திங்கள், 29 நவம்பர், 2021

"என்றென்றும் 'சூத்திரனாக' இருப்பதைவிட மானக்கேடு வேறு என்ன?" (சட்ட எரிப்பு ஏன்?)


 தந்தை பெரியார்

26ஆம் தேதி கிளர்ச்சியில்

நீதிமன்றத்தில் கூற வேண்டியது

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும்அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறதுஅரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லைஅச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன்இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டுஇதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லைஆதலால் நான் குற்றவாளியல்லஇந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லைநான் எதிர்வழக்காட விரும்பவில்லைநான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

பெரியார் அறிக்கை ('விடுதலை' 23-11-1957)

எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்பார்ப் பானை ஏன் திட்ட வேண்டும்?" என்ற சிலர் கேட்கிறார்கள்எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்ஏன் தன்னைப் பிராமணன் என்று  சொல்லிக் கொள்கிறான்ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்அவனுடைய  பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ளவேண்டும்இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்ட சபையில் சிலர் பேசுகிறார்கள்எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?

எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்புசாஸ்திரம்புராணம்சட்டம் என்றால்நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம்மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமைகிடையாது.

சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்அவற்றி லெல்லாம் கைவைக்கக்கூடாதுஎன்றால் எப்படி ஒழியும்கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமாதுஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல்மண்முள்காடு எல்லா வற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள்பாம்புகரடிபுலி எல்லாம் ஒழியும்அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக் கிறார்களோஎன்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்இவை தனிப்பட்ட உரிமைகள்இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடைகொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்இராமனைக் கொளுத்தினோம்.

சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறதுஅந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும்இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம்என்று 3ஆம் தேதி  (1957 - நவம்பர்கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர் மானம் போட்டு 15 நாள் வாய்தா (காலக்கெடுகொடுத்தோம்.

இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டதுநாம் கொடுத்த 15 நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமாசாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!

இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறதுஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்இல்லை நெருப்பு வைக்கக்கூடாது  என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்அல்லது இருந் தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.

நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய்சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களுக்கும்

ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தா விட் டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!

சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார்அரச மைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள்நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்கான சட்டம் வகுத்துக் கொண்டார்கள் அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக் கிறார்கள்ஆகவே தான் கொளுத்துகிறோம்கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?

இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதிவைத்துக் கொண்டுள்ளான்இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழ வேண்டுமென்று கொண்டு வந்து விடுவான்!

நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரேபாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரேஇது ஒரு வருடம் நடந்ததேஇத் தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும் பான்மைஒன்றும் அசைக்க முடியவில்லையேகத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார்பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார்.

நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்அந்த மாதிரியான சட்டமும்அமைப்பும்வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றனஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறதுஇன் னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான்இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!

சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும்ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள்அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?

1957 - நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6 ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சிகுளித்தலைபசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என்மீது கேசு (வழக்குபோட்டிருக்கிறார்கள்.

சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றனஎன்று; "இல்லை இல்லைகொல்லுகுத்துஎன்று பேசி யிருக்கிறார்என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசியபேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட் களைக் கொண்டு வாருங்கள்என்று பத்திரிகைக் காரர்களை மந்திரி கேட்டார்இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.

சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்றுஇதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்செய்திருக்கின்றனர்அதன் பின்னர் மேலிடத்தி லிருந்து உத்தரவு வந்திருக்கிறது!  மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்குஎடுத்து இருக்கிறார்கள்மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள்அவனுக்குத் தமிழ்நாடு சட்ட சபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள்அவனுக்கு நாடாளுமன்றத்திலே சட்டம் செய்ய வெட்கம்உலக மெல்லாம் தெரிந்துபோகுமேதமிழ்நாட்டில் காந்தி  சிலையை உடைக்கிறார்கள்அரசமைப்புச் சட்டத்தைக்  கொடியைக் கொளுத்துகிறார்கள்அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.

சட்டசபையிலேஎன்மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் (நீதிமன்றத்தில்இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லைஅதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்லமனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.

இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும்மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும்அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான்மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாதுஇந்து மதம் உள்ளவரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையைஎடுக்க மறுத்தான்அந்த ஓட்டல் (உணவகம்முன்மறியல் செய்து 800 பேர்வரை சிறைக்குச் சென்றி ருக்கின்றனர்நம்முடைய சர்க்கார் (அரசுஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள்மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத் துள்ளோமே என்கிறான்ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம்நாம் இங்கே மறியல் செய்கிறோம்அங்கே கேரள ஆட்சியில் சாதிச்சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.

நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம்மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம்நிலைமை மாறவில்லைஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம்இதில் வெற்றிபெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப் போகிறோம்.

நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் "ஜவகர் லால் நேருராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்துஇவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்றுவேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்சட்டத்தினாலேயே உயிர்வாழ்மக்களுடைய அன்பினால்திருப்தியினால் நீ (அரசாங்கம்உயிர்வாழப் போவதில்லைசுதந்திரம் (விடுதலைவந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்இன்னமும் நாங்கள் சூத்திரர்கள் தான்வடநாட்டானால் கொள்ளையடிக்கப் படத்தான்  இந்தச் சுதந்திரம் என்றால்நாங்கள்  சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?

போலீஸ்காரனுக்கு அடங்கி நடசட்டத்திற்கு அடங்கி நடஎன்று நான் சொல்கிறேன்இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்இல்லை நான் சொல்வது பொதுமக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடுஅதில் 2 லட்ச மக்கள் திரண்டனர்அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும்இல்லை பொதுஜன வோட்டு எடுசாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்றுஒன்று மில்லை வெறும் அடக்குமுறை தான் என்றால் என்ன அர்த்தம்?

அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்டமுடியுமாஇந்த நிலை யில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப்போக நாம் துணிந்து விட வேண்டியதுதானேமூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால்தானே நாம் மனிதர்!

ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26ஆம் தேதியன்று நாம் ஆயிரக் கணக்கில் கொளுத்த வேண்டும்இரகசியமாயல்லபகிரங்க மாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள்கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்குஅழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!

"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாதுஇதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்என்று சொல்லுங்கள்

முக்கியமாக உள்ள கழகத்தோழர்கள் நூற்றுக் கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண் டும்கொளுத்திய அந்தத் துண்டு காகிதங்களையும் சாம் பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.

தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர்விலாசம் (முகவரிஎல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.

"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்அதற்காக எந்த விலை கொடுக்கவும் நாங்கள் யார் என்பதை 26ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!

17-11-1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் .வெ.ராசொற்பொழிவு : ('விடுதலை'  22-11-1957)

வியாழன், 25 நவம்பர், 2021

ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை


 பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது - இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல் களும் சரியாகுமா?' என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டிலிருக்கும் வரையில் (இங்கிலீஷ்காரனைப் பின்பற்றி) இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி யைச் செய்து கொண்டுதான் இருப்பான்.

('விடுதலை' 10.1.1947)

வெள்ளி, 19 நவம்பர், 2021

கூறுவது என்ன? நடப்பது என்ன?

 


 


பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில்அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார்அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மதவேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும்கடவுள் அம்சம்தான்ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறதுஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....         

திங்கள், 15 நவம்பர், 2021

பெண்கள் வழங்கிய பெரியார் பட்டம்

தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் “தந்தை பெரியார்” தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் 1938 நவம்பர் 13 .

1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச்சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு மீனாம்பாள், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தப்பட்டது.*

*ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் ஈ.வெ. ராமசாமி “பெரியார்” என்று அழைக்கப்பட காரணம். “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.” என்பதே அந்த தீர்மானம்.*

*அன்று முதல் இன்றுவரை எல்லோறாலும், “தந்தை பெரியார்” என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.*

*இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏராளமான மகளிர் பங்கேற்க இம்மாநாடு பெரும் உந்து சக்தியாக விளங்கியது. இந்த மாநாட்டில் ஆற்றிய உரையை குற்றச்சாட்டாக கொண்டுதான் தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.*

*குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 டிசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 டிசம்பர், 1927 பிறகு குடிஅரசு இதழில் நாயக்கர் பட்டம் எடுக்கப்பட்டது. அவ்வாறாக, ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில், ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது, அவருக்கு உரிய பெருமையைக் குறைத்துவிடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து ‘ஈ.வெ. இராமசாமிப் பெரியார்‘ என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளை.*

*பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் என்பதையும் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.*

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

செப்.17: ‘சமூகநீதி நாள்' (பெரியார் பிறந்த நாள்) தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிமொழி!


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

  எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

  சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம்சகோதரத்துவம்சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”

வெள்ளி, 8 அக்டோபர், 2021

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?

 

தந்தை பெரியார்

தந்தை பெரியாரவர்கள் நன்றியுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலேஇந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர்இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக் கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள்அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்திபாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள்வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்மனதறிந்துநமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றதுஎன்றாலும்அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன்என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்ஆக்க இயக்கமல்லஅழிவு இயக்கமாகும்நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும்இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில்சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள்நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள்அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால்நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம்நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.

மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லைமக்களை ஏமாற்றி வரவில்லைஎங்கள் கொள்கை கடவுள் இல்லைமதம் இல்லைசாஸ்திரம்சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லைஇவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லிஅதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்புராணம்இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்த கம் எழுதியவராவார்பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால்நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம் பரம் செய்கின்றார்கள்என்றாலும்அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லைவெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?

அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால்கல்யாணத்திற்குக் கடவுள்மதம்சாதிபழைமைதேவையில்லைஓர் ஆணும்பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரேஇது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்தி ரங்களில்சாதிபழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானேஇது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்அதோடு மட்டுமில்லையேஅரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரேஇதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத் தார்கள் என்றால்இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லைபூசை செய்கிற சிலை இல்லைகடவுள் இல்லைஎன்று சொல்கின்றவன் சிலைஇந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லைகடவுளைக் கற்பித்தவன் முட்டாள்கடவுளைத் தொழு கிறவன் காட்டுமிராண்டி என்று சொல்ப வனுடைய சிலையாகும்கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களா கவே இடித்து விடுவார்கள்.

நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்லபல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம்ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல்மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறதுபார்ப் பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில்இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானேஅதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறதுஇல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சி யிலிருப்பார்கள்நம்முடைய தொண்டின் காரணமாகபிரச்சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும் படி ஆயிற்றுநமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லைஅவன் மட்டும் என்ன உயர்ந்தவன்நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பதுஇன்னொருவன் பஞ்சமன்பறையன்தீண்டப்படாதவனாக இருப்பதுஎன்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனைநாவிதனைபள்ளன்பறையனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங் களில் நம்மவர் இருக்கும் படியாயிற்றுஇந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

காங்கிரசாரும்காந்தியும் இந்தத் தீண் டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிரதீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாதுநம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கடவுள்மதம்கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால்பின்பற்றுகிற மதத்தால்கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானேஎனக்குக் கடவுளும் வேண்டாம்மதமும் வேண்டாம்என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன்என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான்தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாகதிருவாங்கூர் காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடி களை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டிமக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோதுபலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர்மாறியவுடன் அதுவரை ஈழவர்கள்கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும்மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்கலவரம் ஏற்பட்டதுஅதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட் டான்உடனே கலவரம் முற்ற ஆரம்பித்ததுஇந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம் பித்து விட்டதுஎங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்றுஇதைப் பார்த்துப் பயந்துஅப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள்கோயில்குளம்பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும்எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டுஎன்று திறந்து விட்டார்அதன் பிறகுதான் இங்கு இவர்கள்தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர்அப்போது நான் காந்தியிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறை யனாக்கினீர்களே தவிரபார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில் லையே என்று கேட்டேன்உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழியபார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடுநடைமுறை யில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டி ருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப் பானின் ஆதிக்கமே இருந்து வந்ததுஆட்சித்துறைஅரசியல் துறைமதத்துறைஎல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதன் முதல் அய்க் கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார்முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும்அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என் றால்அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமிழர்கள்மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள்இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும்பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்ததுஇதனால் என்ன பயன் என்பீர்கள்நம் வக்கீல்களுக்கும்நம் மக்களுக்கும் அத னால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும்இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன்நீதித்துறையில் மட்டும் அல்லகல்வி விஷயத்திலும் காமராசரைப் போலஅவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர்இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்ததுஇப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சிவரை இலவசமாக்கி இருக் கிறார்கள்நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றனஇந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ளஅரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாதுஇந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.

நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக் கும் போது நம் படங்களைப் போட்டுகொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும்மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றனஇது மாடு மேய்க்கப் போகாதுஉத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும்இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும்மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோஅவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையேநம் மக்களுக்கு இன உணர்ச்சிஅறிவுப் புத்தி இருக்க வேண்டும்இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும்இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும்இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம்அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தர மான நிலையில்லைமுட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றதுஅந்த நிலை மாறிநிரந்தரமாக நிற்கிற வரைநாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பதுபடம் திறப்பதுஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்லஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான்பெரியார் என்றால் யார் என்று கேட்பான்உடனே அவன் பெரியாரைத் தெரியாதாஅவர் தான் கடவுள் இல்லை என்று சொன்ன வராவார் என்று சொல்லுவான்இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும்அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலை யாகும்நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல் கிறார்கள்அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் கள்அதனால் தான் சொல்கிறார்கள்வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?

நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.

24.5.1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

('விடுதலை', 9.6.1969)

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

பெரியாரின் 85வது பிறந்தநாளுக்கு மபொசி அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி

பெரியார் ஈ.வெ .ரா . அவர்களுக்கு ,84 -வது வயது முடிந்து , 85 - வது வயது துவங்கி வருவதாக அறிகிறேன் .

 இவ்வளவு நீண்ட காலம் அவர் வாழ்ந்தது தமிழருக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் . ஒருநாள்கூட , ஒரு மணி நேரம்கூட , ஓய்வெடுக்காமல் உழைத்து வருகின்றார்கள் . 

வயது 85 ஆயினும் வாலிபக் களை மாறவில்லை ! தோற்றத்திலோ அவரிடம் தொனியிலோ , நான் காணும் மிடுக்கு வியப்பைத் தருவதாகும் . இந்த புதுமைக்கு காரணம் அவர் பெற்றுள்ள மனத்திட்பமேயாகும் . 

கள்ளமற்ற வெள்ளை உள்ளம் , ஆனால் எவராலும் ஏமாற்ற முடியாத தெளிந்த மதி , பிறரை ஏமாற்ற விரும்பாத மனத்தூய்மை இந்த சீரிய பண்புகளே பெரியாரின் வாழ் நாள் நீடிக்க காரணங்களாகும் ! 

அச்சமென் பதை அறவே ஒழித்த அரசியல்வாதி !! யாருக்காகவும் , எதற்காகவும் , மனத்தில் தோன்றியதை மறைத்துப் பேசும் கபடம் இல்லாதவர் !!!பெரியாருடைய அரசியல் - சமுதாய கொள்கையில் மாறுபட்ட கருத்து எனக்கு உண்டு . ஆயினும் பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்து வரும் நேர்மை , நியதி , ஆகியவற்றால் நான் கவர்ச்சிக்கப்பட்டவன் . 

சாதி சமயத் துறைகளில் , அவர் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள போராட்ட திட்டங்களில் என் போன்றவர்கள் கருத்து வேற்றுமை காணலாம் . ஆனால் சாதி - சமயக் கொடுமை களை எதிர்ப்பதில் , அவர் காட்டும் துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியாது . அத்துறையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர் ஆற்றிவரும் தொண்டு , பிற்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்பட்டி ருக்கிறது . 
இன்னும் அத்துறையில் பெரியாரின் தொண்டு நாட்டிற்கு தேவைப்படுகின்றது . எனவே அவர் பல்லாண்டுகள் வாழவேண்டு மென்று விரும்புகிறேன் . 

அவரை வாழ்த்துவதற்கான வயது எனக்கு இல்லை . ஆயினும் அன்புள்ளம் காரணமாக ஒரு நூற்றாண்டுக்கு மேலும் வாழ , அவரை வாழ்த்துகின்றேன் .

( பெரியாரின் 85வது பிறந்தநாளுக்கு மபொசி அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி )