செவ்வாய், 20 ஏப்ரல், 2021

தாடி வந்த கதை!


 “சென்ற முறை 1929இல் நான் மலாயா வந்தபோது தாடியில்லாமலிருந்தேன். மலாயாவிலிருந்து நாகப் பட்டினத்துக்குக் கப்பலேறிச் செல்கை யில் கப்பலில் சவரம் செய்வித்துக் கொள்ள கொடுக்கு பிடித்து நிற்க வேண்டியிருந்தது. இந்தத் தொந்தரவு தாளாமல் கப்பலில் நான் சவரம் செய்வித்துக் கொள்வதையே விட்டு விட்டேன். அதனால் நாகப்பட்டினத்திற்கு தான் 10 நாளைய தாடியுடன் சென்றிறங்கினேன் ; இன்று 25 வருஷத் தாடி என் தாடி!”

(சிங்கப்பூர் புக்கிட் பெந்தாங்கில் மக்கள் மன்றத்தில் தமக்கு அளிக்கப் பட்ட வரவேற்பில் பெரியார் பேசியது.)

- சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’, 8.1.1955

அட்லி அன்றே சொன்னார்!

‘நியூஸ் கிரானிக்கல்’’ செய்தியாளர் ஃராங்க் பார்பர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபுவைப் பேட்டி கண்டபோது அட்லி பின் வருமாறு கூறினார்.

“இந்தியா நமது சுதந்திரப் பரம்பரையில் வளர்ந்து வந்தாலும் பார்லிமெண்டரி முறையைப் பின்பற்றி வந்தாலும், இவைகள் படித்த ஒரு சிறு கூட்டத்தாரிடம் தான் இருந்துவருகிறது.

இந்தியாவில் எந்த நேரத்திலும் சர்வாதிகாரம் ஏற்படும் என்ற வாய்ப்பு இருந்துவருகிறது. நாடு மொழி வழி அடிப்படையில் துண்டாகும். தெற்கே இந்தி பேசாத மக்கள் பெரிதும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

(1959 ஏப்ரலில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக