வெள்ளி, 27 மே, 2016

ஆரியர் யோக்யதை தெரியாதா?

ஆரியர் யோக்யதை தெரியாதா?
நினைத்தவனோடு கூடி ஜனித்த சங்கர வம்சம்தானே குருபரம்பரை?

1936 ஆம் ஆண்டு குடியரசிலிருந்து
சென்னை சர்வ கலா சாலை வித்துவான் பரீஷைக்கு பாடம் வைத்திருக்கும் புத்தகங்களில் தொல்காப்பிய பொருள திகார ஆராய்ச்சி என்னும் புத்தகமும் ஒன்று. இப்புத்தகம் தோழர் மு.இராகவ அய்யங்கார் என்ற ஒரு பிராமணனால் எழுதப்பட்டது. அய்யங்கார் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி புத்தகத்தைப்பற்றி சில நாளாய் தமிழ்நாட்டில் கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரஸ்தாப கிளர்ச்சியில் தமிழர்களுடைய விசேஷ கவனமெல்லாம்.
சென்று கொண்டிருக்குக்குமென்பதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. அய்யங்கார் எழுதிய ஆராய்ச்சி நூலில் தமிழர்களை கேலலப்படுத்தியும், ஆரியப்பார்ப்பனர்களை மேன்மைப்படுத்தியும் எழுதிய பகுதிகளேதான் கிளர்ச்சிக்கு மூலகாரணம். இந்த உண்மையை தற்போது, தமிழர்கள் மானத்தைக் காப்பாற்றவும் ஆரியர்களுடைய ஆபாசத்தை சந்திக்குக் கொண்டு வரவும் செய்த பெருமை அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழாசிரியர் தோழர் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கே உரியது.
அய்யங்காரின் ஆராய்ச்சி நூலிலிருக்கும் ஆபாசத்தை தமிழர்களை நன்கு அறிந்துகொள்ளும்படி தோழர் பாரதியார் அவர்கள் செய்த பிற்பாடும் அய்யங்காரின் வடிகட்டிய யோக்கியத்தனம் மாறவில்லை என்றால் தமிழர்களை எவ்வளவு  தூரம். வடிகட்டிய முட்டாள்களாக அய்யங்கார் கருதிக்கொண்டிருக்கிறார் என்பது புலனாகும். தமிழர் களிடத்தில் உஞ்சி விர்த்தி வாங்கி வயிறு கழுவிப் பிழைக்க ஒண்ட வந்தவர்களே ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் புரோகிதக் கூட்டத்தார் ஆவார்கள்.
அதாவது நமது மு.இராகவய்யங்காரின் மூதாதையர்கள் இவ்வாரியக் கூட்டத்தாருக்கு இன்று நாகரீகமென்ப தொன்றிருக்குமானால் அது தமிழர் நாகரீக நிழலில் சஞ்சரித்த வாடை என்பது அய்யங்கார் மறந்துவிட்டார் போலும்! உண்மை இவ்வாறிருக்க நமது அய்யங்கார் நமது ஆராய்ச்சி நூலில் தமிழர்களைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை சற்று கவனித்தால் அய்யன்காரின் ஆணவமும், அவரை ஆதரித்து எழுதும் அயோக்கிய பத்திரிகைகளின் தன்மையும் வெட்டவெளிச்சமாய் விடும்.
பண்டை தமிழருக்குள் ஒழுங்கான மண முறையில்லை. நினைத்தவன். நினைத்தவளை, நினைத்தபடி அவள் விருப்பத்திற்கு மாறாக அவள் சுற்றமறியாதபடி வலிந்து ஒழுகி வந்தான். இந்த களங்கம், நிறைந்த களவு முறையை நீக்கி ஆரிய மேலோர் கரணங்களமைந்த கற்பியல் முறையை தமிழ் நாட்டாருக்கு நன்கு விதித்துப் போந்தனர் என்பதேயாம்!
அய்யங்காரின் இக்கூற்றுப்படி தமிழ் நாட்டினருக்கு கற்பில்லை என்றும், நினைத்தவன் நினைத்தவளை நினைத்தபடி அவள் விருப்பமில்லாமல் பலாத்காரமாய் நடந்து கொண்டு வந்தார்கள் என்றும், இவ்வநாகரீக முறையை ஆரிய மேலோர் என்ற ஒரு கூட்டத்தார் நீக்கி கற்பியல் முறை போதித்தனரென்று பெறப்படுகிறதல்லவா? அய்யங்காரின் ஆராய்ச்சிப்படியும், அய்யங்காரை பரிபூரணமாக ஆதரிக்க முற்பட்டிருக்கும் ஆனந்த விகடப் பத்திரிகையின் சாதி அபிமான ஆராய்ச்சிப்படிக்கும் ‘ஆரிய மேலோர் என்ற சொல்லப்படுவது ஒரு கழுதைக் கூட்டமாகவே இருக்கட்டும்.
அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஆரிய மேலோர் என்ற ஒரு கூட்டமே தமிழருக்கு கற்பியல் முறையை போதித்த னரென்ற பதம், அய்யங்கரரின் ஆராய்ச்சியில் காணப்படுவதால் அது எந்த மூல தஸ்தாவேஜியிலிருந்து ஆராய்ச்சி செய்திருந் தாலும், அந்த மூல தஸ்தாவேஜி தயாரித்தவனெல்லாம் வடிகட்டிய காலிகளாகவும், காலிப்பயல்களாகவும்தான் தமிழர் கள் கருதமுடியும்.
எப்படி இருந்த போதிலும் தமிழர்களுக்கு கற்பியல் முறையை போதித்தான் ஆரியன் என்பதை கொஞ்சம் கவனிக்கவேண்டியிருக்கிறது. ஆரியன் என்றால் இப்போது பிராமணன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு ஜாதியிருக்கிறதே அதற்குத்தான் சொல்வதாகும். இப்போதி ருக்கும் பிராமணர்கள் தங்கள் முன்னோர்கள் ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்வதுண்டு. இந்த ஆரிய வம்ச பரம்பரையிலுதித்தவர் நமது மு.இராகவையங்கார்.
இவருடைய ஒத்துக்கு மத்தளம் அடிக்கும் கோமாளிப் பத்திரிகையான ஆனந்தவிகடன் ஆரிய வம்ச பரம்பரையிலுதித்தவர்களாலேயே நிர்வாகம் செய்யப்படுவதாகும். தமிழர்களுக்கு கற்பு போதித்துக் கொடுத்த இக்கூட்டத்தாரு டைய கற்பு நிலையோ சொல்ல வேண்டியதில்லை.
தமிழர் களை இழிவுபடுத்தி அய்யங்கார் எழுதி இருப்பதின் அடிப்படையான அந்தரங்கமெல்லாம் தங்கள் வம்ச பரம்பரையின் ஆபாசங்களை மறைத்து முலாம் பூசவேயாகும். சொந்த ஆபாசத்தை பரிசுத்தப்படுத்திக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.
ஆனால் தமிழர்களை இழிவுபடுத்தி விட்டு தன் இனத்தை பரிசுத்தப்படுத்தப்பார்க்கும் அய்யங் காரின் அகம்பாவத்திற்கும், அய்யங்காருக்கு ஒத்துக்கு மத்தளம் அடிக்கும் யோக்கியர்களுக்கும் தக்க புத்தி கொடுக்க வேண்டுவது ஒவ்வொரு தமிழர்களுடைய நீங்காக் கடமை யாகும். தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடுமென்பதை அய்யங்கார் மறந்துவிட்டார் போலும்!
ஆரியர் (பார்ப்பனர்) களுடைய மூலமே இன்னதென்று தெரியாது. தகப்பன் பெயர் தெரியாத வம்சமே பிராமண (ஆரிய) வம்சம் எப்படியெனில் இருடிகள் - (ஆரிய மேலோர்) ரிஷிகள் யாருக்கு ஜனித்தார்கள் என்று கேட்காதே என்பதற்கு பதிலாக ரிஷிமூலம் நதி மூலம் கேட்காதே’ என்ற ஒரு வார்த்தையை தெருவில் திரியும் எதுவும் சொல்கிறது. ஏனென் றால் கக்கூசு தண்ணிரும்,
ஜலதாரைத் தண்ணீரும் நதியாகி விடுகிறது. ஆதலால் அது தெரிந்தால் அதை யாரும் தொட மாட்டார்கள். ஆதலால் அது போல் மூலம் தெரியாத - தெரிந்து கொள்ளக்கூடாத ஜாதி ஆரிய ஜாதி என்பது ஒரு பக்கமிருக்கட்டும். குரு பரம்பரையின் யோக்கியதையைக் கேட்டால் ஒரு கழுதை கூட சிரிக்கக் கூடிய நிலையிலிருக்கிறது. பிராமணர்களுக்கு குரு பீடம் சங்கராச்சாரியார். அவருக்கு தகப்பன் பெயர் தெரியாது.
சங்கரர் விதவைக்குப் பிறந்தவர். ஆகவே சொந்த புருஷனுக்கில்லாமல் நினைத்தவனை கூடிப்பெற்றெடுத்த சங்கர பரம்பரையே குரு ஸ்தானம். இன்னொரு ஆபாசத்தைச் சொன்னால் வெட்கக்கேடு. அதாவது பஞ்ச கவ்யமென்ற பெயரால் மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் (அதாவது மல மூத்திரத்தையும்) அருந்துபவர்கள்.
இந்த நாகரீகக் கூட்டத்தார். தமிழர்களுக்கு கற்பு சொல்லிக் கொடுத்தார்களென்று அய்யங்கார் ஆராய்ச்சி முடிவு கட்டுவ தோடு, ஆனந்தவிகடனும் ஆதரிப்பதென்றால் அதை என்னவென்று சொல்வதோ தெரியவில்லை. ஆரியர் தமிழருக்கு கற்பு கற்றுக்கொடுத்தார்கள் என்பதை விட தங்களைப் போலவே தமிழர்களையும் மல மூத்திரம் அருந்த கற்றுக்கொடுத்தார்கள் என்றால் பொருந்தும். அதையும் தமிழர்கள் விட்டு வருகிறார்கள்.
அய்யங்காரும் கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு மச்சு வீட்டின் மேல் கல் எறிவதென்றால் அதை சும்மா விட முடியுமா? தன் முதுகு தனக்குத் தெரியாத உயர் ஜாதி என்று இறுமாப்படைந்து கிடக்கும் கூட்டத்துக்கு சிலவற்றை தமிழர்கள் சார்பாகச்சொல்கிறேன்.
இன்று சிறப்பாக தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். சம்சாரம் கற்பு தவறிவிட்டாள் என்ற ஒரு சந்தேகத்தை காரணமாகக் கொண்டு மனைவியை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்ட தமிழர் பலர். கணவன் கற்பு நிலை தவறிவிட்டான், பரஸ்திரீ மோகம் பிடித்து விட்டான் என்ற காரணத்துக்காக கயிற்றுக்கு இரையான தமிழ் பெண்மணிகள் அனந்தம் கற்பை காப்பதற்கு தமிழ்நாட்டில் நடந்திருக்கும் கோலாகலங்கள் கோடிக்கணக்காகும்.
நீதியிலாக் காவின் பழைய காதல்களைப் புரட்டிப்பார்த்தால் கற்பு என்ற ஒன்றிற்காக மானத்தைப் பெரிதெனக் கருதி தமிழர்கள் செய்திருக்கும் செய்கைகள் தெற்றெனப் புலப்படும். கற்பை காக்க வேண்டி பலாத்காரம் செய்ய வந்த ஒரு அயோக்கியனின் ஆண்குறியை அறுத்த ஒரு தமிழ்ப்பெண்மணியின் சரிதை சமீபத்தில் திருச்சியில் நடந்ததாகும். இம்மாதிரியான சம்பவம் எப்போதாவது நடந்ததாக உயர்ந்த குலமென்று சொல்லப் படுகிற பிராமணக்குடும்பங்களில் உதாரணம் காட்டவாவது முடியுமா என்று நமது அய்யங்காரையும் அவரை ஆதரிக்கும் முட்டாள்களையும் அறை கூவி அழைக்கிறேன்.
ஆரியப் பார்ப்பனக் குடும்பங்களில் கற்புக்கு உதாரணம் காட்ட முடியாவிட்டாலும்போகட்டும். நடை முறையிலாவது கற்பு முறைப்படி அமுலில் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. தன் காரிய லாபத்திற்கு எதையும் செய்யத் துணிந்தவன் பார்ப்பானே என்பது உலகமறிந்த ரகசியம். அதனாலேயே பழய அகராதிகளில் ஆரியர் என்றால் மிலேச்சர் என்று (தமி ழர்கள் சு. ம. காரர்கள் அல்லாத ஆரியர் பிரசுரித்த அகராதி களிலேயே இன்றும் காணலாமே!
அரசியல் துறையிலும் மதத்துறையிலும் மேல் அதிகாரிகளுக்கும் கட்டளைகார தமிழ் சீமான்களுக்கு வலிய கூட்டிக்கொடுத்து விட்டு யோக ஷேமத்துடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் தமிழர்களா? இதற்கு ஆதாரம் வேண்டுமென்றால்    சிதம்பர ரகசிய மென்று தென்பாதி தோழர் டி. எஸ். கனகசபையால் எழுதப்பட்ட புத்தகத்தைப் பார்க்கவும். (அது குடி அரசு ஆபிசில் விற்கப்படுகிறது.)  (1) கருங்குழி பார்சல் வழக்கு தமிழர் குடும்பத்தில் நடந்ததா?  2) மாயவரத்தில் சக்தி பூஜை அய்யர் வழக்கு தமிழரிடையே நடந்ததா? 3) மதுரை பார்சல் வழக்கு தமிழர் குடும்பத்தில் நடந்ததா? 4) விமானக்காதல், வழக்கு வேலூர் வழக்கு இவையெல்லாம் தமிழர் குடும்பத்தில் நடந்ததா?
இவைபோன்ற ரசமான சம்பவங்கள் இன்னும் எத்தனை உதாரணத்துக்கு வேண்டும்? ஆகவே நடைமுறையிலிருக்கும் தனது சொந்த சமூகத்தின் ஆபாசத்தைப் போக்குவதற்கு செய்யவேண்டிய கைங்கர்யங்கள் அனந்த கோடிகளிருக்கும் போது மூடத்தனமான சேவைகளில் வீண் ஆராய்ச்சி செய்ய வேண்டுவதில்லை.
தொல்காப்பிய மென்ற நூல் எப்படி எழுதப்பட்டதென்பதே தெரியாது. இதிலிருந்து நச்சினாராக் கினியன் என்ற ஒரு பார்ப்பன அயோக்கியனும் நமது அய்யங்கார் சுவாமிகளும் தமிழர்களைப்பற்றி பொய் ஆராய்ச்சி செய்ய புறப்பட்டதேனோ? ஆகவே உத்தமத் தமிழர்கள் வாழும் நாட்டில் விபசாரம் போன்ற ஆபாச அழுக்குகளே உருவாயமைந்து சஞ்சரிக்கும் உஞ்சி விர்த்தி பார்ப்பனக் கூட்டத்திற்கு கற்பியல் முறையை போதிக்கத்தக்க கைங்கர்யத்தில் அய்யங்கார் ஈடுபடுவதுதான் அறிவுடமை யாகும். அதோடு உத்தமத் தமிழர்களை இழித்துக்கூறும் கூற்றுகளை தனது ஆராய்ச்சி நூலிலிருந்து அப்புறப்படுத்தி விடுவதற்கு வாய்தா நிபந்தனை இல்லாமல் செய்வது அய்யங்காரின் முதல் வேலையாகும்.
-விடுதலை,8.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக