புதன், 13 மே, 2015

தந்தை பெரியார் உலகமயமாகிறார்

தந்தை பெரியார் உலகமயமாகிறார்
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் சிந்தனைப் பரிமாற்றம்

நியூயார்க், ஏப்.19_ அமெரிக்கா _ நியூயார்க் அருகில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தந்தை பெரி யார்பற்றிய சிந்தனைகள் பரிமாறிக் கொள்ளப்பட் டன.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலே அமைந் துள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் உலகப் புகழ் பெற்றது.அங்கு பாபாசாகேப் அம்பேத்கர் பயின்ற சட்டக்கல்லூரிக்கு அடுத்துள்ள அரங்கில் ஏப்ரல்  10,11 ஆம் நாட் களில் ஒரு மாநாடு நடந் தது. அதன் தலைப்பே புது மையானது. சாமியில்லாத சாவு.  ஞிஹ்வீஸீரீ ஷ்வீலீஷீ ஞிமீடஹ் பேராசிரியர் பால்கர்ட்சு நிறுவிய அறிவியல் மனித நேய அமைப்பின் ஏற்பாட் டில் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்றும், கலந்து கொண்டும் இந்த மாநாடு நடைபெற்றது.
பலருக்கு வாழ்வின் கடைசி நாட்கள் வரும் என்று தெரிந்ததும் நம்பிக் கையின்மையும், அச்சமும் வந்து விடுகின்றன. அவர் களைக் கடவுள் என்ன காப்பாற்றவா போகின்றார்?
கடவுள் ,மத நம்பிக்கை யில்லாமல் வாழ்வின் முடிவை எப்படி எதிர் கொள்வது என்பதைப் பற்றியும் அதில் மருத்துவ மனைகள்,அங்கு ஆறுதல் சொல்லும் ஆர்வலர்கள் ,சட்ட திட்டங்கள் பற்றி யும் கட்டுரைகள் வாசிக் கப்பட்டன.
மக்களுக்குச் சாவதற்கு உரிமை உள்ளதா? அமெ ரிக்காவின் அய்ந்து மாநி லங்களில் உள்ளது. இரண்டு மருத்துவர்கள் தனித்தனியே பரிசோதித்து கடும் நோயாலும், வலியா லும் துன்பப்படுவோர் 6 மாதங்களில் இறந்து விடு வார்கள் என்று சான்றிதழ் தந்து, அதை உறவினர் களும் ஏற்றுக்கொண்டு 15 நாட்கள் கழித்து அவர்கள் வாழ்வை அவர்களே முடித்துக்கொள்ள உரிமை உள்ளது. இது பற்றி விளக் கமாக விவாதிக்கப்பட்டது .அய்ரோப்பிய நாடுகளிலும் இது போல் உள்ளது.
தற்கொலைக்கு எதி ரான மனிதநேயக் கருத் துக்கள் ஆராயப்பட்டன. மனித உடல் உறுப்புக்கள் நன்கொடையும் அதில் மட்டும் மத,இன வேறு பாடுகள் இல்லாமல் பெற்றுக் கொள்வதையும் பற்றி ஒரு கருப்பினப் பெண் உணர்ச்சியுடன் பேசினார் . உடல் உறுப்புக் கள் பெரிய வணிகமாகி விட்டதை அலசினார்.
தந்தை பெரியார் பற்றி நன்கு அறிந்தவரும் பெரி யார் பன்னாட்டமைப்பின் நிகழ்வில் பங்கேற்றுமுள்ள   மார்க்ரெட் டவுணி அம்மையார் கல்லறையா?  மரியாதையா ? என்ற தலைப்பில் இறப்பில் மனிதநேயம் தழைத் தோங்க  வேண்டும், உடல் நன்கொடை பெருக வேண்டும் என்று எடுத்து ரைத்தார் .அந்த நிகழ்விற்கு நடுவராக இருந்த சோம. இளங்கோவன் அவர்கள் பெரியார் பற்றியும்  நமது தோழர்களின் குருதிக் கொடை உடல் நன்கொடை பற்றியும் விளக்கினார்.
கனடாவிலிருந்து  மனநல மருத்துவர் ராபர்ட் லூயிசு எப்படி மதவாத ஆறுதல் அளிப்போர் (றிணீஷீக்ஷீ) நிறுவனமே அவரை அழைத்து மத நம் பிக்கையில்லாதவர்களுக்கு ஆறுதல் கூறும் வழி முறைகள் பற்றிப் பேச்சு சொல்லியுள்ளனர் என்று எடுத்துரைத்தார் .அங்கு பகுத்தறிவு பல முனை களில் அமைதியாக வெற்றி பெற்று வருவதைப் பற்றிப் பெருமைப் பட்டார். மத நம்பிக்கையில்லாதவர்கட்கு உள்ள உரிமைகள்    செயல்படுத் தப்படுவதை உரைத்தார்.
தொலைக்காட்சிகளில்  பல நிகழ்ச்சிகள் நடத்தி யுள்ளவரும், ஒரு மில் லியன் டாலர் பந்தயத்தைப் பல ஆண்டுகளாக மத வாதிகளிடம் வைத்துள்ள ஜேம்ஸ் லேண்டி நிறு வனத் தலைவராகவும் இருந்த டி ஜே கிராத்தியை அறிமுகப் படுத்திய மருத் துவர் சரோ இளங்கோவன் தந்தை பெரியாரின் படத்தைக் காண்பித்து, எப்படி பல ஆண்டு களுக்கு முன்னேயே நூறாண்டுகள் வாழலாம், அறிஞர்கள் மனிதன் எளிமையாக இறப்பதற்கு ஆராய்ச்சி செய்வார்கள் என்று சொன்னதை எடுத் துச் சொன்னார்.
இனி வரும் உலகம் ஆங்கில நூலும் அங்கு விற்கப்பட் டது .நீண்ட வாழ்வு பற்றி சொற்பொழிவாற்றிய கிரோத்தி என்னென்ன ஏமாற்று வேலைகள் நடக்கின்றன ,உண்மை யான ஆராய்ச்சிகள் எவை என்றெல்லாம் எடுத் துரைத்தார் .
சமுதாயத் தொண்டர் களும் வழக்குரைஞர்களும், எப்படி ஒரு நாத்திகர் இறந்ததும் அவருடைய கருத்துக்கு எதிராக மத வாத, மூடப்பழக்கத்துடன் இறுதி நிகழ்ச்சி நடத்து கின்றனர்,அதைத் தடுக்க எப்படி நாம் உயிருடன் உள்ள போதே உறவினர் களையும், நண்பர்களையும் உடன் வைத்துப் பேசி எழுத்திலும் வைக்க வேண் டும் என்று காண்பித்தனர் . நமது பகுத்தறிவு வாதிகள் செய்வது போன்றே இருந் தது. பல மனித நேய அமைப்புக்கள் பங்கேற்றன.
பல பேராசிரியர்களும், ஒருவர் மூன்று முனைவர் பட்டம் பெற்றவர் ,மருத் துவ, சட்ட, சமுதாய மேதைகளும் பங்கேற்று கேள்வி பதில்கள் சிறப்பாக இருந்தன.
தந்தை பெரியார் கொள்கை,  உலகை மாற்றும்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
தகவல்: சோம.இளங்கோவன்,
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.
-விடுதலை19.4.15 பக்கம்-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக