வெள்ளி, 20 மே, 2022

தந்தை பெரியார் நாடகத்தில் நடித்த சிறுவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னைபிப்.25 தனியார் தொலைக் காட்சியில் சமுதாய விழிப்புணர்வுக்காக தந்தை பெரியார் நாடகம் நடத்தப் பட்டதுநாடகங்களில் நடித்த சிறுவர்சிறுமிகள்முதலமைச்சர் மு..ஸ்டா லினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதில்துவாஷிகா (பெரியார் வேடம்), உதய் பிரியன் (பத்திரிகையாளர் வேடம்), ஆலம் (உதவி கேட்பவர் வேடம்ஆகிய சிறுவர்சிறுமிகள் நடித்திருந்தனர்.

குறவன்குறத்தி நாடகத்தில் குழந் தைகள் சாத்விக் (குறவன் வேடம்), தாரிகா லட்சுமி (குறத்தி வேடம்), சிறீராம், (அரசியல் தொண்டர்), சமிக்ஷா (அரசியல் தலைவர்ஆகியோர் நடித்திருந்தனர்.

குறவன்குறத்தி குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையில் வீடு போன்ற வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவது போலவும்அவர்களுக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உதவுவது போலவும் அந்த நாடகம் அமைந்திருந்தது.

அதில் முதல்-அமைச்சர்நம் நாட் டில் வசிக்கும் அவர்களை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கிறீர்கள்படிக்காத அவர்கள் ஒழுக்கமாகத்தான் இருக் கிறார்கள்படித்த நீங்கள்தான் இப்படி செய்கிறீர்கள் என்று தீண்டாமை பற்றி பேசும் காட்சி அமைந்திருக்கிறது.

இறுதியில்அந்த குறவன்குறத்தி குடும்பத்தினருக்கு பட்டாவோடு வீடுகுழந்தைகளின் படிப்புக்கு உதவி ஆகிய வற்றை வழங்குவதாக முதலமைச்சர் உறுதி அளிக்கிறார்.

பின்னர் அவர்களுக்கு வாழை இலை போட்டு உணவு வழங்கிவிட்டுகுறத்திக்கு போடப்பட்ட இலையில் இருந்து உணவை எடுத்து முதல்-அமைச்சரும் சாப்பிடுவது போல அந்த நாடகம் அமைக்கப்பட்டு இருந்தது.

பெரியார் பதில்

மேலும்பெரியாரிடம் பத்திரிகை யாளர் ஒருவர் கேள்வி கேட்பது போலவும்அதற்கு பெரியார் பதிலளிப் பது போலவும் மற்றொரு நாடகம் உருவாக்கப்பட்டு இருந்ததுஅதில்ஜாதிமதம் அடிப்படையிலான பிரிவினைகளை பெரியார் எதிர்ப்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றி ருந்தனஇந்த நாடகங்கள்மக்கள் மத் தியில் மிகுந்த வரவேற்பையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.

பாராட்டு

இந்த நிலையில்இந்த நாடகங்களில் நடித்த சிறுவர்சிறுமிகள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (24.2.2022) முதலமைச்சர் மு..ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்அவர்கள் அனைவரையும் முதலமைச்சர் அன்புடன் வரவேற்றார்.

பின்னர் அவர் தனது இருக்கையில் அமர்ந்தபடிதன்னைப் போல நடித்த குழந்தையை அழைத்துஅதுபோல மீண்டும் நடித்துக் காட்டும்படி முதலமைச்சர்மு..ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்அந்த குழந்தை நடித்துக் காட்டியதை மிகவும் ரசித்தார்.

பின்னர் பெரியார் வேடத்தில் நடித்த குழந்தையை அழைத்தார்பெரியார் போல நடித்துக் காட்டும்படி கூறினார்அந்தக் குழந்தைபெரியார் போல நடித்துக் காட்டியதை ஆர்வமுடன் பார்த்தார்அவர்களுக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

பரிசாக புத்தகம்

பின்னர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து ஒளிப்படம் எடுத் துக் கொண்டார்அவர்களுக்கு சாக் லேட்களை முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார்.பின்னர் அவரிடம் இருந்தகுழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்களை எடுத்து அதன் முதல் பக்கத்தில் தனது கையெழுத்தை போட்டுஅவற்றை பரிசாக முதலமைச்சர்மு..ஸ்டாலின் அளித்தார்.

தலைமைச் செயலகத்தில் பல்வேறு அலுவல்களுக்கு இடையே இந்தக் குழந் தைகளுடன் முதலமைச்சர் மு..ஸ்டாலின் நீண்ட நேரம் மகிழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக