தற்கால நிலை மையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தைக் கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்குக் காரணம் சொல்லுவ தாய் இருந்தால். அவன் பூமியுடையவும், சூரியனுடையவும் நடப் பைக்கொண்டு கணக்குப் போட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான்.
இதே விஷயத்தைப் பற்றி மத சாதிரியை கேட்டால் அவன் சூரிய சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு, கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.
இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்ன வென்றால், ஒரே ஆசாமி வான சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும் போது பூமியின் நிழலால் மறைக்கப் படுகின்ற தென்றும், மதசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர் களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.
இது மாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதட்சயப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் ராகு கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷபரிகாரத்திற்கு நானம் செய்யவும் தற்பணம் செய்யவும் சங்கல்பம் செய்துகொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான்.
ஆகவே, கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை நினைத்துப்பாருங்கள்.
அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும் மிக மிகப் பழமையான தினால் காட்டு மிராண்டித்தனமான காலத்து எண்ணங்களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத்தில் கட்டிக்கொண்டு அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்தி விட்டோம்.
- விடுதலை நாளேடு, 20.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக