பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

சனி, 2 ஜூலை, 2022

"பறையனை" உள்ளே விடாத கோயில்கள் இடிபடுமா?



   May 29, 2022 • Viduthalai

தந்தை பெரியார்

தலைவரவர்களே, சகோதரர்களே, நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேச வேண்டியிருக்கும் என்று கருதவே யில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வர வேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு  முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர் களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர் களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தார் அவர்கள்  சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேசவேண்டியவனாக இருக் கிறேன். இன்று  பேசவேண்டிய விஷயம் தற்கால இராஜ்ய நிலைமை என்பதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ  இராஜீய திட்டசம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட  ஒரு அபிப்பிராயம் கொண்டி ருப்பவன். இராஜீய துறையில்  சிறிதுகாலம்  இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்கைகளில்  அதிருப்தி  கொண்டு  வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமூகத் துறையில் வேலை செய்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட  நான் இராஜீய நிலை மையைப் பற்றி என்ன பேச முடியும்? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். சகோதரர்களே, இன்றைய நிலை மையில் நான் இராஜீயத்துறை கொள்கைகளில் மாத்திரம் அபிப்பிராய பேதங்கள் கொண்டவனல்ல. தற்கால இராஜீய விஷயம் என்பதையே நாணயமானதல்ல என்று கருதுவதோடு  இந்தியநாட்டின் விடுதலைக்கு இன்று இரா ஜீயத்துறை அவ்வளவு முக்கியமான தல்லவென்றும்,  மற்ற விஷயங்களின் வரிசைக்கிரமத்தில் அரசியல் சீர்திருத்தம் என்பது எவ்வளவோ பின்னால் இருக்கவேண்டியது என்றும் கருதுகின்றவன், நமக்கு இருக்கும் வேலை எல்லாம் நாம் செய்யவேண்டிய முதல்வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர  அரசியல் வேலையல்ல.

ஏனெனில், சமூகத் துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத்தனத்தின் கொடுமை எவ்வளவு? இவை களுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையைக் கொஞ்சமும் பெரிதாகக் கருதி  லட்சியம்  செய்யமாட்டா னென்றே  கருதுகிறேன். உங்களில் யார் எப்படி  நினைத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மதசம்பந்தமான சமூக சம்பந்தமான, அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து, மானமிழந்து  இழி ஜாதியாய் வாழ்கின்றோமேயொழிய  அரசியல் அடிமைத்தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம். நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மையானதாக விரும்ப வில்லை. உத்தியோகத்தை பிரமாதமானதாகக் கருத வில்லை அதிகாரத்துக்கு ஆசைப்படவில்லை. 

 என்னுடைய நாட்டு மனிதன்  ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருத வேண்டும், அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்க வேண்டும் என்றுதான்  ஆசைப்படு கின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான்  என்னை வருத்துகின்றது.  நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது, நெஞ்சம் குமுறுகின்றது.  இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட  இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப்பற்றி கவனிப்போம். அதை யொழிப்போம். இல்லாவிட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக் கின்றார்களோ அவற்றையொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதைவிட்டு  விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு 'அரசியல் அரசியல்' என்றால் என்ன அருத்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக் குத்தான் இப்படியே காலத்தை கடத்துவது? என்பவைகளை யோசித்துப்பாருங்கள். 

'அரசியலைப்பற்றிக்கூட நமக்குக் கவலையில்லை, அன்னியனை ஒழிக்க வேண்டாமா? என்று சிலர் கேட்கிறார்கள், இதிலும்  உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருத வில்லை. ஏனென்றால், யார்  அன்னியன்? என்பதை முதலில் கவனித்துப்பாருங்கள்.

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம் தொடவேண்டா மென்பவனும், கிட்ட வந்தாலே கண்ணில் தென் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால்  என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட் டாலும்  பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம் தான்'  என்று சொல்லுகின்றவன் அந்நியனா? என்பதை  யோசித்துப் பாருங்கள்.

நமது ஜனங்கள் 100க்கு 90 பேர்கள் மூடமக்களாக இருந்து வருகின்றார்கள். கல்விவாசனையும் இல்லை. அறிவு வாசனையும் இல்லை. இருந்தாலும் அறிவு சுதந்திர மில்லை. இவர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு  யார்  என்ன பேசினாலும் கைதட்டுவார்கள். கூடவே கோவிந்தா போடுவார்கள். ஆகவே சரி எது? தப்பு எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்கள். இவர்கள் முன்  எதைச் சொன்னால் தான் என்ன? என்கின்ற முறையில் தேசத்தில் எத்தனையோ  புரட்டுகள்  நடக்கின்றன. இதைப்பார்த்துக் கொண்டே இந்த நிலைமையை மாற்றவேண்டியதே  நமது முதல் வேலையாயிருக்க வேண்டும், என்பதை யாருமே  கவனிப்பதில்லை. எந்த தலைவருமே  நினைப்பதில்லை. இப்படியே காலம் கடந்தால்  நமக்கு  எப்போது விடுதலை கிடைக்க கூடும்?  என்பதை யோசித்துப்பாருங்கள்.

பொருளாதாரத் துறையில் நாம் அடிமையாய் இருக் கின்றோம். நமது பொருள் கோடிக்கணக்காக வெளியில் போகின்றது.  அதை நிறுத்த  வேண்டாமா? என்கிறார்கள் மற்றொரு  கூட்ட அரசியல்  கூட்டத்தார். இதையும் என் னால் லட்சியம் செய்யவோ ஒப்புக் கொள்ளவோ, முடிய வில்லை. ஏனென்றால் பொருள்  நஷ்டம் என்பது இப்போது நமது நாட்டில் யாருக்கு இருக்கிறது? என்று யோசித்து பாருங்கள்.

நமது நாட்டில் சமுகத் துறையிலேயே, பிறவிலேயே பொரு ளாதார உரிமை அநேக மக்களுக்குத் தடுக்கப்பட் டிருக்கின்றது. 

உதாரணமாக புரோகிதன், உத்தியோகஸ்தன், வக்கீல், வியாபாரி, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன் ஆகியவர்களின் கூட்டங் களுக்குத்தான்  பொருளாதார உரிமை இருக்கின்றதேயொழிய மற்ற ஜனங்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கின்ற அளவுக் குட்பட்ட அடிமை உரிமைதானே  இருந்து  வருகின்றது?  முற்கூறிய கூட்டங்களுக்குப் பொருளாதார  உரிமை  என்பது  பிறவிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது  என்ப துடன்  மற்ற வர்கள்  அதற்கு  அருகரல்லாமல் இருக்கும் படியான நிர்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, ஒரு இட்டிலிக்கடைப்பார்ப்பானுடைய மகன் ஹைகோர்ட் ஜட்ஜாகவரலாம். ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனன்  மகன்  மந்திரி ஆகலாம்.  ஒரு தோட்டியினுடைய மகன் ஹைகோர்ட்ஜட்ஜாக வரமுடியுமா?  யோசித்துப் பாருங்கள். ஜாதியின்  பேரால் வகுக்கப்பட்டிருக்கும் பிரி வானது இம் மாதிரி சிலருக்கு நன்மையையும் சிலருக்குத் தீமையையும் செய்துவருகின்றது,  வெகுகாலமாய் செய்தும் வந்திருக்கின்றது. இனி  மேல்  இந்தப்படி செய்யாமல் இருக்க நமது ' அரசியல் சுயராஜ்யத்தில்' எவ்வித திட்டமும் இல்லை என்பதோடு இந்த  முறைமையைக்காப்பாற்றவும் திட்டம்  போடப்பட்டிருக்கின்றது என்றால் அறிவுள்ள மனிதன் எப்படி இந்த அரசியலை ஒப்புக்கொள்ள முடியும்?

இன்றைய தினம் இந்த திருச்செங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதா யிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப்போடக்கூட அவனிடம் இட்லி வாங்கமாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ் வளவு மோசமாயிருந்தாலும் 'சாமி சாமி' என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமுக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப்பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?

ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும்  தொழி லாளிகளையும் கீழ் ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும் கொடுமைப்படுத்தி தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங் களையும் கவனித்து, அவர்களை அவர்களுடையக் கஷ் டங்களில் இருந்து  விடுதலை  செய்யமுடியாத அரசியல்  திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன். மேல் ஜாதிக்காரனுக்கும் முதலாளிகளுக்குமல்லவா அது பயன் படும். தொழிலாளிகளுக்கு  எவ்வளவு கூலிகொடுப்பது  என்பதை  யோசிப்பது தான்  அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர முதலாளி எவ்வளவு  லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என்பதாக யாராவது திட்டம்  போடுகிறார்களா? பாருங்கள்.

நமது  மக்களின்  இழிவும், அடிமைத்தனமும், பொருளா தாரக் கஷ்டமும் நமது மதத்தின் பலனாய் சமுதாய முறையின்  பயனாய் இருந்து வருகின்றதா?  அல்லது  இல்லையா? என்று பாருங்கள். பணக்கார ஜமீன்தாரனும், பணக்கார பிரபுவும் தங்கள்  பணங்களை இந்நாட்டில் என்ன  செய்கிறார்கள்?  என்று சற்று கவனித்துப் பாருங்கள்? மதத்தின் பயனாய் ஏற்பட்ட  முட்டாள் தனத்தின் காரண மாய் இதோ எதிரில் தெரிகின்ற கோவிலின்  பேரால்  பாழாகின்ற பணம் இவ்வள வென்று உங்களுக்குத் தெரி யாதா?   பணம்  சேரச்சேர  மண்ணால் கட்டின  கோவிலை இடித்து கல்லால் கட்டுகின்றான். பிறகு  சலவைக்கல்லால் கட்டுகின்றான், சித்திர வேலை செய்கின்றான், பிறகு வெள்ளியிலும் தங்கத்திலும் வாகனம் செய்கின்றான். தங்க ஓடு போட்டு கோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூட மக்களைக்கொண்ட  நாட்டிற்குப் பணம் மிச்சமாவதால்  என்ன லாபம்?

பாமர மக்களை அறிவாளிகளாக்கி அவர்கள் கையில் பணத்தை ஒப்புவித்தால்தான் அந்த பணம் நாட்டின்  நலத்திற்கு பயன்படும். அப்படிக்கில்லாமல் பாழாவதற்கும் சோம்பேறிகளும், சூழ்ச்சிக்காரர்களும் பிழைப்பதற்காகப் பணத்தைக் காப்பாற்றுவதில் என்ன பலன்? என்று யோசித்துப்பாருங்கள். 

மற்றொரு கூட்டத்தார் 'நமக்குச் சமத்துவம் வேண்டியதற்காக சுயராஜ்யம் வேண்டு'மென்கிறார்கள். இதுவும் அர்த்தமற்றதும் அறிவற்றதுமான பேச்சு என்றுதான் சொல்லுவேன், பார்ப்பனனும், பறையனும் இருக்கும்  நாட்டின், இருக்க வேண்டிய நாட்டின் இருக்கும்படிக் காப்பாற்றபட வேண்டிய நாட்டின் மக்களுக்குச் சமத்துவம் சம்பாதிப்பது என்பது  புரட்டா?  அல்லது நாணயமானதா என்று யோசித்துப் பாருங்கள். வீண்வாய் பேச்சில் வெட்டிப் பேச்சில், மயங்குகின்ற  பாமர மக்களைக்கூட்டுவித்துப் பேசிவிடுவதினாலேயே எந்தக் காரியமும் நடந்து விடாது. எப்படியானாலும்  ஒரு காலத்தில் வெளியாய்தான் தீரும். நாட்டிற்கு உண்மை விடுதலை வேண்டுமானால் விடு தலைக்கேற்ற அரசியல் சுதந்திரம் வேண்டுமானால் பயன் படத்தக்க  நாணயமானதான சுதந்திரம் வேண்டுமென்று தான் சொல்லுகின்றேன். வரப்போகும் வரவேண்டுமென்று கேட்கப்படும், சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும், இருக்க மாட்டானா?  என்று கேட்கின்றேன், பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா?  என்று கேட்கின்றேன். சாமிகளின் பேரால் நடைபெறும் வீண்செலவுகள் ஒழிக்கப்படுமா?  என்று கேட்கிறேன். இன்றைய தினம்  ஜாதிகளின்  பேரால்  இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத்துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும், பாடுபடாமல்  இருந்து கொண்டு  குடும்பத்தோடு மேன்மையாய் வாழுபவனும் இருக்கமாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன்  என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய்விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்?  இந்த வித்தியாசங்களிருக்கும் சுயராஜ்யத்துக்கும் இப்போது இருக்கும்  அந்நிய ராஜியத் திற்கும்  என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்?  என்பதை யோசித்துப் பாருங்கள் மதமூடநம்பிக்கையில் மக்கள் அறிவீனர்களாய் இருப்பது போலவே அரசியலிலும் மூடநம்பிக்கையுள்ளவர்களா யிருந்து அறிவீனர்களாகி தாங்களும் கெட்டு அந்நியரையும் கெடுத்து நாட்டின் முற்போக்கை பாழாக்குகிறார்கள்.

நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பித்த காலம்  முதல்  இதுவரை  சமூக சம்பந்தமான  முற்போக்கு  ஏதாவது ஏற்பட்டி ருக்கின்றதா? என்று  பாருங்கள். சமுக முற்போக்கு  சீர்திருத்தம்  என்பவை ஏற்பட  தீவிர முயற்சி  செய்யப்படும் போதெல்லாம் அரசியல்  என்பது குறுக்கிட்டு தடைக்கல்லாய் இருந்து  வந்திருக்கின்றதே ஒழிய என்ன நன்மை  ஏற்பட் டிருக்கின்றது?  என்று  சொல்லுங்கள் பார்ப்போம்.  இவ் வளவு  விழிப்பான இந்தக் காலத்திலும்  அரசியல்  தலை வர்கள்  வருணாசிரம  பாதுகாப்பும்  மத நடுநிலைமையும் என்று சொல்லிக்கொண்டுதானே இன்று சுயராஜ்யம் வேண்டுமென்கிறார்கள். சுயராஜ்ஜியமும் வாங்கப் போயு மிருக்கிறார்கள். எந்தத் தலைவராவது சுயராஜ்ஜியத்தில் வருணாசிரமம் ஒழிக்கப்படும், மதக்கொடுமை ஒழிக்கப்படும் மத சம்பந்தமான பழக்கவழக்கம் கீழ் - மேல்  நிலைமை ஆகியவைகள் ஒழிக்கப்படும் என்று சொன்னார்களா?  சொல்லுகின்றார்களா? என்று நன்றாய் கவனித்துப் பாருங்கள்.

வருணாசிரமமும் மதக்கொடுமையும் ஒழிய வேண்டு மென்கிற நான் எப்படி  இந்த அரசியலைச் சுயராஜ்ஜியத்தை ஆதரிக்க முடியும்? மத நடுநிலைமையில் பறையன் ஒழிவானா? சூத்திரன் ஒழிவானா?  என்று ஆராய்ந்து  பாருங்கள். அப்படியிருக்க சுயராஜ்ஜியக் கிளர்ச்சியில் பறையன் என்பவனுக்கும், சூத்திரன் என்பவனுக்கும் அறிவும்  மானமும் இருந்தால்  அதில் சேரக்கூடுமா?  என்று  யோசித்துப் பாருங்கள்.

நண்பர்களே! நான் இதுவரை  பேசியது தங்களில் யாருக்காவது அபிப்பிராய பேதத்திற்கோஅதிருப்திக்கோ இடமிருக்ககூடியதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நான் எனது அபிப்பிராயம் என்கின்ற முறையில் இந்த இடத்தில் எனக்குப் பட்டதைப் பேசவேண்டுமே  ஒழிய, கூட்டத்திற்குத் தகுந்தபடி சந்தர்ப் பத்திற்குத் தகுந்தபடி என்று  பேசக்கூடாது என்கின்ற முறையில் பேசினேன். இந்தக் கருத்துக்கள் தப்பாக  இருக்கலாம். இவற்றையெல்லாம் அடியோடு நீங்கள்  கண்டிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால்  என் அபிப் பிராயம் என்கிற முறையில் வெளியிட  எனக்குள்ள  பாத்தியதையில் உங்களுக்கு ஆட்சேபமிருக்கா தென்று கருதியே பேசினேனேயொழிய வேறில்லை.

ஆகவே  தாங்கள் நான் சொன்னதையும் இனியும்  கனவான்கள் பலர் சொல்லப் போவதையும் தயவு செய்து  ஒத்திட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு இஷ்டப் பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றே  கேட்டுக் கொள்ளு கின்றேன். 

(01.09.1931-ஆம் தேதி தற்கால இராஜிய நிலை என்பதைப்பற்றி திருச்சªங்கோட்டில் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 06-09-1931 

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:42 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கோயில்கள், தாழ்த்தப்பட்டோர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (23)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ▼  2022 (58)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (9)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ▼  ஜூலை (8)
      • ராஜாவை கையிலெடுத்த தந்தை பெரியார்
      • "பறையனை" உள்ளே விடாத கோயில்கள் இடிபடுமா?
      • சுயமரியாதைத் திருமணமும் - புராண மரியாதைத் திருமணமும்
      • சீர்திருத்தப் பிரசங்கம்
      • இந்தி நுழைகிறது
      • தமிழர் கதி
      • உடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்?
      • கூறுவது என்ன? நடப்பது என்ன? (பைபிள் குரான் வேதம்)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.