ஞாயிறு, 3 அக்டோபர், 2021

பெரியாரின் 85வது பிறந்தநாளுக்கு மபொசி அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி

பெரியார் ஈ.வெ .ரா . அவர்களுக்கு ,84 -வது வயது முடிந்து , 85 - வது வயது துவங்கி வருவதாக அறிகிறேன் .

 இவ்வளவு நீண்ட காலம் அவர் வாழ்ந்தது தமிழருக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் . ஒருநாள்கூட , ஒரு மணி நேரம்கூட , ஓய்வெடுக்காமல் உழைத்து வருகின்றார்கள் . 

வயது 85 ஆயினும் வாலிபக் களை மாறவில்லை ! தோற்றத்திலோ அவரிடம் தொனியிலோ , நான் காணும் மிடுக்கு வியப்பைத் தருவதாகும் . இந்த புதுமைக்கு காரணம் அவர் பெற்றுள்ள மனத்திட்பமேயாகும் . 

கள்ளமற்ற வெள்ளை உள்ளம் , ஆனால் எவராலும் ஏமாற்ற முடியாத தெளிந்த மதி , பிறரை ஏமாற்ற விரும்பாத மனத்தூய்மை இந்த சீரிய பண்புகளே பெரியாரின் வாழ் நாள் நீடிக்க காரணங்களாகும் ! 

அச்சமென் பதை அறவே ஒழித்த அரசியல்வாதி !! யாருக்காகவும் , எதற்காகவும் , மனத்தில் தோன்றியதை மறைத்துப் பேசும் கபடம் இல்லாதவர் !!!பெரியாருடைய அரசியல் - சமுதாய கொள்கையில் மாறுபட்ட கருத்து எனக்கு உண்டு . ஆயினும் பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்து வரும் நேர்மை , நியதி , ஆகியவற்றால் நான் கவர்ச்சிக்கப்பட்டவன் . 

சாதி சமயத் துறைகளில் , அவர் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள போராட்ட திட்டங்களில் என் போன்றவர்கள் கருத்து வேற்றுமை காணலாம் . ஆனால் சாதி - சமயக் கொடுமை களை எதிர்ப்பதில் , அவர் காட்டும் துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியாது . அத்துறையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர் ஆற்றிவரும் தொண்டு , பிற்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்பட்டி ருக்கிறது . 
இன்னும் அத்துறையில் பெரியாரின் தொண்டு நாட்டிற்கு தேவைப்படுகின்றது . எனவே அவர் பல்லாண்டுகள் வாழவேண்டு மென்று விரும்புகிறேன் . 

அவரை வாழ்த்துவதற்கான வயது எனக்கு இல்லை . ஆயினும் அன்புள்ளம் காரணமாக ஒரு நூற்றாண்டுக்கு மேலும் வாழ , அவரை வாழ்த்துகின்றேன் .

( பெரியாரின் 85வது பிறந்தநாளுக்கு மபொசி அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக