மும் எத்தனையோ சடங்குகள் நடைபெற வேண்டியிருக்கின்றன. அப்படியிருந்தாலும்அதைநிராகரிக்கத்தகுந்தமெஜாரிட் டியைச் சட்டசபையில் பெற்றுவிட முடியுமா?  முஸ்லீம் களின் 30 தானங்களில் பத்திலொரு பாகமாவது காங்கிரஸ் காரர்களுக்கு அனுகூலமாக விருக்கும்படி காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கின்றதா?  வகுப்பு தீர்ப்பைப் பற்றிச் சுவர்மேல் பூனையாய் இந்துக்களுக்குத் தலையையும், முஸ்லீம்களுக்கு வாலையும் காட்டி வரும்வரையிலும் பண்டித மாளவியா போன்றவர்கள்அதைக்கூடஎதிர்க்கட்சிசேர்த்துக்கொண்டிருக்கும் வரையிலும் முஸ்லீம்கள் எல்லோரும் காங்கிரசுக்கும் சரணாகதி அடையக் கூடியவர்களென்று, நாம் அவர்களை நாம் அவ்வளவு பைத்தியக்காரர்களாக எண்ணிவிட முடியுமா?  ஒவ்வொரு முஸ்லீமும், நான் முதலில் முஸ்லீம் அப்புறம்தான் இந்தியன் என்று செய்த கர்ச்சனைகளை மறந்துவிட்டு அவர்கள் சமுகத்துக்குத் துரோகமாகக் காங்கிரசுக்கு வந்து அடிமையாவார்களென்று நினைப்பது முட்டாள்தனமாகாதா? என்றும் கேட்கிறோம்.

இந்திய சட்டசபையில் நாமினேஷன் காரர்கள் 40 பேர், முஸ்லீம்கள் 30 பேர், வெள்ளைக்காரர்கள் 8 பேர், வியாபாரிகள் 4 பேர், மிராசுதாரர்கள், 7 பேர், வகுப்புத் தீர்ப்பை ஒழிக்காதவரையில் பிரிட்டிஷ் அரசாங்கமே மேலென்று சொல்லுகின்ற சீக்கியர்கள் 2 பேர், ஆக 9 ஒதுக்கப்பட்ட தானங்கள்போய்விட்டால்மீதி53தானங்களும்காங்கிர சுக்கேகிடைக்குமா?இந்த53-ல்குறைவுபடும்.தானங் களாவது மேல்கண்ட ஒதுக்கப்பட்ட தானங்களில் கிடைக் குமா என்பவாகியவைகளைக் கவனித்தால், இந்திய சட்டசபையில் மெஜாரிட்டி கிடைக்குமென்று எண்ண இடமிருக்கிறதா என்று ஓட்டர்கள் கவனிக்க மாட்டார்களா என்று கேட்கின்றோம்.

இரண்டாவதாக,அடக்குமுறைச்சட்டங்களையொழித்து விடுகின்றோமென்று சொல்லுவதும், அர்த்தமற்ற வார்த் தையென்றுஎப்படிச்சொல்லுகின்றோமென்றால்,இன்று அடக்குமுறைச் சட்டங்களுக்கு நாட்டு மக்களிடத்தில் அதாவது காங்கிரஸ்காரர்களிடத்தில் வேலையேயில்லை. சிறப்பாக காங்கிரஸ்காரர்கள் பெரிதும் சத்தியாக்கிரகம் பயனளிக்கவில்லை. சட்ட மறுப்புத் தோற்றுவிட்டது என் கின்ற முடிவுக்கு வந்த பின்னும் காங்கிரஸும் காந்தியாரும் தேசம் இது சமயம் இந்த இரண்டுக்கும் தயாராயில்லை. ஆதலால் அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டதென்று சொல்லி விட்டதற்குப் பிறகும், இனி எதற்காகச் சர்க்கார் அடக்குமுறைகளை தேச மக்கள் மீது பிரயோகிக்கப் போகிறார்களென்று இந்தக் காங்கிரஸ்காரர்களை சொல்லு கிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை. சத்தியாக்கிரகமும், சட்டமறுப்பும் செத்தவுடன் (தற்காலிகமாகச் செத்திருந்தாலும் சரி) அடக்கு முறையும் செத்துவிட்டது என்பதில் சந்தேகம் ஏன்?  அன்றியும் சர்க்கார், அதுவும் காங்கிரஸ்காரர் சட்ட மறுப்பைச் சத்தியாக்கிரகத்தை விட்டு விட்டுச் சர்க்காருக்கு நல்ல பிள்ளையாக நடக்க ஆசைப்பட்டு முன்பு உதறித் தள்ளிவிட்ட சட்டசபைக்கு மீண்டும் போய் ராஜபக்தி - ராஜவிசுவாசம் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காய் நடந்து கொள்ளுகின்ற ஒழுக்க விசுவாசம் ஆகிய சத்தியங்கள் செய்து கொடுத்துவிட்டு சர்க்கார் கட்டடத்தைச் சுற்றிச் சுற்றி வணங்கி வரும் மக்கள் மீது அடக்குமுறைச் சட்டம் எதற்காகப் பிரவேசிக்கப் போகிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை.

ஆகையால் அடக்குமுறை சட்டங்களை ஒழிக்கப் போகின்றோமென்பது செத்த பாம்பை அடிக்கப் போகின் றோமென்று சொல்லுவது போலாகுமே யொழிய வேறில்லை.

ஒரு சமயம் காங்கிரஸ்காரர்களல்லாத மற்றவர்கள் மீது அடக்கு முறைகளை உபயோகிக்கிறார்களே, அதைக் காங்கிரஸ்காரர்கள் நிறுத்தக் கூடுமென்று சிலர் நினைக்கக் கூடாதாவென்று கேட்கக் கூடும்.

அதுவும்அர்த்தமற்றவார்த்தையேயாகும்.ஏனெனில்காங்கிரஸ்காரர்கள்தவிரமற்றவர்களின்மீது பிரயோகிக்கப்படும்சட்டங்களின்துஷ்பிரயோகங் களுக்கும்,அடக்குமுறைகளுக்கும்,கொடியசட்டப் பிரயோகங்களுக்கும், சட்டங்களின் துஷ்பிரயோகங் களுக்கும் காங்கிரஸ்காரர்கள் அனுகூலிகளாகவே இதுவரை இருந்து வருகிறார்கள். உதாரணமாகத் தோழர் காந்தியார் அவர்கள் தான் சொல்லும் காரியங்கள் தவிர வேறு எந்தக் காரியத்தை யார் சொன்னாலும், வேறு எந்தக்காரியத்துக்கு சத்தியாக்கிரகம் செய்தாலும், சட்ட மறுப்பு செய்தாலும் அவற்றை யெல்லாம் பெரும் பாலும், ஒரேஅடியாக பலாத்காரம் என்று சொல்லி வந் திருக்கிறார். இந்த மாதிரி பலாத்கார செய்கைகளின்மீது அடக்குமுறைகளைஉபயோகிப்பதில்காந்தியாரின்ஆதர வையும்,ஆமோதிப்பையும்வைத்துக்கொண்டே சர்க்கார் உபயோகித்து வருகிறார்களென்பது தொக்கி இருக்க வில்லையா?

சமதர்ம இயக்கங்கள் சட்ட விரோதமான இயக்கங் களாகப் பாவிக்கபடுமென்று ஒரு அடக்குமுறை உத்தர வைச் சமீபத்தில்தான் சர்க்கார் பிறப்பித்தார்கள். இதற்கு எந்த மகாத்மாவாவது, காங்கிரஸ்வாதியாவது தேசிய பத்திரி கையாவது மூச்சுகூட காட்டவில்லை.

சுயமரியாதை இயக்க ஸ்தாபனங்கள் சட்ட விரோதமான இயக்கமென்று சர்க்கார் தீர்மானிக்கப் போகின்றார்களென்பது வெளிப்படையான ரகசியம். அதன் பிரமுகர்களை ஒடுக்கி வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவென்பதும் எவரும் அறிந்த விஷயம். இவைகளைப் பற்றியெல்லாம் காங்கிரசுக்கு எவ்வளவு ஆசை அதாவது சீக்கிரம், சீக்கிரம் நடக்கவேண்டுமென்கின்ற ஆசை இருக்கின்றதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.

காங்கிரசுக்குள்ளிருக்கும் சமதர்மக் கொள்கையே பலாத்காரம் கொண்டதென்று சொல்லிவிட்ட பிறகு இனி அடக்குமுறையைக் காங்கிரஸ் எந்த முகத்தைக் கொண்டு ஆட்சேபிக்க முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட யோக்கியதையில் சட்டசபைக்குப் போகப் பிரயத்தனப்படும் காங்கிரஸ்காரர்கள் எதிர் அபேட்சகர்கள் கற்பனையானதும், பொய்யானதும் திருத்தலானதுமான பழிகளை சுமத்தி பிரச்சாரம் செய்வது தங்களை சத்தியாக்கிரகிகளென்றும், சத்தியசீலர்களென்றும் சொல்லிக் கொள்ளும் யோக்கியர்களுக்குத் தகுதியானதா என்பதையும் இந்தத் தந்திரத்தின் பலனாகவே ஒரு சமயம் இவர்கள் ஜெயித்துவிட்டாலும் இவர்கள் சரியான ஜனப்பிரதி நிதிகள் ஆகிவிடுவார்களாவென்றும் கேட்கின்றோம்.

வெல்லிங்டன் துரைமகனார் காங்கிரசில் யோக்கி யர்களும்,நாணயவாதிகளும்,பொறுப்புள்ளவர்களும்மலிந்தில்லை, காலிகளும், கூலிகளும், நாணயமும், மானமரியாதையும் இல்லாத ஆட்களும்தான் மிகுந் திருக்கிறார்கள். ஆனதால், அந்த ஸ்தாபனங்களையோ, அந்த நபர்களையோ அவர் கள் வார்த்தைகளையோ மதிக்கக் கூடாது என்று இந்த ஆட்களை ஜனப் பிரதிநிதிகளென்றோ, நாணயமாய் நடந்து, சட்ட சபைக்கு வந்தவர்களென்றோ கருதக்கூடாது என்றும் சொன்னாரென்றோ சொல்லப்போகிறார் என்றோ சொல்லுவதானால் அதில் கடுகளவாவது தப்பு இருக்கக்கூடுமா என்று கேட்கிறோம். இந்த யோக்கியதையில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், வெல்லிங்டன் பிரபு காங் கிரஸ்காரர்களை மதிக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் ராஜிக்கு இரண்டு கையையும் நீட்டிக்கொண்டு போயும்கூட அவர்கள் இலட்சியம் செய்யவில்லை, ஆகவே, வெல்லிங்டன் பிரபு வின் அகம்பாவம் எவ்வளவு என்று சொல்லியும் தேசியப் பத்திரிகையெல்லாம் இந்தப்படிக் கூப்பாடு போட்டால் இதில் உண்மையோ, நியாயமோ ஏதாவது இருக்கின்றதா, இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

சென்னையில் ஒரு காங்கிரஸ்காரர் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு திரிபவர், மேலே துணிகூட போடாமல் காந்தியார் போலவே வேஷம் போட்டுக்கொண்டு நடப்பவர், பொது மக்கள் பணத்தைக் காங்கிரஸ் பெயரால் மாதம் 100 கணக்காய் பெற்று வாழ்பவர், தோழர் சத்தியமூர்த்திக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கோவில்களை இடிக்க வேண்டுமென்று சொல்லுகின்ற ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஓட்டுப் போடுகிறீர்களா? என்று கேட்டாராம். இதில் இருக்கும் அயோக்கியத்தனத்திற்கு அளவு எவ்வளவு என்ற கேட்பதோடு இந்த ஆட்கள் யோக்கியதையே இப்படியிருந்தால் மற்றபடி எவ்வளவு சிறிய உதவிக்கும் எந்தக் காரியத்தையும் செய்யத் தயாராய் இருக்கும் சாதாரண ஆட்களிடம் எந்தக் காரியத்தைத்தான் எதிர்பார்க்கக் கூடாது என்று கேட்கின்றோம்.

கோவில்களின் பேரால் பொறுக்கித் தின்று வயிறு வளர்க் கும் கூட்டங்கள் தங்களுடைய ஆதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மூட ஜனங்களை ஆயுதமாகக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் எப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தில் கேவலமான காரியங்களைச் செய்யத் துணிகின்றார்கள் என்பதைக் காண இந்த ஒரு உதாரணம் போதாதாவென்று கேட்கின்றோம்.

தோழர் ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் பெரிய அழுக்கு மூட்டை (வைதிகர்) என்று சொல்லலாம். அவர் காலம், நேரம், சகுனம், சாமி உத்தரவு, சாஸ்திரம் ஆகியவை பார்க்காமல் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு நொடிக்கு 100 தரம் கடவுளைக் கூப்பிடுகிறார். இப்படிப்பட்டவர் விஷயத்தில் கோவிலை இடிக்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுகின்றீர்களா? என்று கேட்ட ஆசாமிகள், வேறு எந்த விதமான கொலை பாதகச் செயலைச் செய்ய அஞ்சுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

கோவிலை இடித்தால் இவர்கள் அப்பன் தேடிக் கட்டி வைத்த முதல் என்ன போய்விடுமென்பதும் நமக்கு விளங்கவில்லை. கோவில்களை இடித்த ரஷ்யா தேசம் - இந்த மாதிரிக் கோவில்களின் பேரால் வயிறு வளர்த்தக் கூட்டங்களின் கையில் மண் வெட்டியையும், கோடாரியையும் கொடுத்த ரஷ்யா தேசம் இன்று குபேர செல்வம் படைத்த நாடாக விளங்குகின்றதே ஒழிய பூகம்பத்தால் அழிந்துபோய் பூகம்பக் கஷ்ட நிவாரண வேலை செய்ய இந்த சோம்பேறிக் கூட்டங்களைக் கூப்பிட்டு அதன் பேரால் வயிறு வளர்க்க விடவில்லையென்று இடித்துக் காட்டுகிறோம். மற்றபடி இப்படிப்பட்ட கூட்டத்தின் பேரால் அதாவது காங்கிரஸின் பேரால் தேர்தலுக்கு நிற்கும் ஆட்களின் யோக்கியதையை யாராவது அறிய வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு உதாரணம் காட்டுவோம். என்னவென்றால், இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவராவது ஒரு அபேட்சகரைப் பற்றியாவது வெளியில் எடுத்துச் சொல்லி ஓட்டுக் கேட்காமல் ஆசாமி எப்படியிருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவனிக்காமல் காந்தியாருக்காக ஓட்டுப் போடுங்கள், காங்கிரசுக்காக ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதே போதுமானதாகும். சோம்பேறிகள், கயவாளிகள், உடம்பில் பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொண்டு கையில் மஞ்சள் துணி சுத்தின செம்பை வைத்துக் கொண்டு திருப்பதி வெங்கிடாசலபதிக்குத் தர்மம் செய்யுங்கள், ஏழு மலையானுக்குத் தர்மம் செய்யுங்கள் என்று கேட்பதற்கும், ஆட்களைக் கவனிக்காதீர்கள். காங்கிரசுக்கு ஓட்டு செய் யுங்கள், காந்திக்கு ஓட்டு செய்யுங்கள் என்பதற்கும் என்ன வித்தியாசமென்று கேட்கின்றோம்.

ஆகவே ஓட்டர்களாகிய தோழர்களே! தேர்தல் புரட்டு களையும், வெட்கமற்ற- மானமற்ற - யோக்கியமற்ற - நாணயமற்ற பிரச்சாரங்களையும் கண்டும் கேட்டும் ஏமாற்றமடைந்து விடாமல், மனிதர்கள் அவர்கள் முன்பின் நடவடிக்கைகள், அவர்கள் நடந்து கொள்ளப் போகும் முறைகள் அவர்களது கொள்கைகள், வேலைத்திட்டங்கள், ஆகியவைகளைக் கவனித்து ஓட்டுச் செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

- ‘பகுத்தறிவு’ - தலையங்கம் - 21.10.1934
- விடுதலை நாளேடு,31.12.17

செவ்வாய், 2 ஜனவரி, 2018

கணபதி உருவ பொம்மை உடைப்பு!



திராவிடத் தோழர்களே! இந்தியாவில் “வெள்ளைக்கார சக்கரவர்த்தி’’ ஆட்சி ஒழிந்து பார்ப்பன ஆதிக்க “ஜனநாயக ஆட்சி’’ ஏற்பட்டதிலிருந்து, இன்று, இந்த நேரம் வரை ஒவ்வொரு மாத்திரை நேரமும் வருணாச்சிரம தரும ஆட்சி வளர்ந்து வளம் பெற்று வருகிறது.

வருணாச்சிரம தருமத்தைப் புகுத்தப் பார்ப்பன ஆதிக்க ஏகபோக ‘ஜனநாயக’ ஆட்சியானது ஆட்சி முறை  பல துறைகளில் பல கொடுமையான முறைகளைக் கையாண்டு வந்தாலும்  திராவிட நாட்டில் _ தமிழ் நாட்டில் _ தென் இந்தியாவில் _ சென்னை ராஜ்ஜியத்தில் “வெள்ளைச் சக்கரவர்த்தி’’ காலத்தில் ஒரு அளவுக்கு  முன்னேற்ற மடைந்திருக்கிற திராவிடர்களை மனுகால சூத்திரர் ஆக்கத்திட்டம் கொண்டு உத்யோகத் துறையிலும், கல்வித் துறையிலும் திட்டம் வகுத்து செயலில் இறங்கிவிட்டது.

1.    சூத்திரர்களுக்கு அரசாங்க உத்யோகத்தில் இருந்த “சூத்திர’’ வகுப்பு உரிமை, அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு, அய்கோர்ட் (உயர்நீதமன்ற) தீர்ப்பு மூலம் அந்த நீக்கம் உறுதியாகி அமலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து “சூத்திரன்’’ (தமிழர்கள்) உத்தியோக உரிமை அற்றவர்களாக  ஆக்கப்பட்டு விட்டார்கள்.

2.    சூத்திரர்களுக்குக் கல்வித் துறையில் ஒரு அளவுக்குப் பெரிய கிளர்ச்சி மீது சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.

3.    கல்வித் துறையில் மேல்வகுப்பு அதாவது உத்தியோகத்திற்குத் தகுதியாகும் படிப்புதான் “சூத்திரன்’’களுக்கு உரிமை இல்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பதுகூட சரிவரப் பெறுவதற்கு இல்லாமல் அடிப்படைக் கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை _ பரம்பரைத் தொழிலை, படிக்கவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசயமான முறையானது, நாட்டுநலனுக்கு  ஆகவோ, கல்வி நலனுக்கு ஆகவோ, ஆட்சி நலனுக்கு ஆகவோ, அல்லது மக்கள் ஒழுக்க நலனுக்கு ஆகவோ அல்லாமல் பார்ப்பான் நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்கும் ஆதரவு ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வர்ணாசிரம தரும புதுப்பிப்புக்கு ஆகவே ஸிமீஸ்வீஸ்வீஸீரீக்கு  ஆகவே இந்த “ஜனநாயக ஆட்சி’’ என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆகவேயாகும்.

இன்று இந்தத் திராவிட (தமிழ்) நாட்டு திராவிட மக்கள் தங்கள் நாட்டிலேயே, தங்கள் “100க்கு 90க்கு மேற்பட்டு ஓட்டுரிமை’’ பெற்றிருந்தும், “ஜனநாயக’’ ஆட்சியிலேயே இந்த இழிநிலை; அதாவது சூத்திர, பஞ்சமநிலை அடைந்திருப்பதை ஒழித்துக் கொள்ள வேண்டுமானால்-_ இந்து வர்ணாச்சிரம தருமமுறையை அழித்து  ஒழித்தாலொழிய வேறு எந்தக் காரணத்தாலும் யாராலும் முடியாது என்று நான் மனப்பூர்வமாகச் சித்த சுத்தியாக நம்புவதால்,  வருணாசிரம முறையைஅழிக்கமுற்படும் முறையில் முன்னுரையாக இதைக் கூறுகிறேன்.

சமீப காலமாகவே பொதுமக்கள் உணரலாம்; என்னவெனில் ஆட்சியின் வேலையும், அதிகாரிகளின் வேலையும், சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரியார் பார்ப்பனர்வரை சர்வ பார்ப்பனர்களும் வருணாசிரம வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பிரசாரம் செய்வதும், இந்திய பிரசிடென்ட்டு, இந்திய பிரதமர், மற்றும் இராஜ்ய கவர்னர்கள், இராஜ்ய பிரதமர்கள் முதல் யாவரும் பார்ப்பனர்களாகவே ஆகிக்கொண்டு, மேற்கண்ட வேதசாஸ்திர புராண முதலிய பிரச்சாரங்களும் செய்து வருவது என்றால், இதில் ஏதாவது சூழ்ச்சி, உள்கருத்து இல்லாமல் இருக்க முடியுமா?

மற்றும் இவை மாத்திரமல்லாமல் நம் சூத்திர மக்களில் செல்வவான், கல்விமான், அரசியலில் விளம்பரம், பதவிபெற்ற உலக விளம்பர சீமான்கள் முதல் எச்சிலைக் கலைச் செல்வவான்கள் வரையில் 100க்கு ஒருவருக்கு கூட கவலையோ, மான உணர்ச்சியோ இல்லையே என்று நான் காணும்போது, 75 ஆண்டு வாழ்ந்து அண்மையில் சாகப்போகிற நான், 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம், தொழில், மனைவி “மக்களை’’ துறந்த சன்னியாசியாக நம் திராவிடமக்களுக்கு இந்தச் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டு மென்றே பாடுபட்டு வந்து, வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஏன் 50 ஆயிரம் ரூபாய்கூட வரும்படி உள்ளதான எனது எஸ்டேட்டை பாழடையவிட்டுவிட்டு, பரதேசியாய் பிரயாணங்களுக்கும், பிரச்சாரத்திற்கும் பொதுமக்களிடம் செலவு பெற்று வாழ்ந்துவரும் நான், இதற்கு  இந்த வருணாசிரம தரும முறை ஒழிய ஏதாவதொரு நாள் இதற்குக் காரியம் செய்யாமல் என் உயிர்போக எப்படி என்னை விட்டுக்கொண்டு இருக்க முடியும்?

ஆச்சாரியார் முதல்மந்திரி பதவிக்கு வந்தது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். காரணம் பிரகாசம், கம்யூனிஸ்டு, பொறுப்பற்ற “உதிரிகள்’’ என்பவர்கள் ஆட்சியைவிட நமக்கு நன்றாகக் கண்டித்து, எதிர்த்து, போர் துவக்க  வசதி இருக்கக்கூடிய ஓர் ஆட்சி, அதுவும் சொந்த வாழ்வில் கண்ணியமும், உலக அனுபவ அறிவும் உள்ளவர் ஆட்சிக்கு வருவதுமேல் என்று கருதி ஆதரித்தேன்.

இதற்குக் காரணம் தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் நடந்துகொண்டிருக்கிற முறைபற்றின அனுபவம் எனச் சிறிது இருந்ததேயாகும். ஆச்சாரியாரும் அதுபோலவே ஆட்சிக்கு கவர்மெண்டுக்கு கவுரவம் இருக்கிற  மாதிரியிலேயே பெரிதும் நடந்துவருகிறார். என்றாலும் -_ தனது (பார்ப்பன) வகுப்புக்கு ஒரு வகுப்பின் உத்தமபுத்திரன் எப்படி நடந்துகொள்ளுவானோ அதுபோல், “தேவர்களுக்கு ராமன் நடந்து கொண்டது’’ போல்தான் நடந்து கொண்டிருக்கிறார்.
 நம்மில் துரோகிகள், அனுமார்கள், விபிஷணர்கள் இருந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும்?

ஆனதால் நான் என் சொந்தப் பொறுப்பில் முன்பு பல தடவை கூறி இருப்பதுபோல வருணாசிரம வியாதியை ஒழிக்க கடைசி சிகிச்சையாக, நாளது மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை தமிழ் நாடெங்கும் புத்த விழா கொண்டாடி மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டத்தில் வருணாசிரம வாதிகள் பெரும்பாலோருக்கும் “முதல் தேவன்-_தெய்வம்’’ என்று உருவாக்கி இருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதாகப் பொது மக்களை அதாவது மனு வருணாச்சிரம தருமத்தை வெறுக்கிற பொதுமக்களையும் திராவிடர் கழகத் தோழர்களைச் _ சிறப்பாக இளைஞர்களையும் வேண்டிக் கொள்ளுகின்றேன்.
அன்று பிள்ளையார் அல்லது கணபதி உருவம் என்பதை மண்ணால் செய்து பொம்மை உருவத்தையே கொள்ளுங்கள்.  சர்க்கார் 144 (தடை ஆணை) போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் கழகக் காரியாலயத்தில் அல்லது அவரவர்கள் வீட்டில் உடைத்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்.  நரகாசுரனைக் கொன்றதற்கு ஆக பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அது போல் உருவத்தை உடைத்து கொண்டாடுங்கள்.

புத்த பிரான் வருணாச்சிரம தர்மத்தையோ இந்த வருணாச்சிரம தேவர்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்ல; அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து, முதல் கருத்து. இந்தத் தேவர்களைத், தெய்வங்களை நாம் வணங்குவது ஏற்பது மிகுதியும் முட்டாள் தனமும் மானமற்ற தன்மையுமாகும். நமக்குக் கடவுள் என்பதெல்லாம் நம் நடத்தையில் சத்தியம்,  நாணயம், தயவு, உபகாரம் செய்தல், துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகியவையாகும்.

(பெரியார் ஈ.வெ.ரா அறிக்கை: ‘விடுதலை’, 6-5-1953)
- உண்மை இதழ்,16-31.17

பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண்மையாய் நடந்த செய்திகளா?

2.1.18


- பெரியார்


பெரியபுராணம் 



பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண் மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளை களும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக் களா? சிவன்தான் முழு முதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?

கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா? உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர் களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்த வர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா?

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களை யெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!

கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது உண் மையா?    உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுன சாமியார், பட்டி னத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற் புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது அதை விட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனை களா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப் பதில்லை.

பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலா மிருகமும் நிஜமாய்த்தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன்மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ்வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?

தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங்களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்த மானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப் படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?

பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?     முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரிய புராண சிவன் இருக்கிறாரா?

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வை ணவர், மாத்துவர் ஸ்மார்த்தர்களாவது ஒப்புக் கொள் ளுகிறார்களா?

         ------------ ஈ.வெ.ரா - 02-10-1943 - குடிஅரசிலிருந்து...