ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

பொதுவுடமைச் சமூகத்தில் கடவுளுக்கு வேலை இல்லை! - சித்திர புத்திரன்


சுயமரியாதைக்காரன் ஒரு மனிதன் உயர் தரப்படிப்பு அதாவது B.A., M.A., I.C.S. முதலிய படிப்புப் படித்து பட்டதாரியாயிருப்பதற்கும் மற்றும் தொழில் சம்பந்தமான படிப்பில் நிபுணத்துவம் பெற்று இருப்பதற்கும், மற்றொரு மனிதன் அவற்றை அடையா மல் தன் கையெழுத்துப் போடக்கூடத் தகுதியில்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் சொல்லுகிறாய்?

புராண மரியாதைக்காரன்: அவனுக்குப் போதிய அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆதலால் அவன் அவற்றை கற்க முடியாமல் போயிருக்கும்.

க.ம:- அப்படிச் சொல்ல முடியாது. இதோ பார் இந்த மனிதனை, அவன் இவ்வளவு சுறுசுறுப்பாகவும் புத்திசாலித் தனமாய் பேசக் கூடியவனாகவும் மண்வெட்டுவதிலும், பாரம் சுமப்பதிலும், கோடாரியால் விறகை வெட்டுவதிலும் எவ்வளவு புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறான்? தாம் நான்கு பேர் சேர்ந்தால் கூட செய்ய முடியாத வேவையை அவன் ஒருவனே செய்வது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பார். இப்படிப்பட்ட வனை புத்தியில்லாதவன் என்று சொல்லி விட முடி யுமா? ஆதலால் இவனுக்கு அறிவு இருக்கிறதே இவன் ஏன் பட்டதாரியாகவில்லை?

பு.ம: அப்படியானால் அவன் தாய், தந்தையர்கள் இவனைப் படிக்கப் போதிய கவலை எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். 

சு.ம: இதோ அவன் தகப்பனார் வந்துவிட்டார். அவரைக் கேட்டுப்பார். அவர் தன்மகன் படிக்க வேண்டு மென்ற ஆசையுடன் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்ததாகத்தானே சொல்லுகிறார். அப்படியிருந்தும் ஏன் அவர் குமாரன் படிக்கவில்லை?

பு.ம:- ஒரு சமயம் அவர் குமாரனுக்குப் படிக்க வேண்டு மென்ற கவலையில்லாமலிருக்கலாம்.

சு.ம:- அப்படியும் சொல்ல முடியவில்லையே. அவர் மகனைக் கூப்பிட்டுக் கேட்டுப்பார். அவன்தான் படிக்க வேண்டுமென்று எவ்வனவோ ஆசைப்பட்டு அலைத்து திரிந்து பார்த்ததாகவும் காரியம் கைக்கூடாமல் போய் விட்டதாகவும் சொல்லுகிறானே இதற்கெள்ள சமா கதி தானம் சொல்லுகிறாய்?

பு.ம:- அப்படியானால் அதாவது மகனும் புத்திசாலியாயிருந்து, தகப்பனுக்கும் தன் மகன் படிக்க வேண்டுமென்கிற ஆசையும் இருந்து, பின்ளையும் படிக்க ஆவலுள்ளவனாய் இருந்து படிக்காதவனா பேயிருக்கிறான் என்றால் ஒரு சமயம் அவன் தகப்பனுக்கு தன் பிள்ளையையும் படிக்க வைக்கப் பணம் இல்லாம லிருந்திருக்கலாம்.

சு.ம:- இதுதான் சரியான் பதிலாகும். அப்படியானால் அவன் தகப்பனுக்கு ஏன் பணமில்லாமல் போய் விட்டது?

பு.ம:- இது ஒரு கேள்வியாகுமா? பணம் என்பது அவனவன் பாடுபட்டுச் சம்பாதித்திருக்க வேண்டியதாகும். 

சு.ம:- சரி என்றே ஒப்புக் கொள்ளுகிறேன். இந்த மனிதன் பாடுபடவில்லை என்று நீ சொல்லுகிறாயா? இந்த மனிதன் கல் உடைக்கிறார். இவர் சம்சாரம் விறகு கொண்டு வந்து விற்கிறார். வெளியில் வேலைக்குப் போய் வந்த நேரம் போக மீதி நேரத்தில் பெரிய கட்டைகளை வீட்டில் போட்டு கோடாரி கொண்டு பிளந்து சிறு சிறு சுமையாக அழகாகி கட்டி வைக்கிறார். போதாக்குறைக்கு இவரின் தாயார் வயது சென்ற கூன் விழுந்த கிழவியம்மாள் புட் டும், முறுக்கும் சுட்டு வீட் டுக்கு முன்னால் இருந்து விற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். இரவில் 4 மணி நேரம் மாமியும், மருமகளும் தினம் ராட்டினத்தில் நூல் நூற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்க இவர்கள் பாடுபடவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

பு.ம:- இதெல்லாம் சரி தான். என்ன பாடுபட்டாலும் பணம் சேருவதற்கு பிராப்தம் வேண்டாமா? ஜன்மாந்திர கர்ம பலன் அதற்கு அனுசரணையாக இருக்க வேண்டாமா? பையனுக்கும் அவன் தலையெழுத்து பலமாமிருக்க வேண் டாமா? இவ்வலவும் இருந்தாலும் பகவானுடைய அனுக்கிரகமும் தாராளமாய் இருக்க வேண்டாமா? இவ்வளவு சங்கதிகள் தேவை இருக்கும் போது "பையன் கெட்டிக்காரன், புத்திசாலி தகப்பனுக்கும் படிப்பிக்க ஆசையிருந்தது. குடும்பத்திலும் பெற்றோர்கள் ஆளுக்கொரு கஷ்டப்பட்டார்களே இப்படியெல்லாம் இருந்தும் பையன் ஏன் படிக்கவில்லை" என்றால் இதுகேள்வி? இவை எல்லாம் என்ன நம்முடைய இச்சையா? அப்படியானால் நான் ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்றால் பறந்துவிட முடியமா நான் ராஜா ஆக வேண்டுமா னால் ஆகிவிட முடியுமா? மகாத்மா ஆக வேண்டு மென்று ஆசைப்பட்டால் ஆகிவிட முடியுமா? நமக்கெல்லாம் மேலாக ஒன்று இருந்து கொண்டு நம்மை நடத்துகின்றது என்கின்ற ஞானத்தை உணர்ந்தோமே யானால் இப்படிப்பட்ட நாஸ்திக உணர்ச்சிக் கேள்விக்கெல்லாம் இடமே இருக்காது. 

சு.ம:- அப்படியா சங்கதி, சரி உன் கடையைக்கட்டு. நான் சொல்லுவதை சற்று கவளமாய் கேள். பிறகு உன் னுடைய ஆஸ்திக ஞானத்தின் யோக்கியதையைப் பார்ப்போம்.

பு.ம.:- சரி சொல்லு பார்க்கலாம். 

சு.ம. ஒரு ஆயிரம் ஏக்கரா ? பூமியும், 250 வீடுகளும், 1000 ஜனங்களும் உள்ள ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்ளுவோம். அந்த பூமியும், அந்த வீடுகளும் அங்குள்ள மற்ற செல்வங்களையும், வியாபாரங்களையும் அந்த ஒரு ஆயிரம் ஜனங்களுக்கும் பொதுவாக்கி விடுவோம். அந்த ஆயிரம் பேர்களுடைய வாழ்க்கைக்கும் அனுபவங்களுக்கும் வேண்டிய சாதனங்கள் என்ன என்ன என்பதாக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்து அவைகளையெல்லாம் அங்கேயே உற்பத்தி செய்ய ஒரு திட்டம் போட்டுப் பார்த்து அதற்கு ஏற்ற தொழிற் சாலைகளைக் கட்டி அந்தொழிற்காலையில் வயது வந்த எல்லா மக்களையும் ஆண், பெண் அடங்கலும் எவ்வளவு நேரம் வேலை செய்தால் போதுமோ அவ்வளவு
நேரம் வேலை செய்தாக வேண்டும் என்று ஒரு ஏற்பாடு செய்து கொள்ளுவோம். அவர்களுடைய குழந்தைகளை எல்லாம் ஒரு இடத்தில் கொண்டுவந்து சேர்த்து அவர்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாக ஆகாரம், துணி முதலியவைகள் கொடுத்து ஒரேமாதிரி போஷித்து எல்லா குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை ஒரே மாதிரியான கல்வியைக் கொடுத்து, கடவுள், கடவுள் செயல், மதம், முன் ஜன்ம பலன், தலைவிதி, தலை எழுத்து முதலிய வார்த்தைகள் அவர்கள் காதில் விழாமலும், அவர்கள் மனதில் உதிக்காமலும் இருக்கும்படி ஜாக்கிர தையாய் காவல் வைப்போம். பிறகு அவர்களுக்கு 14 அல்லது 15 வயது ஆனவுடன் அவர்களுடைய இயற்கை ருசிக்கும், மனப் போக்குக்கும் ஏற்ற தொழிலையும் வித்தையும் கற்றுக் கொடுப்போம். அவற்றில் அவர்கள் 18,19 வயது வரை அனுபோகம் பெற்ற பிறகு அவர் வர்களுக்கு ஏற்ற வேவை செய்யும்படி தொழிற்சாலைகளுக்கு அனுப்பிக் கொடுப் போம். இதன் பயனாய் உண்டாகும் பயனை அந்தக் கிராமத்திலுள்ள எல்லா ஜனங் சுளுக்கும் சரி பங்கு கிடைக்கும் படிக்கும், இந்த கொள்கை கொண்ட அந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடக்கும் படிக்கும் ஏற்பாடு செய்வ தோடு ஒவ்வொரு மனிதனும் தன் பங்குக்குக் கிடைக்கக் கூடிய சாதனத்தை அவனவன் அனுபவித்தே தீர வேண்டுமே ஒழிய வெறும் மீதி வைக்கக் கூடாதென்றும் திட்டம் செய்வோம். 

மற்றும் நொண்டி, முடம், வேலைக்கு லாயக்கற்றது, வயது சென்றது ஆகியவர்கனை போஷிக்க ஒரு திட்டம் போட்டு அதற்கு வேண்டிய அளவு சாதனங்களையும் தனித் தனியாக எடுத்து ஒதுக்கி வைத்துக் கொள்ளுவோம். பிறகு இந்தக் கிராமத்தில் உள்ள ஆயிரம் பேருக்கும் ஏதாவது அவசர காலங்களில்| ஏதிரிகளால் தொல்லை ஏற்பட்டால் அதை சமாளிக்க பயிற்சி கொடுத்து அது மறந்து போகாமலிருக்கும்படி அடிக்கடி பரீட்சை செய்து வருவோம். இந்தக் கிராமத்தில் உள்ள 1000 பேருக்கும் வசிப்பதற்கு ஒரே அளவான இடம் கொண்ட வீடுகள் ஒவ் வொருவருக்கும் ஒதுக்கி விடுவோம். இந்த கிராமத்து ஜனங்கள் பூராவும் சந்தோஷம் அனுபவிக்கவும்,  நேரப்போக்கு உண்டாகவும், சுகாதார சவுக்கியமும், உலாவ நந்தவனமும் முதலிய போக போக்கியங்களுக்கு ஏற்பட்ட சாதனங்களை கூடிய வரையில் பொதுவிலேயே உ ற்பத்தி செய்து வைத்து இலவச மாகவே அனுபவிக்க உதவுவோம். 

ஆண், பெண் சேர்க்கைத் துணை விஷயங்களுக்கு அவரவர்களுக்கு இஷ்டப்பட்டவர் களுடன் மாத்திரம் துணைவர்களாயிருக்க ஏற்பாடு செய் வோம். ஆக, இவை முதலிய  காரியங்களை ஒழுங்காக  பாரபட்சமில்லாமல் நடத்தி வரு வதாயிருந்தால் நீ மேலே சொன்ன பிராப்தம், ஜென்மாந்திர கரும பலன், தலையெழுத்து,பகவானுடைய அனுக்கி ரகம், தமக்கு எல்லாம் மேலாக ஒன்று இருந்துகொண்டு நம்மை நடத்துகிறது என்கின்ற தான வார்த்தைகளுக்கும், கொள்கை களுக்கும், எண்ணங்களுக் கும் இடமுண்டா என்று யோசித்துப் பார்.

குறிப்பு: இந்தச் சம்பாஷைனையானது தனிவுடைமைத் தத்துவத்தில்தான் கடவுள், கடவுள் செயல் முதலியவைகள் உண்டு என்றும், பொது உடைமைத் தத்துவத்தில் அவைகளுக்கு வேலை யில்லை என்றும், தனிவுடைமைத் தத்துவத்தை நிலை நிறுத்தவே மேல் கண்ட கடவுள், கடவுள் செயல் முதலிய கற்பனைகள் ஏற்படுத் தப்பட்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் குறிப்பிடவே ஏற்பட்டதாகும். 


(13.8.1933 "குடியரசு" இதழில் 'சித்திரபுத்திரன்' என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட் டுரை )

- விடுதலை ஞாயிறு மலர், 18.02.2001


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக