ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

சிந்தியுங்கள்! தோழர்களே! 10.04.1948 - குடிஅரசிலிருந்து...

 

இனி இந்துவாக இருக்க மாட்டேன்நான் இனி சூத்திரனாக இருக்க மாட்டேன்இந்துமத அடையாளம் அணிய மாட்டேன் என்று முழக்கம் செய்தல் வேண்டும்இப்படி ஒவ்வொருவரும் கூறுவார்களானால்பார்ப்பனர்களே முன்வந்து மனுதர்மமே  மக்களுக்கு எழுதப்பட்டதல்லஅது தேவாளுக்கு எழுதப்பட்டதாக்கும் என்றுகூறி தம்மையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

***

கருஞ்சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று யார் கூறினாலும்பூணூல் அணிந்த கூட்டம் நாட்டில் இருக்கும்வரை கருஞ்சட்டை அணிந்த கூட்டமும் இருந்தே தீரும்உச்சிக் குடுமி உள்ளவரை கருப்புக் கொடியும் பறந்து தீரும் என்று சொல்லிவிடுங்கள்.

***

உங்களை எந்தப் பார்ப்பனன் இது ஏன் என்று கேட்டாலும் நீ உயர்ஜாதி என்று காட்டிக் கொள்ள நீ பூணூல் அணிந்து கொள்ளும்போது நான் சூத்திரனல்லஇந்துவல்ல என்று காட்டிக் கொள்ள நான் ஏன் கருஞ்சட்டை அணிந்து கொள்ளக்கூடாது என்று ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.

***

சட்டசபையைப் பற்றிக் கவலை வேண்டாம்மந்திரி பதவிக் கவலை வேண்டாம்அதைப் பார்ப்பனருக்கும் அவர்கள் அடிமைக்கும் விட்டு விடுங்கள்நாம் கட்டுப்பாடான பிரசாரம் செய்து மக்களை மானமுள்ளவர்களாக ஆக்கினால் எந்தக் காரியமும் கைகூடும்மந்திரிகள் நமக்குச் சலாம் போடுவார்கள்.

***

பார்ப்பானைத் தவிர்த்து வேறு எந்த ஜாதியாவது காந்தியாரைச் சுட்டிருந்தால் அந்த ஜாதி மனிதன் ஒருவனையாவது கண்காட்சிக்காவது காணமுடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக