வெள்ளி, 20 மே, 2022

மாநிலங்களவையில் பெரியார் அவர்களின் 'சச்சி இராமாயணம்' "பெரியாரைப் புரிந்து கொள்ளுங்கள்!" ஆர்.ஜே.டி. உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா முழக்கம்

 

புதுடில்லி, மார்ச் 28- நாடாளுமன்றம் -மாநிலங்களவையில் ராஷ்ட் ரிய ஜனதா தளம் உறுப்பினர் தந்தை பெரியாரின் "சச்சி ராமாயணம்" இந்தி நூலைத் தூக்கிக் காட்டி பெரியாரைப் புரிந்து கொள்வீர்! என்று முழங்கினார்.

மாநிலங்களவையில் கடந்த 25 3.2022 அன்று பாஜக உறுப் பினர் ராகேஷ் சின்கா என்பவர் முன்மொழிந்த  “பண்டைய இந் திய அறிவு மரபுகளை புதுப் பிக்க வேண்டும்” என்ற தனி நபர் மசோதாமீது பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பி னர்  டாக்டர் மனோஜ் குமார் ஜா உரையாற்றுகையில், தந்தை பெரியார் எழுதிய "இராமா யணப் பாத்திரங்கள்" நூலின் இந்தி மொழியாக்கம் செய்யப் பட்டு வெளியான ‘சச்சி இரா மாயணம்’ புத்தகத்தை எடுத் துக்காட்டி உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்ட தாவது,

பெரியாரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வட இந்தியாவில் அவரது பெய ரைத் தவிர மற்ற அவரின் படைப்புகளை படித்தவர்கள் மிகக் குறைவு. அய்யா, அது ஒரு புத்தகம், 'சச்சி ராமாயணம்' - தடை செய்யப்பட்டது. அவரு டைய பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. அவருடைய புத்தகம் தடை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, மக்கள் போராடிய போது, "அலகாபாத் உயர்நீதிமன்றம் பெரியார் பற்றி என்ன கூறியது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." ராகேஷ் ஜி, இதை உங்கள் முன் வைக்கி றேன்,

 'இதில் எழுதப்பட்டிருப்பது அய்ரிஷ் மக்களின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைக ளையோ புண்படுத்தும் என்று நாங்கள் நம்ப முடியாது. வேண்டுமென்றே இந்துக்க ளின் உணர்வுகளைப் புண்படுத் துவதை விட, தனது ஜாதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை காட்டுவதே ஆசிரியரின் நோக் கமாக இருக்கலாம், நிச்சயமாக அதை அரசமைப்புச் சட்டத் துக்கு எதிரானதாகக் கருத முடியாது”. இவ்வாறு அலகா பாத் உயர்நீதிமன்றம் கூறியுள் ளது. 

பெரியார் என்ன நம்பினார், அவரது கருத்தைப் பார்க்க வேண்டாமா? பாபாசாகேப் எதை நம்பினார்? நமது பழங் கால இந்தியா என்ற கருத்து ஏன் நடக்கிறது - நமது தமிழ்நாடு சகாக்களும் சொன்னதை, சிவதாசன்ஜியும் சொல்கிறார் - உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், இது மாட்டு பெல்ட் (நீஷீஷ் தீமீறீt), அதன் கருத்தை பண்டைய கருத்தாகவே கருதுவோம். பிறகு, இந்தியா, எப்படி, 'ஏக் பாரத், சிறந்த இந்தியா'வாக முன்னேற முடியும்?

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை இந்தியா ஒன்று என்று நீங்கள் சொன்னால், 'ஏக் பாரத், ஷ்ரேத் பாரத்' என்று நீங்கள் சொன்னால், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இனத்தை மய்யமாகக் கொண்ட அணுகுமுறை இல்லாமல் நாம் முன்னேற வேண்டும்.

கடந்த கால அரு வருப்பான பயணம் குறித்துப் பேசினேன். விமர்சனக் கல்வி என்பது ஒரு விஷயம். கல்விக்கு பல வரையறைகள் இருக்கலாம், ஆனால் கல்வியின் இறுதி வரையறை - "கல்வி என்பது விடுதலைக்கான கருவியாக இருக்க வேண்டும். எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும், அது சித்தாந்த பந்தமாக இருந் தாலும், மத பந்தமாக இருந்தா லும் அல்லது எந்த வகையான அடிமைத்தனமாக இருந்தா லும் சரி, அந்த மக்களை விடு விப்பதாக இருக்க வேண்டும்" என்று பீகார் மாநில மாநிலங் களவை உறுப்பினர் டாக்டர் மனோஜ் குமார் ஜா பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக