வெள்ளி, 22 மார்ச், 2019

புல்லேந்தும் கை வாளேந்துமா?



பார்ப்பனர்கள் ஆணவத்தோடு அந்தணர் மாநாட்டைக் கூட்டி நமக்கு சவால் விடுகிறார்கள். நேற்று முளைத்த காளான்கள் தானே நீங்கள் என்ற தன்மையை நீங்கள் அறியாமல்  போனதேனோ? காளான்கள் வெயிலில் கருகி போகும். மழை பெய்தால் துளிர்க்கும், அதுபோல் இந்த சுயராஜ்ய காலம் உங்களுக்கு மழைக்காலமாயிருக் கிறது. நீங்கள் துள்ளிக் குதிக்கிறீர்கள். நாளை மக்கள் அறிவு பெற்றெழுவார்களானால் (வெயிற்காலம் வருமானால்) நீங்கள் காளான்களைப்போல் கருக வேண்டிவர் கள்தானே! இதை சிந்திக்க வேண்டாமா நீங்கள்?

நாங்கள் நம்பிக்கை குறைவாக நடந்து கொண்டதாக ஒரு உதாரணமாவது உங்களால் காட்ட முடியுமா? உங்களிடம் பண்டிதர்களும், பி.ஏ.க்களும், எம்.ஏக்களும் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் நீங்கள் பெருமையடித்துக் கொள்ளலாம் என்றாலும், நேற்று புதிதாக பள்ளியைவிட்டு வந்து எங்கள் கழகத்தில் சேர்ந்து ஒரு 10 நாளைக்குள் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டிருந்த மாணாக்கன் ஒருவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லையே உங்களால்!  அவன் கூறுவானே பதில், நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் உங்கள் பெரிய பெரிய தலைவர்கள் பேச வந்தால் கூட ஒரு 2, 3 ஆயிரம் பேரைக் கூட்ட முடியவில்லையே! எங்கள் கழக மாணவன் ஒருவன் பேசுவதா யினும் கூட ஆயிரக்கணக்கில் கூட்டம் சேர்ந்து விடுகிறதே! ஒரு கருப்புச் சட்டைக் காரனைத் தொலைவில் பார்த்தால் கூட உங்கள் தலைவர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். இதன் அர்த்த மென்ன? வரப்போகிற அரசியல் சட்டம்  எப்படி இருக்க வேண்டுமென்று எடுத்துச் சொல்லக் கூடவா எங்களுக்கு உரிமை இருக் கக் கூடாது. எங்கள் உரி மையை எத்தனை நாள் மறுத்து வரமுடியும்? வெடிகுண்டை மூடி வைத்தால் எத்தனை நாளைக்கு அது வெடிக்காமல் இருக்கும்? இந்நாட்டைப் பற்றியோ, இந்நாட்டு மக்களைப் பற்றியோ  அவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) கவலை கிடையாது. ஆகவே அவர்களை கண்டு நீங்கள் ஆத்திரப்பட்டு விடக்கூடாது. ஆராய்ந்து தெளிய வேண்டும். நீங்கள் (தமிழர்கள்) பார்ப்பனர் திராவிடர் போராட் டம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது.  பார்ப்ப னர்களும் துணிந்துவிட்டார்கள். துணியக் காரணமும் இல்லாமல் இல்லை.

இன்று ஆட்சி  இவர்கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. அநேகமாக இவர்களின் ஆதிக்கத்திற்கு இதுவே கடைசி காலமாகவும் இருக்கக் கூடும். இன்று தவறின்  நாளை ஆட்சிய யார் கைக்குச் செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆகவே ஆட்சி தம் ஆதிக்கத்தில் உள்ள போதே நம்மீது பாய்ந்து தம் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். கருப்பு நாய், வெள்ளை நாய் ஆகாது. கழுதை குதிரை யாகாது. ஆண் பெண்ணாக மாற முடியாது. பெண் ஆணாக மாற முடியாது. இவை எப்படி ஆண்டவன் படைப்போ, அதுபோல் ஆண்டவனால் பார்ப்பனாகப் பிறப்பிக்கப் பட்டவன் பார்ப்பானாகத்தான் இருப்பான். ஆண்டவனால் சூத்திரனாகப் பிறப்பிக் கப்பட்டவன் சூத்திரனாகத்தான் இருப் பான்.  இவைகள் மாற்ற முடியாதவைகள் என்று கூறியிருக்கிறார்கள்.  திவான் பகதூர் ராமசாமி சாஸ்திரியார், எம்.எஸ். சுப்ரமணி அய்யர் ஆகியோர் கூடி இனி இரண்டிலொன்று பார்த்துக் கொள்ள தீர்மானத்திருக்கிறார்கள்.  புல்லேந்திய கை வாளேந்தும். பலமுறை வாளேந்திப் பலரைக் கொலை செய்திருக்கிறோம். பலரை அண்டியிருந்து பிழைத்திருக்கி றோம்? என்று கூறினாலும் மார்தட்டிக் கூறுகிறார்கள். சிப்பாய் கலகத்தை நடத்தி யவர் யார் தெரியுமா ராணா என்கிற ஒரு பார்ப்பான். ஞாபமிருக்கட்டும். அதுமட் டுமா? திருநெல்வேலியில் ஆஷ் துரையை சுட முன்வந்தவன் யார் தெரியுமா? வாஞ்சி என்கிற ஒரு பார்ப்பான் என்று கூறிவிட்டு இதுமட்டுமா உலகமே போற்றிய உத்தமர்  காந்தியாரைக் சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? கோட்சே என்கிற ஒரு பார்ப் பான் என்பது ஞாபகம் இருக்கட்டும் என்று கூறாமல் குறிப்பு மட்டும் காட்டியிருக் கிறார்கள். துப்பாக்கி எடுக்குமளவு துணிந்து நம்மை போருக்கு அழைக் கிறார்கள்.

நாம் அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்  அவர்கள் பேச்சுப்படி முன்வரட்டும்!


அதற்கு முன் சற்று அந்த அய்யர் கூறியிருப்பதை அலசிப் பார்ப்போம். ஆணைப் பெண்ணாக்க முடியாது.  பெண்ணை ஆணாக்க முடியாது என்கிறார். அய்யோ பாவம்! இன்னும் இந்த அய்யன் பஞ்சாங்கக் காலத்திலேயே இருக்கிறார். மேனாட்டு அறிஞர்கள் இதற்கும் வழிகண்டுபிடித்து விட்டார்கள் என்பதையும்,  ஒரு பெண் ஆணாக்கப் பட்டு விட்டார் என்பதையும் இயற்கை யாகவே சேவல் பெட்டையாவதும், பெட்டை சேவலாவதும் சகஜமாகவே இருந்து வருகிறது என்பதை இவர் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.

அடுத்த படியாக பாப்பானும்  சூத்திர னும் கடவுள் படைப்பு என்பது.ஆகவே இவ்வேற்றுமை மாற்றக் கூடாது. மாற்ற முடியாது என்கிறார். இந்தப் பார்ப்பானை படைத்த கடவுள்தானே என்னையும் படைத்திருக்க வேண்டும்? அந்தக் கடவுள் அனுமதியில்லாமலா பாப்பானை ஒழிப்பது தான் சூத்திரனை ஒழிப்பதுதான் என் வேலை என்று கூறிக் கொண்டு அதை யொட்டி பிரசாரம் செய்து வருவேன்? நான் மட்டும் எப்படிக் கடவுள் ஆக்கி னைக்கு புறம்பாக நடக்க முடியும்? அப்படி யிருக்கும் போது அவரண்டையே போய் முட்டிக் கேளேன். ஆண்டவனே அந்தண னையும் படைத்து அவனை ஒழிக்க ஒரு இராசாமி நாய்க்கனையும் ஏன் படைத்தாய் என்று! உன் மண்டையில் இருப்பது  மூளையா? களிமண்ணா? மூளையிருந் தால் இதை உன்னால் உணர்ந்து கொள் ளாதிருக்க முடியுமா? இதுவரை பல கஷ்டங்களுக்கிடையேயும் இந்தத் தூத்துக்குடியில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் கூடியிருக்கிறோம் என்றாலும் ஒரு பார்ப்பனப் பத்திரிகையாவது ஒரு வரி எழுதுமா இங்கு நடக்கும் நடவடிக்கைப் பற்றி?   ஏதாவது ஒரு சின்னக் கலவரம் இங்கல்ல, தூத்துக்குடிக் கடைத்தெருவில் கருப்புச் சட்டையினர் கலாட்டா என்று பிரசுரிக்கின்றவா இல்லையா பாருங்கள்? அவ்வளவு கட்டுப்பாடாக நம் சங்கதியை மறைக்கின்றன. எங்கோ சென்னை ரஸிக ரஞ்சனி சபாவில் மூணே முக்கால் பார்ப் பனர்கள் கூடினார்கள் என்றால், அதுபற்றி ஒவ்வொரு பார்ப்பன பத்திரிகைகளிலும் ஒரு பக்கம் சேதி வருகிறதே இந்த அக்கிரமத்தைப் பற்றிக் கேட்க ஆளுண்டா! இவ்வளவு அக்கிரமம் நீங்கள் செய்து கொண்டு புல்லேந்தும் கை வாளேந்தும் என்று கூறுகிறீர்கள். அடுக்குமா, இந்த ஆணவம் உங்களுக்கு?

வாங்கோ! தம்பிகளே வெளியில், இப்படி நீங்கள் நேரில் வரவேண்டும் என்று தானே இவ்வளவு காலம் பொறுத்திருந் தோம். எவ்வளவு சீக்கரம் வெளிவருகிறீர் களோ! அவ்வளவு சீக்கரம் எங்களுக்கு நலமா யிற்றே! அவ்வளவு சீக்கிரத்தில் எங்களது இழிவும் ஒழிந்து போகுமே! நீங்கள் இருப் பது 100க்கு 3 பேர் நாங்கள் இருப்பது 100க்கு 97 பேர். எங்களில் ஒரு ஆள் உங்களில் ஒரு ஆளைக் கூடவா வெற்றிக் கொள்ளமாட் டான்? நாங்கள் 97 க்கு 3 பேர் அழிந்தால் பரவாயில்லை. மிச்சம் இருக்கும் 94 பேராவது இழிவு நீங்கி மனிதர்களாக வாழ்வார்கள். உங் களில் 3க்கு 3 பேர் மாண்டால் அப்புறம்  சைபர்தான் இருக்கும். புல்லேந்தியவர் வாளேந்தினால், வாளேந்தி யவர்கள் என்ன ஏந்துவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் விரல் உரல் ஆனால், உரல் என்ன ஆகும்?அப்புறம் உங்கள் கதி என்னவா கும்? என்பதையும் நினைத்து பாருங்கள்.

அனுதினமும் பார்ப்பனர்கள் தான் திராவிடர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்களே ஒழிய திராவிடர்களல்ல. பார்ப்பனர்களுக்கு தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள  வேண்டும். பார்ப்பனர் கள் வாழையிலைகள், திராவிடர்கள் முட்செடிகள். வாழையிலை முள்ளின் மீது மோதினாலும், முள் வாழை இலை மீது மோதினாலும் வாழையிலை தான் அழிந்து விடும். அதுபோல பார்ப்பனர்கள் திரரவிடர் கள் மீது மோதினாலும் தாம்தான் அழி வார்கள். திராவிடர்கள், பார்ப்பனர்களை மோத ஆரம்பித்தார்களோ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந்நாட்டில் இருக்காது. இதைப் பார்ப்பனர்கள் உணர வேண்டும்.

(தூத்துக்குடி திராவிடர் கழக 18 ஆம் மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் உரை  குடிஅரசு சொற்பொழிவு 29.5.1948)
-  விடுதலை ஞாயிறு மலர், 9.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக