திங்கள், 24 ஏப்ரல், 2017

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பேட்டி


என்னால் ஜாதிகள் வளர்ச்சி தடைப்பட்டது...
மாறன்: உங்களுடைய சுயநலமற்ற சேவை யினாலேதானே எல்லாரும் முன்னேறியிருக்காங்க...
பெரியார்: முன்னேறினாங்களோ என்னவோ - இல்லாட்டா ஜாதிகள் இன்னும் வளர்ந்திருக்கும்.

அவ்வளவு தான் நான் சொல்லுவேன். அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாத்தினேன் - ஜனங்கள் எண்ணத்திலே...
தர்மமும் - வியாபாரமும் - ஜாதியும்
மாறன்: நானறிய 30, 40 ஆண்டுகளுக்கு முன்னாலே, “தீண்டாதவன் - தூர எட்டிப்போ” -ன்னு சொல்லக்கூடிய நிலைமையெல்லாம் இருந்தது.

பெரியார்: அய்யா - நாங்களே தண்ணிப் பந்தல் வைப்போம் - வெய்யில் காலத்திலே. அப்போ அது ஒரு பெருமை. தர்மம்ன்னு பேரு. என்ன தர்மம்? அதிலே திருடறது எங்களுக்குத் தெரியும். நானே வியாபாரியாயிருந்து எவ்வளவு திருடியிருக்கே னென்று எனக்குத் தெரியும்.

ஆனால் தண்ணிப் பந்தல் வைக்கிறது ஒரு பெருமை. அப்படி தண்ணிப் பந்தல் வைத்தால் ஜாதிக்குத் தகுந்தபடி மூங்கில் குழாய் வைப்போம். அதிலே குடிச்சிட்டுப் போக ணும்ன்னு ஜாதிக்குத் தகுந்தபடி டம்ளரை வைப்போம்.

பிராமணாள் - சூத்திரன் - 
ஜாதிப் பெயர்கள் அழிப்பு
மாறன்: இப்போ அதைக் கற்பனைக் கூட பண்ண முடியலியே...

பெரியார்: தடையில்லே. இப்படி கொடுமை யெல்லாமிருந்தது. இதையெல்லாம் அழிக்கிறதுன்னு ஆரம்பிச்சோம். அப்புறம் - ரயில்வே ஸ்டேஷ னுக்குப் போய் “பிரா மணாள் - சூத்திரன்” - போர்டை அழிக்கிற துன்னு ஆரம்பிச்சோம். ஓட்டலிலே ஜாதிப் பெய ரெல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொன் னோம்.

மாறன்: எவ்வளவு துணிச்சலான காரியம் அதெல்லாம்.

பெரியார்: ஏதோ செய்தோம்.

மாறன்: பிறராலே முடியவில்லையே.

பெரியார்: முடியுதோ முடியவில்லையோ... அவ்வளவு ஆசை இருந்தது. அவ்வளவு ஆத்திரம் இருந்தது.

மாறன்: ஆசை மட்டும் இருந்தால் போதாதில்லே - துணிச்சலும் வேண்டுமல்லவா?அது உங்களிடத் திலே மாத்திரம்தான் இருந்தது. அதனாலேதான் நாடு முன்னேறிச்சு.

பெரியார்: முன்னேறனும் முன்னேறிச்சின்னு சொல்றதுக்கில்லே. இல்லாட்டா இன்னும் இப்பவும் எவ்வளவோ ஆகியிருக்கும். 
சமுதாயத்திலே எனக்கு எதிர்ப்பு

மாறன்: அப்போது தங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப் புகள் என்னென்ன வெல்லாம்? சில முக்கியமான எதிர்ப்பெல்லாம் சொல்ல முடியுமா?
பெரியார்: எல்லாம் தான்.

பெரியார் சிந்தனைத் திரட்டு 3, ப: 158.
-விடுதலை ஞா.ம.,22.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக