வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஏழைகள் கண்ணீர் (தொழிலாளர்)


07.08.1932 - குடிஅரசிலிருந்து...

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள்அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்றுஒவ்வொரு யந்திரசாலைகளிலும்தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும்அநேகமாகஎல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோரொக்கப் பணமோ இல்லைஅநேகர் குடியிருக் கவும் சொந்த குடிசைஇல்லாமல்குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள்இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால்அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம்எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான் தார்களோமுதலாளிகளோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும்வியாபாரம் வளர்வதற்கும்காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்னஇருக்க இடமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும்உண்ண உணவில் லாமலும்பெண்டு பிள்ளைகளுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள்இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள்ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம்இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களைக் குறைக்கக் காணோம்ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும்தொழில் நேரத்தைக் குறைத்துவிடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர் கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும்இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம்இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும்இந்த முறையையாவதுதொழிலாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும்முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம்ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்திஎன்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம்அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம்இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும்மாகாண அரசாங்கங்களும்இந்திய அரசாங்கமும்தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக