டாக்டர் டி.எம். நாயர்
அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத் திற்குப் பல காங் கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வரு வதோடு, ஒரு சில திராவிடக் கருங்காலி களும், கங்காணிகளும் விபீஷணர்களாக ஆகிப் பேராதரவு தந்து வருகின்றனர். காங் கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி. வரதராசுலுநாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக்குடி வழக்கறிஞர் வ.உ. சிதம்பரம்பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் போன்றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப் பனர்கள் தாம்.அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர்களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமையையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட 'இந்து', 'சுதேசமித்திரன்', 'பிரபஞ்சமித்திரன்' போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை, ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து 7.10.1917)
பனகல் அரசர்
தற்காலத்திய மிகப் பெரிய சமூக சீர்திருத்த வாதி திரு. இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நலனுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)
சர். ஏ.டி. பன்னீர்செல்வம்
காங்கிரஸ்காரர் களுக்கு வார்தா எப் படியோ, அப்படித் தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தியின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க நாம் ஈரோடு போகிறோம்.
சர்.கே.வி. ரெட்டி (நாயுடு)
திரு. இராமசாமி நாயக்கர் ஒரு உண்மை யான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக்கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்பதையே அறியாதவர். அவசியம் நேர்ந் தால் எந்தவிதமான தியாகத்திற்கும் தயாராக இருப்பவர் அவர். (1928-இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)
- விடுதலை, 17.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக