செவ்வாய், 10 மார்ச், 2020

கடலூரில் திருமணம் -திரு.ஈ.வெ. இராமசாமி

20.09.1931 - குடிஅரசிலிருந்து...

சகோதரர்களே! சகோதரிகளே!!

மண மக்களே!!!

புதிய முறையான திருமணம் இப் பகுதிக்கு இது புதியது. பூசை மேடு கோவிந் தசாமி திருமணம் முன் நடைபெற்றது. அதன்பின் இன்று இங்குவந்திருக்கிறோம். தலைவர் முனிசிபல் கவுன்சிலர் புதிய முறையில் திருமணம் நடை பெறுமென்று கூறியபடி சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? நான் இங்கு வந்ததும் உறவினர், தோழர் முதலியவர்களின் அதிருப்தி ஏற்பட்டதாகக் கேள்விபட்டேன். அதன் காரணம் பகுத்தறிவில்லாமையே, மதம், புராணம், பழக்கம், வழக்கம், மோட்சம், நரகம், கற்பிக்கப்பட்டுள்ள மக் களுக்கு அதிருப்தியும், பயமும், நடுக்கமும் தான் தோன்றும். நன்கு யோசித்து திரு. பெருமாள் அவர்கள் போல் துணிவுடன் செய்தால்தான் வரும்கால உலகிற்குப் பயன் தரும். இதுபோன்ற திருமணங்கள் பலவிடங்களில் நடந்து கொண்டு வரு கின்றன. சிலவிடங்களில் விளம்பரத் திற்காக சிறிது ஆர்ப்பாட்டத்துடன் சுய மரியாதை இயக்கத்து திருமணம் நடை பெறுகின்றது. நான் கூறுவது சிலருக்கு, வியப்பாகத் தோன்றினாலும் தோன்றலாம். உங்கள் அறிவுப்படி கொள்ளவும், தள்ளவும் உரிமை உங்கட்கு உண்டு. பழமை, புதுமை என்ற பாகுபாடின்றி பகுத்தறிந்து முடிவுப் படி செய்யுங்கள், திருமணம் என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கைக்கு   அடிகோலும் ஆரம்ப நாளே திருமணம் என்பதாகும், பல சடங்குகளுக்கும் விழாக்களுக்கும் தத்துவார்த்தம் வேறாகயிருக்கலாம். ஆண் பெண் கூடி வாழ இச்சைக்காக, சந்தோஷத்திற்காக ஒன்று கூடும் ஜதை சேர்தலே திருமணமாகும், திருமணம் ஆணும் பெண்ணும் தங்களுக் குள் நேரில் சம்மதம்  பெற்று இருவரும் இன்பத்தோடு ஒன்றுபடுதலே எல்லா நாட்டாராலும் கையாளப்படுவதாகும். நம்நாட்டிலோ தாய் தகப்பன்மார்களின் வியாபாரமாக ஜதை சேர்க்கப்பட்டு முடிவு கூறப்படுகிறது. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு வாழ்வது தெய்விகமென்ப தாகவும், மறு உலகில் இடம் பெறுதற்கான காரியங்கட்கு இங்கு வாழ்வதாகவும், கால வினை, பொருத்தம், முடிச்சு நமது கடமை, தேர்தல், முயற்சி என்ற காரணத்தையும் மறுக்கின்றோம், ஜாதிக் கொவ்வொரு விதமாக பழக்கவழக்க மென்ற காரணத் தால் சடங்கு, பணக்கேடு, நேரக்கேடு, மக்கள் ஊக்கக்கேடு ஆகிய கஷ்டத் தோடுதான் திருமணம் நடத்துகிறோம். மாற்றமடை வதில் நாம் பெரியார்கட்குப் பயந்துப் பழைமையையே குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்கிறோம். ஆண் பெண்ணுரிமையைப் பற்றியோ வெனில் ஆண் இச்சைக்கும், வேலைக்கும், ஏவுதலுக்கும் என்றே பெண்கள் சேர்க்கப் படு கிறது.

சொத்துரிமை, சம உரிமை பெண்கட்கு வழங்கப்படுவதில்லை. புதிய முறை என்பது ஒவ்வொருவரும் சிந்திக்கவும், ஆராயவும் வேண்டுவதுதான் இத் திருமணம் நிகழ்ச்சியாகும்.  இங்கு நடை பெறும் நடைமுறை நிகழ்ச்சிகள் பெரிதும் பெண்கட்குப் பயமாகத் தோன்றலாம், காரணம்  அடுப்பூதவும், வேலை செய்யவும், அடிமை என்று பழக்கியும் வந்ததோடு கல்வி அறிவு போதாக்குறை தான். செலவுசுருக்கம், நாள் குறை, வேலை குறை, பெண்கள் உரிமை, மணமக்கள் சம்மதம், கடன்படல் பின் கடன்தீர்க்கப் பாடுபடல் ஆனால் இன்று நடக்கும் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு பேர் என்று கேட்கலாம். அது ஒரு சாட்சிக்காகத் தான். ஒரு கடை வைப்பவன் மற்ற கடைக்காரர்களை அழைப்பதும், புதுப்பேரேடு போடுவதும், அவர்களது ஒப்பந்தத்தை எடுத்து ரு ஜுப்பிக்க பேசுவதும் சாட்சிக் காகத்தான்.

ஆகவே சாட்சிமுறை அவசியம். நமக்கு ஆதாரம் சாட்சிதான். மகம்மதியர் ஒரு புத்தகத்தில் கையொப்பம், கிறிஸ் துவர்கள் கோவில் முன்பாக ஒப்பம், நாம் அதற்காகவே இங்கு சாட்சியாகவே கூடியிருக் கிறோம். சாட்சி யில்லாததால் சமீபத்தில் ஒரு கலியாணம் தள்ளுபடியாயிற்று. ஆதலால்தான் நாம் கூடி சாட்சியளிக்கின்றோம்.

பெண் அடிமைப் படுத்துதல் ஒப்பந்ததில் சம உரிமையுடன் திட்டம் காணல் வேண்டும், வீணாக பழைய சென் மப்பலன், தலைவிதி என்று கட்டாயப்படுத்தி வருவதால் பெண்கள் இனி கட்டுப்பட்டு வாழாது.

நம்மில் ஒருவர் வியாபாரியிடம் முதல் கஷ்டப்பட்டுப் பாடுபட்டு பின் சுதந்திரம் பெற்று தனித்து வியாபாரியாகுவதை பார்க்கிறோம். புருஷன் தாசி வீட்டிற்கு போதல், கள் குடித்து அடித்தல் போன்ற காரணத்தால் கஷ்டப்படும் பெண்கட்கு விடுதலை வேண்டுவதாகும்.

நாங்கள் ஏன் இங்கு வந்தோம்? புரோகிதம் செய்ய வரவில்லை, ஆரம்பத்தில் பலருக்கு விளங் காததால் நாங்கள் வந்து இம்முறையை விளக்க வேண்டுமென்று திருபெருமாள் விரும் பியதற்காக வந்தோம்.

இன்னும் 10 வருஷங்களில் புருஷன் பெண்ஜாதி தேர்ந்தெடுப்பதுகூட எவ ருக்கும் தெரியப் போவதில்லை, பிற எல்லா நாட்டு நாகரிகங்களைப் பற்றி மட்டும் நாம் கூற தேவையில்லை. அவரவர்கள் அறிவுப் படியே அறிவு வளர்ச்சிப்படியே இத் திருமணம் நடைபெறும்.

- விடுதலை நாளேடு, 7.3.20 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக