புதன், 3 ஜனவரி, 2018

“கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்”

ரமணி மோகனகிருஷ்ணன்

டிசம்பர் 24, 2017 தந்தை பெரியாரின் 44 ஆவது நினைவு நாள். தமிழ்நாட்டின் சிந்தனை முறையை மாற்றியதில் பெரியாருக்கு மிகப் பெரிய பங்குண்டு. சாதிய, பெண்ணிய, மதவாத கருத்துகளின் அடிப் படைகளை எதிர்த்து துணிவோடு கேள்விகளை எழுப்பியவர்.  அந்தப் போக்கு அவரைப் பின் தொடர்ந்தவர்களிடமும், பொதுச் சமூகத்திடமும் பரவியது. அதன் நீட்சியாகவே வட இந்தியாவை விட, தமிழகம் மாற்றுக் கருத்துகளை உரையாடும் தன்மையோடு விளங்குகிறது. சமூகத்தின்பால் அக் கறையோடு இயங்கி வருபவர்களில் சிலரிடம் தங்கள் வாழ்க்கையில் பெரியார் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றிக் கேட்டோம். 

கவிஞர், பாடலாசிரியர் உமாதேவி



“என்னுடைய அண் ணன் பெரியாரைத் தொடர்ந்து வாசிப்பார். எனக்கு, பெரியார் பற்றிய அறிமுகத்தை அப்பாதான் தந்தார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதுதான் பெரி யார் சிந்தனைகள் நூலைப் படித்தேன். எங்கள் அப்பா அம்மாவின் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம். ஆனால், அன்றாடப் பிழைப்புக்கு அல்லல்படுகையில் அரசியல் பெரிதாய் ஒட்டாமல் இருந்தது. பெரியார் சிந்தனைகளைப் படித்த பிறகு, ‘பெண் ஏன் அடிமையானாள்?’ போன்ற சுயமரியாதை வெளியீடுகளை வாங்கிப் படிப்பேன். இவற்றின் தாக் கத்தால் பெரியாரை ஒரு புகைப்படமாக மட்டுமே கடந்து போக முடியவில்லை. அவரின் எழுத்துகள், சுயமரியாதைச் சிந்தனைகளைப் புகட்டுவதாகவே எப்போதும் இருக்கும். அன்னை மீனாம்பாள் போற்றிய பெண்களுக்கான தலைவர் பெரியார். அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்பேத்கரின் தலைவர்.  நவீன இந்தியாவின் உயிர்ப்புள்ள மாற்றுச் சிந்தனையாளர். ஜாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட நினைக்கிறவர்களுக்கு, பெரியாரே மிகச் சிறந்த வழிகாட்டி. பவுத்தத்தை அம்பேத்கர் சமய மாக அறிவித்தார். பெரியார் தன் பகுத்தறிவு பார்வை யில் வாழும் வழிமுறையாக எடுத்துரைத்தார். பெரியார் ஒரு லெஜெண்ட்; அம்பேத்கர் ஒரு லெஜெண்ட்; பெரியாரும்- அம்பேத்கரும்- மார்க்சும் பேசியது மானுட விடுதலையை நோக்கியது. அதை எடுத்துக் கொண்டே நாம் ஒட வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நம்மை அடையாளம் காட்டிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறோம். இந்தத் தலைவர்களின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்காமல், புரொஃபைல் படங் களிலும், சட்டைகளிலும், பேனர்களிலும் அவர்களது புகைப்படத்தை வைத்துக் கொள்வதைப் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது அவர்களுடைய கொள்கை களைப் பரப்புவதே!’’

சமூகச் செயற்பாட்டாளர் 
உடுமலை கவுசல்யா



“பெரியார், என்னைச் சாதி ஒழிப்புக்காரியாக வார்த்தெடுத்த தந்தை அவர். இந்த உணர்வும் சேர்ந்து தான் நான் தந்தைபெரியார்என அழைக்கிறேன். தந்தை யாக மட்டுமில்லை, எப்போதும் உடன் பயணிக்கும் தோழராகவும் அவரே உள்ளார்.  சாதி ஒழிப்புக்கு நேர்மையாகப் பங்களிக்க வேண்டுமானால் சமூகம் பெண்ணுக்கென வைத்துள்ள வரையறை களை மீறித்தான் ஆகவேண்டும். பெரியாரைச் செவிவழியாகவும், நூல்கள் வழியாகவும் உள் வாங்கியபோது விடுதலைஉணர்வு என்னை ஆட்கொண்டது. இச்சமுகம் பெண்களுக்கென்று பண்பாட்டுச்சிறைகள் வைத்திருக்கிறது. அவற்றை யெல்லாம் தயக்கம் இல்லாமல் உடைத்து வெளிவர வைத்தது என் தோழர் பெரியார்தான். பெரியாரிடம் ஒருமுறை கூட ஆணாதிக்கத்தனம் வெளிப்பட்டது இல்லை. இப்போதுள்ள ஆண்கள் கூடத் தயங்கும் விஷயங்களை, எந்தத் தயக்கமுமின்றி அன்றே பேசியிருக்கிறார். பெண்களை கிராப் வெட்டிக் கொள்ளுங்கள், ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் தேர்ச்சி பெறுங்கள், குழந்தை பெற்றுத்தரும் கருவிகள் அல்ல, காதலின் பேராலும் சிறைப்படக் கூடாது, காதல் முறிந்த பிறகு, தொடரும் இல்லறம் ஆணாதிக்கம் என்று எந்தக் கட்டுகளுமற்ற சிந்தனைச் சிறகைப் பெண்களுக்குப் பொருத்தியவர். நான் ஒரு அடுப்பங்கரைப் பெண்ணாக, குழந்தைப் பெற்று தரும் கருவியாக, அலங்காரத்திற்குரிய போகப் பொருளாக இருந்து கொண்டே சாதி ஒழிப்பிற்குப் பங்களிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி என்னைச் சிந்திக்கச் செய்தவர். விடுதலைப் பெண்ணாக மாறி சாதியத்திற்கு எதிராக என்னை ஆயுதமாக்கியவர். யாரையும் வெறுக்கக் கூடாது, அனைவரையும் நேசிக்க வேண்டும் என்ற மனிதநேயம் சொல்லி கொடுத்தவர்.பெண்கள் பொதுவாழ்வுக்கு வெளிவர முடிகிறது என்றால் முதன்மை காரணம் இவர்தான் என்பேன்.

சாதி ஒழிப்புக்கு மட்டுமல்ல, பெண் விடுதலையின் அடையாளமும் இந்தக் கிழவன்தான். அவரைச் சுமந்து பழகிய பிறகே கம்பீரமானவளாகவும், வலிமையானவளாகவும் உணர்கிறேன். அவரின் நேர்மையையும் தன்னிழப்பையும் உள்வாங்கிக் கொண்டேன். அந்தத் தன்னிழப்போடு சாதி ஒழிப்பு, பெண் விடுதலைக்கு அவர் காட்டும் அரசியலைத் திறந்த மனதோடும் நேர்மையோடும் கற்கிறேன். அந்தப் பயணம் விடுதலை அரசியலுக்குக் கொண்டு போய் சேர்க்கும் என்றால் அதைத் தயக்கமின்றி முன்னெடுப்பேன். பெரியாரின் அந்த அப்பழுக்கற்ற நேர்மையை இழந்தால் அது பெரியாருக்குப் பெருமை சேர்க்காது. நான் சமரசமில்லாமல் நேர்மையோடு லட்சியப் பயணம் மேற்கொள்வதன் மூலம் பெரியா ருக்குப் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.”

கவிஞர் மாலதி மைத்ரி



“நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது தான் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தைப் படித் தேன். அந்தச் சிறிய தொகுப்புதான் என் வாழ்க்கையையே மாற்றியது. அதற்கு முன்பே 12 வயதிலேயே பெண்கள் எப்படி அடிமையாக நடத்தப்படுகிறார்கள், மதம், கடவுள் ஆகியவை எப்படிச் சமூகத்திலும், ஆண் - பெண்ணிலும் ஏற்றத் தாழ்வுகளை ஏற் படுத்தியிருக்கின்றனஎன்பது குறித்த கேள்வி கள் எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே வரும்.ஆனால்,அவற்றிற்கானவிடைகுடும்பம், சமூகத்தால்தரப்படுவதில்லை.ஏன்அப்படி நடத்துகிறீர்கள்என்பதற்கு,‘பெண்என்றால்அப்படிதான்இருக்கவேண்டும்'என்ற பதில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கான பதில் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகத்தில் இருந்தது. அதைப் படிக்கும் போது என்னைப் போலவே ஒருவர் சிந்திக்கிறாரே என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. அந்தப் புத்தகம் ஒரு மாரல் சப்போர்ட்டாக இருந்தது. நான் சிந்திப்பது, நினைப்பது இந்த உலகத்தைப் பார்ப்பது சரியானதுதான் என்கிற தன்னம்பிக்கையைக் கொடுத்தது பெரியார். வெளியில் பேசுவது, இந்தச் சமூகம் பெண்ணுக்காக உருவாக்கி வைத்திருப்பது எல்லாம் பொய், இதை நம்பக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதன் பின்புதான் நான் என்ன நினைக்கிறேனோ, அதுபடிதான் நடக்க வேண்டும் என்கிற உறுதிகொண்டேன். பெரியார் பேசியவற்றில் விதவை மறுமணமும், திருமண விடுதலையும் கூட இந்தச் சமூகத்தில் இன்னும் இயல்பாகவில்லை. பெரியார் இந்த மொத்த சிஸ்டமும் மாறும் வரை அவசியம் தேவை.

நன்றி: விகடன்.காம்
- விடுதலை நாளேடு, 30.12.17

தேர்தல், ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா? பித்தலாட்ட வியாபாரத்திற்கா?




நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது இந்திய சட்டசபை தானங்களுக்குத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது. சட்டசபைகள் மாயையென்றும்,  அங்கு சென்று மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யமுடியாதென்றும், சட்டசபைகள் அரசாங்கம் தங்களுடைய பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அரண்களென்றும், சட்டசபையில் சர்க் காருடைய வலுவு பிரதிநிதிகள் வலுவைவிட எவ்வளவோ மடங்கு மேல்பட்டதென்றும், அரசாங்கத்தின் வலுவைச் சட்டசபைமூலம் சிறிதாவது அசைக்கக்கூட முடியாதென்றும் தோழர்கள் காந்தியார், தாஸ், நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் மாத்திரமில்லாமல் இன்று சட்டசபைக்குக் காங்கிரசில் மாறலாய் நிற்கும் அபேட்சகர்களுள்பட எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த அபிப்பிராயமானது சட்டசபைக்கு வெளியிலிருந்து கொண்டுசொன்னதென்றுஎண்ணிவிடமுடியாதபடிகாங் கிரஸ் தலைவர்கள்,தியாகிகள்,மேதாவிகள்,பலர் சட்டசபைக் குள் தக்க பலத்துடன் சென்று ஒரு கைபார்த்துவிட்டு வெளியில் வரும்போதும், வந்த பின்பும் சொன்னது என்பதை நாம் வாசகர்களுக்கு நினைப்பூட்ட வேண்டியதில்லை.

அன்றியும்சட்டசபைகளும்,அதற்குள்சென்றுநாம் செய்யக்கூடியகாரியங்களும் அரசாங்கத்தாரால் ஏற்படுத் தப்பட்டு அனுமதிக்கப்பட்டதென்பதும், அங்கு செல்பவர்கள் அதற்குள்ள அதிகார வரம்புக்கும், சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடந்து தீர வேண்டுமென்பதும், அப்படிக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பதன் மூலம் கூட அதனால் அடையக் கூடிய அளவு அதாவது அதிகாரம் இருக்கும் அளவு முழுவதையும் கூட அடைய முடியாதென்பதும், அவற்றிற்கு மேற்பட்டு ஒரு காரியம் கூடச் செய்யச் சட்டப்படி இடமில்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறதென்பதும் பகுத்தறிவுள்ள வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவையெல்லாம் பளிங்கு போல் ஏற்கனவே தெரிந்ததுதான். அதன் பலாபலன்களைப்பற்றி அனுபோகதர்கள் அப்போதே சொல்லி அதையணுகாம லிருந்தார்களென்று சொல்லலாம். இந்த நிலையில் அதா வது காங்கிரஸ்காரர்கள் பகிஷ்கரித்த பிறகு, அதைவிட்டு வந்தபிறகு, வெளியேறின பிறகு அந்தச் சட்டசபைகள் இப்போது ஏதாவது மாறுதலடைந்து விட்டதா?  அல்லது ஏதாவது அங்கு போய்ச் சாதிப்பதற்குத் தகுந்த மாதிரி திருத் தியமைக்கப்பட்டு விட்டதா என்பவைகளைக் கவனித்தாலும் அந்தப்படி ஒன்றும் நடந்து விடவில்லையென்பதும் நன்றாய் விளங்கும்.

அப்படியிருக்க இப்போது திடீரென்று சட்டசபைகளுக்கு அந்தப்படியெல்லாம் பேசிய காங்கிரஸ்காரர்கள் செல்ல வேண்டுமென்று சொல்வதற்கும், அபேட்சகர்களாய் நிற்ப தற்கும் என்ன காரணமென்பதைப் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள்.

ஆகவே நாளது வரையும் காங்கிரஸ்காரர்கள் இந்தப் பிரச்சினைக்கு எந்த  காரணங்களையும் சொன்னதாகத் தெரிய வில்லை. ஆனால் தோழர் காந்தியவர்கள் இம்மாதம் 15ஆம் தேதிதான் காங்கிரசை விட்டு விலகிவிட தீர்மானித்திருப்பது சம்பந்தமாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்ட சபைக்குக் காங்கிரஸ்காரர்கள் போக வேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வாக்கியத்தில் சட்டசபைப் பிரவேச விஷயமாக நான் இதற்குமுன் என்ன சொல்லியிருந்த போதிலும் சரி, காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போக வேண்டியது அவசியமென்று இப்போது கருதுகிறேன். என்று எழுதியிருக்கிறார்.

இதனால் நாம் தெரிந்து கொள்ளக் கூடியதென்னவென்று பார்ப்போமானால் அப்பொழுது எனக்கு இஷ்டமில்லை. இப்போது எனக்கு இஷ்டம் என்று சொல்லுகிறாரென்பதைத் தவிரவேறொன்றும்காணப்படவில்லை.ஆகவேதோழர் காந்திஅவர்கள்ஊரார்செலவில்ஊரார்கஷ்டத்தில் அரசியலில்கிஙிசிஞி படித்து அனுபவம் பெற்று வருகிறா ரென்று தான் இதிலிருந்து கருத வேண்டியிருக்கின்றது. இந்தப்படிக் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போக வேண்டுமென்பதிலும், அங்கு போய்ச் செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை நிர்ணயிக்காமலும், சமுக சீர் திருத்தமானவிஷயங்களில்பிரவேசிப்பதுமில்லை,அவை களுக்குஇடம்கொடுப்பதுமில்லைஎன்றுமுடிவுசெய்து கொண்டும்போகும்படிசெய்வதும்,அந்தப்படிகாங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போன பின்பும் அவர்கள்சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண் டும், எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதைத் தான் இருந்து நடத்தாமலும், கவனிக்காமலும், இப்போதே காங்கிரசிலிருந்து காந்தியார் விலகிக் கொள்ளப் போவதுமாய்ச்சொல்லுவதுமாகியகாரியங்களில் ஏதாவது புத்திசாலித்தனமோ, பொறுப்போ இருக்கின்றதா என்பதையும், இப்படிப்பட்ட கூட்டத்தாரைச் சட்டசபைக்குப் போக விடுவது பொறுப்பான காரியமோ புத்திசாலித்தனமோ ஆகுமாவென்பதையும் யோசித்துப் பார்க்கும்படி பொறுப் புள்ள ஓட்டர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.

இந்தலட்சணத்தில்மற்றொருவிஷயம்மிகவும்முக்கிய மாய்க் கவனிக்க வேண்டியதாகுமென்பது நமது அபிப் பிராயம். அதாவது:

சட்டசபைத் தேர்தல்களில் அபேட்சகர்களாய் நிற்கும் ஆசாமிகளைப் பற்றி யாரும் கவனிக்காதீர்கள், அவர்கள் நிற்கும் கட்சிகளைப் பற்றி கவனியுங்கள் என்கின்ற பல்லவியின் மீது எலக்ஷன் பிரச்சாரம் நடத்துவதும், கட்சி சம்பந்தமான விஷயங்களில் விவகாரம் வரும் பொழுது கட்சிகளைக் கவனிக்காதீர்கள் மகாத்மா காந்தியைக் கவனியுங்கள், கட்சியைப் பற்றியோ, நபரைப் பற்றியோ கவனிக்காதீர்கள் என்பதும், காந்தியார் இன்ன இன்னபடி நடந்து கொண்டு இன்ன இன்னபடி சொன்னவராயிற்றே. ஆதலால் அவரைக் கவனித்து ஓட்டுக்கொடுக்க முடியுமா?  என்ற பிரச்சினை வரும்போது சட்டசபைக்கு நாங்கள் போனால் இன்ன இன்ன விஷயங்கள் செய்ய மாட்டோமென்று தனிப்பட்ட முறையில் காந்தியார் கொள்கை என்பவைகளுக்கு விரோதமாக வாக்கு கொடுப்பதுமாகிய காரியங்கள் இன்று காங்கிரஸ் எலக்ஷன் பிரச்சாரமாய்ச் செய்யப்பட்டு வருகின்றன. இவை தக்க பொறுப்புள்ள ஆட்களாலேயே நடைபெற்று வருகின்றன.

ஆகவே இந்த நிலையில் காங்கிரஸுக்கு எந்த ஆதா ரத்தின் மீது எந்தக் கொள்கைகளை வைத்து எந்த வேலைத் திட்டத்தை எதிர்பார்த்து யாரிடம் நம்பிக்கை கொண்டு ஓட்டர்கள் ஓட்டுச் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை.

இவை ஒரு புறமிருக்க, மற்றும் ஒரு சில பிரச்சாரக்காரர்கள் காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் சட்டசபைக்குப் போய் வெள்ளையறிக்கையை நிராகரித்து விடுவோம். அடக்கு முறை சட்டங்களை ரத்து செய்து விடுவோம் என்று சொல் லுவதாகத் தெரிகிறது. இதையாவது உண்மையா?  சரியா? என்று யோசிப்போமேயானால் இதுவும் அர்த்தமற்ற பேச்சு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

வெள்ளையறிக்கைக்கு இன்னமும் முழு ரூபமும் ஏற் பட்டு விடவில்லை. அது அமலுக்கு வர அதற்கு இன்ன மும் எத்தனையோ சடங்குகள் நடைபெற வேண்டியிருக்கின்றன. அப்படியிருந்தாலும்அதைநிராகரிக்கத்தகுந்தமெஜாரிட் டியைச் சட்டசபையில் பெற்றுவிட முடியுமா?  முஸ்லீம் களின் 30 தானங்களில் பத்திலொரு பாகமாவது காங்கிரஸ் காரர்களுக்கு அனுகூலமாக விருக்கும்படி காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கின்றதா?  வகுப்பு தீர்ப்பைப் பற்றிச் சுவர்மேல் பூனையாய் இந்துக்களுக்குத் தலையையும், முஸ்லீம்களுக்கு வாலையும் காட்டி வரும்வரையிலும் பண்டித மாளவியா போன்றவர்கள்அதைக்கூடஎதிர்க்கட்சிசேர்த்துக்கொண்டிருக்கும் வரையிலும் முஸ்லீம்கள் எல்லோரும் காங்கிரசுக்கும் சரணாகதி அடையக் கூடியவர்களென்று, நாம் அவர்களை நாம் அவ்வளவு பைத்தியக்காரர்களாக எண்ணிவிட முடியுமா?  ஒவ்வொரு முஸ்லீமும், நான் முதலில் முஸ்லீம் அப்புறம்தான் இந்தியன் என்று செய்த கர்ச்சனைகளை மறந்துவிட்டு அவர்கள் சமுகத்துக்குத் துரோகமாகக் காங்கிரசுக்கு வந்து அடிமையாவார்களென்று நினைப்பது முட்டாள்தனமாகாதா? என்றும் கேட்கிறோம்.

இந்திய சட்டசபையில் நாமினேஷன் காரர்கள் 40 பேர், முஸ்லீம்கள் 30 பேர், வெள்ளைக்காரர்கள் 8 பேர், வியாபாரிகள் 4 பேர், மிராசுதாரர்கள், 7 பேர், வகுப்புத் தீர்ப்பை ஒழிக்காதவரையில் பிரிட்டிஷ் அரசாங்கமே மேலென்று சொல்லுகின்ற சீக்கியர்கள் 2 பேர், ஆக 9 ஒதுக்கப்பட்ட தானங்கள்போய்விட்டால்மீதி53தானங்களும்காங்கிர சுக்கேகிடைக்குமா?இந்த53-ல்குறைவுபடும்.தானங் களாவது மேல்கண்ட ஒதுக்கப்பட்ட தானங்களில் கிடைக் குமா என்பவாகியவைகளைக் கவனித்தால், இந்திய சட்டசபையில் மெஜாரிட்டி கிடைக்குமென்று எண்ண இடமிருக்கிறதா என்று ஓட்டர்கள் கவனிக்க மாட்டார்களா என்று கேட்கின்றோம்.

இரண்டாவதாக,அடக்குமுறைச்சட்டங்களையொழித்து விடுகின்றோமென்று சொல்லுவதும், அர்த்தமற்ற வார்த் தையென்றுஎப்படிச்சொல்லுகின்றோமென்றால்,இன்று அடக்குமுறைச் சட்டங்களுக்கு நாட்டு மக்களிடத்தில் அதாவது காங்கிரஸ்காரர்களிடத்தில் வேலையேயில்லை. சிறப்பாக காங்கிரஸ்காரர்கள் பெரிதும் சத்தியாக்கிரகம் பயனளிக்கவில்லை. சட்ட மறுப்புத் தோற்றுவிட்டது என் கின்ற முடிவுக்கு வந்த பின்னும் காங்கிரஸும் காந்தியாரும் தேசம் இது சமயம் இந்த இரண்டுக்கும் தயாராயில்லை. ஆதலால் அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டதென்று சொல்லி விட்டதற்குப் பிறகும், இனி எதற்காகச் சர்க்கார் அடக்குமுறைகளை தேச மக்கள் மீது பிரயோகிக்கப் போகிறார்களென்று இந்தக் காங்கிரஸ்காரர்களை சொல்லு கிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை. சத்தியாக்கிரகமும், சட்டமறுப்பும் செத்தவுடன் (தற்காலிகமாகச் செத்திருந்தாலும் சரி) அடக்கு முறையும் செத்துவிட்டது என்பதில் சந்தேகம் ஏன்?  அன்றியும் சர்க்கார், அதுவும் காங்கிரஸ்காரர் சட்ட மறுப்பைச் சத்தியாக்கிரகத்தை விட்டு விட்டுச் சர்க்காருக்கு நல்ல பிள்ளையாக நடக்க ஆசைப்பட்டு முன்பு உதறித் தள்ளிவிட்ட சட்டசபைக்கு மீண்டும் போய் ராஜபக்தி - ராஜவிசுவாசம் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காய் நடந்து கொள்ளுகின்ற ஒழுக்க விசுவாசம் ஆகிய சத்தியங்கள் செய்து கொடுத்துவிட்டு சர்க்கார் கட்டடத்தைச் சுற்றிச் சுற்றி வணங்கி வரும் மக்கள் மீது அடக்குமுறைச் சட்டம் எதற்காகப் பிரவேசிக்கப் போகிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை.

ஆகையால் அடக்குமுறை சட்டங்களை ஒழிக்கப் போகின்றோமென்பது செத்த பாம்பை அடிக்கப் போகின் றோமென்று சொல்லுவது போலாகுமே யொழிய வேறில்லை.

ஒரு சமயம் காங்கிரஸ்காரர்களல்லாத மற்றவர்கள் மீது அடக்கு முறைகளை உபயோகிக்கிறார்களே, அதைக் காங்கிரஸ்காரர்கள் நிறுத்தக் கூடுமென்று சிலர் நினைக்கக் கூடாதாவென்று கேட்கக் கூடும்.

அதுவும்அர்த்தமற்றவார்த்தையேயாகும்.ஏனெனில்காங்கிரஸ்காரர்கள்தவிரமற்றவர்களின்மீது பிரயோகிக்கப்படும்சட்டங்களின்துஷ்பிரயோகங் களுக்கும்,அடக்குமுறைகளுக்கும்,கொடியசட்டப் பிரயோகங்களுக்கும், சட்டங்களின் துஷ்பிரயோகங் களுக்கும் காங்கிரஸ்காரர்கள் அனுகூலிகளாகவே இதுவரை இருந்து வருகிறார்கள். உதாரணமாகத் தோழர் காந்தியார் அவர்கள் தான் சொல்லும் காரியங்கள் தவிர வேறு எந்தக் காரியத்தை யார் சொன்னாலும், வேறு எந்தக்காரியத்துக்கு சத்தியாக்கிரகம் செய்தாலும், சட்ட மறுப்பு செய்தாலும் அவற்றை யெல்லாம் பெரும் பாலும், ஒரேஅடியாக பலாத்காரம் என்று சொல்லி வந் திருக்கிறார். இந்த மாதிரி பலாத்கார செய்கைகளின்மீது அடக்குமுறைகளைஉபயோகிப்பதில்காந்தியாரின்ஆதர வையும்,ஆமோதிப்பையும்வைத்துக்கொண்டே சர்க்கார் உபயோகித்து வருகிறார்களென்பது தொக்கி இருக்க வில்லையா?

சமதர்ம இயக்கங்கள் சட்ட விரோதமான இயக்கங் களாகப் பாவிக்கபடுமென்று ஒரு அடக்குமுறை உத்தர வைச் சமீபத்தில்தான் சர்க்கார் பிறப்பித்தார்கள். இதற்கு எந்த மகாத்மாவாவது, காங்கிரஸ்வாதியாவது தேசிய பத்திரி கையாவது மூச்சுகூட காட்டவில்லை.

சுயமரியாதை இயக்க ஸ்தாபனங்கள் சட்ட விரோதமான இயக்கமென்று சர்க்கார் தீர்மானிக்கப் போகின்றார்களென்பது வெளிப்படையான ரகசியம். அதன் பிரமுகர்களை ஒடுக்கி வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவென்பதும் எவரும் அறிந்த விஷயம். இவைகளைப் பற்றியெல்லாம் காங்கிரசுக்கு எவ்வளவு ஆசை அதாவது சீக்கிரம், சீக்கிரம் நடக்கவேண்டுமென்கின்ற ஆசை இருக்கின்றதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.

காங்கிரசுக்குள்ளிருக்கும் சமதர்மக் கொள்கையே பலாத்காரம் கொண்டதென்று சொல்லிவிட்ட பிறகு இனி அடக்குமுறையைக் காங்கிரஸ் எந்த முகத்தைக் கொண்டு ஆட்சேபிக்க முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட யோக்கியதையில் சட்டசபைக்குப் போகப் பிரயத்தனப்படும் காங்கிரஸ்காரர்கள் எதிர் அபேட்சகர்கள் கற்பனையானதும், பொய்யானதும் திருத்தலானதுமான பழிகளை சுமத்தி பிரச்சாரம் செய்வது தங்களை சத்தியாக்கிரகிகளென்றும், சத்தியசீலர்களென்றும் சொல்லிக் கொள்ளும் யோக்கியர்களுக்குத் தகுதியானதா என்பதையும் இந்தத் தந்திரத்தின் பலனாகவே ஒரு சமயம் இவர்கள் ஜெயித்துவிட்டாலும் இவர்கள் சரியான ஜனப்பிரதி நிதிகள் ஆகிவிடுவார்களாவென்றும் கேட்கின்றோம்.

வெல்லிங்டன் துரைமகனார் காங்கிரசில் யோக்கி யர்களும்,நாணயவாதிகளும்,பொறுப்புள்ளவர்களும்மலிந்தில்லை, காலிகளும், கூலிகளும், நாணயமும், மானமரியாதையும் இல்லாத ஆட்களும்தான் மிகுந் திருக்கிறார்கள். ஆனதால், அந்த ஸ்தாபனங்களையோ, அந்த நபர்களையோ அவர் கள் வார்த்தைகளையோ மதிக்கக் கூடாது என்று இந்த ஆட்களை ஜனப் பிரதிநிதிகளென்றோ, நாணயமாய் நடந்து, சட்ட சபைக்கு வந்தவர்களென்றோ கருதக்கூடாது என்றும் சொன்னாரென்றோ சொல்லப்போகிறார் என்றோ சொல்லுவதானால் அதில் கடுகளவாவது தப்பு இருக்கக்கூடுமா என்று கேட்கிறோம். இந்த யோக்கியதையில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், வெல்லிங்டன் பிரபு காங் கிரஸ்காரர்களை மதிக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் ராஜிக்கு இரண்டு கையையும் நீட்டிக்கொண்டு போயும்கூட அவர்கள் இலட்சியம் செய்யவில்லை, ஆகவே, வெல்லிங்டன் பிரபு வின் அகம்பாவம் எவ்வளவு என்று சொல்லியும் தேசியப் பத்திரிகையெல்லாம் இந்தப்படிக் கூப்பாடு போட்டால் இதில் உண்மையோ, நியாயமோ ஏதாவது இருக்கின்றதா, இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

சென்னையில் ஒரு காங்கிரஸ்காரர் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு திரிபவர், மேலே துணிகூட போடாமல் காந்தியார் போலவே வேஷம் போட்டுக்கொண்டு நடப்பவர், பொது மக்கள் பணத்தைக் காங்கிரஸ் பெயரால் மாதம் 100 கணக்காய் பெற்று வாழ்பவர், தோழர் சத்தியமூர்த்திக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கோவில்களை இடிக்க வேண்டுமென்று சொல்லுகின்ற ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஓட்டுப் போடுகிறீர்களா? என்று கேட்டாராம். இதில் இருக்கும் அயோக்கியத்தனத்திற்கு அளவு எவ்வளவு என்ற கேட்பதோடு இந்த ஆட்கள் யோக்கியதையே இப்படியிருந்தால் மற்றபடி எவ்வளவு சிறிய உதவிக்கும் எந்தக் காரியத்தையும் செய்யத் தயாராய் இருக்கும் சாதாரண ஆட்களிடம் எந்தக் காரியத்தைத்தான் எதிர்பார்க்கக் கூடாது என்று கேட்கின்றோம்.

கோவில்களின் பேரால் பொறுக்கித் தின்று வயிறு வளர்க் கும் கூட்டங்கள் தங்களுடைய ஆதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மூட ஜனங்களை ஆயுதமாகக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் எப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தில் கேவலமான காரியங்களைச் செய்யத் துணிகின்றார்கள் என்பதைக் காண இந்த ஒரு உதாரணம் போதாதாவென்று கேட்கின்றோம்.

தோழர் ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் பெரிய அழுக்கு மூட்டை (வைதிகர்) என்று சொல்லலாம். அவர் காலம், நேரம், சகுனம், சாமி உத்தரவு, சாஸ்திரம் ஆகியவை பார்க்காமல் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு நொடிக்கு 100 தரம் கடவுளைக் கூப்பிடுகிறார். இப்படிப்பட்டவர் விஷயத்தில் கோவிலை இடிக்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுகின்றீர்களா? என்று கேட்ட ஆசாமிகள், வேறு எந்த விதமான கொலை பாதகச் செயலைச் செய்ய அஞ்சுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

கோவிலை இடித்தால் இவர்கள் அப்பன் தேடிக் கட்டி வைத்த முதல் என்ன போய்விடுமென்பதும் நமக்கு விளங்கவில்லை. கோவில்களை இடித்த ரஷ்யா தேசம் - இந்த மாதிரிக் கோவில்களின் பேரால் வயிறு வளர்த்தக் கூட்டங்களின் கையில் மண் வெட்டியையும், கோடாரியையும் கொடுத்த ரஷ்யா தேசம் இன்று குபேர செல்வம் படைத்த நாடாக விளங்குகின்றதே ஒழிய பூகம்பத்தால் அழிந்துபோய் பூகம்பக் கஷ்ட நிவாரண வேலை செய்ய இந்த சோம்பேறிக் கூட்டங்களைக் கூப்பிட்டு அதன் பேரால் வயிறு வளர்க்க விடவில்லையென்று இடித்துக் காட்டுகிறோம். மற்றபடி இப்படிப்பட்ட கூட்டத்தின் பேரால் அதாவது காங்கிரஸின் பேரால் தேர்தலுக்கு நிற்கும் ஆட்களின் யோக்கியதையை யாராவது அறிய வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு உதாரணம் காட்டுவோம். என்னவென்றால், இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவராவது ஒரு அபேட்சகரைப் பற்றியாவது வெளியில் எடுத்துச் சொல்லி ஓட்டுக் கேட்காமல் ஆசாமி எப்படியிருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவனிக்காமல் காந்தியாருக்காக ஓட்டுப் போடுங்கள், காங்கிரசுக்காக ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதே போதுமானதாகும். சோம்பேறிகள், கயவாளிகள், உடம்பில் பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொண்டு கையில் மஞ்சள் துணி சுத்தின செம்பை வைத்துக் கொண்டு திருப்பதி வெங்கிடாசலபதிக்குத் தர்மம் செய்யுங்கள், ஏழு மலையானுக்குத் தர்மம் செய்யுங்கள் என்று கேட்பதற்கும், ஆட்களைக் கவனிக்காதீர்கள். காங்கிரசுக்கு ஓட்டு செய் யுங்கள், காந்திக்கு ஓட்டு செய்யுங்கள் என்பதற்கும் என்ன வித்தியாசமென்று கேட்கின்றோம்.

ஆகவே ஓட்டர்களாகிய தோழர்களே! தேர்தல் புரட்டு களையும், வெட்கமற்ற- மானமற்ற - யோக்கியமற்ற - நாணயமற்ற பிரச்சாரங்களையும் கண்டும் கேட்டும் ஏமாற்றமடைந்து விடாமல், மனிதர்கள் அவர்கள் முன்பின் நடவடிக்கைகள், அவர்கள் நடந்து கொள்ளப் போகும் முறைகள் அவர்களது கொள்கைகள், வேலைத்திட்டங்கள், ஆகியவைகளைக் கவனித்து ஓட்டுச் செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

- ‘பகுத்தறிவு’ - தலையங்கம் - 21.10.1934
- விடுதலை நாளேடு,31.12.17