திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி

 - தந்தை பெரியார்
நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக்காரன் ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதாகும். நாம் ஓட்டு  வேட்டையாடுபவர்கள் அல்ல. ஓட்டு வேட்டையாடுபவனைக் கேட்டால் இவன் இதை ஜனநாயகம் என்பான். ஒன்று அப்படிச் சொல்பவன் மடையனாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கியனாக இருக்க வேண்டும். புரியாமலேயே சொல்லு கிறவன், தெரியாமல் சொல்லுபவன் மடையன். தெரிந்து வைத்துக்கொண்டே இதில் ஏதாவது பங்கு கிடைக்காதா என்று பார்ப்பவன் அயோக்கியன். இதுவா ஜன நாயக ஆட்சி? இது ஒரு சாதிக்காரன் ஆட்சி. அது அரசாட்சி அல்ல. மேல் சாதிக்காரன் ஆளுகிறான். அதுவும் சாஸ்திர சம்பிரதாயப்படி ஆளுகிறான்.
இப்போது நடைபெறுகிற இராஜ்ஜியம் - இந்துமத இராஜ்ஜியம் இதற்குக் கொள்கை வருணாசிரம தர்மம்தான்.
இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் நான் சொல்லுகிறேன்.
முதலாவது ஆட்டைக் கொல்லலாம்; பன்றியைக் கொல்லலாம்; கோழி மற்ற பறவைகளைக் கொல்லலாம். ஆனால் மாட்டை  மாத்திரம் கொல்லக்கூடாது  என்று இந்த அரசாங்கத்தில் சிற்சில மாகா ணங்களில் சட்டம் செய்து வைத்திருக் கிறார்கள்! உலகில் பல நாடுகள் ரஷ்ய, சைனா, போன்ற நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் வாழும் நாடுகளில் மாடு நல்ல உணவாகப் பயன்படுகிறது.அதைக் கொல் வது  தவறு கிடையாது. ஆட்டிறைச்சி யைவிட  விலைமிகக் குறைவு. மாட்டி றைச்சி ஏழைகள் சுலபமாக  வாங்கிச் சாப்பிடும்படியாகக் கிடைக்கக் கூடியது. அந்த மாட்டை  அறுத்தால் தண்டனை என் றால் இது வருணாசிரம முறைப்படி  நடக் கும் இராஜ்ஜியம் என்றுதானே அர்த்தம்?
அடுத்தப்படி பார்ப்பானைப் பற்றியே பேசுகிறாயே! மற்றவனைப் பற்றிப் பேசுவ தில்லையே ஏன்? என்று கேட்கிறார்கள் சிலமடையர்கள். 100 க்கு 97 பேர் நாம் இருக்கிறோம். பார்ப்பான் 3 பேர்தானே இருக்கின்றான்? அந்த 3 பேருக்காவே சட்டம், ஆட்சி என்று வைத்துக் கொண் டானே ஏன் என்று எவனாவது கேட் கிறானா? இதன் பெயர் ஜனநாயகம் என்று சொல்கிறானே? நம் மடப்பசங்ககளும் 50 பேர் இங்கிருந்தால் அதில் 26  பேர் சொல் லுகிறபடி மற்ற 24 பேரும் கேட்பதுதான் ஜனநாயகம். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கூட 10 பேர் இருந்தால்6 உறுப் பினர்கள் ஓட்டு போடுகிற மாதிரிதான் தலைவர்  வருவார். இங்கே நாம் 100க்கு 97 பேர் இருக்கின்றோம். 100க்கு 3 பேராக இருக்கின்றவன் சொல்லுகிறபடி 97 பேர் கேட்டு நடக்க வேண்டும் என்று சொன் னால் இதற்குப் பெயர் ஜனநாயகமா? எவனாவது சொல்ல முடியுமா? இந்து மத நாயகமே வருணாசிர நாயகம் மனு தருமப்படி ஆளுகிற நாயகமே தான். இரண்டு சங்கதி உங்களுக்குத் தெரிந்தால் இது விளங்கிவிடும். அதாவது ஒன்று: பார்ப்பான் கடவுளுக்குச் சமம். சூத்திரன் நாய்க்குச் சமம், பார்ப்பனத்தி கடவுளுக்குச் சமம். சூத்திரச்சி என்றால் வைப்பாட்டி என்று அர்த்தம் என்று எழுதி வைத் திருக்கிறான்.
இரண்டு: பார்ப்பான் ஆட்சித் தலை வனாக இருக்க வேண்டும். சூத்திரன் சிப் பந்தியாக கீழே இருக்க வேண்டும். இதுதான் மனுதர்மப்படியான சாஸ்திரம் எழுதி வைத்துள்ளவைகளாகும்.
பிராமணன் சூத்திரனைச் சோற்றுக்குத் திண்டாடும்படியாக நடத்த வேண்டும் என்பது மனுதர்மப்படியான காரியம் ஆகும். சூத்திரன்  என்ன பாடுபட்டாவது பார்ப்பானுக்குக் கேடு செய்யாமல் சுகமாக பார்ப்பான்  வாழ வசதி செய்து கொடுக்க வேண்டும். சூத்திரன் ஏழையாகவே இருக்க வேண்டும். ஏண்டாவரி! என்று கேளுங் களேன்; வரிபோடுவது கூட மனுதர்மத்தை அடிப்படையாக  வைத்துதான். சூத்திரன் கையில் எதுவும் மிச்சமீதி தங்கக்கூடாது; அவன் வசதியாக வாழக்கூடாது என்பதற் காகவே. சூத்திரனைச் சோற்றுக்குத் திண் டாடும்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு தரும சாஸ்திரம்! அதை அனுசரித் துத்தான் நமக்கு வரி.
சாதி ஒழியக்கூடாது; சூத்திரன் படிக்கக் கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத் திற்குப் போகக்கூடாது; சூத்திரன்  வயிறாரக் கஞ்சி குடிக்கக்கூடாது என்றே எழுதி வைத் திருக்கிறான். இதுதான்  மனுதரும சாஸ்திரம்! இதுதான் இந்துலாவுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும் ஆதாரமும், அடிப் படையும் ஆகும். இதனால்தான் இதை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு ஜெயில். 4000 பேருக்குத் தண்டனை.  பத்துப் பேருக்கு மேல் சாவு முதலிய எல்லாமும் சாதாரணமாகப் பார்த்தால் தெரியும். இந்த நேரு, பட்டணத்துக்கு (சென்னைக்கு) வந்திருந்தபோது
அவர் மீது செருப்பு வீசப்பட்டதே! என்ன ஆகிவிட்டது?
திட்டம் போட்ட வீதிகளை விட்டு கார் வேறு வழியாக ஓடியும் தப்பிக்க முடியவில்லையே? 5, 6  பேருந்துகளைக் கொளுத்தினார்கள்.  12 பேர் செத்தானுங்களே! என்ன நடந்தது? ஒன்றும் நடக்கவில்லை. அதை வைத்து அதற்காக ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து ஒவ்வொருவருக்கும் 1 வருடம், 2 வருடம் என்று தண்டிப்பது என்றால் இந்த அரசாங் கத்தால் முடியாத காரியமா? ஏன் செய்ய வில்லை? அது அவர்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு சாதாரணக் கடு தாசிகூட இல்லை நாங்கள் கொளுத்தியது! அதற்கு மாத்திரம் ஏன் 2, வருடம், 3 வருடம் தண்டனை? அதில் என்ன இந்த நேருவைக் கொல்லவேணும் என்று எழுதியிருந் ததா?அதில் சாதியைக் காப்பாற்றச் சட்டம் என்று இருக்கிறதே! நேற்றுதான் இந்த இராமனையும் பிள்ளையாரையும் எரித் தோம். வீதிக்கு விதி போட்டு உடைத்தோம்.  யாரும் கேட்கவில்லையே ஏன்? சாதியை ஏன் காப்பாற்றுகிறாய் என்று கேட்டால் உடனே 2 வருடம் என்றால் என்ன அர்த்தம்? இது மனுதர்ம ஆட்சி என்பதற்கு வேறு என்ன காரணம்வேண்டும்? நம்முடைய இழிவை ஒழிக்க நாம் தலையெடுக்க முயற்சித்தால் அதை ஒழிப்பதில்தான் பார்ப்பான் ஆட்சி எல்லாவற்றையும் கையாளுகிறது. நம்மை நம்முடைய இனப் பிரதிநிதிகள் இன்று ஆளுகிறார்களா? நமக்கு ஓட்டுக் கொடுத்திருக்கறார்கள். ஆனால் அதைச் சரியானபடி உபயோகிக்க வசதியிருந்தால், யோக்கியமான முறையில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர் களாயின் பிரதம மந்திரியாக எப்படி ஒரு பார்ப்பான் வரமுடியும்? 97 பேருக்கு யோக்கியமான முறையில் ஓட்டுக் கொடுத் திருந்தால் 97 பேரில் ஒருவர் அல்லவா பிரசிரெண்டாக (குடியரசுத் தலைவராக) இருப்பார்? இப்போது 3 பேராக உள்ள வர்களிடத்திலிருந்து தான்  பிரசிடெண்ட்... பார்ப்பார பிரசிடெண்டு-என்றால் என்ன அர்த்தம்? இவன் வைத்திருக்கிற சட்ட சபையின் மூலம் சாதியை ஒழிக்க முடியுமா? ஓட்டுப்போடுகிறவர்களில் 100க்கு 95 பேர் முட்டாள். பாக்கி 3 பேர் அயோக்கியன். 2 பேர் பார்ப்பான்! அவன் செலவு செய் கிறான்; பணத்தைத் தண்ணீர் மாதிரி; அதற்காகத்தான் சட்டசபைக்கு வா என்று எல்லோரையும் கூப்பிடுகிறான். எலிக் கூண்டு, புலிக்கூண்டு மாதிரிதான். எப்படி பெரிய பொறிவைத்து எலியைப் பிடிக் கிறார்களோ அதுபோலத்தான் எலெக்ஷன் (தேர்தல்) ஒரு பொறி மாதிரி! அதில் மாட்டிக் கொண்டால் ஒன்றும் பண்ணமுடியாது. கீழ்சாதிக்காரர்கள் ஜெயித்தால் கூட பெருவாரி மக்களின் ஆசைப்படி நடக்க இயலாது; சமுதாய இழிவு ஒழிய ஜன நாயகம் மூலம் செய்யமுடியாது. சட்ட சபைக்குப் போய் உட்காருவதற்கு முன்பே உன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விடவேண்டும் என்கிறான். அதில் போய் நீ என்ன செய்ய முடியும்?
சட்டத்தை இலட்சியம் செய்யாமல், வலுவான கிளர்ச்சி நடத்துவது மூலம்தான் நாம் நம்முடைய இலட்சியத்தைச் சாதிக்க முடியும். ஜனநாயகத்தின் மூலம் இந்த பித்தலாட்டத்தை ஒழிக்க முடியாது. கிளர்ச்சி ஒன்றில்தான் இந்தக் காரியம். முடியும். கிளர்ச்சியால் முடியாவிட்டால் அதற்கடுத்து பலாத்காரம் நிச்சயம். அடுத்த தலைமுறையில் அதுதான் நடக்கும். கிளர்ச்சி தோல்வி அடையுமானால் பலாத்காரத்தைத் தவிர வேறுவழி என்ன? மயிலே மயிலே இறகுபோடு என்றால் முடியுமா? ஆகவே சட்டசபையோ, ஜனநாயகமோ இதைச் சாதிக்க முடியாது.
பலாத்காரம் என்றால் இன்னொருவனை ஒழிப்பது என்று  அர்த்தமல்ல. தன்னையே ஒழித்துக்கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம். தன்னையே இரண் டிலே ஒன்று பார்த்துக்கொள்கிறான் என்று தான் அர்த்தம். நீங்கள் பத்திரிகையிலே பார்க்கலாமே! நாட்டிலே நடக்கிற கொலை களில் 100க்கு 75கூட கொலை செய்கிற வனும் தன்னை மாய்த்துக்கொள்கிறான்! காந்தி சும்மா அதிகமாக வேசம் போட்டார். நிஜமாகவே எண்ணிச் சொன்னேன். பிறகு  மாற்றிக் கொள்ள வேண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
ஆந்திராவில் முதலில் நேரு வீரம் பேசினார். நாலு இரயிலைக் கவிழ்த்து இரண்டு தண்டவாளத்தைப் பிடுங்கி னார்கள். உடனே மரியாதையாக அவரே போய்ப் பிரித்துக் கொடுத்தாரே!
ஜின்னா சாயுபு எப்படி பாகிஸ்தான் - தனிநாடு வாங்கினார்? காந்தியார் சொன் னார் என் பிணம் கடலில் மிதந்தபிறகுதான் முஸ்லிம்களுக்கு நாடு என்று பிறகு ஜின்னா வீட்டுக்குத் தேடிப்போய் வெள்ளித்தட்டில் வைத்தல்லவா கொடுத்தார்கள். இயற்கை யின் தத்துவமே அப்படித்தான் வரிசை யாகப்போகும். முடியவில்லை என்றால் அது திரும்பிவிடும். இப்போது ஜனநாயக நாடுகளில் நடப்பதைப் பார்க்கிறோமே! பர்மாவிலே (மியான்மர்) என்ன நடந்தது? 8 மந்திரிகளை சீவித் தள்ளினார்களே என்ன ஆயிற்று?
இப்போ இங்கே பார்ப்பார நாயகம். சாதிநாயகம். மத நாயகம், அப்புறம் இரண்டு எலெக்ஷனுக்குப் (தேர்தல்) பிறகு அரிவாள் நாயகம்தான்! அதில் சந்தேகமே யில்லை. அப்படிப்பட்ட நிலைமை வருவ தற்கு  முன்னால் நாம் பிரிந்து நம்மைச் சரிப்படுத்தி ஒழுங்குமுறை கைக்கொள்ள வேண்டும்.
சாதி, மதம், இவையெல்லாம் ஒழிந் தால்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். சாதிக்கு முதல் முட்டு கடவுள். இரண்டாவது மதம். இந்த இரண்டையும் அசைத்தால் எதற்கும் தீர்ந்தது மூன்றாவது சாஸ்திரம்; நாலாவது அரசாங்கம். இந்த நான்கையும் பிடுங்கி எறிந்தால்  அதுதானே சாய்ந்து விடும்! பொத்தென்று விழுந்துவிடும்; அது சாய்ந்தால் நாம் உருப்படியாக ஆகிவிடு வோம்.
14-11-1958 அன்று மணச்சல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 27-11-1958)
-விடுதலை,16.11.14

சிந்தனைப் பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ் டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.
மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.
பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.
அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.
- தந்தை பெரியார்-
-விடுதலை,3.10.14

எதிர்க்காமல்...


மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது.  - (விடுதலை, 5.11.1967)

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஜாதி ஒழிய வேண்டுமானால்...



தந்தை பெரியார்
ஜாதி ஒழிய வேண்டுமானால் கடவுள், மதம் ஒழிய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அது போலவே அவசியமான மற்றொரு காரியமான ஏழை, பணக்காரத் தன்மை ஒழிய வேண்டுமானால், தனியுடைமைத் தத்துவம் ஒழிந்தேயாக வேண்டும்.
ஜாதி ஒழிப்பு என்னும் காரியம் இன்றைய நிலையில் சட்டத்தினால் ஒழிக்க முடியாதபடி, அரசியல் சட்டப் பாதுகாப்பு இருப்பதுபோல், ஏழை, பணக்காரத் தன்மையும் சட்டத்தினால் ஒழிக்க முடியாதபடி இன்றைய அரசியல் சட்டம் தடையாய் இருக்கிறது. இவற் றிற்குக் காரணம் நமது அரசியல் சட் டத்தை உருவாக்கினவர்கள் பார்ப் பனரும், செல்வவான்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆனதால், அவர்கள் தங்களுக்கு நல்ல பாதுகாப்பை அரசியல் சட்டத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதே!
என்ற போதிலும் மக்களுக்குள், சென்ற 30, 40 ஆண்டுகளாகப் புகுத்தப் பட்ட இன உணர்ச்சி காரணமாக சட்ட மில்லாமலேயே ஜாதி ஒழிப்புக் காரியம் ஓரளவு மக்கள் உணர்ச்சியில் ஊறி வருகிறது. ஜாதியால் தாழ்த்தப்பட்ட வர்கள், கீழ் ஜாதியார் என்பவர்கள் ஆகிய எல்லோருடைய உணர்ச்சியிலும் தங்களுக்கு மேல் ஒரு ஜாதி இருக்கக் கூடாது என்ற எண்ணம் நல்ல வண்ணம் வளர்ந்து- வலுப்பெற்று இருக்கிறது. என்றாலும், தங்களுக்குக் கீழ் உள்ள ஜாதியார் என்பவர்களிடம் புழங்குவதில் ஓரளவு இசைந்தாலும், கொள்வினை கொடுப்பனை என்பது, மேல்- கீழ் மக்கள் என்பவர்களிடம் பெரும் வெறுப்பாய்த் தான் காணப்படுகிறது.
கல்வி பெற்றவர்கள் என்பதிலும் இந்தத் தடை இருந்துதான் வருகிறது. இந்தத் தடை ஒழிய வேண்டுமானால், அரசியல் சட்டம் மாற்றப்படுவது மாத்திர மல்லாமல், புரட்சிகரமான ஜாதி ஒழிப்புச் சட்டமும் கொண்டு வர வேண்டும். எப்படி யென்றால் :-
1. உத்தியோகத் துறையில் தாழ்ந்த (தாழ்த்தப்பட்ட) ஜாதியாரும், உயர்ந்த ஜாதி என்று கருதப்பட்டவர்களும் தங்களுக்குள் திருமணம் செய்து கொண் டவர்களுக்குத் தாம் முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும்.
2.    தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப் பட்ட வகுப்புப் பெண்களுக்கும் ஆண் களுக்கும் 100க்கு 100 பேருக்கு (எல்லோ ருக்கும்) கல்வி (சலுகை)யுடன் கல்லூரிச் சலுகையும் கொடுத்துப்பட்ட தாரிகளாக ஆக்கிவிட வேண்டும்.
3. அவர்களுக்கு உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.
4. ஆண்களில் மேல் ஜாதியார் என்ப வர்களிலும், கல்வித் தகுதி சிறிது குறைவாய் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மணம் செய்து கொண்டவர்களுக்கு முதல் உரிமை என்று வைத்துவிட வேண்டும்.
5.    சர்க்கார் லைசென்ஸ் கொடுக்கும் தொழில், வியாபாரம், தொழிற்சாலை முதலிய வற்றிலும் இந்த முறைகளைக் கையாள வேண்டும்.
இவற்றால் தகுதிக் குறைவோ, நிர்வாகக் குறைவோ ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவ தில்லை.
உயர் தகுதி (தேவையில்லாத தகுதி) என்பதுதான் குறைவாக இருக்கலாமே ஒழியத் தேவையான அளவு தகுதி என்பது எந்த விதத்திலும் குறைந்து விட முடியாது.
இன்று என்ஜினீயரிங், வைத்தியத்துறை முதலியவற்றிக்கு நாம் உயர்ந்த கல்வித் தகுதி, மார்க்குத் தகுதி, பாஸ் செய்த தகுதி என்பவற்றை எவ்வளவு கட்டுப்பாடு இருந்தும் அவை காரணமாக ஏற்றுக் கொள்வதே இல்லை. தெரிந்தெடுக்கும் கமிட்டியாருடைய சுதந்திரத்திற்குத் தான் பரீக்ஷிக்க விட்டிருக்கிறோம்.
அது எப்படி நடந்த போதிலும், அந்தக் காரணத்தினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எவரிலும் அந்தக் கல்வியில் தவறியோ தகுதியற்றோ, போனவர்களோ, போனவர்களாக ஆக்கப் பட்டவர்களோ, மற்றும் தொழில் பாஸ் செய்து தொழிலுக்குப் போனவர்களில், தொழிலுக்குத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்டோ, தள்ளப்பட்டோ போன வர்களோ, என்பதாக இதுவரை யாரையும் ஆக்கவில்லை, சொல்லவும் முடியவில்லை. அது மாத்திரமல்ல; தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்விக்கென்று ஏராளமான பணத்தை ஒதுக்கி வைத்துச் செலவழிக்கிறோம். இதைப் பற்றி  இது வரை யாரும், எந்த மேல் ஜாதிக்காரரும் குறை கூறவேயில்லை.
மற்றும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் மிகமிகத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று அவர்களது ஜனத்தொகை விகிதாசாரமாக 100க்கு 16 பேர்களுக்குப் பதவிகளை ஒதுக்கி, எப்படியோ பாஸ் செய்தால் போதும் என்று  திட்டம்  வைத்து இருக்கிறோம். இந்த முறையை - அந்த  விகிதத்தை (அய்க் கோர்ட் நீதிபதிப் பதவி ஒன்று போக மற்ற) எல்லாப் பதவிகளிலும் நிறைவேற்றி வரு கிறோம். அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாம் ஜாதி  காரணமாக ஒதுக்கி வைத்து இருக்கிறோம். இவை மாத்திரமா!  பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளைச்  சேர்ப்பதிலும் இந்த முறையைக் கண்டிப்பாய் நிறைவேற்றி வருகிறோம். அதாவது முதல் வகுப்பில் தேறியவனை விட்டுவிட்டு மூன்றாவதாகத் தேறியவனைச் சேர்த்துக் கொள்கிறோம்.
இவற்றால், உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள், உயர்ந்த எண்ணிக்கை மார்க்கு வாங்கினவர்கள் முதலியவர்கள் இவற்றை வாய்மூடி ஏற்றுக் கொண்டுதான் வருகிறார்கள்.
இவற்றிலிருந்தே தகுதி , திறமை, அனு பவம் என்பவை எல்லாம் பலித்தவரைப் பார்த்துக் கொள்வது என்று, ஒரு பித்த லாட்டத் தத்துவத்தில்தான் இருக்கிறதே தவிர, எந்த நியாயத்தையும், நேர்மையை யும் கொண்டல்ல என்பது யாருக்கும் நன்றாய் விளங்கும்.
ஆகவே ஜாதி அமைப்பு, ஜாதி முறை, ஜாதிப் பிரிவு, ஜாதி உணர்ச்சி ஒழிய வேண்டும் என்றால் மேற்கண்ட மாதிரியான ஒரு முறையைக் கையாண்டு தான் தீர வேண்டும். இதற்கேற்ற அரசியலை அவசிய மேற்பட்டால் பலாத்காரத்தின் மூலமாவது, மேலும் அவசியப்பட்டால் இதற்கு இணங்குகிற அன்னிய ஆட்சி யாரின் உதவி கொண்டாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசிய மாகிறது.
ஏனெனில், ஒரு நாட்டு மக்கள் சமுதாயத்தில் 100-க்குத் 97 பேர்கள் கீழ் ஜாதி மக்களாய்க் கடவுள் செயல்படி, மதக் கட்டளைப்படி, சாஸ்திர தருமங் களின்படி, சட்டத்தின்படி, நடப்புப்படி பல்லாண்டுகளாய் இருந்து வருவது என்றால், அது மாத்திரமல்லாமல் எந்த விதத் தனி யோக்கியதையும், தகுதியு மில்லாமல் 100-க்கு மூன்று பேர்களாக இருக்கும் ஒரு சிறு கூட்டத்தார், பல தந்திரங்களால் அரசியல் ஆதிக்கம் பெற்று, அதன் காரணமாக மேல் ஜாதி யாக, முதல் ஜாதியாக, மற்றவர்களைத் தொட்டால் தீட்டு, மற்றவர்கள் கண் ணால் கண்ட உணவை உண்டால் தீட்டு, மற்றவர்கள் மொழியைப் பேசினால் தீட்டு என்றும் கூடத் திட்டம் வைத்துக் கொண்டு, பெரும் பாலானவற்றை அமுலிலும் நடத்தி வரும் போது, இதற்கு ஆட்சியும் இடம் கொடுத்து வரும்போது, அதை இந்த ஆட்சியால் மாற்ற முடியா விட்டால், ஏன் அவசியப்பட்டால் அன்னிய ஆட்சியாளரைக் கொண் டாவது இதற்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடாது? என்பதுதான் எனக்குக் கவலை கொண்ட சிந்தனை யாக இருந்து வருகிறது. அதனால் தான் ஜாதி ஒழிப்பு என்று மேற்கண்ட திட் டத்தை அமுலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஏழை பணக்காரன் என்கின்ற நிலைமை ஒழிக்கப்படுவதற்கும் இதுபோன்று ஒரு திட்டம் தயாரித்துத்தான் ஆக வேண்டும். - `உண்மை, 14.9.1970
-விடுதலை,23.8.15