சனி, 19 ஆகஸ்ட், 2017

வைதீகப் பிராமணர்களே விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள்!


யாகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் பிரா மணர்கள். அதனாலேயே சமீபத்தில் காஞ்சீபுரத்தில் பசுபதியாகம் 3000 ரூபாய் செலவில் செய்யப்பட்டதைக் கேட்டு சகிக்க முடியாத ஆனந்தம் அடைந்தேன். 

யாகத்தில் கொல்லப்பட்ட அதுவும், சித்திர வதையோடு நசுக்கிப் பிசைந்து கொல்லப்பட்ட 8 ஆடுகளும் சுகமாக மோட்சலோகத்தில்  வாழ்ந்திருக்கும், ஆடுகள் செய்த புண்ணி யமே புண்ணியம்! பிராமணர்களின் கருணையே கருணை! இதற்காக பொருளுதவி செய்தவர்களின் ஈகையே ஈகை! நிற்க, பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வ தென்ன வென்றால் இக்காலத்தில் நமது நாட்டில் விதவைகள் அதிகமாய் விட்டார்கள். 

அவர்களுக்கு மறு விவாகம் செய்ய வேண்டும் என்று சுயமரியாதைச் சங்கத்தார் சொன்னாலும், வைதீகப் பிராமணர்கள் வேதத் திற்கு விரோதம் என்று தடுக்கிறார்கள். வித வைகள் இப்போது உலகத்தில் ஏராளமாக இருப்பதால் அவர்களின் நலத்தின் பொருட்டு கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தில் விதித் துள்ளபடி பவுண்டரீக யாகத்தைச் செய்து வைப்பார்களானால், விதவைகள் எவ்வளவோ சந்தோஷ மடைவார்கள். புண்ணியமும் உண்டு. சாஸ்திரத்திற்கும் சம்மதம். ஆகையால் காருண்ய புருஷர்களாகிய பிராமணோத்தமர் களே!  பூதேவர்கள் என்னும் புண்ணிய வான்களே! இந்த பவுண்டரீக யாகத்தைச் செய்து உலகம் ஷேமம் அடையும்படிச் செய்யுங்கள்.

இங்கு யாகத்தையும் வேகத்தையும் ஒப்புக் கொள்ளும் விதவைகளை மாத்திரம் குறிப் பிட்டது ஏனென்றால், பார்ப்பனரல்லாதார் களுக்கு யாகத்தில் நம்பிக்கை கிடையாது. இதுவரையில் பார்ப்பனரல்லாதவர்களில் ஒருவ ராவது யாகத்தைச் செய்ததில்லை. வேதங்களை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனரல்லாதவர்கள் கூட வேதத்தில் சொல்லப்பட்ட இந்த யாகங் களை ஒப்புக் கொள்வதில்லை. ஆகையால் யாகம் என்னும் மகா புண்ணிய காரியம் மனிதர்களில் உயர்ந்தவர்களாகிய பிராமணர் களுக்குத் தான் உரியது. ஆகவே பவுண்டரீக யாகமும் உரியதாகும். 
இதுபற்றித்தான் அதை நம்பும் விதவை களின் ஷேமத்தைக் கோரி இந்த யாகத்தைச் செய்யும் படி வைதீக பிராமணர்களை வணக்க மாகக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சமயம் இக்காலத்தில் பவுண்டரீக யாகம் ஒப்புக் கொள்ள முடியாதென்றால் விதவைகளுக்கு மறுமணம் செய்யவாவது ஒப்புக் கொள்ள வேண்டும். 

இதன் மூலம் நான் கேட்டதென்னவென்றால் விதவைகளுக்கு மறுமணம் செய்யலாம் என்பதையாகிலும் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது பவுண்டரீக யாகத்தையாகிலும் தினந் தோறும் ஆயிரக்கணக்காக நடத்தி வைக்க வேண்டும் என்பதேயாகும். இரண்டில் ஏதாவா தொன்றை செய்யுங்கள்.

(குடிஅரசு - 1929)
°விடுதலை,11.8.17

நல்ல வர்க்கம் சித்திரபுத்திரன்



நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடு வதிலோ, நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைக் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத் தனப்படுவதைப் பா£க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கிறவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாகவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவுமே முடிந்து விடுகின்றது. 
அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமுமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக் குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப் பட்டம் பூர்த்தியாவ தில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கிவிடுகின்றது. அப் பிரபுக்களின் மனைவிமார்கள் ஐயோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌர வத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலை மீதும், தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரி பண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ அல்லது மோட்டார் டிரை வருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிடுகின்றது.

இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல்கார னுக்குப் பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான். 

என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்றதனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

(குடி அரசு - 1929)

-விடுதலை,11.8.18

புதன், 9 ஆகஸ்ட், 2017

ஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்!

தந்தை பெரியார்

உங்களில் எத்தனையோ பேர் யோக்கியர்களாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கலாம்! அப்பேர்ப்பட்டவர்களாவது, பூணூலை அறுத்து, நெருப்பில் போடாவிட்டாலும், உங்கள் வீட்டில் துணி உலர்த்தவாவது கட்டிவையுங்கள்! உங்கள் விலாசத்தை மட்டும் எனக்கு அனுப்பினால் போதும்!


ஆவணி அவிட்டத்தன்று பூணூல் போடுவதைத் தான் கேட்டிருக்கிறேன், ஆரியர்களும் அவர்கள் சீடர்களும்! ஆனால் நம் தோழர்கள் அதே நாளில் தங்கள் பூணூல்களை அறுத்து விட்டார்களாம்! இது ஒரு மாதிரியான கொண்டாட்டந்தான்! ஆரிய அடிமைச் சின்னங்களில் முதல்தரமான இந்தப் பூணூலை அறுத்தெறிவதற்கு ஆவணி அவிட்டம் வருகிற வரையிலா இவர்கள் காத்திருக்க வேண்டும்? நெற்றியிலிருக்கும் விபூதியையோ, நாமத்தையோ அழிப்பது போலவே, எந்த நிமிஷத்தில் நினைக்கி றோமோ அந்த நிமிஷத்திலேயே பூணூலை அறுத் தெறிய வேண்டியது தானே!

ஓஹோ! விஷயம் புரிகிறது! நம் தோழர்கள் சப்பையானவர்களா? ஆவணி அவிட்டத்தன்று ஏன் அறுத்திருக்கிறார்கள் தெரியுமா? அந்த நாள் ஆயுள் முழுவதும் ஞாபகத்திலிருக்க வேண்டுமே, அதற்காகத்தான்! அதுமட்டுமல்ல! "ஓய்! பிராம ணரே! ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்! எல் லோரும் சகோதரர்கள்! என்ற வாய்ச் சவடால் அடிக்கிறீரே! உம் தோளிலுள்ள பூணூலை மட்டும் அறுத்தெறியாமலிருக்கிறீரே!"

என்று யாராவதொரு காங்கிரஸ்காரரைப் பார்த் துக் கேட்க வேண்டியிருக்கும். அப்போது அவர் கேட்பார், "நீர் செட்டியார்தானே! பூணூல் உண்டே! நீர் மட்டும் போட்டுக் கொள்ளலாமா!" என்று.

"அட பைத்தியக்காரரே! நானும் இன்னும் 20 பேரும் சேர்ந்து 1946ஆம் வருஷத்து ஆவணி அவிட்டத்தன்றைக்கே அறுத்தெரிந்து விட்டோம்! இது தெரியாதா?

"விடுதலை"ப் பத்திரிகை படித்தால்தானே இதெல்லாம் தெரியும்?" என்று கூறலாமல்லவா?

பார்ப்பனத் தோழர்களுக்கு ஒரு வார்த்தை, பூணூலின் தத்துவம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ? நான் சொல்லுகிறேன். கேளுங்கள்! மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் கட்டுப் படுத்துவதன் சின்னமாகவே முப்புரிகளைக் கொண்ட பூணூல் அணியப்படுகிறது என்கிறது உங் கள் சாஸ்திரம்! ஆனால், உங்களில் எத்தனைபேர் இம்முன்றையும் கட்டுப்படுத்தியவர்கள்? அல்லது கட்டுப்படுத்த முயன்றவர்கள்? அல்லது முயன்று வெற்றி பெற்றவர்கள்?

'இராஜபார்ட்' போட்டுக் கொண்டு நாடகத்தில் நடிப்பவன் மறுநாள் காலையில் அரை "கப்" காப்பிக்கு அலைச்சலாய் அலைகின்றான், பாவம்! அது இராத்திரி வேடம்! ஆனால் நீங்கள் போடுவது பகல் வேடமல்லவா?

உங்களில் எத்தனையோ பேர் யோக்கியர்களாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கலாம்! அப்பேர்ப்பட்டவர்களாவது, பூணூலை அறுத்து, நெருப்பில் போடாவிட்டாலும், உங்கள் வீட்டில் துணி உலர்த்தவாவது கட்டிவையுங்கள்! உங்கள் விலாசத்தை மட்டும் எனக்கு அனுப்பினால் போதும்!

அந்நிய நாட்டுத் துணியை அவிழ்த்து நெருப் பில் வீசிய தேசபக்தர் பிராமணர்களுக்கு, இது ஒரு பிரமாதமான காரியமாயிருக்க முடியாதே! ஒருக்கால் இப்படிச் செய்வதற்கு நடுக்கமாயிருக்கி றதோ? அப்படியானால், கண்ணை இறுக்கி மூடிக் கொண்டு உங்களுக்குத் தோழராயுள்ள ஒரு சுயமரியாதைக்காரரைக் கூப்பிட்டுச் செய்யச் சொல்லுங்களேன்! அவர்கள் பூணூல், விபூதி, ருத்திராட்சம், நாமம் இந்த வேடங்களைக் களைந் தெறிவதில் வீரர்கள்! ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்!

இவர்கள் ஹிந்து சமூதாயத்தின் டாக்டர்கள்! நீங்கள் விரும்பிக் கூப்பிட்டால் உதவிக்கு வரு வார்கள்! டாக்டர்கள் கட்டியை அறுப்பது போல, பூணூலை மட்டுமல்ல, குருட்டு நம்பிக்கைகள் எதையும் ஒரே நிமிடத்தில் அறுத்தெறிவார்கள்! உதவி தேவையானால், கூப்பிடுங்கள்! சகுனம் பார்க்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. சுமார் 20 வருஷங்களாவே கிடையாது. அதற்கு முன்புகூட அவ்வளவு கண்டிப்பாய் இருந்ததாக ஞாபகமில்லை. உங்களில் எத்தனைபேர் சகுனம் பார்க்கிறீர்களோ எனக்குத் தெரியாது.

ஒற்றைப் பிராமணன் எதிரே வந்தால் கெட்ட சகுனமாம்; இரட்டைப் பிராமணன் வந்தால் நல்ல சகுனமாம்! பார்ப்பான் தனியே வந்தால் எதிரிகள் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்திருந்த அந்தக் காலத்தில் ஏற்பட்டது தானே! ஒருவருக்கு இருவராயிருந்தால் ஏதோ கொஞ்சம் தைரியமாகவாவது இருக்காதா என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம்!

காலந்தான் மாறிவிட்டதே! எத்தனை பிராமணர் கள் சேர்ந்து வந்தால் தான் இன்று என்ன செய்ய முடியும்! ஒன்று மூவர்ணக்கொடி பிடித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது பிரிட்டிஷ் துப்பாக்கிக்குப் பின்னால் வரவேண்டும்! அல்லது "கடவுள்" என்ற "அணுக்குண்டு"க்கு முன்னால் வேதம் படித்துக் கொண்டு வரவேண்டும்! அல்லது கம்பர் மகாநாட்டு ஊர்வலத்தின் நடுவில் வரவேண்டும்!

இன்னொரு நல்ல சகுனமிருக்கிறது, பஞ்சாங்கத்தில்! சகுனத்தில் நம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால், கட்டாயம் கவனித்து ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். அது என்ன தெரியுமா? புலி இடமிருந்து வலமாகப் போனால் நல்ல சகுணமாம்! யாருக்கு நல்ல சகுணம்? புலிக்கா சகுனம் பார்த்துப் போகிறவனுக்கா, என்று பஞ்சாங்கத்தில் கூறவில்லை! "நாமாகக் கட்டாயப்படுத்திச் செய்யக்கூடாது என்று சகுன நம்பிக்கைக்காரர்கள் சொல்லுவார்கள். அப்படியானால், புலிகள் தாராளமாக நடமாடும் பகுதிகளுக்காவது போய் பரீட்சைப் பார்த்து வரச் சொன்னால்தான் நல்லது! நம் முன்னோர்கள் எழுதியதெல்லாம் பொய்யாகாது! சும்மா போய் வரச் சொல்லுங்கள்! அல்லது போகச் சொல்லுங்கள்!

"காலி மணிபர்ஸ்" என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "குடிஅரசு" - 07.09.1946
-விடுதலை,6.8.17

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

காலத்திற்கேற்ப வாழுங்கள்


தந்தை பெரியார்




இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில்களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டிருக்குமா?
நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன். இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?


நம் கழகமும், நமது முயற்சியும், பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.

பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற் றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம்.
இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது மூளை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர் களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந்திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படியிருக்கிறது.

நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம் நம்மில் 100க்கு 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும் கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இலலை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கலைப்படு வதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர் களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய் விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. நம் வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வது தான் நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து விட்டது.

நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.

நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம்.

நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.

நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாத வர்களாக ஆக்கிவிட்டன.

ஆகையால், நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களையடைய வேண்டும்.

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்ன வென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ் டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப் படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவை களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவை களுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை  மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?

நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில் களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறு மான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா?

நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணரு கின்றீர்களா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக் கிறதா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப் படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக் கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?

ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல் லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்ற மடைந்தாக வேண்டும்.

நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப் பட்டவை, அல்லது கண்டுபிடிக்கப்பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை. நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக் கப்பட்டதாகும். நமது ஒழுக்கம் நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக் கேற்ப ஏற்பட்டவையாகும்.

இன்று காலம் மாறிவிட்டது, இயற்கை கூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டன. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000ஆம் 5000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாக வேண்டும். இன்று எந்த ஒருஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள் மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண் டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக் கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிட மாவது உண்டா? நான் மதத்தின் மீது, கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ள வர்களால் அவை சிருஷ்டிக்கப் பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்.

இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்பதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வர வெட்கப்படு கிறார்கள்.

உதாரணமாக இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.

இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக் கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே அக்காலத்தில் கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?

கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிராயணத்தை நீங்கள் விரும்பவில்லையா?

ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதி கால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப் பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.

காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.

தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு,
(குடிஅரசு 15.1.1949

-விடுதலை,30.7.17