வெள்ளி, 22 செப்டம்பர், 2017

யார் தேசத் துரோகி?

நாம் எந்த விதத்தில் தேசத் துரோகிகள்? இந்தத் தேசத் துக்கு அந்நிய ஆட்சி யென் பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கும் என்றும் நிலைபெறும்படி யான ஆட்சிக்குக் கட்டிடம் கட்டிக்கொடுத்து அவற்றிற் குத் தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத் துப் புரட்டிப் பாருங்கள்.

நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதித்திராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ, இந்தத் தேசத்துக்குத் துரோகம் செய் ததாக ஏதாவது ஓர் உதார ணத்தை எடுத்துக்காட்டட் டும்; நாம் உடனே அதற்குப் பிரா யச்சித்தம் செய்துகொள் ளத் தயாராய் இருக்கிறோம்.

வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என் றும், அவர்களும் தாங்களும் ஒரே சாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சா யலும் ஒரேமாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்க ளும் இராஜ்யாய்ப்போய் இந்த நாட்டில் நிரந்தரமாய் வாழவேண்டும் என்றும் நேற்றுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா? அவர் கள் ஒழிந்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இன்றுகூட, பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய வேண் டுமானாலும் சரி, வெள்ளைக் காரப் பூண்டு இந்தியாவில் இருக்கக்கூடாது என்று தீர் மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்கப்புறம் நடப்ப தென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத் திரம் சொல்லிவிடட்டும்; நாங்க ளும் கையெழுத்துப் போடுகி றோம். அதற்கு ஆகப் பார்ப் பனர்கள் எத்தனை பேர் சாகி றார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத் தைக் காட்டிக்கொடுத்துக் கக் கூசில் போய் ஒளிந்துகொள்ப வர்கள்? என்று பார்க்கலாம். அதை விட்டுவிட்டு, உண் மைக் காரணம் என்ன என் பதை மறைத்துவிட்டு எங்க ளைக் கோழைகள் என்றும், தேசத்துரோகி என்றும் சொல் லிவிடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினைத்தால் அது முடியுமா என்றுதான் கேட்கின்றேன்.

தோழர் சத்தியமூர்த்தியை விட நான் எதிலும் பயந்தவ னல்ல. அவர் ஒருதடவை ஜெயிலுக்குப் போயிருந்தால் நான் 7, 8 தடவை ஜெயிலுக் குப் போயிருப்பேன்; என் குடும்பமும் ஜெயிலுக்குப் போயிருக்கும். இத் தமிழ் நாட்டில் அரசியலில் கும்பல் கும்பலாக எதிர்வாதம் செய் யாமல் வலுவில் ஜெயிலுக் குப் போவதற்கு வழிகாட்டி னவன் நானும் என் குடும்ப முமாகும்.
அதுவும் சத்தியமூர்த்தி செல்வத்துக்கும் அவரது செல் வாக்குக்கும் அவர் பொது வாழ்வில் அடைந்திருக்கும் நிலைமைக்கும் நான் ஒன்றி லும் குறைந்தவனல்ல என்றா லும், அவர் ‘ஏ’ கிளாஸ் கைதியாய்ச் சிறையிலிருந் தார்; நான் ‘சி’ கிளாஸ் கைதி யாய் மூத்திரச்சட்டியில் தண் ணீர் சாப்பிட்டுக்கொண்டு வேலை செய்துகொண்டு கோணிச் சாக்கில் படுத்துக் கொண்டு சிறையில் இருந் தேன்.

சென்ற வருஷம் எனக்குக் கிடைத்த தண்டனையின் போதுகூட, எனக்கு ‘சி’ கிளாஸ் கொடுக்கவேண்டும் என்று எனது ஸ்டேட்மெண் டிலேயே எழுதிக்கொண் டேன். அதை எனது தோழர் சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள்தான் அடித்து விட் டார்கள்.

பிறகு எனக்கு ‘ஏ’ கிளாஸ் கொடுத்தார்கள். இராஜம கேந்தரம் ஜெயிலில் எனக்குக் கொடுத்த கட்டில், மேசை, மெத்தை எல்லாவற்றையும் வேண்டாம் என்று வாபீஸ் செய்துவிட்டு, ‘சி’ கிளாஸ் கைதியாகவே இருந்தேன். சாப்பாடு மாத்திரம் டாக்டர் சிபாரிசின் மீது கோதுமை ரொட்டி கிடைத்தது. மற்றபடி நான் ஜெயிலில் எந்த உயர் நிலையிலும் இருக்கவில்லை; சவுகரியம் அடையவும் இல்லை; ஜெயில் சட்டத்தை எந்த வழியிலும் மீறவும் இல்லை.

ஆகவே, நாங்கள் சத்திய மூர்த்தியாரை விடவோ, மற்ற யாரையும் விடவோ பாப்பர் என்றோ கோழை என்றோ கஷ்டத்துக்குப் பயந் தவர்கள் என்றோ யாரும் சொல்லிவிட முடியாது.

காங்கிரசுக்காரர்கள் அடி பட்டார்கள், உதைபட்டார் கள், இலட்சம்பேர் ஜெயிலுக்குப் போனார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்கின்றேன்.

இன்று அவை தப்பு என்று எண்ணவில்லை என்று சொல் வதானாலும், அதனால் பிர யோஜனமில்லை என்றும், அந்த மாதிரி தியாகத்தால் வெள்ளைக்காரர்கள் மனதை இளகச் செய்ய முடியவில்லை என்றும், இனி செய்யக்கூடாது என்றும் காங்கிரஸ் தீர்மா னித்துவிட்டதா, இல்லையா? என்று கேட்கின்றேன். காங் கிரஸ் 1933இல் தீர்மானித்தால், பார்ப்பனரல்லாதார் இயக்கம் 1920லேயே இப்படித் தீர்மா னித்தது. இதில் என்ன தப்பு சொல்ல முடியும்? இதனால் பார்ப்பனரல்லாதார் கோழை களாகி விடுவார்களா? தேசத் துரோகிகளாகி விடுவார்களா?

-- குடிஅரசு, 14,6,1936
-விடுதலை,1.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக