ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

கோயில் நுழைவுத் தீர்மானத்தை எதிர்த்த மதுரை வைத்தியநாத அய்யர்!

நூல்:
மனித உரிமைப்போரில்
பெரியார் பேணிய அடையாளம்
ஆசிரியர்:
பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்
1922இல் திருப்பூரில் நடந்த மாநாட்டில் வகுப்புரிமை மற்றும் கோயில் நுழைவுத் தீர்மானங்களை எதிர்த்தவர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்பதற்காக, மனுதர்ம நூலையும், இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்ற கிளர்ச்சித் திட்டத்தை வெளிப்படுத்தினார். திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் இது தொடர்பாகத் தரும் செய்தி சுவையானது. “திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் தமிழ்நாட்டுக் காங்கிரசு கூடியது. நாடார் முதலியோர் கோயில் நுழைவைப்பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவர். பின்னே காங்கிரசு ஆட்சியில் (1937_-39) மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்தியநாத அய்யர் என்று கேட்டு மகிழ்வெய்தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும் பின்னணிக்குப் போற்றலும் நிகழ்தல் இயல்பு போலும்.’’
உண்மை,1-15.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக