நான் சிந்திக்கத் துவங்கியதே தந்தை பெரியாரின் எழுத்துகளைப் படித்துத்தான். தமிழ்ப் பெண்கள் மீது கலாச்சாரத்தின் பெயரால் வீசப்பட்ட பூமாலைகளைக் கழற்றி வீசச் சொன்னர்.
தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பெரியார் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவரது பல கருத்துகள் நவீனமானவை. பொருத்தமானதும், எல்லாக் காலத்துக்கும் வளமையானதும் கூட.
பெரியாரின் கருத்துகள் அடிப்படை மனித உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் நோக்கியவை. ஆனால் இன்று அவரது சிந்தனைகள் ஓர் ஆரோக்கியமான மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படும்போது மேலும் செழுமை ஏறும். சாதியும் மதமும் தன் கோர முகத்தைக் காட்டிய காலத்திலேயே தன் சிந்தனைகளால் அதை உடைத்துப் போட்டவர் நம் பெரியார்!
- கவிஞர் கனிமொழி
(ஆனந்த விகடனில். 23.10.2005)
- உண்மை இதழ், 1-15.11.2005
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக