புதன், 25 மே, 2016

நல்ல பெயர் வைத்துக் கொள்வதும் ‘பாவமா’?



1.4.1934 குடியரசிலிருந்து
சர்வ உயர்ஜாதியார்களின் திருக்கண்களுக்கும், கள்ள னாய், கபடனாய் எத்தனையோ வம்ச பரம்பரையில் தீயனாய் இந்த பரிதாப ஜாதியார் காணப்பட்டு வந்தார்கள். பல தரப்பட்ட அபிப்பிராய பேதத்துக்குரிய உயர் ஜாதியினர்கள், சாதி மாச்சர்யம் தலைகொண்டு நிற்கும் உயர்ஜாதியினர்கள் இந்தப்பரிதாப ஜாதியாரைப் பொறுத்தமட்டில் ஒருங்குசேர்த்து செய்துவந்த கொடுந் துன்பங்கள் பல.
அவர்களை அழைப்பதற்காவது நல்ல பெயர்களையாவது குட்டிக்கொள்ள உரிமை கொடுத்தார்களா, என்றால் இல்லை. அவர்கள் வயிற்றில் அடித்தார்கள். அது லாபத்தைகருதி செய்தார்கள் என்று சொல்லலாம். பரிதாப ஜாதியார் தங்கள் புத்திரபாக்கியங்களுக்கு நல்ல பெயர்வைத்து அழைப்பதில் கூடவா கல்நெஞ்சம் படைத்த மிராசுதார்களின் கண்ணை உறுத்த வேண்டும்.
புருஷோத்தமன், வெங்கிடாஜலபதி, திருஞானசம்பந்தன், ஸ்வதாரண்யம், வண்மீகலிங்கம், கிருபா நிதி, கிருத்திவாசன், வேதாந்தம், நடராஜன் போன்ற இம்மாதிரி யான பெயர்களை பரிதாப ஜாதியாரிடையே காணவே முடியாது.
இப்பெயர்கள் பரிதாப ஜாதியாரின் வாயில்கூட நுழை யவே துழையாதென்பதை அவர்களின் ஆரம்ப நிலையை முன் குடி அரசு அத்தியாயங்களின் நான் எழுகியவைகளை படித்தவர்களுக்கு தெளிவாய் புலப்படும். இம் மாதிரியான பெயர்களை தரித்துக் கொள்வதால் வரும் லாபமும் அப்பெயருக்குள்ள யோக்கியதையும் என்ன என்பது வேறு விஷயம். இப்பெயர்களே உயர்ஜாதி மிராசுதார்கள் என்னமோ பிரமாதமாய் கருதி  கொண்டு பரிதாப ஜாதியார் தரித்துக் கொள்வதில் உலகமே முழுகிப்போய் விடுவதாய் நினைக்கிறார்கள்.
அவர்களுடைய மனப்பான்மையில் எவ்வளவு தூரம் பேதபுத்தி தாண்டவமாடுகிறதென்பதை காட்டவே இதை எழுத வேண்டியிருக்கிறது. இப்பெயர்களெல்லாம் உயர்ஜாதி யாருக்கு சொந்தமான கடவுளர்களுடைய திருநாமங்களா தலால், அப்பெயர்களை பரிதாப ஜாதியார் தரித்துக்கொள்வது மகாபாதகமென்கிறார்கள்.
அவர்கள் சொல்லும் இம்மகா பாதகத்தை ஏற்று கொள்ள பயந்து நடுங்கும் பரிதாப ஜாதியார் தங்கள் சமூகத்தில் ஜனிக்கும் புத்திரபாக்கியங்களுக்கு வம்ச பரம்பரையாக குட்டிக்கொண்டுவரும் பெயர்களை கேட்க, கேட்க மிக விந்தையாகவே இருக்கும். தூண்டி, துடப்பக்கட்டை, நொண்டி, தாப்பாக் கட்டை, கட்டேரி, காட்டேரி, எலியன், பரட்டயன், மொழியன், காத்தான் போன்ற பல பெயர்களே பரிதாப சமூகத்தில் வழங்கிக் கொண்டுவருவதாகும்.
தப்பித் தவறி சில விடங்களில் பொன்னுசாமி, ரெங்கசாமி, பெரியசாமி, சின்னசாமி, என்பது போன்ற பெயர்கள் காணப்பட்டாலும் அப்பெயர்களை முழு தும் சொல்லி அழைக்க மிராசுதார்கள் சங்கோசப்படுவார்கள். தங்கள் பிரபல தத்துவத்துக்கு பங்கம் வந்து விட்டதாக கருதுவார்கள்.
ஏனென்றால் அப்பெயர்களில் சாமி. என்ற ஒரு வார்த்தை கலங்திருப்பதால் தான்! மிராசுதார்களுக்கேற்பட்ட இந்த இடைஞ்சலை தீர்த்துக் கொள்ளவும் வேண்டும், ஆனால் பரிதாப ஜாதியானை வேலைக்கழைக்க ஏதாவது ஒரு பெயரைக்குறிப்பிட்டு அழைத்தும் ஆகவேண்டும். ஆகவே சாமி என்ற பதத்தை எடுத்து விட்டு பொன்னா, சின்னா,
பெரியா, ரெங்கா என்று அழைத்துக்கொள்ளும் மிராசுதார் களோடு கழுதை, நாய் என்ற செல்லப்பெயரை வைத்து அழைக்கும் மிராசுதார்களும் உண்டு. அல்லது ஏலே தூண்டி மகனே! ஏலே தாப்பாக் கட்டை மகனே! ஏலே துடப்பக்கட்டை மகனே என்று தகப்பன் பெயரை வைத்து அழைத்துக் கொள்ளுவதின் மூலம் சாந்தி செய்துகொள்ளும் மிராசுதார் களும் சிலருண்டு.  பரிதாப ஜாதியார் படும் பல்லாயிரக்கணக் காண அவஸ்தைகளில் இதுவும் ஒன்று  என அறியவும்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • இன்றைய வாலிபர்கள் தங்களுக்கு மிக்க பொறுப்பு இருக்கிறதாகக் கருத வேண்டும். பெண்மணிகளும் மானம் ஈனம் என்பவைகளைக் கூட லட்சியம் செய்யாது முன்வர வேண்டும். ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மானமிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.
  • அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்புப் பலமாய்விடுமே என்கிற உலக அபிமானமும், பயமும், பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் ஒருக்காலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவ மாட்டார்கள். அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்விதச் சீர்திருத்தமும் ஒருக்காலமும் பயனளிக்கவே முடியாது.
  • மனித நாகரிகம் பெருக வேண்டுமானால், முன் னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும். இதுதான் மனிதத் தர்மமாகும். உடலுழைப்பு வேலைகளை வளர்க்க, நிலைநிறுத்தப் பாடுபடுகிறவர்களே மனிதச் சமுதாய விரோதிகள் ஆவார்கள் என்பது எனது கருத்து.
  • ஜாதி, மதம், கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங் களால் யாதொரு பயனும் இல்லை யென்றும், அவைகள் போலியும் சூழ்ச்சியும் நிறைந்த ஏமாற்றல்கள் என்றும் தைரிய மாய்ச் சொல்லுகின்றேன். ஆகையால், அதை விட்டுவிட்டு, மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து, அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள் கையை ஏற்று நடத்தவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.
-விடுதலை,29.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக