திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தந்தை பெரியார் நினைவும் கொள்கையும் இருக்கும்வரை பா.ஜ.க. இங்கு தலை எடுக்க முடியாது, பிராமணியம் ஆதிக்கம் செலுத்த முடியாது


மேனாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சங்கநாதம்



பொன்னமராவதி, ஆக. 21- தந்தை பெரியார் நினைவும், கொள்கை யும்  தமிழ்நாட்டில் இருக்கும் வரை பா.ஜ.க.வோ, பிராமணி யமோ தமிழ்நாட்டில் தலை தூக்க முடியாது என்று மேனாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம் பரம் சங்கநாதம் செய்தார்.

13.8.2017 அன்று பொன்ன மராவதியில் மேனாள் நிதிய மைச்சரும், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவருமாகிய ப.சிதம் பரம் பேசுகையில் குறிப்பிட்ட தாவது:

பாரதிய ஜனதா கட்சியால் தமிழ்நாட்டில் வேரூன்றவே முடியாது. இந்த மண்ணிலே இந்துத்துவாவுக்கு இடம் கிடையாது. இந்த மண்ணிலே சடங்கு சாத்திரங்களுக்கு இடம் கிடையாது. இந்த மண்ணிலே மீண்டும் பிராமணிய ஆதிக்கம் தலைதூக்க முடியாது. இந்த மண்ணிலே மீண்டும் மேல் ஜாதி, உயர் ஜாதி என்று தங் களை நினைத்துக் கொண்டிருப் பவர்களுடைய ஆதிக்கத்துக்கு வழிவகுத்துத் தரமுடியாது. பாரதிய ஜனதா கட்சி 60 ஆண்டுகளுக்கு முன்னால், 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாட்டை ஆட்டிப்படைத்த சக்திகளுடைய மறு உருவம்.

தந்தை பெரியாருடைய நினைவு இருக்கும்வரை, தந்தை பெரியாரை தமிழ்ச்சமுதாயம் தந்தை பெரியார் என்று ஏற் றுக்கொண்டிருக்கும்வரை பாரதீய ஜனதா கட்சிக்கு தமி ழகத்திலே ஓர் இடம்கூட கிடைக்கப் போவதில்லை.

தந்தை பெரியார் நமக்கு சுயமரியாதையைக் கற்றுத் தந்தார். தந்தை பெரியார் உயர் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். தந்தை பெரியார் பின் தங்கிய மக்களுக்கும், தலித் மக்களுக்கும் போராடி யவர்.

தந்தை பெரியார் பெண் விடுதலைக்காகப் போராடிய வர். தந்தை பெரியார் சடங்கு சாத்திரங்களை எதிர்த்தவர். 60, 70 ஆண்டுகளாக அந்த மரபு தமிழகத்திலே நீங்காத மரபாக அமைந்திருக்கிறது.

காங்கிரசு கட்சி மாறுபட்ட அரசியல் கட்சியாக இருந்தா லும், தந்தைபெரியாருடைய வழியிலேதான்,  பெருந்தலை வர் காமராஜர் தமிழகத்தை நடத்திச் சென்றார்.

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தினுடைய முதலமைச் சராக இருந்த காலத்திலே, மீண்டும் பிராமணியம் தலை தூக்கவில்லை. மீண்டும் சடங்கு சாத்திரங்கள் தலைதூக்கவில்லை.

தமிழகத்திலே பின்தங்கிய மக்கள், தலித் மக்கள், பெண் கள் கல்வி மேம்பாடு அனைத் துக்கும் அடித்தளம் நாட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர் கள் என்று மேனாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

-விடுதலை,21.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக