திங்கள், 9 டிசம்பர், 2019

தமிழனுக்கு தாய்நாடு எது? தாய்நாடு தமிழ்நாடு தானே?

- நகர தூதன்-

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு. இதே சம்பிரதாயந் தான் எல்லாருக்கும், அவரவரைப் பொறுத்த எல்லா விஷ யங்களிலும். பிறந்த மண், பேசும் மொழி அனைத்தும் அவ னவனுக்குச் சொந்தம்.

தாய்நாட்டுப் பற்று

ஸெக்கோஸ்லோவோகியா என்பது ஒரு சிறு நாடு. நம்முடைய மாகாணத்திலுள்ள மூன்றே மூன்று ஜில்லா வைப்போன்ற விஸ்தீரணத்தைப் போன்றது. உயிர் போனா லும் போகலாம் தன் நாட்டின் கை அகல நிலமும் பிறத்தி யான் வசம் போகப்படாது என்கிறது அது.

பாலக்காட்டு மணி 30 வருடங்களுக்கு முன் சென் னைக்கு வரும்போது நித்தியதரித்திரன். சோற்றுக்கடையில் பரிசாரகனாக ஊழியம். இப்போது அவன் சென்னையில் சிறந்த செல்வவந்தன், பாலக்காட்டு மணி என்னும் பெயர் மாறி பாலக்காட்டு அய்யர் என்று உயர்ந்துவிட்டது. அய்யர் வாள் நிலபுலன் எங்கு வாங்குகிறார் தெரியுமா? சென் னையை ஒட்டி அல்ல, செங்கற்பட்டு ஜில்லாவில் அல்ல. மலையாளப் பிராந்தியத்தில் மாடி வீடுகட்டுகிறான். தோட் டந்துரவுகளையும் அங்குதான் சேகரிக்கிறான். அம்மாதிரி தான் சென்னைக்கு வந்து முன்னுக்கு வரும் வட நாட்டான் ஒவ்வொருவனும். காரணம் அவர்களுக்கிருக்கும் மண் வாஞ்சை மட்டுமல்ல சென்னையை அவன் அந்நியர் இடமாகக் கருதும் மனப்பான்மையே.

தெலுங்கர் பிரிவினை

ஆகையால் எவனெவன் எந்தெந்த நாட்டவனோ அந்தந்த நாடுதான் அவனவனுக்குச் சொந்தம். எங்கிருந்தா லும், பிரீதியும் பற்றும் அங்குதான் (சொந்த நாடு) பாயும். தெலுங்கு நாட்டவர் தனி மாகாணம் கோருகின்றனர் என்றால், அது முறை தப்பிய முயற்சியல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் பேசப்படும் பகுதிகள் ஒரு காலத்தில் தமிழ்மொழி வழங்கிய ஒரே நாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாழான ஆரியம் புகுந்து, பிரித்தா ளும் வேலை செய்து, ஒன்றை நாலாக்கிவிட்டது. இப்போது தமிழ் - தெலுங்கு இரண்டும் வெவ்வேறு. ஆகவே தெலுங்கு பிரிந்து நிற்கப் பிரியப்படுவதில் பிசகொன்றுமில்லை.

கூலிகள் கூற்று

இன்று தமிழரும் விழித்துக் கொண்டனர்; தனி மாகாணம் கோருகின்றனர். 'தமிழ்நாடு தமிழனுக்கே' என்கிற எண்ண மும் உதயமாகிவிட்டது. எரிகிற நெருப்பில் என்ணெய் வார்ப்பது போல சில மார்வாரிகளின் கூலிகள் தமிழர் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த மூலதானிகளின் குலாம்கள் - 'தமிழ் நாடு தமிழ்னுக்கே' என்னும் கிளர்ச்சியை கேலி செய்கின்றன; நாள் தப்பாமல் நையாண்டி பண்ணுகின்றன. முதன் மந்திரி ஆச்சாரி - இந்தி மொழியைக் கட்டாய பாடமாக நுழைக்கப் போய், காங்கிரஸ் மந்திரிசபை காலில் கோடாரி எடுத்துப் போட்டுக்கொண்ட மாதிரி ஆகிவிட்டது. உறங்கிய தமிழன் துள்ளி எழுந்துவிட்டான். இந்தி என்னும் தீ அவன் உள்ளங்காலைச் சுட்டு விட்டது. இனி அவன் கண்ணை மூடி கவலையற்றுப் படுக்கப் போவதேது?

இந்தியே காரணம்

தமிழ் நாட்டின் விழிப்புக்குக் காரணம் இந்தி நுழைப்பு, இந்தி நுழைப்புக்குக் காரணம் தோழர் ராஜகோபாலாச்சாரி. இந்தி மொழியும் ஆச்சாரியும் காலூன்றி நிற்கும் பீடம் காங்கிரஸ், ஆகவே காங்கிரஸ், ஹிந்தி மொழியை ஏவி தமிழ்நாடு மீது படை எடுக்கத் தூண்டிவிட்டு விட்டதென்று தான் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தலை நிமிர்ந்து நிற்கிறது. தற்கால 'உஞ்சிவிர்த்தி' ஆட்சி முறையை ரோஷமுள்ள தமிழர் துச்சமாக மதிக்கின் றனர்; ..... ஆட்சி முறையின் உச்சியில் உட் கார்ந்திருக்கும் ஆச்சாரியே, ''எனக்கு வாதம் செய்யத்தான் தெரியுமேயன்றி ஆளத் தெரியாது" என்று சொல்லி விட்டபோது அவரைத் தலைமையாகக் கொண்ட ஆட்சி முறையை எந்த அறிவாளி மதிப்பான்.

'இந்தி' வரப்போய் 'தமிழ்நாடு தமிழனுக்குத் தான்' என்று உரிமை கொண்டாடக் கிளம்பி விட்டனர். இந்தியை எதிர்ப் போரை நாள் தவறாது சிறைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது ஆச்சாரி சர்க்கார். பிழைக்க வந்த வடநாட்டான். கூலிகளை ஏவி இந்திக்கு ஆதரவளிக்க விரும்புகிறான். காரணம் அது அவனது தாய்மொழியின் சாயல்; அல்லது உடன் பிறந்த சகோதர மொழி. ஆகவே இந்தி பெருகினால் அவனுக்குப் பெருமை; கவுரவம்; அவன் தொழிலுக்கு உதவி; இத்தனை யும் உண்டு.

நகரங்களில் மட்டுமல்ல, நாட்டுப்புறங்களிலும் அந்தக் கல்மனம் படைத்த மார்வாரிக் கூட்டம் பரவி விட்டதென் பதை நாம் குறிப்பிட வேண்டியதில்லை. கூடை செங்கலும் பிடாரி' எனக் கேட்டதில்லையா? அந்த மாதிரிதான் அவர்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு மார்வாரியும் தமது பெட்டிக்கு அனர்த்தம் வந்து விட்டதாக, அந்த கிளர்ச்சியைக் கண்டு பயப்படுகிறான். தமிழர் பெரும்படை போகும்போது, பலவி டங்களில், அந்தந்த ஊரில் குடியேறிப் பிழைக்கும் மார்வாரி யின் காசு தான் விஷமம் செய்தது. பாருங்கள், பிழைக்க வந்த ஒரு சிலர் எவ்வளவு ஆணவத்தோடு நடந்து வரு கிறார்கள் என்பதை

வடநாட்டார் உதவி.

விளக்கமாகவும், வெளிப்படையாகவும் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில், தமிழர் நலங்கருதி, தமிழர் செய்கின்ற கிளர்ச்சிக்கு ஏற்படும் எதிர்ப்புகளுக்கு முக்கிய கருவியாயிருப்பது, தமிழ்நாட்டில் குடியேறி, தமிழர் நிழலில் ஒண்டி காசு சம்பாதித்த வடக்கத்தியார் அதாவது அந்நியரின் பொக்கிஷமேயாகும். பிர்லா, பஜாஜ் போன்றவர்கள் வடக்கேயிருந்தும் மார்வாரிகள், மூல்தானிகள், பனியாக்கள் போன்றவர்கள் இங்கேயே (சென்னை மாகாணத்தில்) இருந் தும். காங்கிரஸ் துவாராவாகக் கொடுக்கும் பணமே தமிழர் இயக்கத்தை நசுக்க உபயோகப்படுத்தப்படுகிறதென்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். இந்த உண்மை தெரிந்ததால் தான் தமிழ்நாடு தமிழனுக்கு' என்று அறிஞர்கள் கூற முன் வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயரும் வடக்கத்தியாரும்

இந்தியாவுக்கு வெள்ளைக்காரன் எப்படி அந்நியனா வானோ, அதே மாதிரிதான் வடக்கத்தியான் தமிழ்நாட்டுக்கு அந்தியனாகின்றான். வர்த்தகம், தொழில், உத்தியோகம் முதலியவற்றில் கிடைக்கிற பணத்தை வெள்ளைக்காரன் இந்தியாவிலிருந்து அய்ரோப்பாவுக்கு மூட்டைகட்டிக் கொண்டு போவது போல வியாபாரம், பாங்க், சேவகம் முதலிய தொழில் செய்து சம்பாதிக்கும் அடிக்கிற பணத்தை - எல்லாம் அந்நியன் (மார்வாரி, பாலக்காட்டான், கன்ன டியன், பனியா, பார்ஸி) தமிழ்நாட்டிலிருந்து வட நாட்டுக்கும் மேலைப்பிரதேசத்துக்கும் கட்டி எடுத்துக்கொண்டு போகிறான், பேசும் பாஷை, உடுத்தும் உடை, உண்ணும் உணவு முதலியவற்றில் வெள்ளைக்காரன் இந்தியனுக்கு மாறுபட்டிருப்பது போலவே வடக்கத்தியான் எல்லா வகையிலும் தமிழனுக்கு வேறுபட்டிருக்கிறான். வெள்ளைக் காரனிடமிருக்கும் காசு இந்தியாவின் சுதந்திர உணர்ச்சிக்கு விரோதமாய் உபயோகப்படுத்துவது போலவே வடக்கத்தி யானிடமிருக்கும் பொருள் தமிழரின் சுதந்திர தாகத்துக்கு விரோதமாய் அள்ளிச் செலவு செய்யப்படுகிறது. அதிலும் கொந்தளிப்பு உண்டானால் கப்பலேறி ஓட வேண்டிய நிலையிலிருக்கும் வெள்ளைக்காரனால் இந்தியாவுக்கு உண்டாகும் இடைஞ்சலை விட, கிளர்ச்சி அதிகப்பட்டால் தோளில் மூட்டை கட்டிப் போட்டுக்கொண்டு தன் சொந்த நாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளக்கூடிய வடக்கத்தியானால் தமிழ்நாட்டுக்கு உண்டாகும் இடைஞ்சல் அதிகம். "நானும் பாரத அன்னையின் பிள்ளை, இந்தியன், உங்கள் சகோதரன்" என்று சொல்லிக்கொண்டே தமிழனை உறிஞ்சி, உபத்திரவ மும் செய்து கொண்டிருக்க வடக்கத்தியானுக்கு வசதியிருக் கிறது.

- விடுதலை: 15.10.1938

 - விடுதலை நாளேடு 2 12 19

வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

- நகர தூதன்-

2.12.2019 அன்றைய தொடர்ச்சி...

தாய்நாட்டுப் பற்றிருந்தால்

உண்மையாகவே, பார்ப்பனர்கள் தமிழ் நாட்டை தாய் நாடாகக் கருதி நடப்பார்களானால், அவர்கள் பிராமண ரல்லாதாருடன் சண்டைக்கு நிற்பதைவிட பிராமணரல்லா தாரை அமுக்க எத்தனிப்பதைவிட வடக்கத்தியான் மீது கண்காணிக்காமலிருக்க முடியாது வடக்கத்தியான் தமிழ் நாட்டில் அடித்துக் கொண்டு போகும் கொள்ளையையும் தமிழ் நாட்டில் பிறந்த தமிழனுக்கும் பார்ப்பானுக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் விஷயத்தையும் ஒப்பிட் டுப் பார்த்தால் இரண்டாவதாகச் சொன்ன விஷயம் வெறும் காய்ந்த - வாண்ட - எலும்புத் துண்டாக மதிக்கப் பட வேண்டியதேற்படும். பார்ப்பான் தமிழனோடு போட்டி. போடுவதும், தமிழனைத் தட்டி இறக்கிவிட்டு பார்ப்பான் ஏறி உட்கார எத்தனிப்பதும், பார்ப்பான் செய்கிற ஜாதி அபிமானக் கோட்டாலைகளைக்கண்டு தமிழன் கூப்பாடு போடுவதும், கேவலம் மாதம் 200, 300, 500, 1000 வெள்ளிக் காசுக்காகவேயாகும். இவர்கள் இந்த போராட்டத்தில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும் போது, இருவருக்கும் தெரியாதபடி, ஓசைப்படாமல், ஆயிரம் பதினாயிரம் என்று இரண்டு பேரிடமிருந்தும் வடக்கத் தியான் தட்டிக்கொண்டு போகிறான். இது சம்பந்தமான புள்ளி விவரத்தைக் கவனித்தால் தமிழன் கும்பி கொதிக் கும்; பார்ப்பானும் தமிழ் நாட்டுக்கு உரியவனாகத் தன் னைக் கருதினால் அவன் வயிறும் எரியும். அதனால் இருவரும் சண்டை சச்சரவுகளை நிறுத்தி வைத்து விட்டு, பொதுவான எதிரியை இருவரும் சேர்ந்து எதிர்க்க முனைந்து நிற்பார்கள் என்பது நிச்சயம்.

எல்லாம் சொந்தம்

சென்னை நகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக லாபம் வரக்கூடிய தொழில்களெல்லாம் தமிழ்நாட்டுக்குப் புறம்பானவர்கள் கையிலிருக்கின்றன. சென்னையிலுள்ள மோட்டார் ஏஜண்டுகளில் 100க்கு 85 பேர் தமிழ் நாட்ட வரல்ல. சில வெள்ளைக்கார கம்பெனிகள் போக, இந்தியர் கம்பெனி எனப்படும் ஒரே ஒரு அய்யங்கார் கம்பெனி நீங்கலாக பாக்கி அத்தனைக்கும் சொந்தக்காரர்கள் பனியாக்களும், பார்ஸிகளுமேயாகும்.

"ஜஸ்" கட்டி செய்யும் "பாக்டரி"களும் பத்தில் எட்டு பார்ஸிகளிடமிருக்கிறது.

சென்னையிலிருக்கும் சினிமா திபேட்டர்கள் 16. இவற் றில் 6-நீங்கலாக 10க்குச் சொந்தக்காரர்கள் பார்ஸிகளும் பனியாக்களுமே. தமிழருக்குச் சொந்தமாகயிருக்கும் 6 தியேட்டர்களில் 2.வடநாட்டார் நிர்வாகத்தில் நடப்பவை

வைரம், பவுன் வியாபாரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு செட்டி, ஒரு நாயுடு நீங்கலாக மற்றவர்க ளெல்லாம் 'மல்' 'லால்' 'சேட்' என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் வடக்கத்தியார்களே.

காப்பிக்கடைகளைப் பாருங்கள். பவன்', 'கபே',

'லன்ஞ்ச்', ஹோம்' என்று பெயர் வைத்துக் கொண்டு தினம் ஆயிரம், அய்நூறு என்று வியாபாரமாகக் கூடிய காப்பிக் கடைகளில் ஒன்று கூட தமிழனுக்கோ , தமிழ் நாட்டுப் பார்ப்பானுக்கோ இல்லை. பாலக்காட்டான், கன்னடியன், வடக்கத்தியான் ஆகிய இவர்களே பெரிய ஹோட்டல் களின் சொந்தக்காரர்களாயிருந்து மாதந் தவறாமல் ஆயிரம், இரண்டாயிரம் எனறு பாங்கியில் போட்ட வண்ணமாயிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பார்ப் பானுக்குச் சொந்தமாயிருப்பவையெல்லாம் சிறு சிறு வீடுகளில், தம்பிடிக்கு ஒன்று என்று விற்கும் ஆமவடைக் கடை களும், காலணாவுக்கு இரண்டு என விற்கும் இட் டிலிக் கடைகளும் எண்ணெய் பலகாரக் கடைகளுமே யாகும். போதாக்குறைக்கு காப்பிக்கடை வைக்க பம்பாய் மாகாணத்திலிருந்து பார்ஸிகளும் இப்போது இறக்குமதி யாகியிருக்கிறார்கள். 2-ஹோட்டல்கள் பார்ஸிகள் கையில் இருக்கின்றன.

நூற்றுக்கு இருநூற்றைம்பது லாபங்கிடைக்கும் பெருங்காயம், குங்குமப்பூ முதலிய சில்லரை வியாபாரக் கிடங்கு ஒன்று கூட தமிழனிடமில்லை ,

ஜவுளிக்கடைகளை எட்டிப் பாருங்கள், நன்றாக அலங்கரிக்கப்பட்டு, ஓங்கி உயர்ந்த பெரும் ஜவுளிக் கடைகளெல்லாம் வடக்கத்தியான் கையிலிருக்கின்றன, பட்டுப்பட்டாடைகள் விற்பவர்கள் பனியாக்களாகவும், வடக்கத்தி ஷேட்மார்களாகவுமிருக்கின்றார்களேயன்றி தமிழர் முகத்தை மருந்துக்குப் பார்ப்பதைப் போல் பார்க்க வேண்டியதிருக்கிறது, சந்து பொந்துக்களில் துண்டு வேட்டி விற்கும் அண்ணாத்தைகளும் திரை போட்டுத் துணிவிற்கும் தம்பிமார்களுமே தமிழராயிருக்கிறார்கள்.

கண்ணாடிச் சாமான் விற்கும் கடைகளைல்லாம் வடக் கத்தி சாயபுவர்களாக இருக்கிறார்களேயன்றி, திருஷ்டிப் பரிகாரத்துக்காக தமிழன் கடை ஒன்று கூட இல்லை.

சைக்கிள் ஏஜண்டுகளாயிருக்கும் பெரிய வியாபாரி களில் பாதிக்கு மேல் தமிழ்நாட்டவரல்லாதார்.

பாங்கிகளுக்கும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கும் போங்கள். எத்தனை உண்மைத் தமிழர் கையிலிருக் கின்றன -  தமிழர்களுடையவையாயிருக்கின்றன என்று ஊன்றிப்பாருங்க. அவைகளுக்குண்டாகும் லாபம் என்ன வென்று அறிக்கையை வாங்கிப்பாருங்கள். தமிழனாய்ப் பிறந்தவன் அந்த இடத்திலேயே நாக்கைப் பிடிங்கிக் கொள்ள எத்தனிப்பான்.

மண்டையில் பெரும் பெரும் சேலைத் துணியைச் சுற்றிக் கொண்டு சப்பாளம் போட்டு உட்கார்ந்து கொண்டு ரூபாய்க்கு அரை அணா, ஓரணா, ரெண்டணா என்று வட்டி வாங்கிக் கொழுக்கும் மார்வாடி கடைகள் நூற்றுக்கு நூறும் அந்த மூட்டைப்பூச்சிகளுடையவைகளல்லவா?

போதாக்குறைக்குத் தங்க சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு முதலிய ஜார்ஜ் டவுன் வட்டாரத்தில் மார்வாரிகளின் நிர்வாகத்தில் அநேக மளிகைக் கடைகள் பெருகி விட்டன.

சென்னை நகரிலுள்ள வெற்றிலை பாக்குக் கடைகளில் முக்கால் பகுதி மலையாளத்தார்களுடையவை.

இன்னும் என்ன வேண்டும்? மேஜை நாற்காலி விற் போர் வட நாட்டார், காகிதம் விற்கும் பெரும் ஏஜண்டுகள் வடநாட்டார். இப்படியே ஒவ்வொன்றிலும் சென்னை நகரின் பொருளாதாரம் பூராவும் அன்னியர்கள் இரும்புப் பெட்டியில் தங்கி நிற்கிறது. தமிழன் ரிக்ஷா இழுக்கிறான், மோட்டார் ஓட்டுகிறான். டிராம் வண்டி செலுத்துகிறான், வடநாட்டாரின் வர்த்தக ஸ்தலங்களில் காவல் வேலை, எடுபிடி. வேலை பார்க்கிறான்; தெருவில் பெருங்காயம் விற்கிறான். பழைய பேப்பர் வாங்குகிறான். தலையில் பழஞ்சுமந்து விற்கிறான்; மற்றுஞ்சில சில்லறை வியாபார மும் கவுரவமாகவும் செய்கிறான். அவ்வளவு தான். சர்க்கார் கூலி மண்டபத்தில் நான் பிராமணன்' 'நீ சூத்திரன்' என்கின்ற கூச்சல். சென்னையின் அலங்கோலம் இப்படி. நாட்டுப் புறங்களிலும் மார்வாடிக் கடைகள், சப்பாத்திக் கள்ளிகளைப்போல் படர்ந்துவிட்டன.

தமிழ்க் கொடி தலை தூக்கியது

தமிழ்நாடு உறிஞ்சி உண்ணப்படும் வழியைப் பார்த்தீர் களா? நல்லவேளையாக தோழர் ஆச்சாரி இந்தியை நுழைத்தார். தமிழர் விழித்துக்கொண்டனர். தமிழ்நாடு தமிழனுக்கே' என்று கொடி தூக்கவும் கிளம்பி விட்டனர். இனி வடநாட்டான் பிழைக்கவந்த வடக்கத்தியான், மேற் கத்தியான் அத்தனை பேரும் தமிழர் கிளர்ச்சிக்குக் குறுக்கே வராதிருப்பதுதான் மரியாதை, மாறுபட்டு நடந் தால் தமிழனுக்குவழிகாட்ட ஜெர்மனி நாடு இருப்பதை உணரவேண்டும்.

கடைசியாக தமிழனுக்கு ஒரு வேண்டுகோள். தமிழ்நாடு தமிழருக்கே'. இந்த உணர்ச்சி ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்தால் போதும்.

- விடுதலை: 15.10.1938

- விடுதலை நாளேடு 4 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக