பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

சனி, 19 பிப்ரவரி, 2022

பார்ப்பனர்களே! கனவு பலியாது


 
   February 13, 2022 • Viduthalai

தந்தை பெரியார்

காந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று, இந்து மத சாதிர சம்பிரதாயங்களின்படி பதிமூணாம் நாள் அஸ்தி கரைக்கும் சடங்கு இந்திய யூனியன் முழுவதும், எந்த அளவு இந்து மத வெறிக்கு இடம் கொடுக்க முடியுமோ, அந்த மாதிரியான நடவடிக்கைகளால் நடந்து முடிந்திருக்கிறது. காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு பார்ப்பனன் - இந்துமத சாம்ராஜ்ய வருணாசிரம வெறியன் என்கின்ற கொடுமையை எப்படி மறைக்கிறது என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பனியத்திற்கு ஒத்தாசையாக இருந்தே வயிற்றுப் பிழைப்பையும், கவுரவத்தையும் மற்ற நடவடிக்கைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்துவிட்ட பக்தர்கள், தொண்டர்கள், தலைவர்கள், தியாகிகள், மந்திரிகள் என்பது போல பல முத்திரைகள் குத்திக் கொண்டவர்களும், பிரபுக்கள், ஜமீன்தார்கள், கள்ள மார்க்கட் வியாபாரிகள் என்கிற பெயர்களிலிருக்கிற பகற்கொள்ளைகாரர்களும், ஆச்சாரியர்கள், சுவாமிகள், மகந்துக்கள், என்கின்ற பெயர்களிலிருக்கிற தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் சேர்ந்து போட்டிப் போட்டுக் கொண்டு படிதாண்டாத பக்தர்களாக ஆகிப் பார்ப்பனிய மதத்திற்கு இப்போதைய நிலைமையில் எவ்வளவு பாதுகாப்புச் செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து விட்டார்கள். இந்த நடவடிக்கைகள் மறைந்த பெரியார் காந்தியாருக்கு மரியாதையைச் செய்வதாகும் என்று சொல்லப்படுவதை நாம் ஒப்புக் கொண்டாலும், இந்தக் காரியத்தின் ஆடம்பரங்களால் பார்ப்பனியம் எப்படி உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டது? அதனுடைய சதிச் செயல் நிறைவேறுவதற்கு மேலும் எந்த மாதிரிக் காரியங்கள் செய்து வருகின்றது? என்பதைத்தான் இங்கு எடுத்துக்காட்டுவதற்கு ஆசைப்படுகிறோம்.

பார்ப்பனிய மதக் கொடுமையை - வஞ்சகத்தை - மானத்தை அழிக்கும் செயலை - கொள்ளையும், கொலையும் செய்யும் கொடிய போக்கினை இந்த திராவிட நாட்டில் பிறந்து மறைந்த ஒவ்வொரு அறிவாளியென்று பெயர் எடுத்தவர்களும், அந்தந்தக் காலத்தில் எந்தெந்த அளவு அவர்களால் தெரிவித்திருக்க முடியுமோ, அப்படி அப்படித் தெரிவித்துத்தான் போயிருக்கிறார்கள் என்பதையும், அவைகளெல்லாம் வெறும் பக்திக்குரிய, பூஜைக்குரிய, பாராயணத்திற்குரிய ஏட்டுச் சுரைக்காய்களாக ஆகிவிட்டன என்பதையும் அவற்றை தெரிவித்தவர்கள், சித்தர்கள், அடியார்கள், வள்ளலார்கள், மகான்கள் என்கிற பெயர்களுக் குரியவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையும், இந்த பெரியார்களுடைய கருத்துக்கள் மக்களுக்குப் பிரயோசனப் படாமல் போவதற்குப் பார்ப்பனியம் என்னென்ன குள்ளநரிச் செயல்கள் செய்ய வேணுமோ, அதையெல்லாம் செய்து விட்டது என்பதையும் நாம் பல முறையும் விளக்கி வந்திருக்கிறோம்.

இந்தப் பார்ப்பனர்களின் மோசடித் தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டு மக்களை மூடப்பழக்க வழக் கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டு மானால், உலகத்தின் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பட்டிருக்கும் மதவுணர்ச்சியின் வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும்; குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க் கும் பண்டிகைகள் வெறுக்கப்பட வேண்டும்; அயோக்கிய செயல்களுக்கெல்லாம் வளர்ப்பு பண்ணைகளாயிருந்து, மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடாலயங்கள் எல்லாம் மக்களின் சொத்தாக ஆக வேண் டும்; காந்தியார் சொன்னது போல் விபசார விடுதிகளாயிருக்கும் கோவில்கள் எல்லாம் கோயில் பூனைகளுக்குப் பால் பண்ணையாக இல்லாமல், மக்களுக்கு அறிவுப் பண்ணை யாக ஆக வேண்டும்; என்கிற கிளர்ச்சியை இந்த நாட்டில் கல்லெறிக்கும், சாணி வீச்சுக்கும் செருப்பு வீச்சுக்கும் இடையிலும், அக்கினித் திராவகம் வீசுதல், நெருப்பு வைத்து பந்தலை எரித்தல், சேலையையுரிந்து மானபங்கப்படுத்துதல் என்கிற காங்கிரசார் ஆட்சியில் நடந்த அக்கிரம அட்டூழிய செயல்களுக்கிடையிலும், நமது தலைவர்களும், தொண்டர்களும், தாய்மார்களும் எந்த விதமான சொந்த பிரயோஜனத்தையும் கருதாமல் விடாது செய்துவந்திருக்கிறார்கள் என்பதையும் திராவிட நாடு நன்கறியும்.

பார்ப்பனர்களின் அக்கிரமமான நடத்தையைப் பொறுக்க முடியாமல், மனிதப் பண்பின் மீது வைத்த நம்பிக்கையினால், இந்த மாதிரியான கிளர்ச்சி வலுவாக 25 வருடங்களாகவே நடந்து வந்தாலும், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வாழ்வதையே தொழிலாகக் கொண்ட பார்ப்பன வர்க்கத்தின் பிரதிநிதிகளான இந்து, சுதேசமித்திரன் என்கிற விஷ ஊற்றுகளும், அவைகளின் கிளைகளான விகடன், கல்கி போன்ற விஷ சாக்கடைகளும் பாஷ்யங்கள், பட்டா பிராமன்கள், வரதாச்சாரிகள், வைத்தியநாதர்கள் என்கின்ற விஷ கொசுக்களும், பரவி, தீண்டி, கொட்டி வருகிற கொடுமைகளாலும், நம்முடைய இனத் துரோகிகளான கவிதாமணிகள், ரிப்பேர் செய்யும் பண்டிதர்கள் என்பவர்கள் அவர்களோடு கூடிக் கொண்டு அவர்கள் வீசி எறியும் எச்சிலை சுவைத்து ருசித்து, ரசித்துக் கொண்டு, முன்னோடும் பிள்ளைகளாய் இருந்து வருவதாலும், மக்களுடைய சிந்தித் துணரும் திறனை எல்லாத் துறைகளிலும் பங்கு போட்டுப் பறிமுதல் செய்துவந்த துணிவினாலும் நம்மையே நாஸ்திகர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும், வகுப்புவாதிகள் என்றும் கூசாமல் பார்ப்பனர்கள் பட்டம் சூட்டினார்கள்.

தீவிரவாதிகள், அதி தீவிரவாதிகள் என்று அரசியலில் பெயர் எடுத்தவர்கள் எல்லாம், இந்த மதக் கொடுமையை அறிந்தும் கூட வெளியில் சொல்வதற்கு அஞ்சி வாழ்ந்த காலத்தில், மதவுணர்ச்சியைப் பெருக்குவது, வளர்ப்பது நல்ல தல்ல. மத வெறி நாட்டிற்குப் பெரிய தீமையைச் செய்யும் என்று நாம் கூறிய போது நம்மை நாஸ்திகர்கள் என்று சொன் னதற்கு ஆக நாம் பின் வாங்கவில்லை. ஏன்? எப்படியாவது உண்மை வெளிப்படத்தானே வேண்டும்? எவ்வளவு காலத் திற்குத்தான் புரட்டர்களுடைய திருகுதாளங்கள் வெற்றி யடையும்? என்று எண்ணிய உறுதியான நம்பிக்கை யினாலேயே நம் நம்பிக்கை வீண் போகவில்லை. பெரியார் காந்தியாருடைய படுகொலைக்குப் பிறகு, இந்த நாட்டிலுள்ள எல்லா பத்திரிகைகளும், ஒரே குரலாக மகாத்மாவை மத வெறி அழித்துவிட்டது. மதவெறி ஒழிக! மத வெறியே மாண்டு போ! என்று கூறுவதைக் கேட்க, அப்பாடா! இப்பொழுதாவது இந்த பத்திரிகைகளுக்கு ஞானம் வந்து விட்டதே என்று நம் கோரிக்கை வெற்றி பெற்றதை எண்ணிப் பெருமூச்சு விட்டாலும், இவர்களுக்கு இந்தப் புத்தி வருவதற்காக காந்தியாரா படுகொலையடைய வேண்டும்? என்பதையும், வந்த புத்தி நிலைத்திருந்து அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டாமா? என்பதையும்தான் இந்த நேரத்தில் வருத்தத்தோடு எண்ண வேண்டிவர்களாகவும் இருக்கின்றோம்.

இன்றைக்கு மதவெறி, மதவெறி என்று முழக்கமிடுகின்ற பத்திரிகைகள்,  அந்த மதவெறியை, விஷ நீரை ஊட்டு வதற்காக என்னென்ன முறைகளைக் கையாண்டன? எவ் வளவு துணிந்து அயோக்கியத்தனமாகப் பொய் புளுகுகளை மூட்டை மூட்டையாகப் பரப்பின? இதற்கு சித்திரங்கள், இசைகள், சினிமாக்கள், செய்தித் தாபனங்களை எப்படி துணையாகச் சேர்த்துக் கொண்டன? என்ற இவைகளை யெல்லாம் கொஞ்சமும் எண்ணிப் பாராமல் இப்போது மதவெறியே! மாண்டுபோ! என்று போடுகிற கூச்சலால் ஏற்படப்போகும் பிரயோசனமென்ன? முந்தின போக்குத் தவறான பாதை என்பதை உணராவிட்டால், இப்போது மதவெறி மதவெறி என்று சேர்ந்து கோவிந்தா போடு வதனுடைய அர்த்தமென்ன?

உண்மையாகவே மதவெறி கொடுமை யானது என்பதை இந்த நாட்டு பார்ப்பனர்கள் உணர்ந்தார்கள் என்றோ, பார்ப்பனப் பத்திரிகைகள், தேசியப் பத்திரிகைகள் தெரிந்து கொண்டு விட்டன என்றோ எவராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் உணரவில்லை, பார்ப்பன பத்திரிகைகள் தெரிந்துகொள்ளவில்லை என்ற நிலைமை இருந்தால் கூட பாதகமில்லை. ஒரு பக்கம் மதவெறி - மதவெறி என்று கூப்பாடு போட்டுக் கொண்டே, மற்ற ஒன்பது பக்கங்களிலும் மதவெறியைப் பெருக்குவதற்கான காரியங்களையே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்கிறதென்றால் இந்த போக்குக்கு ஒரு முடிவில்லையா? ஏ! பார்ப்பனியமே! இந்த நாட்டையும் ரத்தக்கறை படிய செய்ய வேண்டும் என்பதிலே ஏன் உனக்கு இவ்வளவு ஆசை? என்பதை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

திராவிடர் கழகம் ஒரு வகுப்பு வாத ஸ்தாபனம். பார்ப்பனர்கள் மீது துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதை இந்த நேரத்திலே ஒழித்துக் கட்டவேண்டும் என்கிறது இந்து. பேஷ்! ஒரே கல்லால் இரண்டு பட்சிகளை - ஏன் - மூன்று பட்சிகளை வீழ்த்தும் திட்டம் என்று அது உள்ளம் மகிழலாம். காந்தியாரைச் சாகடித்ததற்கு ஏதோ சில பார்ப்பனர் களையாவது பலி கொடுக்க வேண்டியிருக்கிறதே. இந்த பலியினாலேயே ஏன் திராவிடர் கழகத்தையும் வீழ்த்திவிடக் கூடாது? இதுதான் பார்ப்பனர்களின் விருப்பமும், திட்டமும். இந்த செயலுக்கு ஒத்துழைப்போமா? வேண்டாமா? எந்த அளவு ஒத்துழைக்கலாம்? எப்படி இதை வைத்துக் கொண்டு பயமுறுத்தலாம்? என்கிற ஆலோசனையில் ஈடுபட்டிருக் கின்றது, இன்றைய திராவிடர்களை அதிகமாகக் கொண் டிருக்கும் நம் திராவிட நாட்டு மந்திரி சபை. மந்திரி சபை மனம் வைத்தால் ஒரு நாலெழுத்து எழுதிவிட்டால் போதுமே என்று எதிர்பார்க்கின்றார்கள் நம் அருமைப் பார்ப்பனர்கள். எதிர்பார்க்கட்டும்! திராவிடர் கழகத்தை ஒழித்து விடுவ தற்காக எழுதுகின்ற அந்த நாலு எழுத்துக்களே, மந்திரி சபையையும் கவிழ்த்து விடுவதற்குப் போதுமானது என்று எண்ணுகிறது, அவர்களின் சூழ்ச்சி படிந்த மனம். அதுதான் அவர்கள் கருதுகின்ற மூன்றாவது பட்சியாகவும் இருக்கலாம்.

நாம் பார்ப்பனர்களுக்குப் பல முறை கூறியிருக்கிறோம். இது மனு மாந்தா காலமல்ல! உங்களுடைய பேடித்தனமான, மறைந்து தாக்கும் வேலைகள் எல்லாம் திராவிட நாட்டைப் பொருத்தவரையில் பயன்படாது! உங்களுக்குச் சில விபீஷ ணர்கள் அகப்பட்டாலும் கடைசிவரைக்கும் விபீஷணர் களாயிருக்க எந்த ஒரு திராவிடனும் அகப்படமாட்டான்! அப்படி அகப்பட்டாலும் அவன் ஒரு திராவிடனாகவும், திராவிடனுக்குப் பிறந்தவனாகவும் இருக்க மாட்டான் என்றே எதிர்கால வரலாற்றிலே இடம் பெறுவான்! அப்படியே சிலர் அகப்பட்டாலும் அவர்களுடைய துணையைக் கொண்டு திராவிடர்களை அழித்து விடலாமென்று மனதினால் எண்ண வேண்டாம்! ஒவ்வொருத்தனும் ஏன் நான் தேவடியாள் பிள்ளை? ஏன் நான் நாலாம் ஜாதி? அய்ந்தாம் ஜாதி? இந்த நாட்டை என் முன்னோர்கள் ஆளவில்லையா? இப்பொழுது நான் பாடுபடவில்லையா? உழைக்கிறவன் நான், அய்க்கியம், தேசியம், மதம், கடவுள், வெங்காயம் என்கிற பெயர்களால் மேனி வாடாமல் உண்ணுகிறவன் நீயா? என்று தாழ்த்தப்பட்ட தோழர்களிலிருந்து உயர்த்தப்பட்டதாக நடித்துக் கொண்டிருக்கிற மந்திரிகள் வரை கருதிக் கொண்டிருக்கிற காலம் இது.

நீங்கள் சொல்லி வந்த தேசத் துரோகிகள் என்கிற பட்டம் இனி நாட்டில் செலவாணியாகாது என்பதைத் தெரிந்துகொண்டு, வகுப்பு வாதிகள், வகுப்பு துவேஷிகள் என்கிற பட்டத்தைத் தீவிரமாகக் கட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். இது நெஞ்சறிந்த பொய் என்று உங்களுக்குத் தெரியும்! வகுப்புத் துவேஷிகள் நீங்களா? அல்லது நாங்களா? இருந்தும், இந்த அபாண் டத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பரப்பு கிறீர்கள்!

சொல்லுகிறவன் சொன்னாலும் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிற பழமொழியைத் தெரிந்திருக்கும் நீங்கள் தான், அந்தப் பழமொழியை அறிந்திருக்கும் மந்திரிகளிடத்தில் தலையணை மந்திரம் செய்கிறீர்கள்! மெய்யாகவே நாங்கள் வகுப்புத் துவேஷிகள், உங்களை (பார்ப்பனர்களை) ஒழித்து விட விரும்புகிறவர்கள் என்று கருதுகிறீர்களா? அது உண்மையாக இருந்தால், உங்க ளுடைய அட்டூழியமான அநீதிகளால் எத்தனை அக்கிர காரங்கள் இதுவரை சாம்பலாகியிருக்க வேண்டும்? எத்தனை பேர்கள் நடுத்தெருக்களிலேயே நாய்களைப் போலச் சாகடிக்கப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? வட நாட்டிலே நடந்த மிருகச் செயல்களை நாள்தோறும் கேட்ட இந்த நாட்டில், வகுப்பு வெறி திராவிடர்களால் பரப்பப்பட்டு வருகிற நிலையிருந்திருந்தால், உண்மையாகவே பார்ப்பனன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு புல் பூண்டு இங்கே இருக்க முடியுமா? ஏன் விபரீதமான முயற்சியில் இறங்கு கிறீர்கள்! நீங்களே பார்ப்பனன், பிராமணன், துரோகிகள் என்று சொல்லிக் கொள்வதிலே, அழைக்கப்படுவதிலே வெட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, உங்களைக் கொன்றெறிந்து விட வேண்டுமென்ற எண்ணம், அதற்கான நடவடிக்கை எங்களிடத்தில் ஒரு காலத்திலும் இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதாயிருந்தால், முதலில் பார்ப்பனியத்திற்குப் பாதுகாவலாய் இருக்கும் எங்கள் தாய்களையும், தந்தைகளையும், மனைவிகளையும் கொலை செய்ய வேண்டியவர்களாவோம். ஏன்? நாங்கள் அழிய வேண்டுமென்று விரும்புவது பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனியமே.

இதற்கு மாறுபாடாக உங்களுடைய இரத்தத்தைச் சிந்தாமலே, எங்களுக்குள்ளே மோதச் செய்து எங்களை அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறீர்கள்! கூடிக் கெடுப்பது, அடுத்துக் கெடுப்பது, பேசிக்கெடுப்பது என்கிற முறைகளும் அதைக் கையாளுகிற ஆண்களும், பெண்களும் என்கிற நிலையும் இனி பிரயோசனப்படாது என்ற முடிவுக்கு வந்தவர்களாய், இந்து மகா சபை என்கிற பெயரால் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் ஆயுதங்களைச் சேர்த்தீர்கள்! கோவில்களுக் குள்ளேயே கவாத்துப் பழகினீர்கள்! இவற்றை உங்களால் மறுக்கமுடியுமா?

மதவெறி, ஜாதிவெறி ஒழிய வேண்டும் என்பதிலே அக்கறையும், ஆசையும், உண்மையும் இருக்கிறதென்றால் என்ன செய்ய வேண்டும்?

மத சம்பந்தமான பேச்சுகளை, மதப்பெருமைகளைக் கூறுகின்ற நூல்களை, பேசுவது, எழுதுவது, வெளியிடுவது, விற்பது என்கிற உங்களுடைய போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதக் கதைகளை எழுதி எழுதிப் பாமரர்களை வஞ்சிப்பதையும், இராமாயணக் கதைகளை எழுதி, எழுதி இழிவுபடுத்தி வருவதையும், புராணங்களை எழுதி, எழுதி புல்லறிவை வளர்ப்பதையும் விட்டொழித்து விட வேண்டும். நிர்வாணப்படங்களைப் போட்டு, ஆடலழகிகளைக் காண்பித்து மக்களை ஆலயங்களுக்கு அழைக்கும் போக்குக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. மடச்சாமிகளைக் காட்டி மகேவரன் பெயரைச் சொல்லி மக்களை மந்தமதியினராக்குவதை விட்டொழிக்க வேண்டும். புராண நாடகங்கள், புராண சினிமாக்களை வளர்ப்பது புனிதமானது என்ற போக்கை கைவிட வேண்டும். எந்த கலைகளுமே இந்த நாட்டுப் பழங்குடி மக்களின் வாழ்வைக் கெடுக்கும் நாச கருவிகளால் கையாளப்படுவது வெறுக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு நீதி என்ற இந்துலாவை எடுத்துவிட உறுதி வேண்டும். ஒத்த தகுதிக்கு எல்லா மக்களையும் கொண்டுவர முயற்சிக்க வேண்டுமே தவிர, தகுதியில்லாத பலரை ஒரு பட்டியலில் சேர்த்து, தகுதியும் திறமையும் என்று பேசுவதை மறந்துவிட வேண்டும். மத வேறுபாடுகளைக் காட்டும் மதச் சின்னங்களை அணிந்திருப்பது ஆபத்து என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த வேலையை இன்னார்தான் செய்ய வேண்டுமென்ற ஜாதிக்கட்டுப்பாட்டை இந்தநாள் வரைதான் கூறி வந்தோம், இனி அந்தப் போக்கு உதவாது என்பதை உணர வேண்டும். காந்தியாரின் மரணத்தை அறிந்து கொள்ள முடியாத ஜோதிடர் வர்க்கங் களையும், தேவ பாஷை என்கிற செப்படி வித்தை செய்து வரும் முன்ஷிகள், சாஸ்திரிகள், புரோகிதர்கள் என்கிற புரட்டர்கள் வர்க்கங்களையும், வேத பாராயணப் பெயரால் விதவிதமான வேஷம் போடுபவர்களையும் அம்பலத்தில் இழுத்து வந்து அவர்களின் அக்கிரமங்களை விளக்கிக் கூற வேண்டும். மக்களின் உழைப்பை, செல்வத்தை மதப்பெயர் கூறி எவர், எந்த முறையில் வஞ்சித்தாலும், அந்த இழிவை இன்றே ஒழிப்பதற்கு அக்கறை காட்டவேண்டும்.

இவற்றை செய்வீர்களா? இக்காரியங்களை செய்ய முன்வராமல் மேலும் மேலும் வகுப்பு வெறியையே வளர்க்கப் போகின்றீர்களா? பதில் கூற வேண்டியதில்லை. நீங்கள் இனிச் செய்து வரும் செயல்களே நாட்டில் பதில் கூறுவதாக ஆகும். ஆனால், இந்துமத சாம்ராஜ்ய கனவை - வருணாசிரம வக்கிர ஆட்சிக் கனவை - எந்தப் பெயராலும், எந்த நடவடிக்கைகளாலும் உங்களால் இந்த நாட்டில் இனி ஏற்படுத்த முடியாதென்பது மட்டும் உறுதி.

'குடிஅரசு' - தலையங்கம் - 21.02.1948

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:36 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கனவு, பார்ப்பனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (23)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ▼  2022 (58)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (9)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ▼  பிப்ரவரி (7)
      • பள்ளிக்கூடத்தில் புராண பாடம் - சித்திரபுத்திரன்
      • பார்ப்பனர்களே! கனவு பலியாது
      • நாகரிகமும், நமது கடமையும்!
      • இந்தியாவில் பெண்கள் நிலை 10.01.1948 - குடிஅரசிலிரு...
      • ஒரு யுக்தி ஆராய்ச்சி
      • மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்!
      • கார்த்திகைப் பண்டிகை - அருணாசல புராணத்திலிருந்து
    • ►  ஜனவரி (3)
  • ►  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.