புதன், 20 மார்ச், 2019

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)

10.01.1948 - குடிஅரசிலிருந்து...

பிச்சைக்காரன் என்பவன் யார்?

பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்.

செல்வவான்கள் என்பவர்கள் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்கு மேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

தரித்திரர்கள் என்பவர்கள் யார்?

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் - நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். தங்கள் வரவுக்கும், தகுதிக்கும் மேல் வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்.

 - விடுதலை நாளேடு, 16.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக