ஞாயிறு, 19 மார்ச், 2023

திராவிடர் இயக்கமும் ‘தினசரியும்'!

 

திராவிடர் இயக்கம் இன்று தமிழ்நாட்டில் மற்ற எந்த இயக்கத்திற்கும் தாழ்ந்ததாக இல்லாமல், மிக்க உணர்ச்சியுடன் பொது மக்கள் கவனத்தைக் கவர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது.

இதற்குக் காரணம் இயக்கப் பிரச்சாரம். எவ்வித சுயநலக் கலப்பும் இல்லாமல் மக்கள் முன்னேற்றத்தைக் கருதியும், எவ ரும் ஆட்சேபிக்கவோ சந்தேகிக்கவோ முடியாத கொள்கைகளைக் கொண்டும், எவரின் ஒப்புதலும் இருந்து தீரும்படியான திட்டங்களைக் கொண்டும் நடப்பதாலும், இயக்கத் தலைவர் பெரியார் தனது வாழ் நாளை உண்மையில் இயக்கத்திற்கு ஒப்பு வித்து, தானே இயக்கமாக கருதிக் கொண்டு மற்றவர்கள் இஷ்டப்படி நடக்காமல் தன் திருப்திப்படி இயக்கத்தை நடத்தி வருவதி னாலேயாகும். அதோடு கூடச் சுயநலத்துக் காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இயக்கத்திற்குக் கெட்டபெயரும், இயக்கத் தின் பரிசுத்தத் தன்மையில் மக்களுக்கு சந் தேகமோ, பேச்சுக்கிடமோ கொடுக்கும்படி யானவர்களை அவர்கள் எப்படிப்பட்டவர் களாய் இருந்தாலும் லட்சியம் செய்யாமலும், அவர்களுக்கு இயக்கத்தில் நல்ல இடமில் லாமலும் செய்து துணிவோடு உதறித் தள்ளி விட்டு, உள்ளதைக் கொண்டு கவலையோடு தொண்டாற்றுவதேயாகும்.

அதோடு மாத்திரமல்லாமல் இன்று இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக் கும் தொண்டாற்றுவது தான் நம் கடமையே தவிர மற்றபடி நமக்கு வேறு கடமை இயக் கத்தில் இல்லை என்று கருதும் படியான அளவுக்குத் தொண்டர்கள் ஏராளமாக இருப்பதும் அவர்களது நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் பெரியார் பெற்றிருப் பதுமாகும்.

இப்படிப்பட்ட இயக்கம் இன்று பெரியா ரின் பேச்சின் பயனை மாத்திரமே அல்லா மல் அவரது எழுத்தின் பயனைச் சரியான படி மக்கள் அடைவதற்கில்லாமல் குறைபட வேண்டி இருக்கிறது.

குடிஅரசில் பெரியார் எழுத்து முன் போல் உணர்ச்சியும், எழுச்சியும் ஊட்டும் படியாகவும் புதிய விஷயங்களைக் காட் டும்படியாகவும் காணமுடிவதில்லை. பழைய செல்வாக்கைக் கொண்டு குடிஅரசு நடக்கிறதென்பதல்லாமல் அது புதிய சங்கதிகளுக்கும் புதிய கவர்ச்சிக்கும் பயன் படும் மாதிரியாக இருக்கவில்லை. இயக்க சேதிப்பத்திரிகையென்று சொல்லும் படியா கவே அது பெரிதும் இருக்கிறது. அது கருத் துப் பத்திரிகையாக முன்போல் நடந்து வரு மானால் இன்றைய தமிழ்நாட்டின் நிலை வேறு மாதிரியாக இருந்திருக்குமென்ப தோடு இனியும் அதிகமாக இளைஞர்களைக் கவர்ந்திருக்குமெனலாம்.

பெரியாருக்கு இப்போது சுற்றுப் பிரயா ணம் அதிகமாகிவிட்டது. ஏனெனில் பேச் சுக்கு ஆளில்லாமல் போனதே இதற்குக் காரணம், மக்கள் எந்தக் கூட்டத்திற்கும் ஒரு பிரதம பேச்சாளரையும், ஒன்று இரண்டு உபபேச்சாளரையும்தான் விரும்பு கிறார்கள். பெரிதும் பிரதம பேச்சாளரைக் கருதியே கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள். இல்லாவிட்டால் அது விமரிசையான கூட் டமாய் இல்லாமல் சடங்குக் கூட்டமாகப் பாவிக்கப்பட்டு விடுகிறது. ஆகவே திரா விடர் இயக்கத்திற்கு இன்று பெரியாரைத் தவிர பிரதம பேச்சாளர் என்பவர்கள் கிட் டத்தட்ட அடியோடு கிடைப்பது இல்லை என்றே சொல்லலாம். இருப்பதாகச் சிலர் தங்களையே எண்ணிக் கொண்டிருப்பார் கள். பலர் வேறு சிலரையும் குறிப்பார்கள். அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள் எண்ணிக் கொண்டி ருக்கவும், குறிப்பிடப்படவுந்தான் கூடிய தாக இருக்கிறதே தவிர காரியத்தில் தேவைக்கேற்றபடி பயன்படத்தக்கவர் மிக அரிதாக இருக்கிறது.

ஏனெனில் அழைப்புக்கு பதில் எழுது வதில்லை, சிலர் அழைப்பை ஏற்றுக் கொள் வதில்லை, சிலர் ஏற்றுக் கொண்டு காரியம் நடத்த அனுமதி அளித்துவிட்டுப் போகாமல் ஏமாற்றம் அளித்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். சிலர் அழைப்பை ஏற்றுக் காரியம் நடத்த, விளம்பரப்படுத்த அனுமதி கொடுத்து விட்டுப் போகாமல் இருந்து விடுகிறார்கள். சிலர் ஒப்புக்கொண்டு போகவரச் செலவுக் குப் பணமும் தாராளமாய்ப் பெற்றுக் கொண்டு கூட்டத்திற்குப் போகாமலே இருந்து விடுவதோடு, மக்கள் ஏமாற்றம் அடையும் படியும் அழைத்தவர்களை அவமதித்தும் விடுகிறார்கள். சிலர் இதை அதிகமாய், மனதறிந்தே கையாளுகிறார் கள்.  இக்காரணங்களால் இயக்கத்திற்கு ஏற்படும் கெடுதியை மக்கள் அதிருப்தியை சமாளிக்க எதிர்பாராத நிலையில் திடீ ரென்று நேரில் வந்து அழைத்தவுடன் ஓடவும், சில இடங்களுக்கு வேறு யாரும் வரவில்லை, மக்கள் ஏமாற்றம் அடை வார்கள் என்று தெரிந்த உடன் கூப்பிடா மலும் விழுந்தடித்து ஓடவும் வேண்டிய அவசியத்திற்கும் அவசரத்திற்கும் பெரியார் ஆளாக வேண்டி இருக்கிறது. பிரதம பேச்சாளர் என்பவர்களின் சங்கதி இப்படி என்றால், உபபேச்சாளர்கள் சங்கதி இன்று இம்மாதிரி குற்றம் சொல்லுவதற்கு இல்லை என்றாலும், சிலர் தகுதிக்கு மேலால் தங்கள் சவுகரியத்தை எதிர்பார்ப்பதால், சிற்சில சமயங்களில் சலிப்படைய வேண்டி யவர்களாகிவிடுகிறார்கள். சிலர் பிரதமப் பேச்சாளர்கள் என்பவர்களைப் போலவே தங்களையும் பாவிக்கவில்லையே என்று சங்கடப்பட்டு சலிப்படைந்து விடுகிறார்கள். சிலர் தாங்கள் அழைக்கப்பட்ட இடம் குதிரை வண்டியிலோ, கட்டை வண்டி யிலோ செல்ல வேண்டியிருந்தால், ஓடியும் மறைந்தும் கொள்கிறார்கள் எனினும் இவை இயற்கை எனலாம். ஏனெனில் இப் படிப்பட்டவர்கள் சிறுவர்கள்; உலக அனு பவம் இல்லாதவர்கள்; ஆதலால் இது முன் னையதைப் போல அவ்வளவு மோசமான தல்ல என்றாலும், இவையெல்லாம் சேர்ந்து இயக்கம், தான் அடைய வேண்டிய உண் மையான நியாயமான வளர்ச்சியும் மேன் மையும் அடையத் தடையாகிவிடுகிறது. இதனாலும் பெரியார் தனது சுற்றுப் பிராயணத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதனால் அடிக்கடி உடல்நிலைத் தொல்லை கொடுக்க நேரிடுகிறது. ஆகவே இந்தக் காரணங்களால் பெரியாருக்கு அவசரமும், நடப்பு விஷயங்களைப் பற்றியதுமான எழுத்து வேலை, கொள்கைகள், திட்டங்கள் பற்றிய கட்டுரைகள், கருத்துக்கள், சம்பாஷ ணைகள் எழுத நேரமும் வசதியுமில்லாமல் போய்விடுகிறது. வேறு பத்திரிகை நம் இயக்கத்திற்கென்றே இருக்கின்றது என்றா லும், அது புதிய கருத்துகளையும் அரிய கருத்துகளையும் கொள்ளத்தயங்குவ தில்லை. என்றாலும் பாமர மக்களை மன திற்கொள்ளாமல் அறிஞர்களைக் கவர்ச்சி செய்யும் தன்மையில் விளங்குகிறது. அது வும் வேண்டியதே என்றாலும், பாமர மக்க ளிடம்தான் நம் இயக்கத்திற்கு பெரிதும் வேலை இருப்பதால், அதை முக்கியமா கவும் அறிஞர்களை அடுத்தபடியும் நோக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் விடுதலை தினசரியும் ஏற்பட்டுவிட்டால் அதைக் கவனிக்க ஆட்கள் எங்கே என்ற பிரச்சினை எழுகிறது.

இயக்கத்திற்கு இன்று முழு நேரத் தோழர்கள் எத்தனை பெயர்கள் இருக் கிறார்கள் என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கிடக்கூட மிக்க கஷ்டப்பட வேண்டி இருக்கும். இந்த எண்ணிக்கைக்கும் இவர்களுக்கு இயக்கம் சிறிதாவது ஆதரவு செய்ய வேண்டும்; வழி காட்டுதல் செய்ய வேண்டும் என்கின்ற தேவை அடியோடு இல்லை என்று சொல்ல முடியாது.

ஆகவே, கட்டுப்பாடாக உணர்ச்சியும் ஆர்வமும் உள்ள நல்ல இளைஞர்கள் இயக்கத்திற்கென்றே முழு நேரம் வேலை செய்ய வேண்டியவர்கள் வேண்டியிருக் கிறது. அவர்களுக்கு இயக்கத்தில் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும், அவர்களும், இயக்கத்தில் உள்ள முழு நேரப் பிரமுகர் களும் மாதத்தில் 20 நாட்களுக்குக் குறையா மல் சுற்றுப் பிராயணம் செய்தாக வேண்டும். ஒழுங்கு முறைப்படி திட்டங்கள் போட்டுக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுக்கு இணங்கி தொண்டாற்றுகிறவர்களும், நீதி யாய் நடந்து கொள்ளுகிறவர்களும் இயக் கத்தால் ஆதரவு எதிர்பார்க்கலாம். இயக்க மும் அவர்களுக்கு தோழர் வேதாசலம் அவர்கள் தலைமையில் ஆதரவளிக்கும்.

இதை ஏன் எழுதுகிறோம் என்றால் 1946ஆம் வருடம் மிக்க குறிப்பிடத்தக்க ஆண்டாகும். இதில் பெரியதொரு தொண்டை திராவிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

1947இல் நம் இயக்கம் இருக்குமா அழிக்கப்பட்டுவிடுமா என்று இரண்டி லொன்றைக் காணக் காத்திருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த ஒரு ஆண்டையாவது கட்டுப்பாடு, ஒழுங்கு, உண்மையான கவலை, உண்மைத் தொண்டு ஆகியவைகளோடு செயலாற்றிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையா லேயே இதை எழுத வேண்டியது அவசிய மாயிற்று.

இதுவரையிலும் கூட இயக்கம் பெரிதும் அப்படியேதான் நடந்து வந்திருக்கிறது என்றாலும், இவ்வாண்டு இவைகள் சிறிது அதிகமான தன்மையுடன் நடக்க வேண்டி யிருக்கிறது. இந்தக் காரியத்திற்கு ஒரு தினசரி அவசியம். விடுதலை தினசரி நடத் தப் பல தோழர்கள் உண்மையில் ஆத்திர மாக இருக்கிறார்கள். அதற்கும் பல கவ னிப்பு வேண்டி இருக்கிறது; பொருள் தேவை இருக்கிறது; ஆள்கள் தேவை இருக்கிறது ஆகிய இவைகள் எல்லாம் சரியாக, கண்டிப்பாக இருந்தாலொழிய இனி இயக்கத்தை நடத்துவது தக்க பலனளிப்பதாக இருக்க முடியாது ஆதலால் பொறுப்பாளிகள் முன்வர வேண்டுகிறோம்.

குறிப்பு : இத்துணைத் தலையங்கம் பெரியார் பற்றி மூன்றாம் நிலையில் குறிப் பிடப்பட்டிருந்தாலும் அவர்களே எழுதிய அறிக்கையே இது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. 

- 'குடிஅரசு' - துணைத்தலையங்கம் 

- 05.01.1946


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக