சனி, 1 செப்டம்பர், 2018

பகுத்தறிவு 09.08.1931 - குடிஅரசிலிருந்து...


நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும் துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியும்.  நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்துகொண்டு இதுதான் நபிகள் சொன்னது என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா?  நமது சொந்தக் கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்கவேண்டும்.  சாளேசரம் இருந்தால் சரியாய்த்தெரியாது.

பக்கப் பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது.  இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும்.  மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான்தெரியும்.  சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாக வுந்தான் தெரியும்.  நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.  அதுபோலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்லவேண்டும்.  அப்படிக் கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிப்பேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகிவிடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய்கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள், உங்களைப் போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார்கள்?  நினைக்கின்றார்கள் என்று பாருங்கள்.

- விடுதலை நாளேடு, 01.09.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக