வெள்ளி, 2 அக்டோபர், 2015

சித்திரகுப்தன் -வினா விடை-2


வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?
விடை: நமது மதமும் ஜாதியும்.
வினா: நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள், இதற்கு காரணம் என்ன?
விடை: மதமும், ஜாதியும்
வினா: நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராகிக் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?
விடை: வினையின் பயன், அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்துவந்த “பாவமானது” அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்குகிறார்கள் அதற்கு யார் என்ன செய்யலாம்.
வினா: எந்த விதமான விபச்சாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
விடை: வெளியார்க்கு தெரியும் படியாகச் செய்த விபச்சாரம் குற்றம் சொல்லத்தகுந்ததாகும்.
வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
வினா: உண்மையான கற்பு எது?
விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு
வினா: போலி கற்பு என்றால் எது?
விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ, பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாத வனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.
வினா: மதம் என்றால் என்ன?
விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக்கட்டுப் படுத்துவதும் தான் மதம்.
-விடுதலை,4.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக