செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கேரளா மாநிலம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தந்தை பெரியார் படத்திற்கு கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை


வைக்கம்செப். 19- தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாளான சமூக நீதி நாளை முன்னிட்டு, 17.09.2021 அன்று கேரளா மாநிலம்கோட்டயம் மாவட்டம்வைக்கத் தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் கோட்டயம் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர் பி.கே.ஜெயசிறீ ..., அவர்கள் தந்தை பெரியார் அவர் களின் சிலையின் அருகே அமைக் கப்பட்ட படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்திபொது மக்களுக்கு இனிப்புகளை வழங் கினார்இந்நிகழ்ச்சியில்வைக்கம் நகராட்சித் தலைவர் ரேணுகா ரதீஷ்கேரள மாநில செய்தித்துறை துணை இயக்குநர் பிரமோத்கோயம் புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்

.செந்தில் அண்ணாநகராட்சி உறுப்பினர் வி.ஞானசேகரன்வட் டாட்சியர் சஜிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்துகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக் டர் ஜி.எஸ்.சமீரன் ..., அவர் களின் சார்பாக "தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு", "முன்னாள் முதலமைச்சர்கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறுஆகிய புத்தகங்கள் கோட்ட யம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பி.கே.ஜெயசிறீ அவர்க ளுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சுயமரியாதைபகுத்தறிவுசம தர்மம்சமூகநீதிஇன உரிமைபெண் உரிமைஆகியவற்றை அடிப் படையாகக் கொண்ட கொள்கை யைத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள்அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூ கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட் டதுஎதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறதுஇந்த உணர்வைஉணர்ச்சியைஎழுச் சியைசிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசன்தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூக நீதி நாள் ஆகக் கொண் டாப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் அறிவித்திருந் தார்கள்.

அதனடிப்படையில்கேரளா மாநிலம்கோட்டயம் மாவட்டம்வைக்கம்தந்தை பெரியார் நினை வகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியாரால் உலக அளவில்

பெருமை பெற்ற வைக்கம்

தமிழ் நாட்டிற்கும்இந்தியா விற்கும் சமூக நீதிக்காக போராடிய முன்னணி தலைவர்களில் தந்தை பெரியார் அடித்தட்டு மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்கேரள மாநிலத்தில் தீண்டாமை தாக்குதல் அதிகமாக இருந்த காலத்தில் கள மிறங்கி தாழ்த்தப்பட்ட மக்களை கோயில் தெருக்களில் அனுமதிக்க எடுத்த போராட்டத்தில் வெற்றி பெற்றார்இதன் காரணமாக வைக்கம் என்ற இந்த ஒரு சிறிய ஊர் உலக அளவில் பெருமை அடைந்தது.

இந்திய சுதந்திர போராட்டத் தின் போது காந்தியாருடன் இணைந்துபல்வேறு போராட்டங்களில்ஈடுபட்டு உள்ளார்மக்களிடையே இருந்த மூட நம்பிக்கைகளை அகற்ற முழு மூச்சாக போராடியவர்அவரது பிறந்த நாளில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் நாடு அரசுக்கு நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன்என கோட்ட யம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பி.கே.ஜெயசிறீ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக