சனி, 7 பிப்ரவரி, 2026

திராவிடர்-ஏன்? - தந்தை பெரியார்-

 


தாய்மார்களே தோழர்களே!


நாம் இந்த நாட்டில் உரிமை உடைய மக்களாயிருந்தும் சந்தாயத்தில் இழிந்தவர்களாகவும் பொருளாதாரத்தில் தாழ்த்தப் பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம்! இதை மாற்றவேண்டிய முயற்சிகள் பல நடத்தும், நம் நிலையியே சிறிதும் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. காரணம் என்னவென்று யோசித்தோம். முன்னேற்றம் அடைத்துள்ள நாட்டாரைப் பார்த்தோம். அதன்படி எந்த ஒரு நாட்டு மக்களும் அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்தவருக்குப் பொது உளர்ச்சியையும், ஒற்றுமை மனப் பான்மையையும் உண்டாக்க கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச் சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது. அதே சமயத்தில் நம் நிலையைச் சிந்தித்துப் பார்த்தபோது இந்து: இந்தியர்; இந்தியா' என்று நமக்குப் புரியாத சொற்களை - நமக்குச் சம்பந்தமில்லாத மொழிகளைச் சொல்லிக் கொண்டு வந்தோமே தவிர, உண்மையான ஒன்றுமை ஏற்படத்தக்க முறையைக் கையாள வேண்டுமே என்ற சிந்தனை நம் தலைவர்களுக்குள் ஏற்படவே இல்லை. நமது நாடு என்பதன் பெயராலோ, அல்லது சமுதாயம் என்பதன் பெயராலோ. அன்றிச் சமயம் அல்லது கொள்கை என்பதன் பெயராலோ தம் மக்களுக்குள்ளே ஒரு பொது உணர்ச்சி இல்லை. அத்தகைய மக்கள் எதைக் கொண்டு முன்னேற்றமடைய முடியும்?


ஆரியர்களும்,முஸ்லிம்களும் நம்மோடு வாழ்ந்துவருபவர்கள் தாம். ஆனால், அவர்களுடைய முன்னேற்றம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருகிறது. சமயத்தின் பெயராய் முஸ்லிம்களும், இனத்தின் பெயரால் ஆரியர்களும் ஒன்றுபட்டு விட்டனர். உலகம் பூராவிலுள்ள முஸ்லிம்கள் ஒரே சமூகம் என்ற உணர்ச்சியும் இமயம் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள 'பிராமணர்கள்' ஒன்று என்ற உணர்ச்சியும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.


திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை 'திராவிடர்' என்றும்; 'இந்தியா' இந்தியர்: 'இந்து' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இந்து என்று வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள். இதிகாசங்கன், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ் வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம்.


நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட குழச்சியே 'இந்து' என்பதாகும். இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அவற்றில்கூட 'இந்தியா' என்பதோ 'இந்து' என்பதோ, இந்தியர்' என்பதோ காணப்படவில்லை.


500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மை குறித்துத் 'திராவிடர்' என்றே எழுதப்பட்டி ருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்த்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம். அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும் அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக்கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே இந்து என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா. இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.


பார்ப்பனரல்லாதார் என்று நம்மைநாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும். நாம் திராவிடர்; எதிரிகள், வேண்டுபானால் 'திராவிடால்லாதார்' என்று சொல்லிக் கொள்ளட்டுமே!


சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்து வரும் பழம் பண்டிதர்கள் இயயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்துபோகட்டும்: அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?


தமிழர்களாகிய நாம், "திராவிட நாடு திராவிட்ருக்கே' வேண்டுமென்பதில் முனைத்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக் காரன் தன்ணையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்துகொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இளம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து தம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும். 


(வால்குடியில், 23.5.1944-ல் சொற்பொழிவு - குடியரசு 3.6.1944)


- விடுதலை நாளேடு 29.11.1991