சனி, 23 செப்டம்பர், 2023

ஆத்மா உண்டென்பதும் மறுஉலகவாழ்வுப் பேச்சும் பார்ப்பனரின் பித்தலாட்டமே (மனித வாழ்வின் பெருமை எது?)


ஆத்மா உண்டென்பதும் மறுஉலகவாழ்வுப் பேச்சும் பார்ப்பனரின் பித்தலாட்டமே

மனிதப் பிறவி என்பதில் புகழைத் தேடுவதுதான் மற்ற ஜீவனுக் குள்ளதைவிட மேலான தன்மை என்று கூறப்படும். ஆனால் மனிதனும் புகழைத் தேடவில்லை என்றால் மற்ற ஜீவன்களின் வாழ்க்கைக்கும் இவனுக்கும் வித்தியாசமே இல்லாது போவதும் அன்றி மனித வாழ்க்கை மேலானது என்றோ உயர்வென்றோ கூறுவதற்கில்லை.

மற்றும் மனிதன் இறந்து போதல் என்பதிலும் மற்ற ஜீவன்களைப் போன்றே இவனும் இறந்து விடுகிறான் என்றேன்.

மனிதன் சாதல் என்பது மனிதனுக்குக் கருவி கரணாதிகள் - இயங்கும் சக்தி நின்று போன பின் செத்துப் போதல் என்றாகிறது; அதாவது மனிதனுடைய சகல அவயங்களும் நகரும் (இயங்கும்) சக்தியை இழந்துவிட்ட பின்பு செத்துப் போகிறான். (சத்துப் போய்விட்டது) என்றாகிவிடுகிறான்.

மரம் பட்டுப் போய்விட்டது என்கிறோம். அதாவது மரத்திற்கு இதுவரை இருந்த வளர்ச்சிக்குள்ள சத்தானது போய்விட்டது. சத்துப் போனதைத் தான் செத்துப் போய் விட்டது என்று கூறுகிறோம். இப்படி மிருக இனங்களும், பறவை இனங்கள், ஊர்வன, நீர்வாழ்வன போன்ற எல்லா வற்றுக்கும் நகரும் சக்தியும் வளரும் சக்தியும் போய்விட்ட பின் செத்து விடுகிறது என்கிறோம். மரம், செடி, கொடி, புல்பூண்டு இவைகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் சத்து அதாவது காற்றையும் நீரையும் இழுக்கும் சக்தி போனதும் செத்துப்போகிறது. அத்துடன் இவைகளின் வாழ்க்கை முடிந்தது என்று பொருள்.

அவைகளைப் போன்றே மனிதனும் செத்துப்போனபின் அதனுடன் அவன் வாழ்வு முடிந்தது. அத்தோடு சரியாகி விடுகிறது.

ஆனால் வைதீகர்கள் கூறுவதோ அப்படி இல்லை. மனிதன் செத்துப் போனவுடன், அவனுடைய உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்து சென்று மேல் லோகம் அடைகிறது. என்கிறார்கள். அத்துடன் கூட விடவில்லை. பிரிந்து சென்ற ஆத்மா, தான் செய்த பாவபுண்ணியங் களுக்குத் தக்கவாறு, நரகமோ, மோட்சமோ அடைகிறதாம். அங்கு இன்பதுன்பங்கள் அனுபவிக்கிறதாம்! அவ்வளவோடும் விடுவதில்லை. ஒரு சரீரத்தில் இருந்து பிரியும் ஆத்மா வேறு ஒரு சரீரத்தைப்பற்றிக் கொண்டுதான் நீங்குகிறதாம். அதாவது ஒட்டுப்புழுப்போல்.

எப்படியோ ஆத்மா என்பதை பற்றிப் புளுகிவிட்டு; அதைநிலை நாட்டுவதற்கென்று ஒன்றன்பின் ஒன்றாகப் பாவ புண்ணியம், மோட்சம், நரகம், மறு ஜன்மம், பிதிர்லோகவாசம், கடவுள், என்றெல்லாம் புளுகிக் கொண்டேபோகும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒரு புளுகை மறைக்க எண்ணற்ற அபாண்ட, அ°திவார மற்றதுமானப் புளுகுகள் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எப்படி புளுகவேண்டும் என்றுகூட சிந்தித்துப் புளுகாமல் மலைபோன்ற புளுகும்படி ஆகிவிட்டது. அப்படிக் கூறினால்தான் மனிதன் ஓரளவு நம்புவான் என்பதற்கே ஆகும்.

மனிதன் செத்தான் என்றவுடன் அவனுடைய சக்திக் குறைந்து போய் அசையும் தன்மையற்று மனிதனின் உள் அவயவங்களான சுவாச உறுப்புகளும், காற்றை இழுத்து வெளியிடும் இயங்கும் சக்தியை இழந்துபோனபின் மூச்சும் நின்றுவிடுகிறது மூச்சு நின்றுவிட்டபின், உடல் அழுகி நாற்றமடைகின்றது. அப்படி செத்துப்போன உடலை பூமியில் புதைத்துவிடுகிறோம். புதைத்தால் மக்கிப் போய் மண்ணோடு மண்ணாய்ப் போய் விடுகிறது. எரித்துவிட்டால் சாம்பலாகிப் போய்விடுகிறது. ஒரு ஆட்டை, ஒரு கோழியை, ஒரு மீனை அறுத்துச் சாப்பிட்டு விடுவது போல் ஒரு மரத்தை வெட்டி எறிந்து விடுவதுபோல் மனிதன் எரிக்கப்படுவதை புதைக்கப்படுவதை நாம் கண்ணால் நேரில் பார்க்கிறோம்.

ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் ஆத்மா என்று ஒன்று பிரிந்து செல்லுகிறது என்றால் இதைப் பெரும் பித்தலாட்டம் என்றுதான் கூறவேண்டும். இத்தன்மை மனிதனுக்கு மட்டும் உண்டு! மற்ற ஜீவன்களுக்கு ஈ, எறும்பு, பூச்சி, புழு அணுக் கிருமிகளுக்கு ஆத்மா என்றொன்று கிடையாது என்றும் கூறுவது கொஞ்சமேனும் மனிதப்பண்புக்கு ஏற்றதென்று கூறமுடியாது. விவகாரத்திற்கு ஆக அவற்றிற்கும் ஆத்மா உண்டு என்றால் அந்த ஆத்மாக்கள் எங்கே போய் என்ன மோட்சநரகத்தை எதற்கு ஆக அனுபவிக்கக் கூடும்?
மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு. இதன் மேன்மைக்கு ஆக அதன் சந்ததிகள் பார்ப்பனனுக்குத்தான் தர்மம் செய்ய வேண்டும்! “அதாவது ஆத்மா சுகமடைய பார்ப்பனனுக்குச் சுகமுண்டாக்க வேண்டும்” என்றால் இவை பார்ப்பனர்களால் - புரோகிதர்களால் அவர்களது நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்டதென்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

கண்ணுக்குத் தெரியாததும், சூட்சமமாகவும் யாருக்கும் தெரியா மலும் மேலே செல்லுகிறது என்கிறார்கள்! இப்படிக் கூறுகிறவர்கள் கண்ணுக்குமட்டும் இந்த ஆத்மா எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை. கேட்டால் “வேதம் சொல்லுகிறது, சா°திர புராணம், கருடபுராணம் சொல்லுகிறது, என்பார்கள்! இவைகள் எப்போது யாரால் ஏற்படுத்தப் பட்டன? என்றால் ரிஷிகள், முனிவர்கள், கடவுள் அவதாரங்கள், கடவுள்கள் வெங்காயங்கள், கருவேப்பிலைகள் கூறியவைகள் என்பார்கள். காலம் எப்போது என்றால் பல யுகங்களாயிற்று என்பார்கள். இவர்கள் யார்? இவர்களின் யோக்கியதை என்ன? இந்த நபர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? யாரோ உளறியவைகளை வைத்துக் கொண்டு இந்த விஞ்ஞானக் காலத்திலும் நாம்கட்டி அழுவது பொருத்தமாகுமா? என்று கேட்டால், “அப்படிக்கேட்காதே நா°திகம் பேசாதே. நீ பாவி, உன்னைக் கடவுள் நரகத்தில்தான் தள்ளுவார்” என்றுதான் கூறமுடியுமே தவிர ஒன்றுக்கும் சரியான பதில் கூறமுடியாது.

இப்படியே எதையும் பார்ப்பனர்கள் கடவுளின் பெயரையும், மதம் சா°திரபுராணங்கள் பெயரையும், கண்ணுக்குத் தெரியாத சூட்சுமங்கள் நம்புத்திக்கு எட்டாத தத்துவங்கள் என்பதையும் கூறி நம்மை மிருகத்தினும் கேடானவர்களாக்கிவிட்டனர். மனிதன் என்று கூறப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட பொருளின் பெயரில்லை. மன்மத சிந்தாமணி லேகியம் என்கிறார்கள். அந்த லேகியம் பல பொருள்களைக் கூட்டமாகக் கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும் சத்துள்ள பொருள்கள் பலவற்றையும் அளவுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தப்பட்ட கூட்டுப் பொருள் தான் அந்த லேகியம். அதன்பிறகுதான் அதற்கு மன்மத சிந்தாமணி லேகியம் என்று பெயர் வந்தது. அதற்கு முன் சேர்க்கப்பட்ட பல பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயர் உண்டு.

மேஜை என்பதை எடுத்துக் கொண்டால் மேஜை என்ற சாமான் அப்படியே விளையக்கூடியது இல்லை. பல சாமான்களைச் சேர்த்துச் செய்யப்பட்டது மேஜை மரத்தால் செய்த கால்கள், மரப்பலகை, மர ஆய்ப்புகள் இவைகளைப் பிணைக்கும் இரும்பு ஆணிகள், இரும்புப் பட்டைகள் இவைகளை எல்லாம் பொருந்தும்படி ஒன்று சேர்த்து உண்டாக்கப்பட்டதற்கு மேஜை என்று பெயர். மேஜை என்ற உருவம் வருமுன்பாக அதில் உள்ள கூட்டுப் பொருள்கள் யாவற்றிற்கும் தனித்தனியே ஒவ்வொரு பெயர் இருந்தது. மேஜை பயனற்றுப் போய் விட்டபின் அதன்கூட்டுப் பொருள்களை தனித்தனியே பிரித்து விட்டால் சட்டம் பலகை ஆணிகள் இவை தனித்தனியே இருக்கும். மரப்பலகையும் சட்டமும் பிறகு அடுப்பெரிக்கத்தான் உபயோகப்படும். எரித்தவுடன் கரியாக சாம்பலாக போய்விடுகிறது.

அதைப்போன்றே மனிதன் என்பது கற்பனைப் பெயர் கொண்ட கூட்டுப் பொருள்களை கொண்ட ஒரு உருவத்தோற்றமாகும். மனிதனைத் தொட்டுக் காட்டு என்றால் நீங்கள் எதைத் தொட்டு காட்டுவீர்கள்? கையை, காலை, தலை முதலியனவற்றைத் தொட்டு காட்டினால் அதற்குத் தனித்தனிப் பெயர்தான் கூறலாம். தொடுவதை எல்லாம் மனிதன் என்று கூறமுடியாது. ஏன் எனில் காலையோ, மார்பையோ, வயிற்றையோ, தலையையோ ஏதாவது ஒன்றைத் தொட்டுக் காட்டினாலும் அதனதற்குத் தனித்தனிப் பெயரிருக் கிறது. மனிதன் என்பது தனிப்பட்ட ஒன்றின் பெயராக இருக்குமானால் அதைத் தொட்டுக் காட்டலாம்.

ஆனால் இத்தனைப் பெயர்களையும் கொண்ட உறுப்புக்களை ஒன்று சேர்ந்திருப்பது மனிதன் என்றிருக்க எப்படி மனிதனைத் தொட்டு காட்ட முடியும்?

மேலும் இந்த அவயவங்களில் ஏதாவது ஒன்று அல்லது சில இல்லை என்றாலும் அவனை மனிதன் என்றுதான் கூறுகிறோம். ஒருவனுக்குக் கை இல்லை என்றால் அவனும் மனிதன்தான். ஒருவனுக்குக் கால் இல்லை என்றாலும் அவனும் மனிதன்தான். ஆனால் மனிதன் என்ற பெயர் எப்போது மறைகிறதென்றால் ஒருவன் மூச்சு வாங்கி விடுவது நின்றுவிட்டதானால் மனிதன் என்ற பெயர் மாறி பிணம் என்ற பெயர் வருகிறது.

அதன் பிறகும் அதைச் சுடும்வரை பிணம், சுட்ட பின் சாம்பல் என்ற பெயர் வருகிறது. மீதியுள்ளவை எலும்புகள். அவைகளும் மண்ணுடன் மக்கிப்போன பின் எலும்பு மண்ணாகிவிடுகிறது.

மற்றும் மனிதனின் சுபாவம் என்ன என்று பார்த்தால் மற்ற ஜீவன்களுக்கில்லாத சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். நாய்க்கு ஆகிலும் நன்றி விசுவாசம் என்பது மிகுதியும் உண்டு. நன்றியைக்
கொஞ்சம் கூட மறக்காமல் நாய் தன் எஜமானனிடம் விசுவாசத்துடன் இருக்கும். தன் எஜமான் தன்னைவிட்டு வெளியில் சென்று விட்டு பிறகு வந்ததும் தன் நன்றியின் அறிகுறியாக எட்டித்தாவி, வாலை ஆட்டிக்கொண்டு துள்ளிக் குதித்து மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும். மனிதனோ நாயைப் போல் நன்றி இயல்பு உடையவனல்ல. நாயைத் தன் எஜமான் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும், மறு நிமிடத்தில் அதே நாய் தன் எஜமானனிடம் அன்பு காட்டுவதைப் பார்க்கலாம். சோறு போடாவிட்டாலும் வி°வாசம் காட்டும். ஆனால் மனிதன் அப்படி அல்ல. என்ன நன்மை அடைந்தாலும் ஒருதீமை நேர்ந்துவிட்டால் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக் கொள்வான். இது மனித ஜீவனின் சுபாவம் ஆகும். மனிதனுக்குச் சகலமும் சுயநலம்-வியாபாரமுறை-மனிதனுக்குத் துரோகம் என்பது இயல்பு.

இப்படி மற்ற ஜீவன்களில் பூனையை எடுத்துக்கொண்டால் அதன் சுபாவப்படி, மனிதன் எப்பொழுது ஏமாறுவான் அல்லது எப்போது இருட்டு ஆகும். அடுக்கில் அறையில் உள்ள பால் தயிர்ப் பானையை உருட்டிவிட்டு ருசி பார்க்கலாம் என்று காத்துக் கொண்டு இருக்கும். மற்றவரை ஏமாற்றும் சுபாவத்திலேயே கருத்துடன் இருக்கிறது. அது போல் மாத்திரமல்லாமல் மனிதனை மனிதன் குரோதக் கருத்திலும், துரோகக் கருத்திலும் கொல்வான்! விஷமிடுவான்! சாகத்தவம் கிடப்பான். இது மனித இயல்பு.

பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வ°துக்களைக் கண்டு பிடித்து விடுகிறது. நம்முடைய கண் பருந்தின் கண்ணை விடப்பெரியது. நம் கண் உருவத்தில் பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின் சக்தியைப் போன்று சக்தி அதிகம் கொண்டதில்லை. பருந்தின் கண்களுக்குத் தனி சக்தி இருக்கிறது. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பை தின்னுவதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்யத் தெரியாது. மனிதன் பெரிதும் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாய்க் கொண்டுள்ளான். ஆனால், இந்தக் குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை.


நூல் - மனித வாழ்வின் பெருமை எது?
(நீத்தார் நினைவுநாள் சிந்தனைகள்)
ஆசிரியர் : தந்தை பெரியார்

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்!


- தந்தை பெரியார் விளக்குகிறார்

1

ஹிந்துக் கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது இதனை கணபதி என்றும், விநாயகர் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.

நிற்க, இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந் துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக் கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப் போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவ னாலும் மறுக்க முடியாது.

ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

1. ஒருநாள் சிவனின் பெண் சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற் படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகி விட்டதாகவும், அந்த ஆண் குழந்தை யைப் பார்த்து - “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்த பரம சிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால், பரம சிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற் குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந் தும் எப்படி உள்ளே வந்தாய்?’’ என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானை யின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந் தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதா ரங்களும் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்த தால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில்  கருவுற்றிருக் கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச் சிசுவின் தலையை வெட்டி விட்டு வந்த தாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்ட தாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிர மணியனை அனுப் பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப் படுகின்றது. இது தக்கயாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

22

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷய மாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண் டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கட வுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்ட தற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).

கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான் ; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்த மற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கட வுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டி யாய்க் கற்பித்து, அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரம் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை (வல்லப கணபதி) செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும் படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப் படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின் றார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட் டிருக்கின்றது.

இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்தக் கடவுள் கொன்று கொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு அசுரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.  இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளை யார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல், தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்து அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம் மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங் களுக்கு கண்ட வைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக்கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றி யும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக்குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித் துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளு கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள், “அப்படி இருக்கவேண்டும்”, “இப்படி இருக்க வேண்டும்” என்றும், “மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து”, "கடவுளுக்கு ஆபத்து" என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும், கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் “வக்காலத்து” பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன் வந்தார்களா? என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும், ஆராய்ச்சிக்கும், குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களை யெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்து விட்டு, இதை எடுத்துச் சொல் பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று சொல்லுவோம்.

(சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 “குடிஅரசு’ இதழில் எழுதியது)


ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு போதும் பலியாது - தந்தை பெரியார்


 உடலுழைப்பில்லாத சமூகம் மேல் தரமா? உழைக்கும் திராவிட பாட்டாளிக்கு உயர்வில்லையா?

31

இந்திய உபகண்டத்தில், சென்னை மாகாணம் மற்ற மாகாணங்களிலிருந்தும் எல்லா வகையிலும் வேறுபட்டது என்பதைப் பல வகையாலும் நாம் எடுத்துக்காட்டி வந் திருக்கிறோம். உண்ணும் உணவு, உடுக்கும் உடையிலும், சென்னை மாகாணத்தவர் வேறு! மற்ற மாகாணத்தவர் வேறு! வாழும் நிலம், ஆளும் தட்ப வெப்பங்கூட இயற்கையிலேயே வெவ்வேறானவை! வாழுகின்ற மக்களின் மனப்போக்கும், பழக்க, வழக்கங்களும் மாறானவை - எதிரானவை!

நாட்டுப் பிரிவினைக்கு நாம் கூறும் பல உண்மைகளில் இவையும் சில. பிரிவினையால் பிழைப்புக்கெடும் என்றெண் ணுகிற நிலையிலுள்ளவர்கள் கூட தென்னாடு - வடநாடு என்கிற தலைப்பில், தலையைக் கொடுத்துவிட்டோமே என்ன செய்வது என்கிற மாமியார் - மருமகள் உறவில், இந்த வேறுபாடுகளின் உண்மையை ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் வெளியிட்டுக் கொண்டு வருவதையும் நாம் கேட்கிறோம்.

வடநாடு என்று சொல்லப்படும் பெரும்பகுதியான ஆரியவர்த்தம் இன்று கொலைக்களமாக, கொள்ளையர் ஆளுகைக்குட்பட்டு, மனித நாகரிகத்தைப் பலிபீடத்திலேற்றி, மதிகெட்ட செயல் செய்கிறதென்றால் அதற்குக் காரணம் மத உணர்ச்சியின் தடிப்பு - வெறி. இதற்குரிய பரிகாரம் வேறு.

தென்னாடு என்று பேசப்படும் திராவிடம், பார்ப்பனிய மதமான இந்துமத வலையில் சிக்கி, பார்ப்பனியர் ஆளுகைக்குட்பட்டு, மனிதப் பண்பை இழந்து, மானமிழந்து வாழும் நிலையில், இன்று சிறு அளவுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து அதன் காரணமாகப் பார்ப்பனர் - திராவிடர் என்கிற உணர்ச்சி வலுத்து வருகிறதென்றால் இதற்குக் காரணம் திராவிடர்களிடையே புதிதாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி. இதற்குரிய பரிகாரம் வேறு.

வட நாட்டில் இந்து - முஸ்லிம் வேற்றுமை. இது மத அடிப்படையில் வளர்ந்தது. எப்பொழுது - முஸ்லிம் மதம் வந்ததோ அப்பொழுதிலிருந்தே அதாவது, தனக்கு முற்றிலும் விரோதமானது - ஏமாந்தால் தன்னழிவுக்கு வழிகோலுவது என்கிற நிலை இந்து மதத்திற்கு ஏற்பட்டதிலிருந்தே பரம்பரை விரோதமாக வளர்ந்தது.

 திராவிட நாட்டில் திராவிடர் - ஆரியர் வேற்றுமை. இது இன அடிப்படையில் ஒவ்வொரு காலத்தில் தோன்றி, பிறந்த வீட்டில் செத்த குழந்தை போல, தோன்றிய காலத்திலேயே மறைத்து இருள் சூழ்ந்தது. உலகப் பொது அறிவின் உத்வேக மான ஆற்றலால் - விஞ்ஞான அறிவின் துணையினால் இன்று அந்த கார் இருள் தணிய அதனால் ஆரியப் பார்ப்பனரின் நயவஞ்சகமும், தந்திரமுமான ஏற்பாடுகள் துலங்க, அவ்வேற்பாட்டினால் உழைப்பு அவமதிக்கப்பட்டு உன்மத்தர்கள் உயர்வடையும் உண்மை நிலை புரியவே, உண்மைக் காட்சியால் - உரிமை வேட்கையால் சேர்ந்தே யறியாத திராவிடர்கள் சிறு அளவுக்காவது சேர்ந்து நிற்க, இச் சேர்க்கை தனது ஏகபோக ஆட்சிக்கு ஆட்டங் கொடுக்குமே என்ற தன்னல விருப்பினால், பார்ப்பனர் மானமழிந்த செயல் பல செய்து எதிர்க்க, அவ்வெதிர்ப்பினால் வலுத்தது இவ்வேற்றுமை.

இருவகை வேற்றுமையும் அழியத்தான் வேண்டும். அழிக்கத்தான் வேண்டும். அதற்குப் பரிகாரம் என்ன? டைஃபாய்டு காய்ச்சலையும், மலேரியா காய்ச்சலையும் போக்கடிக்க வேண்டுமானால், அதற்குப் பரிகாரம் என்ன? காய்ச்சல் என்ற ஒற்றுமையால் பரிகாரமும், ஒற்றுமையாய் இருக்குமா? பரிகாரம் ஒன்றானால், விபரீத மல்லவா விளையும்? வடநாட்டுப் பிரச்சி னையைத் தீர்த்துவிடும் என்று கருதக்கூடிய மருந்து, திராவிட நாட்டுப் பிரச்சினையையும் போக்கிவிடும் என்று கருதினால், அது மருந்தின் கோளாறு அல்ல! மருத்துவனின் முட்டாள்தனம்! மருந்து தர முன்வருவோர் இதை உணரவேண்டும்! 

திராவிடத்தின் செழிப்புக்கு, பெருமைக்குக் காரணமாய் இருப்பவர்கள் திராவிட நாட் டிலுள்ள பாட்டாளிகள், தொழிலாளிகள். இப் பேர்ப்பட்டவர்கள் நேரடியாகப் பொருளைக் குவித்துப் பெருக்காமல் இருக்கலாம்! பெருக் காததினால் நேரடியாகச் சர்க்காருக்கு வரியும் கொடுக்காமல் இருக்கலாம்! ஆனால், உண்மை யில் வரி கொடுப்பவர்கள் இவர்கள்தான். இவர்களின் உழைப்புத்தான், பொருளாக, வெள்ளி ரூபாயாக, தங்க நகை களாக, மாட மாளிகைகளாக, மகிழ்ச்சிக்குரிய வாகனாதிகளாக, ஏன் உயிர் வாழ்க்கைக்கே அடிப்படையான உணவுப் பொருள்களாகப் பல்வேறு உருவங்களாகின்றன. இதை அப்பாவியான  அவர்கள் உணர வேண்டும்.

 உழைப்பிலேயே பிறந்து உழைப்பிலேயே மடியும் பாட்டாளித்தோழர்கள் நிலை உயர்வடைய வேண்டு மென்பதை, மறுத்தால் தம் வாழ்வும் மக்கி மடிய வேண்டும் என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஒவ்வொருவரும் இன்று தொழிலாளிகளின் பெயரைச் சொல்லித்தானே தங்களுடைய சொந்தக் காரியாதிகளை நடத்திக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது! இந்தப் பாட்டாளித் தோழர்கள் விசித்திரமான பார்ப்பனிய அமைப்பினால் சூத்திர ஜாதியாய், தீண்டப்படாத ஜாதியாய் மழையிலும், வெயிலிலும், உழைத்துழைத்து உடல் கருகி, மேனி வாடி, உழைத்த பயனடையாமலிருப்பதுடன் இல்லாமல், உழைத் தோம் என்கிற பெருமையைக் கூட எண்ண முடியாமல் உழைப்பதும், அதன் பயனைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் தயவால் நாம் வாழுகின்றோம் என்கிற கேவல மான எண்ணத்துடன் வாழும்படியான நிலையுமல்லவா இந்த நாட்டில் காண்கிறோம்.

100க்கு 97 பேரான திராவிடப் பாட்டாளி மக்கள் இந்த அவல வாழ்வு ஏன் வாழ வேண்டும்? இவர்களில் 100க்கு 90 பேர் தங்களுடைய பெயரை எழுதுவதற்குக் கூட வகையற்றவர்களாக ஏன் இருக்க வேண்டும்? ஏமாற்றி வாழும் சிறு கும்பல் பார்ப்பான், சைவன் என்கிற பெயர் தாங்கி முதல் ஜாதியாய், உயர்ந்த ஜாதியாய், பெருமையுடன் வாழ மற்ற 90 பேர்கள் 4 ஆம் ஜாதியாய், 5 ஆம் ஜாதியாய் ‘தேவடியாள் பிள்ளைகளாக’ ஏன் திரிய வேண்டும்? இந்த இழி நிலைக்கு இவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு, இவர்கள் மடமையில் அழுந்தியிருப்பதற்கு, இவர்கள் தலை நிமிர முடியாத அடிமைகளாகவே இருப்பதற்குக் காரணம் உண்மைப் பார்ப்பன மதமான இல்லாத இந்து மதமும், இந்து மத அடிப்படையில் புகட்டப்படும் கல்வி, கலைகளும். பார்ப்பனர்களின் படுமோசத்தால் பிரிந்து வாழும் பல ஜாதி ஏற்பாடுகளுமல்லவா? 

“நாம் இப்பொழுது சுயராஜ்யம் பெற்றுவிட்டோம் என்று சொல்லிக் கொள்கிறோம். சுயராஜ்யம் பெற்ற பிறகும் உழைப்பவன் இழிந்த ஜாதியாய் இருக்கலாமா? அவனை இழி ஜாதியாய் வைத்திருக்கும் மதம் எதுவோ அந்த மதத்தை வாழவிடலாமா? உழைப்பவன் அறிவுபெற அதற்காக ஆரம்பப் பாடசாலைகள் சுயராஜ்யத்தில் பெருக வேண்டாமா? ஆரம்பப் பாடசாலைகள் பெருகுவதற்கு வசதியில்லாத போது, மேல் படிப்புக் கல்லூரிகள் ஏன் சுயராஜ்யத்தில் இருக்க வேண்டும்? இதை சுயராஜ்ய அரசாங்கம் கருத வேண்டாமா?’’

“பல பிரிவுகள் உள்ள இந்த நாட்டில், பிரிவை ஒழித்து ஒற்றுமைக்கான வழி எதுவோ அதைச் செய்யாமல், அல்லது யாவரும் சமவுரிமையடைவதற்கு முறை எதுவோ அதைக் கையாளாமல், 100க்கு 3 பேர்களாக உள்ள மேல் ஜாதிக் காரர்கள் அனுபவித்தது போக, சுரண்டியது போக, மீதியுள்ள எச்சிலுக்குத்தான் மற்ற ஜாதியார்கள் சண்டை போட்டுக் கொண்டு அனுபவிக்க வேண்டுமென்கிற அமைப்பு சுயராஜ்யத்தில் இருக்கலாமா?’’ உத்தியோகங்கள் மதிக்கப் பட்டு அதற்குப் பெருமை கொடுக்கப்படுகிற வரையிலும், பல ஜாதிகள் அமைப்பு இருந்து அவைகளுக்குத் தனித் தனியே உயர்வும், தாழ்வும் கொடுக்கப்படுகிற வரையிலும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையை மாற்றாமல், அந்தந்த ஜாதிக்கு அல்லது அந்தந்த வகுப்புக்கு ஏற்ற முறையில் அல்லவா உத்தியோகங்கள் வழங்க வேண்டும்? எப்படியும் 100க்கு 3 வீதத்திற்கு மேல் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுக்கலாமா? இழிவான வேலை என்று கருதப்படுகிற உழவு வேலை, தெருக்கூட்டும் வேலை, கக்கூஸ் எடுக்கும் வேலை, சிரைக்கும் வேலை, வெளுக்கும் வேலை, பியூன் வேலை முதலிய உடலுழைப்பு வேலைகளில், எல்லா ஜாதியாரும் அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற கணக்குப்படி வேலை செய்து ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதல்லவா?

இந்த உடலுழைப்பு வேலையைச் செய்யாத சமூகத்தினருக்கு “மேல்தரம்” என்று மதிக்கப்படுகின்ற உத்தி யோகங்களைக் கொடுக்காமலிருப்பதல்லவா, உண்மையிலேயே உயர்வு, இழிவு என்கிற வித்தியாசங்களைப் போக்கும் மார்க்கங்களாகும்.

ஜனநாயகம் தழைக்க, கட்டாய ஆரம்பக் கல்வியை அளிப்பதற்கான நடவடிக்கைகளை உடனே அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது .

கல்வி நிலையங்களில் வகுப்பு விகிதாச்சாரம் அனுஷ் டிக்காமல் இருப்பது, எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் வேண் டும் என்ற நியாயமான கொள்கைக்கு விரோதமானதும், அக்கொள்கையை அழிப்ப தானதுமே ஆகும். இது . 

இன்றையத் திராவிடர்களில் 100க்கு 10 பேராவது படித்தவர்களாய் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

திராவிடர்களில் சிலர் இன்று உயர்தர உத்தியோகங்களிலும் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

இன்று ஓமந்தூரார் மீண்டும் காங்கிரஇ கட்சித் தலைவராய் வந்திருக்கிறாரென்றால், இன்றையச் சென்னை மாகாண மந்திரி சபையில் பெரும்பாலோர் திராவிடர்களாய் இருக்கிறார்கள் என்றால், அதற்கு உண்மையான காரணம் என்ன?

தோழர் முத்தையா முதலி யாரவர்களின் வகுப்பு வாரி உத்தி யோகச் சட்டம்தான் இவைகளுக்குக் காரணம். இதை இல்லையென்று நாணயமான எந்த காங்கிரஸ் மந்திரிதான் மறுக்க முடியுமென்று கேட்கிறோம்.

கேள்வி கேட்பாரற்ற கேவலமான நிலையில் வாழ்ந்த திராவிடர்கள், முக்கியமாக உத்தியோகத் துறையில் ஓரளவுக்காவது இடம் பெற்றிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் யாராயிருந்தாலும் நீதிக்கட்சியை நெஞ்சில் நினைக்காத நன்றிகெட்ட பிராணிகளாக இருக்க முடியாது என்பது உறுதி.

வகுப்புவாரி உத்தியோக நியமனம், வகுப்பு வாரி படிப்பு முறை இன்று சிறு அளவுக்காவது பயன் தந்திருக்கிறதென்றால் இனி ஆட்சியாளர்கள் என்ன செய்யவேண்டும்? வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையில் இப்போது என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ அவற்றை நீக்கி, உண்மையிலேயே எல்லா ஜாதிகளுக்கும் அந்தந்த ஜாதிகளின் எண் ணிக்கைக்கு ஏற்றபடி பிரதிநிதித்துவம் அமைய அல்லவா ஏற்பாடு செய்யவேண்டும்? அப்படித் தானே நாட்டின் பொது நலனிலும் நியாயத்திலும் அக்கறையுடைய எவரும் எதிர்பார்க்க முடியும்.

ஆனால், ஓமந்தூரார் மந்திரிசபை ஏற்பட்ட பிறகு, வகுப்புவாரி விநியோக முறையில் பார்ப்பனர்களுக்கு கேடு கொஞ்சமும் இல்லாமல், அவர்கள் நிலைமையைப் பாதுகாத்துத்தர முன் வந்த போக்கைத்தான் நாம் கண்டோம்!

ஆதி திராவிடர்களுக்கு 100க்கு 14. முஸ்லிம்களுக்கு 100க்கு 7. கிறிஸ்தவர்களுக்கு 100க்கு 7. பார்ப்பனர்களுக்கு 100க்கு 14. பார்ப்பனரல்லாத, கிறிஸ்துவரல்லாத, முஸ்லிமல்லாத, ஆதித்திராவிடரல்லாத 100க்கு 85 பேராயிருக்கும் அல்லாத முண்டங்களுக்கு 100க்கு 56. இந்த விகிதாச் சாரம்தான் நியாயம் என்று ஓமந்தூரார் மந்திரிசபை தீர்ப் பளித்தது!

இந்தத் தீர்ப்பின் அநியாயத்தை, அக்கிரமத்தை நாம் அப்போதே வன்மையாய்க் கண்டித்தோம். ஆனால், பார்ப்பனர்களோ இதைக் கண்டு வயிறெரிந்தார்கள் என்பதை நாம் மறக்கவில்லை.

காந்தியாரைக் கொன்று பூரணப் புராண ராஜ்யம் ஏற்பட்டு விட்டது என்று கும்மாளம் கொட்டினோமே! இன்னும் இந்த “சனியன்” தீரவில்லையே! நம் ஏகபோகமான இஷ்ட சித்தியடைவதற்கு இப்போதும் தடைதானா! என்று பார்ப்பனர்கள் அங்கலாய்க்கலானார்கள். இந்த அங்கலாய்ப்பின் எதிரொலிதான் சென்ற மாதம் 21 ஆம் தேதி தோழர் ராகவய்யா அவர்கள் வழியாகச் சட்டசபையில் எதிரொலித்தது.

“பிராமணர், பிராமணரல்லாதார் வேற் றுமையை சர்க்கார் அதிகார பூர்வமாக ஆதரிக் கின்றனரா?” இது கேள்வி.

பிறப்பு முதல் இறப்பு வரை இவ்வேற்றுமை இருக்கும் வரை, அவற்றை சர்க்கார் எப்படி அங்கீகரிக்காமலிருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இது பதில். 

இந்தப் பதிலை தந்தவர் மதி மந்திரி தோழர் அவினாசிலிங்கம் அவர்கள். இது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்க முடியாதென் பதையும், மந்திரிசபையின் பொதுக்கருத் தைத்தான் அவர் தெரிவித்திருக்க வேண்டும் என்பதையும்தான் எவரும் எண்ண வேண்டும். 

இந்த நிலைமையில், நாம் நம்முடைய கோரிக்கையை மாநாட்டில் வற்புறுத்தியதைக் கண்ட இந்திய யூனியன், 15 நாட்களுக்குப் பிறகு அதாவது இந்த மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய திட்டம் என்ன என்பதை விளக்கி மாகாண மந்திரி சபைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. 

“இனிமேல் உத்தியோக நியமனங்களில், இந்துக்களிடையே வகுப்புவாரி நியமனம் கூடாது, இப்படிச் செய்வது புதிய வித்தியாசங்களைச் சிருஷ்டிப்பதாகும். இது இப்போதைய சர்க்காரின் கொள்கைக்கு உகந்ததாக இல்லை. இவ்வேற்றுமைகளை மாகாண சர்க்கார்கள் அங்கீகரித்திருந் தாலும், இல்லாவிட்டாலும் இதுதான் இந்திய சர்க்காரின் கொள்கை” என்று பார்ப்பனிய - ராமராஜ்ய சர்க்கார் அறி வித்து விட்டது.

இந்த அறிவிப்பைக் கேட்டுப் பார்ப்பனர் மனம் குளிர்ந்திருக்கும்! காந்தியாரைக் கொன்ற போது அடைந்த திருப்தியைக் காட்டிலும் பெருந்திருப்திப்பட்டிருப்பார்கள்! தேசியப் போர்வையைப் போர்த்தி நிற்கும் பார்ப்பனர்களின் தினசரிகளும், தூதுவேலை செய்தாவது பிழைக்கவேண்டும் என்று எண்ணும் பார்ப்பனப் பாதந்தாங்கிகளான நம் விபீஷணர்களின் தினசரிகளும் இதை வரவேற்றுப் பூரிப் படையலாம்! சோஸியலிஇட் என்ற புதிய பட்டுப் போர் வையில் மறைந்து நிற்கும் சுகவாசிகளான பார்ப்பனர்கள் இதைக் கேட்டுத் துந்துபி முழங்கலாம்! ஆனால் திராவிடர்களின் நிலை என்ன? 

 நம்மைப் பொறுத்தவரையில் நாம் இந்த அநீதமான போக்கை எதிர்பாராதவர்கள் அல்ல! “ஆகஇட் 15 திராவிடர்களின் துக்க நாள்” என்பதை, அப்பொழுதே திராவிடர் கழகம் திராவிடர்களுக்குக் கூறியது! இந்தச் சுயராஜ்யம் பார்ப்பனர்களின் ராஜ்யந்தான் என்பதை இன்னும் ஒவ்வொரு செயல்களிலும் வற்புறுத்தப்படுவதைப் பார்க்கலாம்! திராவிடன், திராவிட உணர்ச்சி பெற்று இந்து மதச் சாக்கடையிலிருந்து எப்பொழுது வெளிவருகிறானோ, அது வரையிலும் அவனுக்கு விமோசனமில்லை!  திராவிட இன உணர்ச்சியற்று திராவிடன் இந்து மதச் சேற்றை எவ் வளவு காலம் பூசிக் கொண்டிருக்கின்றானோ அது வரை யிலும் அதன் பயனை அனுபவிக்கத்தானே வேண்டும்! மத்திய சர்க்காரின் கையில் குடுமியைக் கொடுத்து விட்டு, மானங்கெட்டு வாழும் நம் மந்திரிசபை, இந்தக் காரியத்திலும் ஒத்துப் பாடலாம்! அல்லது மவுனம் சாதிக்கலாம்! எப்படியானாலும் திராவிடன் உண்மை நிலையை உணர வேண்டும்! வெளிப்படையாகவே துப்பாக்கியேந்த வேண்டுமா? என்று பார்ப்பனர்கள் ஒரு புறம் கேட்கின்றனர். பார்ப்பனர்களுக்குத்தான் உத்தியோகமும், உயர்வாழ்வும் என்று முழக்குகிறது மற்றொரு புறம். மத்திய சர்க்கார். “யானைவரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல ஆச்சாரியார் வைஸ்ராயாக வருவதற்கு முன்னாலேயே, அவருடைய ஆட்சி இன்னும் எப்படி எப்படியிருக்கும்? ஆட்சியில் எந்தெந்த மாதிரியெல்லாம் நடக்கலாம்? என்று காட்டுகின்ற அடையாளங்கள் தாம் இந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக ஆரியம் போருக்கழைத்து விட்டது என்ற அடையாளம்தான் இது.  மானங்கெட்ட திராவிட சமுதாயம் ஒன்று வாழவேண்டும்! இல்லாவிட்டால் மண்ணோடு மண்ணாய் மக்கி மடிய வேண்டும்!

“மத்திய சர்க்காரின் திட்டத்தை மாகாண சர்க்காரும் பின்பற்றட்டும்! எந்த உத்தியோகத்திலும், எந்த படிப்பிலும் பார்ப்பானே இடம் பெறட்டும்! இழி ஜாதி மக்களாகவே இந்நாட்டுப் பெருங்குடி மக்கள் விளங்கட்டும்! எதற்கும் பார்ப்பானை எதிர்பார்த்தே, அவன் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தே, அடிமையிலும் அடிமையாக, அவஸ்தையறியாத எருமைகளாக வாழ்ந்தொழியட்டும்!” இப்படிக் கனவுகண்டு திருப்திப்படுகிறார்கள் பார்ப்பனர்கள். 

முடிவு என்ன?

திருப்திப்படுகின்ற பார்ப்பனர்களே! சிந்தித்துப் பாருங்கள். இன உணர்ச்சி பெற்ற ஒரு திராவிடன் இந்த நாட்டில் இருக்கும் வரையிலும் உங்கள் கனவு, உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு நாளும் பலியாது. ஆச்சாரியார் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தாலும், அகம்பாவ நேரு பார்ப்பனரின் ஆலோசனையால் விளைந்ததென்றாலும், பார்ப்பான் பார்ப்பானாகவே வாழும் நிலை இருக்கும் வரையிலும் இந்தத் திட்டமோ இதைப் போன்ற வேறு திட்டங்களோ ஆக்குவது, அவற்றை அமலுக்குக் கொண்டு வருவது எல்லாம் கருதுகிற பயனைக் கைகூடச் செய்யாது. வகுப்புவாரி விபரீத வெடி உண்மையிலேயே விபரீத வெடிதான். ஆம்! அது ஆரியத்தின் அழிவுக்கு விபரீதமான வெடியாகத்தான் முடியும். பார்ப்பனியத்தின் ஆசை, பார்ப் பனியத்தின் முடிவு அதுதான் என்றால் நடக்கட்டும்! நமக்குக் கவலையில்லை.

'குடிஅரசு' -  தலையங்கம் - 29.05.1948


வியாழன், 24 ஆகஸ்ட், 2023

ஹிந்தி நுழைகிறது - தந்தை பெரியார்


3

செகண்டரிக் கல்விமுறையில் திருத்தம் என்ற பெயரில் 49, 50ஆம் ஆண்டுக்காக என்று சென்னை சர்க்கார் சென்றமாதம் 30ஆம் நாள் வெளியிட்டிருக்கும் திட்டத்தின் வழியாக மீண்டும் சென்னை மாகாணத்தில் இந்தியை நுழைக்கின்றார்கள்.

சென்னை சர்க்கார் செய்திருக்கும் கல்வி மாறுதல்களில் குறிப்பிடக் கூடியவை.

(1) முதல் பாரத்திலிருந்து 3ஆம் பாரம் வரை கைத்தொழிலை அடிப்படையாக வைத்துப் பாடத்திட்டம் வகுத்திருப்பது.

(2) ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்ட லங்களில் இந்துஸ்தானி, சமஸ்கிருதம், அரபு, பாரசீக மொழி அல்லது உருது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று 2ஆவது மொழியாக கட்டாயமாகப் படிக்க வேண்டிய தாகும். தமிழ் மண்டலத்தில் மட்டும் மாணவர் விரும் பினால் படிக்கக் கூடிய விருப்பப்பாடமாக இருக்கும்.

(3) ஆங்கிலம் 2 ஆம் பாரத்திலிருந்து 6ஆம் பாரம் வரை கற்பிக்கப்படும். இது 3 ஆவது மொழியாக இருக்கும்.

குறிப்பிடத்தகுந்த இந்த மூன்று மாறுதல்களைப் பற்றியும் நம் கருத்து என்ன? என்பதை விளக்க வேண்டு மென்றாலும், இப்போது 2 ஆவது மாறுதலைப்பற்றி மட்டும் அதாவது தமிழ் நாட்டில் விரும்பினால் இந்தி படிக்கலாம், விரும்பாவிட்டால் கட்டாயம் இல்லை; ஆனால் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளில் கட்டாய மாகப் படிக்க வேண்டும். என்கிற இரட்டை முறை (சின்ன வருணாசிரம முறை)யைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறோம்.

ஆச்சாரியாரின் மந்திரிசபை, வடநாட்டில் யாருக்கோ ஒருவருக்கு வாக்குக் கொடுத்தேன் என்ற சாக்கைக் கூறிச் சென்னை மாகாணத்தில் இந்தியைக் கட்டாய இந்தியாகத் திணித்து ஆயிரக்கணக்கான தாய்மார்களையும், கட்டிளங் காளைகளையும் வெஞ்சிறை (காங்கிரஸ்காரர் புகுந்த சொகுசான சிறையல்ல) புகச் செய்தும், ஈவு இரக்கம் என்பதைச் சுட்டுப் பொசுக்கி விட்ட ஆட்சியாளர்களால், திராவிடத்தின் தனிப் பெருந்தந்தை வெப்பமிகுந்த பெல்லாரிச் சிறையில் தள்ளப்பட்டு, உடல் வாடவும் தாளமுத்து-நடராஜர்களின் பிணங்களைக் கண்டும் வெறி தணியாமல் அற்பாயுளில் ஓடிவிட, அதன்பின் வந்த ஆலோசகர் சர்க்கார் அந்தக் கட்டாய இந்தியை ரத்துச் செய்ததை நாங்கள் மறக்கவில்லை என்பதை இப் போதையச் சென்னைச் சர்க்கார் - ஓமந்தூரார் மந்திரிசபை இந்த உத்தரவால் காட்டிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பிருப்பதை மறக்காத இந்த மந்திரிசபையார், எதிர்கால விஞ்ஞான வாழ்வுக்குக் கொஞ்சமும் பயன் படக்கூடிய நிலையில் இல்லாத, மனிதப் பண்பை விளக் கும் இலக்கியப் பெருமையையுடையது என்றுகூட சொல் லும்படியான நிலையில் இல்லாத, மிகுந்த பிற்போக்குடைய இந்தியை மீண்டும் சென்னை மாகாணத்தில் திணிக்க முன்வந்து விட்டார்கள்.

தமிழ், தெலுங்கு போன்ற தொன்மையும், பண்பாடும் நிறைந்த மொழி மண்டலங்களில், அவ்விரண்டும் அற்ற இந்தியைப் புகுத்த நினைப்பது தவறு! புகுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சி எவ்வளவு பெரியதாயிருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து அந்த முயற்சி நடந்தாலும் திராவிட மண்டலத்தில் அது நிறைவேறாது! கருதுகிற பலன் கைகூடாது என்ற அறிஞரின் வாக்கியத்தை ஆள வந்தார்களுக்கு நாம் நினைப்பூட்டுகிறோம். இக்கருத்தைச் சொல்லுகிறவர் பெரியார் இராமசாமி அல்ல! சர்.கே.வி ரெட்டி நாயுடும் அல்ல! பசுமலைப் பாரதியாரும் அல்ல! ஒரு சென்னை மாகாணத்தவரே அல்ல! வடநாட்டுக்காரர், ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர், அமர்நாத்ஷா என்பதையும் அறிய வேண்டுகிறோம்.

மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்ய முடியாத இந்த இந்தியை, இந்தியாவின் பெரும் பகுதியில் பேசினால் புரிந்து கொள்ள முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டு வியாபாரத்துக்கு வசதியாயிருக்க முடியும் என்ற காரணத்தையும், வடநாட்டுத் தலைவர்களோடு அரசியல் குறித்து அளவளாவ அமைப்புடையது என்ற காரணத்தையும், வேளைக்கு ஒன்றாகக் கூறி வந்த காங்கிரஸ்காரர்களின் உண்மையான நோக்கம், திராவிட நாகரிகம், கலாச்சாரம் ஆகியவைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தை ஏற்று மானமிழந்து வாழ்வதுடன், வடநாட்டாருக்கு என்றைக் கும் மீளா அடிமைகளாகவே விளங்க வேண்டும் என்பது தான் என்கிற உண்மையைப் பலமுறை நாம் விளக்கி வந்திருக்கின்றோம். இதை நாம் முன்பு கூறியபோது ஒப்புக் கொள்ளாத காங்கிரஸ் மந்திரிகள், இப்பொழுது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அரசாங்க உத்தியோகங்களுக்கு இந்திப்படிப்பும் ஒரு தகுதி என்கிற அமைச்சர்களின் உண்மையான நோக்கம் என்ன?

உன் நாட்டில் உனக்கு உத்தியோகம் வேண்டுமானால் இந்தியைப் படி! என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மாகாணத்தின் மற்ற மண்டலங்களில் இந்தியை, 2 ஆவது மொழியை கட்டாயப்படுத்தி விட்டு, தமிழ் மண்டலத்தில் மட்டும் விரும்பினால் படியுங்கள்! விரும்பாவிட்டால் உங்கள் இஷ்டம்! என்கிற இந்தத் திட்டத்தைக் கண்டு திராவிடர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று மந்திரி சபை எதிர்பார்க்க மாட்டாது என்று நம்புகிறோம். ஏன் என்றால் இந்தி இந்த நாட்டில் பரவக்கூடாது என்று கருதுபவர்களின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை இந்த மந்திரிசபை அறிந்தே இருக்க வேண்டும். இந்தி என்பது வேற்று மொழி - வடநாட்டு மொழி என்கிற துவேஷத் திற்காக இந்நாட்டில் எதிர்ப்பு உண்டாகவில்லை. இந்தியைப் பரப்புவதால் இறந்துபட்ட சமஸ்கிருதத்திற்கு - இந்த நாட்டு மக்களைச் சூத்திரர்களாகவும், தீண்டப் படாதவர்களாகவும், வேசி மக்களாகவும் ஆக்கி வைத்த சமஸ்கிருதத்திற்கு - புத்துயிர் கொடுக்கப்பட்டு, பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பதே மோட்சம் என்று கருதும்படி செய்த பழைய நிலைமை மாறி, பார்ப்பானுக்குப் பிறந்த வர்கள் நாங்கள் என்று சொல்லும்படியான கேவலமான புதிய நிலைமை உண்டாகத்தான் பயன்படுவதாயிருக்க முடியும் என்பதையும், இந்த அனுமானம் காட்சிப் பிரமாணத்தினால் கண்டது என்பதையும், இதுதான் இந்தி பரவக் கூடாது என்பவர்களின் உண்மையான நோக்கம் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - மேலும் இந்தியை எதிர்ப்பவர்களின் நோக்கம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், சென்னை மாகாணம் முழுவதுமே இந்தி பரவக்கூடாது என்பதுதான் என்பதை அறிந்து கொண்டிருக்கிற மந்திரி சபை - இந்த இரட்டை ஆட்சி முறையை ஏன் கைக் கொள்ள வேண்டும்? மந்திரிகளின் பொறுப்பற்ற தன்மையை, வஞ்சகமாய்த் தன்னினத்தைக் கழுத்தறுக்கும் கொடுமையை இந் நடவடிக்கை காட்டவில்லையா? என்பதோடு இம்மந்திரி களின் யோக்கியதையைப் பற்றியும் எவருக்கும் சந்தே கத்தைக் கொடுக்காதா? என்றும் கேட்கின்றோம்.

ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மண்டலங் களில் இந்தி அல்லது இரண்டாவது மொழி, கட்டாயம் என்று மந்திரிசபை சொல்வதிலிருந்து, அந்த மண்டலங் களில் உள்ள மக்களைச் சர்க்கார் எப்படிக் கருதுகிறது? சமஸ்கிருத அடிமைகளான அவர்கள் கட்டாய இந்தியை எதிர்க்க மாட்டார்கள் என்கிற நினைப்போ, கையாலாகாத கயவர்கள் என்கிற கருத்தோதானே இந்த வருணா சிரமத்திற்குக் காரணமாய் இருக்க முடியும்! 

ஒரே இனமான திராவிடர்களை, பிரித்தாளும் சூழ்ச்சியே வெற்றிதரும் என்று கண்ட பார்ப்பனர்களின் பழைய வருணாசிரம முறையை இப்போதும் கைக் கொள்வதுதான் வெற்றியைத் தரும் என்ற வஞ்சகமல்லவா இந்த இரட்டை ஆட்சிக்குக் காரணமாகும்? என்றும் கேட்கின்றோம்.

தமிழ்நாட்டுக்கு இந்தி இஷ்ட பாடம் என்றாலும்கூட இதனுடைய பலன் எப்படியாகும்? இன்றைக்கு ஹைஸ்கூல் களில் தலைமை ஆசிரியர்களாய் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், காங்கிரஸ்காரர் களாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும் என்கிற நிலையிலிருப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வார்கள்?

படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது! படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையோ அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருக்கிறது! இந்த நிலைமையில் மாணவனுக்கு இடமில்லை என்பதையே பல்லவியாகத் தலைமையாசிரியர்கள் பாடிக் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கழிந்த பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் இடமில்லை, படிப்பவன் விரும்பினால் இந்தி படிக்கலாம் என்கிற இந்த நிலைமையைத் தலைமை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்? மாணவனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வந்திருக்கும் கார்டியன், இந்த நெருக்கடியான கட்டத்தில், எப்படியாவது பையன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட வேண்டுமென்று விரும் புவானா? அல்லது இந்தியை வெறுப்பதினால் தன் பையன் படிக்காமலே போகட்டும் என்பதை விரும்புவானா?

100க்கு 90 தற்குறிகளாக இருக்கும் திராவிட மக்களைக் கார்டியனாகப் பெற்றிருக்கும் மாணவர்கள், தலைமை ஆசிரியர் வழியாகக் கட்டாயப்படுத்தப்பட்டு, இந்தி படித்தேயாக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு தான், பெயரளவில் இந்தி இஷ்ட பாடம் என்று இன்றைய மந்திரிசபை இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே, தமிழ் மண்டலத்தில் இந்தி இஷ்ட பாடம் என்றாலும், உண்மையாய்க் கட்டாய பாடமாகவே ஆகிறது என்பதைத் தமிழ் மக்களும் தெரியாதவர்களல்லர்.

இப்போது தமிழறிஞர்கள் என்று பெயர் படைத் திருக்கிற தமிழ்ப் பெரியார்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? மற்ற திராவிட மொழிகளின் அறிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? 

இந்தியை வரவேற்றுச் சிந்து பாடமாட்டார்கள் என்பதுறுதி என்றாலும், ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு அஞ்சி வாய்மூடி மவுனிகளாக விளங்குவார்களா? அல்லது திராவிடத்தின் சிதைவுக்குத் திட்டமிட்டுச் செய்யப்படும் இந்தத் தீச் செயலை தீரத்துடன் எதிர்த்து, சென்னை மாகாணத் திலேயே இந்தி நுழையாதபடி எதிர்ப்பு முன்னணியில் நிற்கப் போகிறார்களா?

திராவிடத்தின் மொழியறிஞர்கள்தான் திராவிடத்தின் சீர்கேட்டிற்குக் காரணம் என்றிருக்கும் பழி மறைவதற்கு, அந்த அறிஞர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கடைசிச் சந்தர்ப்பம் என்றே நாம் உண்மையாய், உறுதியாய் இந்தத் திட்டத்தைக் குறித்து எண்ணுகிறோம்.

திராவிடப் பெருங்குடி மக்களே! உங்கள் நாட்டை ஆளப்போவது இந்தி மொழி! ஆளுகிறவர்கள் வட நாட்டுக் கையாட்கள்! 

ஆட்டி வைப்பவர்கள் வடநாட்டுப் பனியாக் கும்பல்! சுரண்டும் கும்பல் தயாரித்த, உங்கள் சுகவாழ்க்கைக்கு வழிகாணாத, உங்களை மனிதர் களென்றே மதியாத அரசியல் நிர்ணயத்திட்டமே உங் களுக்கிடப்படும் விலங்கு! இருந்து வரும் கொஞ்சநஞ்சம் உரிமைகளுக்கும் வேட்டு வைக்கிறது, எடுத்துவிடப் போகும் வகுப்பு வாரித்திட்டம்! இதனுடைய பொருள் என்ன? 

திராவிடன் வாழ்வதற்குத் திராவிடத்தில் உரிமையில்லை! உரிமையற்ற, ஒடுக்கப்பட்ட மக்களாக, விலங்கு களிலும் கேடாக வாழ்ந்தால் வாழவேண்டும். இன்றேல் வாழ்வா-சாவா என்ற இரண்டிலொன்றை முன் நிறுத்தி எதிர்த்து நிற்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதானே இந்தத் திட்டங்களின் பயனாய் இருக்க முடியும். நீங்கள் என்ன முடிவு கட்டுகிறீர்கள்? எதை விரும்புகிறீர்கள்?

'குடிஅரசு' -  துணை தலையங்கம் - 05.06.1948


ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பெண்களுக்கு கல்வியறிவு கிடைத்தால் சுயமரியாதை உணர்ச்சி தானாகவே வந்துவிடும் - தந்தை பெரியார்


3

தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேச வேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு. பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவேண்டுமென்ற ஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலாமென்றே  கருதுகின்றேன். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளையெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானாதா யிருக்குமென்றே கருதுகின்றேன்.

ஏனென்றால் இதற்கு முன் இங்கு இந்தப்பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது. அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின் உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப் படக் கூடியதாகாது. ஆதலால் உங்களுக்குச் சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டியவனா யிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, அய்ந்து வருஷங் களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த நிலையில் பேசினேனோ அது போல் முதல் பாடத்திலிருந்து பேச வேண்டியவனாயிருக்கிறேன். ஏன் இந்தப்படி சொல்லு கிறேன் என்றால் திரு. பெருமாள் வீட்டுக் கல்யாணத்திற்குப் பார்ப்பான் வரவழைக்கப்படாததாலேயே இவ்வூரார் அவர்மீது மிகுந்த கோபமாய் இருப்பதாகவும், நான் கோவில் குளங்களைப்பற்றி குற்றம் சொல்லுகின்றவன் என்பதாகவும், ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வந்திருக்கின்றேன் என்பதாகவும், குற்றம் சொல்லி இந்தக் கூட்டத்திற்கு யாரும் போகக்கூடாதென்று சிலர் பிரசாரம் செய்தார்களாம். இப்படிப்பட்ட முயற்சிக்காரர்கள் முன்னால் பார்ப்பனர் களின் நடத்தையையும் கோவில் குளங்களினுடைய தொல்லையையும் எடுத்துச் சொன்னால் எப்படி அது உங்களால் நடு நிலையில் கிரகிக்கப்படும் என்பதை நீங்களே நினைத்துப்பாருங்கள். புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பட்டிருக் கின்றார்கள். சிறு குழந்தைப்பருவத்தில் நமக்குப் புகுத்தப்பட்ட விஷயங்களையே ஆராய்ச்சியின் மூலம், அறிவின் மூலம் கண்ட, முடிவென்று கருதி அதற்குத் தலை கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். நமது உள்ளத்தில் எது எது பதிக்கப்பட்டு விட்டதோ அதெல்லாம் தேர்ந்த ஞானிகளாலும், தெய்வத்தன்மை பொருந்திய அவதார புருஷர்களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடனே புகுந்தப்பட்டிருக்கிறோம். ஆகையால் புதிய நோக்கங்களையும் தோற்றங்களையும் காண சகிக்காத வர்களாக இருக்கின்றோம். உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மையை அடையவும் பாராட்டிப்பேசவும், தயாராய் இருக்கின்றோமே அல்லாமல் அதை நமது வாழ்க்கையுடன், நமது நாட்டு எண்ணங் களுடன் பொருத்திப் பார்ப்பதற்குச் சிறிதும் எண்ணுவதே கிடையாது. நமது மக்களின் இந்த மாதிரியான நிலையைப் பார்த்துப் பார்த்து, மனம் கஷ்டப்பட்டதால் தான் நாங்கள் இந்த துறையில் இறங்கித் தொண்டு செய்ய வேண்டியவர்களானோம்.

சுயமரியாதை

சுயமரியாதை இயக்கம் என்பதின் முக்கிய கொள்கைகள் என்பவை ஒன்றும் புதி தானதோ, அல்லது ஏதாவது அதிசயமானதோ என்று நீங்கள் மலைக்க வேண்டிய தில்லை. அது மனிதன் அறிவுபெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் பாடு படுகின்றது. அறிவுக்கும், சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிராயும் தடையாயும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்க தைரியம் கொள்ளுகின்றது. இந்த நிலையில் மக்களின் மூடத்தனத்தினாலும் தாழ்வினா லும், அடிமைத்தனத்தினாலும் பயனடைந்து வாழ் கின்றவர்களுக்குச் சுயமரியாதை இயக்கம் ஒரு கோடாலியாய் காணப்படுவதானால் அதிசய மொன்று மில்லை. எங்களைக் கண்டால் துவேஷமும், வெறுப்பும் ஏற்படத்தான் செய்யும், எங்களை வையவும் தொல்லைப் படுத்தவும் அவரவர்கள் மனம் தூண்டத்தான் செய்யும், இவ்வியக்கத்தைக் கையாளுகிறவர்களுக்கு  அவற்றை யெல்லாம் சமாளிக்க சக்தி இருந்தால்தான் இவ்வியக்கத்தால் ஏதாவது பலன் ஏற்படமுடியும். எதிர்ப்புக்கும் தொல் லைக்கும் பயந்தால் ஒரு காரியமும் நடவாமல் போவதோடு பிற்போக்கும் ஏற்பட்டுவிடும்.

சாதாரணமாக நாங்கள் இந்த ஊர் பொது ஜனங்களின் பாராட்டுதலையும், வணக்கத்தையும் மரியாதையும் பெற்று கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டுமானால் எங்களால் சுலபத்தில் முடிந்துவிடும். நமது ஜனங்களின் முட்டாள்தனம் எங்கு, எங்கு இருக்கின்றது என்பது எங்களுக்குத் நன்றாய்த் தெரியும்.

உதாரணமாக, நாங்கள் தேசபக்தர்களைப் போல கதர் வேஷம் போட்டு கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு பாரதமாதாவுக்கு ஜே! சுயராஜ்யத்திற்கு ஜே! மகாத்மாவுக்கு ஜே! என்று கூறிக்கொண்டோ, அல்லது பெரிய கடவுள் பக்தர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மஞ்சள் உடையோ, காவி உடையோ கட்டிக் கொண்டு பட்டைநாமம் போட்டுடக் கொண்டு குடை, தேசகண்டி இவைகளுடன் நாராயண மூர்த்தி கோவிந்தா கோவிந்தா என்றோ சொல்லிக்கொண்டு பஜனை கோஷ்டியுடனோ கூட்டமாய் வந்தோமானால் நீங்கள்கும்பிட்டு காசு கொடுத்துவிட்டுப் போவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாய்த் தெரியும். இதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டிய அவ்வளவு சிறிய கஷ்டம்கூடநாங்கள் படவேண்டியதில்லை.

ஆனால், நாங்களோ இன்று அப்படி சொல்லி வயிறு வளர்ப்பதனுடைய புரட்டுகளை எடுத்துச்சொல்லுகின்ற வேலையை மேற்போட்டுக் கொண்டிருக்கின்றோமாதலால் சோம்பேறிப் பிழைப்புக்காரர்களுடைய கோபத்திற்கும் பழிதீர்த்துக்கொள்ளும் வஞ்சகத்திற்கும் ஆளாக வேண் டியவர்களாக இருக்கின்றோம். இந்திய நாடு சூழ்ச்சிக் காரருடைய ஆட்சிக்கு உட்பட்டகாலம் முதலே எங் களைப்போல் ஒரு கூட்டம் பல தடவை தோன்றி சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றதானாலும் சூழ்ச்சிக்காரர்களின் சாமாத்தியமானது, அவற்றை லட்சி யப்படுத்தக் கூட முடியாமல் செய்துகொண்டே வந்திருக் கின்றது. இன்றைய தினம் அறிவு வளர்ச்சிக்கும், சமத்துவத் திற்கும், சுதந்திரத்திற்கும் விரோதமான காரியங்கள் என்று எதை எதை நாங்கள் கருதுகின்றோமோ அவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னும் அநேக பெரியார்கள் கருதி வெகுகடினமாக கண்டித்து பேசி இருக்கிறார்கள்.

உதாரணமாக ஜாதி மதத்தை கண்டித்தும், வேத சாஸ்திரங்களைக் கண்டித்தும், கோவில், குளம், கல்லுருவம் தாம்பர உருவம் ஆகியவைகளைக் கண்டித்தும், பூஜை,  உற்சவம், சடங்கு ஆகியவைகளைக் கண்டித்தும், எத்த னையோ பெரியோர்கள் பேசியிருக்கின்றார்கள். சாஸ்திரத் தைச்சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக் கொண்டு சுகம் பெறுவதெக்காலம் என்று ஒருவர் சொல்லி யிருக்கிறார். ஒரு பெரியவர் கல்லையும் செம்பையும் வணங்கும் கசடர்காள் என்று சொல்லியிருக்கின்றார். ஜாதி, மத பேதமெல்லாம் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கின்றார்.   இன்னும் எவ்வளவோ சொல்லி இருக்கின்றார்கள். ஆனால், நம் மக்களோ அப்பெரி யோர்களை யெல்லாம் தெய்வீகத் தன்மை கொண்டவர்கள் என்றும், ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் கருதி இன்றும் வணங்குகின்றார்கள்.  ஆனால், அப்பெரியோர் சொன்னவை களைக் கவனித்துப் பார்க்கும்படி யாராவது சொன்னால் மாத்திரம் அவர்கள் மீது மிருகப் பாய்ச்சல் பாய்கின்றார்கள்.  இது ஒன்றே போதாதா நம் மக்களின் அறிவின் திறத்தை அளந்து பார்ப்பதற்கு என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரியான பாமர உணர்ச்சியும் பயங்காளித்தனமும், வைத்ததைச் சுமக்கும் மிருக சுபாவமும் இன்னாட்டு மக்களின் உயர்குணங்களாகப் பாவிக்கப்பட்டு வருவதாலேயே உலகத்தில்  இந்திய நாடு மாத்திரம் வெகுகாலமாகவே அடிமை நாடாகவே, கூலி நாடாகவே சுயமரியாதையும் அறிவும் ஞானமும் அற்ற நாடாகவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் இன்னதுதான் என்பதைக் கண்டுபிடிக்க நம்மவர்களுக்கு இன்னமும் அறிவு ஏற்படவில்லை. ஒரு நாய் வளர்த்து கின்றவன் தன் நாயை மற்றவன்மேல் ஏவிவிடுவது போல் நம்மை யார் சூழ்ச்சி செய்து இக்கெதிக்கு ஆளாக் கினார்களோ, அவர்களேதான் அச்சூழ்ச்சியை ஒழிக்க வரும் ஆட்கள் மேல் நம்மை உசுபடுத்தி விடுவதால் உண்மையை உணர கவலை கொள்ளாமல் அவர்கள் கைகாட்டின பக்கம் திரும்பிக் கொண்டு கத்துகின்றோம்.

நமது நாட்டு அடிமைத்தனம் எத்தனை காலமாய் இருந்து வருகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். தர்மராஜ்யம், இராமராஜ்யம், சத்திய கீர்த்தி அரிச்சந்திர ராஜ்யம் முதலிய அவதார ராஜ்யம்  முதல் தெய்வீகத்தன்மை பொருந்திய மூவேந்தர் முதலிய சரித்திர ராஜ்யம் வரை இந்திய மக்கள் நிலைமையைச் சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டு பாருங்கள். அந்த நிலைக்கு இந்த நிலைமேலானதா? கீழானதா? என்று சுயமரியாதைக்கண்ணாடி மூலம் பாருங்கள். ஞானக் கண்ணாடி மூலம் பாருங்கள். சுதந்திரம், சமத்துவம் என்கின்ற கண்ணாடிகள் மூலம் பாருங்கள்.

நீங்கள் எந்த பார்ப்பனர்களையும் கேட்டுப்பாருங்கள். தங்கள் நிலை இன்றையை நிலையைவிட அன்று அதாவது அவதார ஆட்சியிலும் மூவேந்தர் ஆட்சியிலும் மேலாயிருந்தது. ஆனால், இன்று கீழாயிருக்கின்றது என்றுதான் சொல்லுகின்றார்கள்.  ஆனால், அவர்கள் தவிர மற்ற மக்களாகிய சூத்திரர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியர்கள் என்று இழிவுபடுத்தி இருக்கிற நம்மில் 100க்கு 99 ஜனங்களைக் கேட்டுப் பாருங்கள். நெஞ்சில் கையை வைத்து நினைத்துப் பாருங்கள். அன்றுக்கு இன்று எவ்வளவு மேலான நிலையில் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு துறையாய் ஆராயுங்கள் உண்மை காண்பீர்கள். இதோடு நின்று விடாமல் இந்த நிலையோடு திருப்தி அடையாமல், இன்னும் மேலே போகவேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு மேலே போகவேண்டுமானாலும் நானும் கூடவே வர பாடுபடுகின்றேன். ஆனால் பழைய நிலையே மேல் அதற்கே போக வேண்டும் என்றுசொன்னால் அதைச் சகிக்க முடியவில்லை. அரைநிமிஷம்கூட அதை ஆதரிக்க முடியாது. உலகம் அறிவு பொருள் முதலிய அகத்திலும் புறத்திலும் சமத்துவத்தையும் பூரண சுயேச்சையையும் அடைய தீர்மானித்து விட்டது. இந்தியா மாத்திரம் மூடர்களாய், அடிமைகளாய் இழிமக்களாய் இருக்கும் அவதார ராஜ்ஜியத் திற்குப் போகவேண்டுமென்றால் இந்நாடு அடியோடு அழிந்து போவதே மேலான காரியமல்லவா?

நண்பர்களே, உலகத்தை ஒருகண்ணில் பார்த்து இந்தியாவை ஒரு கண்ணில் பார்த்து, இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண ருங்கள். நம் கல்வி, செல்வம், வாழ்வு, விவசாயம் வீரம், மானம், அறிவு ஆராய்ச்சி, முற்போக்கு ஆகியவைகள் எல்லாம் எப்படி இருந்தது, இருக்கிறது. மற்ற நாடுகள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பவைகளை சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்லி, ஒவ் வொன்றிலும் வெளிதேசத்தையும் இந்தியாவை யும் ஒப்பிட்டு பார்க்கும்படி விளக்கிக் காண் பித்து விட்டு உட்கார்ந்தார்.

"உபசாரப்பத்திரம்"

இந்த சமயத்தில் ஒரு வாலிபர் கடலூர் வாலிபர்கள் சார்பாக திரு இராமசாமிப் பெரியாருக்கு உபசாரப்பத்திரம் படிக்க வேண்டும் என்று சொல்லி அதன் பிரதி ஒன்றை தலைவரிடம்  கொடுத்தார். தலைவர் அதை வாங்கித் தானே வாசித்துப் பார்த்தார் அவ்வுபசாரப் பத்திரத்தில் முதல் இரண்டு மூன்று வாக்கியங்களில் திரு.இராமசாமியை பாராட்டும் பாவனையாகவும் பின் இரண்டு வாக்கியத்தில் கதரைப்பற்றிய அபிப்பிராயத்தை விளக்க வேண்டுமென்றும், தாலி கட்டுவது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்று சொல்லும் தங்கள் மனைவியார் ஏன் தாலி கட்டி இருக்கிறார் என்றும் கேள்வி கேட்கும் பாவனையாக எழுதப்பட்டிருந்தது. 

பின்னர் திரு. இராமசாமி எழுந்து பதில் சொல்லும் முறையில் தாலி கட்டிக்கொண்டிருப்பது அடிமைத் தனத்திற்கு அறிகுறி என்று அநேக பெண்கள் இன்னமும் உணரவில்லையென்றும், உணர்ந்த பல பெண்களும் தாங்கள் அடிமைகளாய் இருப் பதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்றும், சிலர் சமுகத் துறைக்குப் பயந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எந்த எண்ணத்தின் மீது தனது மனைவி யார் கட்டிக் கொண்டிருந் தாலும் அவர்களது இஷ்டத்திற்கு விரோ தமாய் பலவந்தம் செய்யத் தான் துணியவில்லை என்றும் சொன்னார். ஒருவர் மத்தியில் எழுந்து உங்கள் குடும்ப மனை வியையே நீங்கள் அடக்கி ஆள முடியவில்லையானால் மற்றவர் களை எப்படி திருத்தமுடியும் என்றார். இதற்கு திரு. இராமசாமி சமாதானம் சொல்லுகையில் மனை வியை அடக்கி ஆளவில்லை என்று சொன்ன நண்பர் மனைவி என்றால் அடிமை என்கின்ற நமது பழைய கொள்கையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகின் றாரேயொழிய, அவர்கள் இஷ்டப் படி நடக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் சிறிதும் கவனியா மல் சொல்லுகிறார் என்றே கருது கின்றேன்  பெண்களுக்கு கல்வி யறிவும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதையும் ஏற்பட் டால் தானாகவே தாலியை அறுத்தெறிந்து விடுவார்கள் சுதந்திர உணர்ச்சி உள்ள பெண்கள் இனி தாலி கட்ட கழுத்தைக் கொடுக்க மாட்டார்கள் என்றும், இவ்விஷயங் களில் மற்ற வெளிஜனங்கள் என்பவர்களுக்கும் குடும்பத் தார் என்பவர்களுக்கும் பிரமாத வித்தியாசம் இல்லை யென்றும், சொல்லிவிட்டு கடைசியாக இந்தக் கூட்டத்தில் அரசியல் சம்பந்தமான பேச்சை தான் வேண்டுமென்றே பேசாமல் விட்டு விட்டதாகவும் ஏனெனில் இதுவே முதல் கூட்டமானதால் அதிகமான விஷயங்களை ஜீரணம் செய்விக்க முடியாதென்று கருதியே அப்படிச் செய்ததாகவும் ஆனபோதிலும் காங்கிரசுக்காரர்கள் என்கின்ற முறையில் சிலர் அவர்களாகவே நம்மை பேசும்படி செய்ததால்தான் அதற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறி கதரைப்பற்றியும் அதற்கும் அரசியலிற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியும் அது எவ்வளவுதூரம் தொழில் முறையிலோ பொருளாதாரத் துறையிலோ உதவி இருக்கின்றதென்றும் அது சமதர்ம கொள்கைக்கும் மனிதனின் இயற்கையான ஆசாபாசங்களுக்கும் முன்னேற் றத்திற்கும் எவ்வளவு இடையூறென்றும் எடுத்துக் காட்டியதுடன் திரு.காந்தியே மில்லை ஆதரிக்க வந்து விட்டதுடன் புதிய யந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு கண்டுபிடிப்பவருக்கு ரூ.1,00,000 சன்மானம் கொடுக்க முன்வந்துவிட்டார் என்றும் கதர் தற்கால சாந்திதான் என்பதாக திரு. ராஜகோபாலாச் சாரியார் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு கதரை ஒரு தர்ம கைங்கரியமாக வைத்துக் கொண்டாலும்கூட ஏழைகள் பிழைக்கவென்று மக்களிடம் கதரின் பேரால் 4அணா வசூலித்து அவர்களுக்கு ஒரு அணா போய்ச் சேரும்படியிருப்பது தர்ம கைங்கரியம் ஆகாதென்றும் எப்படியெனில் ஒரு நாளைக்கு கால்ராத்தல் நூல் நூற்று ஒரு அணா கூலி அல்லது ஒன்ணேகாலணா கூலி பெரு கின்றார்கள் என்றால் அந்த கால் ராத்தல் நூலால் நெய்யப்பட்ட கதரை வாங்க வேண்டியவர் 6  அணா கொடுக்கிறார்.  இந்த நீளமுள்ள துணியை மில் துணியாக வாங்கினால் 0-2-6 அணாவுக்கு வாங்கலாம், ஆகவே ஒரு அணா தர்மம் செய்யமற்றவனிடம் 3-6 தட்டிப்பறிக்கவேண்டி இருக்கின்றது என்று புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டினார். 

மற்றொரு வாலிபர் ஒரு சந்தேகம். 1. கடவுள் உண்டா இல்லையா? 2. கடவுளை அடையும் மார்க்கம் என்ன? 3. மனிதன் கடமை என்ன? என்று கேட்டார்.

இதற்கு திரு. இராமசாமி, கடவுள் என்பதை தான் ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று கருதியிருப்பதாகவும், ஆனால், கடவுளைப் பற்றி பேசுபவர்கள் அதற்குத் தனித்தனி அர்த்தம் கற்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றும், கேள்வி கேட்பவர் கடவுளுக்கு இன்ன விதமான அர்த்தம் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தால் அது உண்டு இல்லை என்றும் எப்படி அடைவதென்றும் ஒரு வார்த்தையில் முடித்து விடலாம் என்று சொன்னார். இதற்குக் கேள்வி கேட்டவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

பிறகு மனிதனுடைய கடமை என்பது தனியாக ஒன்று இல்லை என்றும் அவரவர் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் சரி என்று பட்ட விஷயங்களின்படி அவரவர் நடந்து கொள்ளுவதைத் தான் கடமையாகக் கொள்ள வேண்டுமென்று சொன்னார்.  

'குடிஅரசு' - சொற்பொழிவு - 20.09.1931

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

சீர்திருத்தம் சுலபமானதா?


4

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே!  சகோதரிகளே!! சகோதரர்களே!!!

இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.  ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும், அதைக் கொண்டாடினால் மோட்சம் அடையலாம் என்றும், பிரசங்கம் செய்யக் கூட்டு வார்கள்.  ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ளவனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.

இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலை வரைக்கண்டுபிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.  தலைவர் திரு.வி.எஸ்.செங்கோட்டையார் அவர்கள் பெரும்செல்வவான், பொது ஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர். அநேக நல்ல பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மத சம்பந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வருபவர்.  ஆதலால் அவரை இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களைப் பாராட்ட வேண்டியதே.  எனது உபன்யாசம் பயன்படுமானால் சீர்திருத்தத் துறைக்குத் தலைவரால் அநேக லாபம் ஏற்படும்.  அவர்கள் என்னை குருவென்றும் மற்றும் பிரமாதமாய் புகழ்ந்து பேசினார்.  நான் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை.  நானும் அவரும் மற்றும் இந்த ஊர்க்காரர்களும் ஒன்றேயாவோம்.  30,40 ஆண்டுகளாகவே தாய்பிள்ளைகள்போல் நெருங்கி பழ கினவர்கள்.  ஒரே துறையில் வியாபாரம் செய்துவந்தவர்கள்.  அநேகர் எனக்கு வரவு செலவுகாரர்களாய் இருந்தவர்கள்.  அக்கிராசனர் வியாபாரத்துறையில் மேலோங்கிவிட்டார்.  நான்  வேறு துறையில்  இறங்கிவிட்டேன்.  இவ்வளவு தான் வித்தியாசம்.  தலைவரும் இந்தத் துறையில் இறங்கி இருந்தால் அபாரமான காரியங்களைச் சாதித்து இருப்பார்.  ஆதலால் அவரை விட நான் ஒன்றும் சிறந்தவனல்ல.  அவர் போன்றவர்கள் இவ்வித உபன்யாசங்களுக்குத் தலைவராகக்கிடைத்துமனமாறுதல் அடைந்தால் நாட்டில் எவ்வளவோ திருத்துப்பாடு ஏற்படும். தவிரவும் வயதில் மூத்தவன் என்கின்ற காரணத்திற்காக மரியாதை செய்வது என்கின்ற மூடப்பழக்க வழக்கத்தை ஒழிப்பது சீர்திருத் தத்தில் பட்டது என்று தலைவர் திரு. செங்கோட்டையா அவர்கள் கருதாததால் தன்னை வயதில் சிறியவன் என்று பல தடவை சொல்லி விட்டார்.  அது சரியல்ல.  அறிவுள்ள வர்களும் , அரும் பெரும் காரியங்களைத் தன்னலமற்று தியாகபுத்தியுடன் செய்கின்றவர்களும்தான் பெரியவர்களே யொழிய, வெறும் வயதைப்பார்த்து, நரையைப்பார்த்து, நடுக்கத்தைப்பார்த்து பெரியவர்கள் என்று மயங்குவது தவறுதலாகும்.  ஆகையால் இன்று நமக்குக்கிடைத்த தலைவர் சரியானதலைவரேயாவர்.  பெரியவரேயாவர். மற்றும் எனக்குப் பல வரவேற்புப் பத்திரங்கள் கொடுத் தீர்கள்.  அதில் நீங்கள் எனது கொள்கைகளை நன்றாய் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அந்தக் கொள்கை களுக்கு என்னை ஊக்கமாய் உழைக்கும்படி எதிர்பார்க் கீன்றீர்கள். தூண்டுகின்றீர்கள் என்றுமேதான் கருதி அவற்றை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

சீர்திருத்தம்

தவிர 'சீர்திருத்தம்' என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக் குச் சீர்திருத்தம்?  எப்படிப்பட்ட சீர்திருத்தம்?  எதற்காகச் சீர்திருத்தம்?  எது சீர்திருத்தம்?  அவற்றை எப்படி நிர்ண யிப்பது?  அதற்கு முட்டுக்கட்டை எது?  பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது?  என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.  அப்படிப்பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும், மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும், உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர் திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக்கூடும்.  எவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு.  அவை பழைமை, முன்னோர்வாக்கு, மகான்வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந்தம் முதலியவைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவை களுமாகும்.

தன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக் கொள் ளுகின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும் தைரியமும் உடையவர்களாக இருக்கவேண்டும்.  அதைவிட்டு விட்டு 'மற்றதெல்லாம் சரி' ஆனால் 'மதத்தைப் பற்றி பேசலாமா?  கடவுளைப்பற்றி பேசலாமா?  தேசியத் தைப்பற்றி பேசலாமா?  புராணங்களைப்பற்றி பேசலாமா?  மகான்களைப்பற்றி பேசலாமா?  மகான்கள் அபிப்பிரா யத்தைப்பற்றி பேசலாமா?  நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா' என்பது போன்ற பிடிவாதகுணங்களும், தன்னம் பிக்கையற்ற குணங்களும், 'ஆனால்'களும் உடைய வர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது.  ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும், பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும்.  இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது.  நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்?  யார் வீட்டில் சாப் பிடலாம்?  எதைச் சாப்பிடலாம்?  என்பது போன்றவைகளில் இப்பொழுது , இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.

உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள்.  நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படு கின்றார்கள்.  மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்தமடை கின்றார்கள்.  நமது நாட்டு மக்கள் நம்பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தைத் தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.

முன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப்பட்டு விட்டது.  அந்தப்பக்கம் திரும்புவதென்றால் "உயிரை விடுகின்றேன்" என்கின்றார்கள்.  ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை.  ஆகிய எல்லாம் சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப் புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக் கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம்பேறி களும், ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒரு நாளும் ஒப்பமாட்டார்கள் ஆதலால் நம் நாட்டுமக்களே நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின் றார்கள்.  இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேற விடவே விடாது.  சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள்.  அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.  இந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசியம் முதலாகிய எல்லா புரட்டுகளையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்ப தென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும், பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது.  அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும், வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள்.  அவர்களது தொல்லை அடி யோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.

உதாரணமாக, மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள் ளுவானா?  என்று பாருங்கள்.  அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டை யாக இருப்பானா?  அல்லது இருக்கமாட்டானா?  என்று பாருங்கள், அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளி கிளம்பமாட்டானா?  என்றும் பாருங்கள்.  இதுபோலவே கடவுள், தேசியம் என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்ய மாட்டார்களா?  என்றும் யோசித்துப் பாருங்கள்.

இந்த முட்டுக்கட்டையும் எதிர்பிரசாரக்கூட்டமும் இயற்கையே யானாலும் அவை யொழிந்தாகவேண்டும்.  நமது மக்கள் படித்தவர்கள் என்றாலும், பாமர மக்கள் என்றாலும் இவ்விஷயங்களில் ஒரே மாதிரி மூடர்களாகவே இருக்கின்றார்கள்.

உதாரணமாக, ஒரு 'வடுகனோ' ஒரு 'கைக்கோளனோ', 'ஒரு செட்டியோ',  எவ்வளவு தான் சுத்தமாய் இருந்து கொண்டு ஒருபடி அரிசிக்கு 30 இட்லி போட்டு இட்லி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்பவர்கள் வாங்குவதில்லை.  ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத்துணியுடனும், சொறிசிரங்குடனும், வேர்வை நாற்றத்துடனும், வெள்ளைப் படையுடனுமிருந்தாலும் ஒரு படிக்கு 60 இட்லி வீதம் போட்டாலும், இட்லி ஒன்று 0-0-6 பை வீதம் முன் பணம் கொடுத்து 'சாமி, சாமி' என்று 'சொர்க்கவாசல் பிரசாதம்' போல் கேட்டு வாங்கிச் சாப் பிடத் தயாராயிருக்கின்றோம்.  இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.  பண்டிதர்களிட மும், நாகரிக செல்வவான்களிட முமே இந்தக் குணத்தை பார்க்கின்றேன்.

ஆகவே சீர்திருத்தத்திற்கு யார் முட்டுக்கட்டை என்று பாருங்கள்.  இதுபோலவே கடவுள் விஷயத்திலும், கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்குப் பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இம்சித்துத் தப்பித்துக் கொள்வதற்கும், ஏமாற்றுவதற்கும், தான் மற்றமக்களை  விட அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பயன் படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக்கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோவில் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும், விளக்குப்போடவும், அதன் தலையில் பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய வஸ்துக்களைக் கொட்டிப் பாழாக்கவும், அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக்காரியம் செய்து வயிறு பிழைப்பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேறிகள் பிழைக் கவுமான காரியத்தில் அமர்ந் திருக்கும் கூட்டத்தார், கடவுள் புரட்டை வெளியாக்க சம் மதிப்பார்களா?  மேலும் முட்டுக் கட்டையாய் இருக்க மாட்டார்களா? மற்றும் கடவுள் பிரசாரமும் செய்ய மாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்புரட்டில் ஏமாறுகின்றவர்களும், இதற்கு அனு கூலமாய் இருப்பவர்களும் எல்லோரும் முழு மூடமக்கள் என்றே சொல்லிவிடலாமா?  என்றும் பாருங்கள்.

அப்படியும் இல்லையே, நல்ல சாமர்த்தியக்காரர்கள், வெகு தந்திரமாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள், ஜால வித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்தி சாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்தி நுட்பத்துடனும், தந்திரத்துடனும், கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிறெரிய-எரிய அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல்மனதுடனும், பசியுடன் குழந்தைகளும்.  பெண்களும், மொண்டி முடங் களும், கிழடுகளும் பசியால் பதறப் பதற அதைச் சற்றும் லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய், லட்சம் லட்சமாய் இம்மாதிரி கடவுள் புரட்டு காரியங்களில்செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும், அறியாத்தனமென்றும், சுலபத்தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா?  என்று யோசித்துப்பாருங்கள்.  ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக்கட்டையாயிருக்க மாட் டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இந்த மாதிரி ஆட்களின் காரியங்களால் பிழைக்க விருக்கும் கோயிலைக்காத்துப்பிழைக்கும் மக்கள் கடவுள் பிரசாரம் செய்யமாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே தேசியமென்பதும், ஏழைகளுக்குத் துன்பம் விளைவித்து வருவதும் குடியானவர்களுக்குத் தொல்லை விளைவித்துவருவதும், தொழிலாளிகளுக்கும், சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரைபட்டினியையே அளித்து வருவதும் சோம்பேறிகள் மூன்றுவேஷ்டியுடன் வாழவும் சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மேலுக்காக வெள்ளைவேஷ்டியுடன் திரியவும், பதவி, ஓட்டுக்கும், உத்தியோகத்திற்கும் அலையும் கூட்டத்தார் இத் தேசி யத்தை நம்பியே முன்னுக்கு வர வேண்டுமென்று கருதி யிருக்கும் கூட்டத்தார், கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவதுபோல் தேசிய அர்ச்சகர் களுக்கு - தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண்டிருக்கும் போது தேசியப்புரட்டை வெளியாக்குவது சுலபமா?  அல்லது சாத்தியமா?  என்றும் யோசித்துப்பாருங்கள், இவர்கள் முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா?  என்றும் யோசித் துப் பாருங்கள்.  அதுமாத்திரமல்லாமல் ஒரு கூட்டம் சீர்திருத்தத்திற்கு எதிர்ப் பிரசாரமும் செய்யமாட்டார்களா?  என்றும் கருதிப் பாருங்கள். ஆகவே, எந்தப் புரட்டை யொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடை கின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்.  பேசிப் பேசி, எழுதியெழுதி இந்தக் கூட்டத் தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமே யொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக்கூடிய சுலபமான காரியமல்ல.

ஆனபோதிலும் விடாமுயற்சியுடன் சுயநலப்பற்றற்ற வாலிபர்களும்.  நம்பிக்கையுள்ள பெரியவர்களும் பாடு பட்டால் சீர்திருத்தம் சீக்கிரம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை உலகம் சீர்திருத்தப் பக்கம் திரும்பி விட்டது.  இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரிகாசம் செய்கின்றது.  ஆதலால் தானாகவே சீர்திருத் தத்திற்குப் பல நற்குறிகள் காணப்படுகின்றன, நான் உங்களைக் கேட்பதெல்லாம் அதைத் தடுக்கவராதீர்கள் என்பதேயாகும்.  சீர்திருத்தக்காரியங்களில் வேறு காரி யத்தைப் போட்டு குழப்பாதீர்கள்.  சீர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன்வாருங்கள். பெண் களுக்கும் ஆண்களுக்கும் சிறிதும் வித்தியாசமில்லாமல் ஒன்று போலாக்குங்கள்.  பிறகு உங்களால் என்ன காரிய மாகாது என்று நினைக்கிறீர்கள்?  சுயராஜ்யம் பரராஜ்யம் என்பதெல்லாம் உங்கள் காலடியில் தானாகவே வந்துவிடும்.  அதில்லாமல் வெறும் கூப்பாடு உண்மைப்பயனளிக்காது.  இந்த ஊரில் சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்ப தாகக் கத்தலாம், கதர் கட்டலாம், கொடி பிடிக்கலாம், காந்திக்குல்லாய் போடலாம், தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை என்றுசொல்லலாம், மகாத்மாவுக்கு ஜே! என்றுகத்தலாம்.  சுயமரியாதை இயக்கம் தேசியத்திற்கு விரோதம் என்றும் சொல்லலாம்.  ஆனால் இந்த ஊர் தண்ணீர் கிணற்றில் ஒரு பறையன் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் மெள்ள ஒரு நான்கு பெயர்கள் சம்மதிப்பார்களா?  தண்ணீர் மொண்டவனை உதைக்காமல் இருப்பார்களா?  பாருங்கள்.  சுயராஜ்யம் என்பது வந்தால் மாத்திரம் இந்த ஊர் ஜனங்களுக்குப் புத்தி மாறிவிடுமா?  யோசித்துப்பாருங்கள்.

ஆகவே ஒருவன் "கங்காதரா மாண்டாயோ" வென்றால் எல்லாரும் விபரம் தெரியாமல் அழுகாதீர்கள்.  இந்தப் பலக் குறைவேதான் சீர்திருத்தத்திற்கு முட்டுக் கட்டை, ஆகை யால் கவனித்து உங்களுக்குக் தோன்றுகிறபடி நடவுங்கள்.  நான் சொன்னதை யோசித்து ஆராய்ந்து பார்க்காமல் நம்பிவிடாதீர்கள். 

(02-08-1931-ஆம் தேதி மாலை 5 மணிக்கு செங்குந்தர் சாவடியில் கூடிய கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 09.08.1931

திங்கள், 19 ஜூன், 2023

பார்ப்பனர் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவே ஹிந்தி - சமஸ்கிருதத் திணிப்பு

 

 *தந்தை பெரியார்

5

நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்த தன் பலனாகவும், ஏழு ஆண்டு களாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணா சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும், இருந்த பார்ப்பனர்களுடைய கௌ ரவமும் குறையத் தொடங்கி விட்டதென்பதும் உண்மையாகும். ஆகையால் அவர்கள் காங்கிரசின் பெயராலும், அரசாங்க உத்தியோகத்தின் செல்வாக் காலும், மற்றும் பல பொது இயக்கங்களின் பேராலும், தங்களைத் தலைவர்களாகவும், தியாகிகளாகவும், தேசாபிமானிகளாகவும் செய்து கொண்டு, பார்ப்பன ரல்லாத மக்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தவர்கள், இப்போது மேற்படி பொது இயக்கங்களிலும் பார்ப்பனரல்லாதார் புகுந்து தங்களுக்கும் பங்கு  கொடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தவுடன் வேறுபல பேர்களாலும், பிரசாரங்களாலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்கின்றார்கள்.

நமது இயக்கமானது பார்ப்பனர்களை நமது மக்கள் உயர்வாகக் கருதுவதற்குக் காரணமாக  இருந்த 'மதம்', 'வேதம்' 'புராணம்', 'ஸ்ருதி', 'கடவுள்', 'ஆன்மா', 'மோட்சம்', 'நரகம்', 'பாவம்', 'புண்ணியம்', முதலிய அடிப்படைகளிலேயே கை வைத்து அவைகளை அழிக்கத் தொடங்கியவுடன், அவர்கள் விழித்துக் கொண்டு அந்த அடிப்படைகளை மறுபடியும் புதுப்பித்து அவைகள் மூலம் மீண்டும் பழைய ஆதிக்கத்தைப் பெறவே வழி தேடுகிறார்கள். இதற்காகவே பார்ப்பனர்கள், காங்கிரசின் பெயரால், 'மகாத்மா' 'பாரதமாதா' 'அவதாரம்' கதர் 'ஹிந்தி' 'கொடியேற்ற வணக்கம்' 'ஜெயந்தி' விழாக்கள் முதலியவைகளைக்கொண்டு பாமர மக்களின் மனத்தில் பழைய வருணாசிரம தருமத்தையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்குவதோடுமட்டும அல்லாமல், 'பிராமண சபை' 'சனாதன தரும சபை' 'தருமரட்சணசபை' 'வேதோத் தாரண சங்கம்' 'அத்வைத சபை' 'ஹிந்து மத சபா' முதலிய சங்கங்களை அமைத்துக் கொண்டு இவைகள் மூலமாகவும், மக்களுடைய பகுத்தறிவைத் தடுத்து, அவர்களை வைதிக மூடநம்பிக்கையுடையவர்களாக்க முயற்சி செய்கிறார்கள். இந்த மாதிரியான வைதிக சபைக் காரர்களுக்கு நாம் நன்றி பாராட்டுகிறோமேயொழிய உண்மையில் அவர்களிடம் துவேஷமோ, கோபமோ அடையவில்லை. ஏனெனில், அவர்கள் பிராமணர் களின் உண்மை மனக்கருத்தை அச்சபைகளிற் செய்யும் பிரசங்கங்களின் மூலமாகவும், தீர்மானங் களின் மூலமாகவும் வெளிப்படுத்துவதால், பிராமண ரல்லாதார் ஏமாறாமல் இருக்கவும், பிராமணர்களை நம்பிக் கொண்டிருக்கும் மக்களை எச்சரித்துத் திருத்தவும் முடிகிறது, என்கின்ற இந்தக்காரணத் திற்காகவே நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதாகக் கூறுகிறோம்.

பார்ப்பனர்களுடைய உண்மையான அபிப்பிரா யத்தை அறிய வேண்டுமனால், சென்ற 23-11-1931இல் கும்பகோணத்தில் கூடிய தஞ்சை ஜில்லா பிராமண சபையின் இரண்டாவது வருடக் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அப்பொழுது, பணக்காரர்களாகவும், ஆங்கிலம் படித்தவர்களாகவும், வக்கீல் தொழில் செய்பவர் களாகவும் அரசாங்க உத்தியோகத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று நீங்கியவர்களாகவும், உபாத்தி யாயர்களாகவும், ஒன்றுந் தெரியாத வைதீகர்களாகவும் உள்ள பார்ப் பனர்கள் ஒன்று கூடிப் பேசிய வார்த்தைகளின் சில பகுதிகளைக் கவனிப்போம். (இந்நிகழ்ச்சி சென்ற 26-11-1931ஆம் தேதி வெளியான 'தமிழ்நாடு' பத்திரிகையில் காணப்படுகிறது.)

"நவ நாகரிகத்தில் அகப்பட்டுக் கொண்டு ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தங்கள் தங்கள் தர்மத்தை மறந்து நிற்கிறார்கள். மாமிசம் உண்ணும் பிராமண னையும், குடிக்கும் பிராமணனையும் நாம் இப்போது பல இடங்களில் காண்கிறோம். எனக்குப் பிரத்தியட்ச மாய்த் தெரிந்ததைத் தான் கூறுகிறேன். டில்லியில் ஓர்விருந்து நடந்தது. அதில் சற்றும் அச்சமில்லாமல் மாமிசம் சாப்பிட்ட பிராமணனை நான் அறிவேன்."

"கவர்னர் முதலிய பிரமுகர்களுக்கு நடத்தும் விருந்துக் கச்சேரிகளில் ஆதிதிராவிடர்களால் பரிமாறப்பட்டு அநேக பிராமணர்கள் சாப்பிடுகிறார்கள். இது என்ன பிராமணீயம் என்று கேட்கிறேன். ஆதி திராவிடர்களைக் கோயில்களுக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று நாம் சொல்லுகிறோம். ஆனால் ஆதிதிராவிடர்கள் கையில் போஜனம் செய்யும் பிராமணர்களை நாம் கோயிலுக்குள் நுழையாமல் தடுக்கிறோமா? கடல்கடந்துவரும் பிராமணர்களை நாம் வரவேற்று உபசரிக்கிறோம். வைதிகர்கள் பிள்ளைகள்கூட அய்.சி.எஸ். முதலான பரீட்சை களுக்குச் சீமைக்குச் செல்லுகிறார்கள். அதைப் பற்றி நாம் என்ன செய்கிறோம்?" என்று தலைமை வகித்த பார்ப்பனர் பேசியிருக்கிறார்.

இவர் பேசியிருப்பது முழுவதும் உண்மையான விஷயம் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இந்த நிலைமையைச் சீர்த்திருத்திப் பழைய வைதிக நிலைமைக்கு மறுபடியும் பார்ப் பனர்களைக் கொண்டு வரவேண்டுமே என்னும் உணர்ச்சியோடு அவர் பேசியிருக்கலாம். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. மேற் கூறியபடி 'ஒழுக்கம்' கெட்ட பார்ப்பனர்களும் தங்களைப்பார்ப் பனர்களாகவே மதித்துக் கொண்டு மற்றவர்களைச் 'சூத்திரர்களாக' மதிக்கும் அகங்கார மனப்பான்மை தான் ஒழியவேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஏதோ இவர் இம்மாதிரி பார்ப்பனர்களின் நடத்தையை வெளிப்படையாகக் கூறிவிட்டாரே ஒழிய செய்கையில் மேற்கூறியவாறு 'ஒழுக்கங் கெட்டவர்'களாக உள்ள பார்ப்பனர்களையெல்லாம் பகிஷ்கரிக்க எந்தப் பார்ப்பானும் முன்வரமாட்டான் என்பதை நாம் அறிவோம். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த சம்பவத்தைக் கவனித்தாலே இது விளங்கும். திரு. காந்தி, பண்டித ஜவகர்லால் நேரு, லாலா லஜபதிராய், முதலியவர்களைக் கப்பலேறிச்சென்று வந்தவர்கள்  என்ற காரணத்திற்காக உள்ளே செல்வதைத் தடுத்த கோயிலில் மகாராஜாவின் உத்தரவு காரணமாக கப்பல் பிரயாணம் செய்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் செல்லவில்லையா? அவர் இல்லாமல் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாருக்காக மகாராஜாவால் தடை நீக்கப்பட்டு அப்பார்ப்பனரல்லா தாரும் கோயிலுக்குள் போயிருந்தால் திருவாங்கூரில் உள்ள பார்ப்பனர்களும், பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள வைதிகர்களும் சும்மா இருந்திருப்பார்களா? திருவாங்கூரில் 'இந்து மதம் அழிந்துவிட்டது' என்று போடும் கூச்சல் ஆகாயத்தைப்பிளக்கும் அல்லவா? அன்றியும், இதே சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பராய் இருந்த காலத்தில் கும்பகோணத்திற்கு வந்திருந்தபோது 'உலககுரு' என்று பார்ப்பனர்களால் கூறப்படுகின்ற 'சங்கராச்சாரியார்' அவரை 'ஆசீர் வதித்து' பாராட்டினாரே. இதுபோலவே 'சூத்திரர்கள்' என்கின்றவர்களிடத்தில் பேசினால் 'பாவம்' என்ற கொள்கையையுடைய சங்கராச் சாரியாரும் மற்றும் வைதிகப் பார்ப்பனர்களும், உத்தியோகப் பார்ப்பனர் களையும், இங்கிலாந்து சென்று வந்த பார்ப்பனர் களையும், கறி தின்னும் பார்ப்பனர்களையும், குடிக்கும் பார்ப்பனர்களையும், வரவேற்றும், ஆசீர்வதித்தும் அவர் களைப் புகழ்ந்தும், அவர்களுடைய வாக்கு உதவியையும், பொருள் உதவியையும் பெற்றார்கள்- பெறுகிறார்களே இவற்றையெல்லாம் யாராவது கண்டித்தார்களா? இல்லையே, ஆகையால் மேற்கூறிய பார்ப்பனர் அபிப்பிராயத்தை வேறு எந்தப் பார்ப் பனரும் ஒப்புக்கொண்டு நடத்தையில் அனுஷ்டிக்க முன்வர மாட்டார்கள் என்பது நிச்சயம்.

மற்றொரு பார்ப்பனர் 'ஆங்கிலப்படிப்பினால் தான் பார்ப்பனீயம் கெட்டது' என்று பேசியதற்குப் பதிலாக 'நான் ஆங்கிலக்கல்வி கற்றவனே, ஆனால் என் னுடைய மத தர்மங்களில் அக்கல்வி தலையிட்டிருக் கிறதாய் நான் சொல்ல முடியாது. முக்கியமாய் நாம் நம் சிறுவர்களுக்குச் சமகிருதக் கல்வியைப்புகட்டினால் பல தீமைகள் வராமல் தடுக்கலாம். இது மிகவும் முக்கியமான காரியமாகும்' என்று ஒரு சர்வகலாசாலைப் பட்டம் பெற்ற பார்ப்பனர் பேசியிருக்கிறார். இதி லிருந்து படித்த பார்ப்பனர்களும், உத்தியோகம் செய்யும் பார்ப்பனர்களும் என்ன தான் கெட்டாலும் தங்கள் பிராமணியக் கொள்கைகளைத்தாம் விட்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளுவதேயில்லை யென்பது விளங்கும், அவர்கள் வருணச்சிரம தர்ம முறைப்படியே தாங்கள் மேலாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கீழாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்பதும், அதற்காகவே உழைக்கிறார்கள் என்பதும் உண்மையென்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. மற்றும் "பிராமணியம் ஒருநாளும் அழியாது. அது எந்தக் காலத்திலும் நிலைபெற்றிருக்கும் சக்தியை உடைய தாகும். சென்ற யுகங்களிலும் அனேக பிரா மணர் நாஸ்திக புத்தியை உடையவர்களாய் இருந் தார்கள். இப்பொழுது இது புதிதல்ல" என்று ஒருவரும்?

"நீங்கள் இவ்விடத்தில் ஒரு சத்தியம் செய்து கொள்ள வேண்டும். பெண்களை நாம் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பக் கூடாது. தகுதியற்ற கல்வியைப் பெண்களுக்குப் போதிப்பதனால் தான் நம்முடைய குடும்பங்கள் கெட்டுப் போகின்றன. நம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சாரதா சட்டத்தை எதிர்த்து அதற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அநேக தீங்குகளைச் செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால், நாம் முன்ஜாக்கிரதையுடனிருந்து காரியங்களைக் கவனிக்க வேண்டும்" என்று ஒருவரும் பேசியிருக்கின்றனர்.

இந்தப் பேச்சுக்களிலிருந்தும், இவ்வாறு பார்ப் பனர்கள் பிரசாரங்கள் செய்து கொண்டு வருவதிலி ருந்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. "அவர்கள் அனைவரும், மீண்டும் வருணாசிரம தருமராஜியத்தை நிலைநாட்டவே பாடுபடுகிறார்கள்" என்பது தான். இந்த வகையில், பார்ப்பன சபைகளில் உள்ள பார்ப்பனர்களும், காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களும், அரசாங்கத்தில் உத்தியோகஞ்செய்யும் பார்ப்பனர் களும், மற்றும் எந்த இழிவான நிலையில் உள்ள பார்ப்பனர்களும், தங்கள்  ஆதிக்கம் அழியாமல் இருப் பதற்கும், தங்கள் ஆதிக்கம் மறுபடியும் தேசத்தில் நிலைபெற்றுப் பார்ப்பனரல்லாத மக்களை அடிமைப் படுத்துவதற்குமே பல துறைகளிலும் இருந்து உழைக் கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் காரணத்திற்காகவே தான், மதசம்பந்தமான 'அவதாரபுருஷர்கள்' எனறு அவர்களாலேயே கொண் டாடப் படுகின்ற 'ஆழ்வார்கள்' 'நாயன்மார்கள்' 'பக்தர்கள்' முதலியவர்களிலும் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற வித்தியாசத்தை மனத்திற்கொண்டு பார்ப்பனரல்லாத 'ஆழ்வார்'களுக்கும், 'நாயன்மார்' களுக்கும் 'பக்தர்'களுக்கும் பெருமை கொடாமல் பார்ப்பனர்கள் என்பவர்களுக்கே பெருமை கொடுக்கும் இவர்கள், வருணாச்சிரம தருமத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்திருக்கும் திரு.காந்தியை, 'மகாத்மா'வாகவும் 'அவதார' புருஷராகவும் கொண் டாடுகின்றனர். இந்தியாவில் உள்ள மதங்களுக்கும், கலை களுக்கும், நாகரிகங்களுக்கும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறும் காங்கிரசை, போற்றுகின்றனர். இன்றேல், திரு காந்தியை மூலையில் தூக்கிப்போட்டு விட்டுக் காங்கிரசையும் ஒழித்து விட அவர்கள் முயற்சி செய்யப் பின்வாங்க மாட்டார்கள் என்பது நிச்சயமான செய்தியாகும்.

மக்களுடைய பகுத்தறிவை வளர்ப்பதற்குரிய நூல் களோ, இலக்கியங்களோ இல்லாததும், வருணாசிரம தருமத்தைப் போதிக்கும், துளசிதாஸ் ராமாயணம், பகவத்கீதை முதலிய நூல்கள் உள்ளதுமாகிய இந்தி மொழியைப் பிரசாரம் செய்கின்றனர்.  சனாதன தர்மத்தைப் போதிக்கும் சமஸ்கிருதப் படிப்பை விருத்தி செய்யவேண்டு மென்று பேசுகின்றனர்.

இவ்வாறு செய்வதில் உள்ள தந்திரத்தையும் யோசித்துப் பாருங்கள். ஆங்கிலப் படிப்பினால் விஞ்ஞான அறிவும், பிறநாட்டு நாகரிகங்களும், சுதந்திர உணர்ச்சியும் உண்டான காரணத்தால் தான் இன்று பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தே மேற்கூறியவாறு பிரச்சாரஞ் செய்கின்றனர் என்று கூறுவதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்கிறோம்.

இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும், கூறி வைதிக அரசியல் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

சென்ற சில தினங்களுக்கு முன் குருவாயூர் கோயில் சத்தியாக்கிரகத்தைக் கண்டிக்க முன்வந்த, திரு.எம்.கே. ஆச்சாரியார், "கோயில் பிரவேசஞ் செய்ய விரும்பு கிறவர்கள், மத பக்தியினால், சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் செல்லவேண்டும் என்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமவுரிமை வேண்டும் என்பதற்காகவே கோயிற்பிரவேசம் விரும்புகின்றனர்.ஆகையால் அதைத் தடுக்க வேண்டும்" என்ற அபிப் பிராயத்தை வெளியிட்டிருந்தார். இதிலும், எப்படியாவது, மததர்மம் அழியாமல் காப்பாற்றப்பட  வேண்டும் என்ற அபிப்பிராயம் அடங்கியிருப்பதைக் காணலாம். 'மத தர்மத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கலாம்' என்ற அபிப்பிராயத்தையும் அவரே ஒப்புக் கொண்டி ருக்கிறார். இதிலிருந்து மத தர்மம், ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால் எந்த வகையிலும் பிராமணியம் அழியாமல் நிலைக்கும் என்பது தான் அவர் கருத்து என்பதை அறியலாம்.

ஆனால், மத தர்மம் ஒப்புக் கொள்ளப்படும் போது, எல்லாவகுப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமை எப்படி ஏற்படும் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இன்னார் கோயிலுக்குள் போகலாம், இன்னார் கோயிலுக்குள் போகக்கூடாது என்பதற்கும் அந்தப் பாழும்மத தர்மந்தானே காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, திரு.ஆச்சாரியார் கூறும்மத தர்மத்தையும், பிராமண சபையார் பிரசாரம் செய்யும் மத தர்மத்தையும் எவ்வாறு நாம் ஒப்புக் கொள்ள முடியும்? ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்றே கூறுகின்றோம்.

ஆகையால், பார்ப்பனர்கள் செய்யும், எல்லாப் பிரச் சாரங்களும், மதத்தையும், மத தர்மத்தையும், அதன் மூலம் வருணாசிரம தருமத்தையும், பார்ப்பனியத் தையும் காப்பாற்றவே செய்யப்படும் பிரசாரங்களே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கை செய்கிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் - 29.11.1931