வெள்ளி, 30 மார்ச், 2018

இந்துமதப் பிரச்சாரம்

15.04.1928-  குடிஅரசிலிருந்து...

இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ் வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங் களையும் சுயநலக் கொள்கை களையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந்தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப் பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறி யாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள் களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் பல ரூபங் களாகவும், பல அவதாரங் களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங் குவதும், துதிபாடுவதுமே சைவ வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக் கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப் பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோஅல்லது சமாதான மோ யோக்கியமான வழியில் சொல்லவோ எழுதவோ இல்லை.

ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங் களிலும் பலமாக கட்டுப் பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேரா லுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத்தறிவை உபயோ கிக்காமலும் பொது ஜனங்களுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படாமலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டுகளை நிலைநிறுத்த ஏற் படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான நாஸ்திக மாச்சுது மதம் போச்சுது கலிகாலத்தின் கொடுமை என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயு தங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின் றார்களே ஒழிய ஒரு வழியிலாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகாலமாக சில சைவர் கள் என்போர்கள் நம்மைப்பற்றி காணாத இடங்களில் சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார் என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர் களுள் ஏமாறத்தக்கது மான வார்த்தைகளை அடுக்கித் துண்டு விளம்பரங்கள் போடுவதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரி கைகளும் தனக்கென யாதொரு கொள்கை யுமற்ற சமயம் போல் நடந்து உயிர் வாழ் வையே முக்கியப் பிழைப்பாய்க் கொண்டிருக் கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் நாயக்கர் பிரச்சாரம், என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள்பேரால் எழுதுவ தற்குத் தைரியமற்று ஏதோ பல அனாமதேயங்களின் பேரால் நாயக்கர் மதத்தை அழிக்கப் பார்க்கின்றார், நாஸ் திகத்தை பிரச்சாரம் செய்கின்றார் என்கின்ற மாதிரி எழுதுவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.

நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கடவு ளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும் அது போலவே விஷ் ணுவைப் பற்றியும் விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்ட வைணவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி மததூஷணை தெய்வ நிந்தனை என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும் போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக் கும் போதும் சைவன் வைஷ்ணவத்தையும் விஷ்ணுவையும், வைண வன் சைவத்தையும் சிவனையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழிவாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போ மானால் இது வரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற் றில் பதினாயிரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகியவைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர் களுக்கு இதன் உண் மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல் வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற்கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதாகவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும் ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷயங் களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லியும் வருகின்ற தோடல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல் வதுபோல் அதற்கு இதல்ல அருத்தம் இது சையன்சுக்குப் பொருத்தம் இது படியாத முட்டாளின் கருத்து இது குண்டர் களின் வேலை ஆராய்ச்சியில்லாதவர்களின் கூற்று என்பதான அயோக்கியத்தனமும், போக்கிரித்தனமும், பேடித்த னமும், இழிதகைமையும் பொருந்தியதான சமாதானங்களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.

அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களைச் சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல் லுவதையும் எடுத்து இரண்டொரு உதார ணங்கள் காட்டுவோம்.

தற்சமயம் நமது பிரச்சாரத்தைப் பற்றி வைணவர்களை விட சைவர்களுக்குத் தான் அதிக ஆத்திரமாக இருக் கின்றது. அவர் களுக்குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய்விடுமோ என்கின்ற பயம் அதிகமாய்ப் பிடித்து ஆட்டி மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைண வர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண் டதாகத் தெரியவில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப்படையாய் ஒன்றையும் காணோம்.. சமீபத்தில் வைணவன் என்கின்ற ஒரு பத்திரிகை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமாயணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக்குச் சற்று மனத்தாங்கல் இருப் பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ) வில்லை. ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்ன வென்றால் இராமாயணத்தைக் காட்டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராமனைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பல இருக்கிறார்கள். அவ்வாபாசங்களைக் குறித்து இவ்வாராய்ச்சிக் காரர் ஒரு வார்த்தையேனும் கூற முன்வரவில்லை. இராமாயணம் மட்டும் இவர்கள் கண்களில் உறுத்திக் கொண்டிருக்க காரணம் என்ன என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒருமறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்குச் சொல்லும் பதில் மற்ற நூல்களுடையவும், கடவுள்களுடையவும் ஆபாசங்கள் அதனதன் முறையில் தானாக வெளிவரும்.  இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இராமாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரிசைக் கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற்பட்டது என்பதும் இராமா யணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப் பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும், பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமாயிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுந்தான்.
- விடுதலை நாளேடு, 30.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக