வியாழன், 22 ஜூலை, 2021

பெரியார் தரும் தகவல் கடவுள் என்றால் என்ன?

 

லாகூரில் சிக்கிய நபர்

லாகூரில் ஒரு ரீடிங் ரூமில் நானும் அண்ணாதுரையும் போனபோது ஒரு பிரசங்கம் செய்யச் சொன்னார்கள்நானும் ஒப்புக்கொண்டு பேசினேன்என்ன பேசினேன் என்றால் நாம் அறிவிற்கு மதிப்புக் கொடுக்காததால்சிந்திக்காததால் இழிமக்களாக ஆகிவிட்டோம்இதற்குக் காரணம் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கைமத நம்பிக்கைபுராண நம்பிக்கை இவைகளே ஆகும்நம் இழிவு நீங்க வேண்டுமானால் இந்த கடவுள்புராணம் இவைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று பேசிக்கொண்டி ருக்கும் போது ஒருவர் குறுக்கே எழுந்து, “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டாஇல்லையா?’’ என்று கேட்டார்.

உடனே நான் பேப்பர்பேனாவை எடுத்தேன். “நீங்கள் கேட்டது ரொம்ப சரிஎனக்குப் புரியவில்லைகடவுள் என்றால் என்னஅதன் குணம் என்னஅது எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாக எழுதிக் கொடுங்கள்அதன்பின் நான் ஒவ்வொன்றாக விளக்கம் கொடுக்கிறேன்அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்’’ என்றேன்கேள்வி கேட்டவர் எதுவும் செய்யாமல் விழித்துக் கொண்டு நின்றார்தலைவர்அவரைப் பார்த்து, “நீயாகப் போய்த்தானே மாட்டிக் கொண்டாய்இப்போது அவர் கேட்கிறாரே எழுதிக் கொடு’’ என்றார்அதற்கு அவர், “இவர்கள் நமது எதிரிகளின் கையாள்கள்அதனால்தான் அவர் இப்படிப் பேசுகிறார்’’ என்று சொன்னார்பிறகு தலைவர்அவரை உட்காரச் செய்து அவர் சொன்னார்இப்போது கேள்வி கேட்டதனால் கேட்டவருடைய அறிவை வெளிப்படுத்தி விட்டார் என்று சொல்லி என்னை மேலே பேச அனுமதித்தார்கேள்வி கேட்டவர் ஒரு அய்.சி.எஸ்காரரின் சகோதரர்.

தந்தை பெரியார் உரையிலிருந்து,

விடுதலை’ 30.05.1967

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக