வெள்ளி, 16 நவம்பர், 2018

தீண்டாமையை ஒழிக்க இடம் தராத இந்து மதம்!



27.03.1932 - குடிஅரசிலிருந்து...

தீண்டாமையை ஒழிக்க இடந்தரவில்லை என் பதைப்பற்றி நாம் அதிகமாக ஒன்றும் கூறவேண்டிய அவசியமில்லை பெரிய புராணத்திலுள்ள நந்தனார் கதை ஒன்றே போதுமானதாகும். நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளிடத்தில் பக்தியுள்ளவ ராகிக் கோயிலுக்குள் செல்ல விரும்பிய தீண்டா தாராகிய நந்தனாரை அந்த உடம்புடன் கோயிலுக் குள் வந்து தன்னை வணங்குவதற்கு அந்த நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளே சம்மதிக்காமல் நெருப்பில் மூழ்கி இறந்து பார்ப்பன சரீரத்தைப் பெற்றுக் கொண்டபின் கோயிலுக்குள் வர வேண்டு மென்று சொல்லி அவ்வாறே நந்தனாரும் நெருப்பில் மூழ்கிப் பார்ப்பன உடம்பு பெற்றுக் கொண்டு

கோயிலுக்குள் போனதாகத்தானே பெரிய புராணத் தில் சொல்லப்படுகின்றது?

தீண்டாமை விலக்குக்கும் சமத்துவத்துக்கும் இடமிருப்பதாகச் சொல்லப்படும் பெரியபுராணம் என்பதே இவ்வளவு கொடுமையாக இருக்குமானால் மற்ற சின்ன புராணங்களைப் பற்றிச்சொல்லவும் வேண்டுமா?

இனி, சங்கராச்சாரியார் என்பவர் தீண்டாமையை ஒழிக்கப் போதனை செய்தார் என்று கதை சொல்லுகிறார்கள். அவர் ஒருநாள் கங்கையில் ஸ்நானம் பண்ணிவிட்டு வரும்போது எதிரில் வந்த ஒரு தீண்டாதானைக் கண்டு விலகியதாகவும், உடனே அத்தீண்டாதான் சங்கரரை நோக்கி  ஆத் மாவில் என்ன வித்தியாசம்? என்று கேட்டதாகவும், பிறகு சங்கராச்சாரியார் ஆத்ம சமத்துவத்தையறிந்து அவனைக் கட்டித்தழுவிக் கொண்ட தாகவும், அவனுடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டியதாகவும், அதற்காக சங்கராச் சாரியார் பஞ்சதசி என்ற நூலைச் செய்ததாகவும் அவருடைய கதையில் சொல்லப் படுகிறது. இந்தக் கதையும் ஆத்ம சமத்துவத்தைச் சொல்ல வந்ததே ஒழிய சரீர சமத்துவத்தைச் சொல்ல வரவில்லையே! ஆகையால் இந்தக் கதையினால் பிறப்பு வித்தியாசமும், தீண்டாமையும் இருப்பதைக் காணலாம்.

மேற்கூறிய காரணங்களிலிருந்து தீண்டாமை நமது நாட்டில் தோன்றி நிலைத்திருப்பதற்கு இந்து மதமும், இந்து மத சாத்திரங்களும் அவைகளின் மூலம் உண்டான மூட நம்பிக்கைகளும், குருட்டுப் பழக்க வழக்கங்களுமே என்பதை அறியலாம்.

- விடுதலை நாளேடு, 16.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக