ஞாயிறு, 28 ஜூலை, 2024

புரோகிதரும் – திதியும் நான் சொல்லவில்லை இதை!




பார்ப்பன மாந்தர்காள் – பகர்வது கேண்மின்,

இறந்தவராய் உமை-இல்லிடை இருத்தி,
பாவனை மந்திரம், பலபட உரைத்தே,
உமக்கவர் புத்திரர்-ஊட்டின போது,
அருபசியாற் குலைந்து-ஆங்கவர் மீண்டு,
கையேந்தி நிற்பது-கண்டதார் புகலீர்,
அருந்திய உண்டியால்-ஆர் பசிகழிந்தது?
(உன் பசியா அவர் பசியா பார்)
என்ற இந்த அகவல் பாட்டு கபிலரால் சொல்லப்பட்டன. இப்படி இருக்க நீ திதி கொடுப்பது பார்ப்பனனுக்கு நீ மகன் என்பதை உறுதிப் படுத்தத்தானே பயன்படுகிறது?

உன் புத்தியைக் கொண்டு பார்

கபிலர் சொன்னதையும் தள்ளிவிட்டு, என்னையும் மறந்து விட்டு உன் சொந்தப் புத்தியைக் கொண்டு சிறிது நன்றாய் ஆலோசித்துப் பார் அய்யா.

ஓ! திதி கொடுக்கிறவனே!

செத்துப்போனது உன் அப்பன். 100-க்கு 99 பாகம் அதிலே உனக்கு சந்தேகமிருக்காது.
அவன் இப்போது எங்கிருக்கிறான் என்பதும் உனக்குத் தெரியாது.

அவன் உடல் கட்டையில் வைக்கப்பட்டு, உன் கையாலேயே நெருப்பு வைக்கப்பட்டு, அது உன் கண்கள் முன்னாலே வெந்து சாம்பலாகி அதுவும் தண்ணீர் விட்டு கரைத்துவிடப்பட்டு விட்டது. அல்லது உன் அப்பன் பிணத்தை நீயே பணங்கொடுத்து குழி வெட்டி குழிக்குள் போட்டு உன் கையாலேயே மண் தள்ளிப் புதைத்து மேலே கல் நாட்டியும் ஆகிவிட்டது.

ஆகவே செத்துப்போன உன் அப்பனுக்கு இப்போது உடல் இல்லை. இது நிச்சயம்தானே? இனி திதி நீ யாருக்குக் கொடுக்கிறதாகச் சொல்லுகிறாய்?

“என் அப்பனுடைய ஆத்மாவுக்குக் கொடுக்கிறேன். என்கிறாயா?” அதாவது “என் அப்பன் சரீரத்துக்கு அல்ல, உயிருக்குக் கொடுக்கிறேன்” என்கிறாயா? சரி.

அந்த உயிரை நீ பார்த்தாயோ? அதுவும் இல்லை. அது எங்கிருக்கிறது என்பதும், எப்படிப் போயிற்று என்பதும் உனக்குத் தெரியுமே? அதுவும் தெரியாது. அந்த உயிரை அது எப்படி இருக்கும் என்பதும் உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியது. தெரியவும் தெரியாது. ஆனால் பார்ப்பான் சொல்லுகிறான் “அந்த உயிர் வேறு ஒருவர் கண்ணுக்குத் தெரியாத(சூட்சும) சரீரத்தோடு மேல்லோகத்தில் இருக்கிறது” என்கிறான்.

அவன் சொல்லுகிற மேல் லோகத்தை நீயும் பார்த்ததில்லை; அவனும் பார்த்ததில்லை. அந்தப்படியான மேல்லோகம் ஒன்று இருப்பதாக எந்த பூகோள புத்தகத்திலும் இல்லை. வானசாஸ்திரத்திலும் இல்லை, அன்றியும் எத்தனையோ வித சயன்சு படிக்க சவுகரியமிருக்கிற வெள்ளைக்காரன் பிளானை வைச்சிக்கிட்டுக் கூட கண்ணில் தெரிகிற இமய மலையையே சரியாய்ப் பார்க்க முடியவில்லை. இந்த அன்னக் காவடிப் பார்ப்பான், டுஸ் இன்னா ஒரு காதம் ஓடிப்போய் திரும்பிப் பார்க்கிறவன், மேல்லோகம் ஒன்று இருக்கிறது,என்றால் நீ அதை எப்படி நம்பமுடியும் ?

அதுதான் இருக்கட்டும்

அதுதான் இருக்கட்டும் – செத்தவனெல்லாம் உடனே மறுஜென்மமாக இந்த பூமியிலேயே பிறக்கிறான். பிறக்கிறவனெல்லாம் பிறக்கு முன் ஒரு ஜென்மமாக இருந்து செத்த பிறகுதான் உடனே மறுஜன்மாய்ப் பிறக்கிறான் என்றும் இதே பார்ப்பான்தானே சொல்லி இருக்கிறான்!

மேலும்

மேலும் இதே பார்ப்பான்தான் இன்னொரு சமயத்தில் உனக்கு என்ன சொன்னான் தெரியுமா? “நீ அடுத்த ஜன்மத்தில் நல்ல (மேலான ஜாதி) ஜன்மமாகப் பிறந்து மேன்மையாகப் பிழைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் எனக்குப் பணம் கொடு” என்று சொல்லி உங்கப்பனிடமும் உன்னிடமும் எவ்வளவோ பணம் வாங்கிக் கொண்டு போயிருப்பதோடு அதற்காக அந்த ஊருக்குப் போ, இந்த ஊருக்குப் போ, அதிலே முழுகு, இதிலே முழுகு, அதைச் செய், இதைச் செய் என்று உன்னை நாயாட்டமா அலையவெச்சிப் பிச்சிப் பிடுங்கித் தின்றிருக்கிறான்.

இவ்வளவோடு விட்டானா?

அன்றியும் அவன் உன்னை இவ்வளவோடும் விடவில்லையே? மற்றும் பலவிதமாய் அதாவது “மேல் லோகத்திலே மோஷம் இருக்கிறது, நரகம் இருக்கிறது” என்றும், மோட்சத்தில் லட்டு மாதிரி நல்ல நல்ல பெண்கள் இருக்கிறார்கள், காமதேணு இருக்கிறது.சுடச்சுட அருமையாகச் சாப்பாடு போடும் கற்பக விருட்சம் இருக்கிறது, அது நீ எதைக் கேட்டாலும் நினைத்த மாத்திரத்திலேயே உடனே கொடுக்கும் என்றும், “மேல் லோகத்தில் நரகம் இருக்கிறது, அந்த நரகத்திலே மலம் இருக்கிறது. அந்த மலத்திலே பாம்பு இருக்கிறது, தேள் இருக்கிறது.

அதற்குள்தான் செத்தவன் உயிர் இருந்து அந்த மலத்தைச் சாப்பிட்டுக்கொண்டு பாம்பினிடமும், தேளினிடமும் சதா கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், ஆதலால் நீ மோட்சம் போக வேண்டுமானால் எனக்கு பணம், பொம்பளே, அரிசி, உப்பு, புளி, வேஷ்டி, துணி, பருப்பு கொடை இன்னம் என்னென்னமோ கொடுத்தாகணும் கொடுக்காவிட்டால் நரகம் கிடைக்கும்” என்றெல்லாம் சொல்லி, ஆசைகாட்டியும் பயப்படுத்தியும் எவ்வளவோ வாங்கிக் கொண்டும்போய் இருக்கிறான்.

இன்னொரு சங்கதி

இவைகளையெல்லாம்விட இன்னொரு சங்கதி என்னவென்றால். “அவனவன் பாவ புண்ணியம் அவனவனுடன்தான் கூடவே இருக்கும். அதை அவனவனே அனுபவித்துத் தீரவேண்டும்” என்றும் அதற்குப் பேரேடு, குறிப்பு, சிட்டா கணக்கு இருக்கிறது. ஆதலால் அதற்காக வேண்டி மனிதன் நல்லதையே செய்ய வேண்டுமே ஒழிய கெட்டதைச் செய்யக்கூடாது” என்றும் சொல்லி, நல்லது இன்னது (அதாவது தனக்குக் கொடுப்பதுதான் நல்லது என்றும்) கெட்டது இன்னது (அதாவது தனக்குக் கொடுக்காவிட்டால் பாவம் அது கெட்டது) என்றும் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டு அதனாலும் பயனடைந்து வருகிறான்.

இத்தனை எழவு குழறுபடிகளில் நீ எதை நம்பி இந்தப் பார்ப்பாரப் பய்யனுக்குத் தெவசம், திதி கொடுக்கிறாய் என்று கேட்கிறேன்.

நீ இதுவரை கொடுத்ததற்கு ஏதாவது ரேடியோ சேதியோ போஸ்டல் ரசீதோ வந்ததா?

நீ கொடுத்த பண்டங்களைப் பார்ப்பான் வாங்கி மூட்டை கட்டிக் கொண்டு போய் உங்கப்பனுக்கு அனுப்பினானா? அல்லது குச்சிக்கார தேவடியா வீட்டுக்கு அனுப்பினானா என்பதையாவது பார்த்தாயா? இந்தப் பஞ்ச காலத்தில் எத்தனையோ சாமான்களை மூட்டை கட்டி அவன் கையில் கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டு அவனை அனுப்பிக் கொடுத்ததைத் தவிர வேறு சங்கதி உனக்கு என்னவாவது தெரியுமா? இவ்வளவு முட்டாளாக இருந்து கொண்டு திவசம் கொடுக்கிறாயே, இது உன் (தலையில் மூளை இல்லாத) தலைவிதி வசம்தானே.

அட முட்டாளே! உனக்குச் சுயராஜ்யம் வேறு கேடா? அடி முட்டாளே! உனக்கு சமதர்மம் வேறே அழுகுது. “நாயிக்குப் பேரு நவநீத கிருஷ்ணனாம்.” “விளக்குமாத்துக்குப் பேருவீட்டு லச்சுமியாம்”
இப்படித்தானே இருக்கிறது. உன் சங்கதி.

ஒரு பரீட்சையாவது பாரு

ஒரு பரீட்சை பார்க்கிறாயா – நீ 2 நாளைக்கு சாப்பிடாமல் பட்டினியாய் இரு. 3-ஆம் நாள் ஒரு பாப்பானைக் கூப்பிட்டு நீ உனக்கே திதி கொடுத்துக் கொள்ளப் போவதாக (அதாவது பிரயாகை முதலிய இடங்களில் தனக்கே பிண்டம் போட்டுக்கொண்டு வருகிறார்களே அதுபோல்) சொல்லி உனக்கு வேண்டியதை அவன் வசம் கொடுத்து அனுப்பி விடு. 2 நாள் வரை பொறுத்துப்பாரு உனக்கு ஏதாவது பசி ஆறுதா அல்லது அதிகப்பசியும் களைப்பும் ஏறுதா என்று பாரு. உன் பசி தீராவிட்டால் இந்த ஊரில் இருக்கிறவனுக்கு திதி கொடுத்தே பசி ஆறாமல் இருக்கும்போது இனி மேல் லோகத்தில் இருப்பவனுக்கு திதி கொடுத்தால் போய்ச் சேருமா என்று யோசித்துப் பாரு.

தொட்டுக்கிட்டுத் தொட்டுக்கிட்டுத் தின்பேன் நீ என்ன கேட்கிறது என்றால் சரி மகராஜனாக அப்படியே செய் என்பதைத் தவிர வேறு என்னால் உன்னை என்ன செய்ய முடியும் ?

– ‘விடுதலை’ – 22.8.1954

Biography of Periyar EV Ramasamy, Father of the Dravidian Movement - Soc...

புதன், 24 ஜூலை, 2024

காவிரி நீர் உரிமை கோரி கழகம் கண்ட களங்கள்! தஞ்சை வாரீர் தோழர்காள்!

 


விடுதலை நாளேடு

மின்சாரம்

காவிரி நீர் உரிமைக்காக திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், தொடர் பிரச்சாரங்கள் சரித்திர ரீதியாக குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிகழ்வுகளின் பட்டியல் மிகவும் நீளமானது!
இதோ ஓர் அரிமா நோக்கு!
காவிரி நீர்ப் பிரச்சினை: கழகத்தின் செயல்பாடுகள்
19.12.1980: எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கூட்டப் பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகம் முதன்முதலாக எடுத்து வைத்த கருத்துதான் காவிரி நடுவர் மன்றம் ஒன்று வேண்டும் என்பதாகும்.
2.10.1982: காவிரியில் நீர் திறந்து விடக் கோரி பிரதமர் இந்திரா காந்திக்குப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் கொடுத்த தந்தி தஞ்சை சரசுவதி மகாலில் – காவிரி நீர் பிரச்சினை பற்றி கழகம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு முழுவதும் முழுக் கடை அடைப்புக்கு ஏற்பாடு.
நடுவர் மன்றக் கோரிக்கையும் வைக்கப்பட்டது (8.10.1982).
திருவாரூரில் காவிரி நீர்ப் பிரச்சினைக்காக விவசாயத் தொழிலாளர்கள் மாநாடு (25.7.1983) மன்னார்குடியில் மாநாடு (16.10.1983).
20.4.1984: சென்னையில் பெரியார் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் காவிரி நீர்ப் பிரச்சினை பற்றிய வல்லுநர் களின் கருத்தரங்கம்.
30.10.1985: தஞ்சை, திருச்சி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம். கழகப் பொதுச் செயலாளர் (திருவாரூரில்) உள்பட ஆயிரக்கணக்கில் விவசாயத் தொழிலாளர்களும், பெண்களும் கைது செய்யப் பட்டு சிறை ஏகினார்கள்.
25.7.1987: அன்று கீழ் வேளூரிலும், 14.8.1987 அன்று மீண்டும் திருவாரூரிலும், 14.4.1988 அன்று நாகப்பட்டினத்திலும், 3.7.1988 அன்று திருமருகலிலும் தொடர்ந்து காவிரி நீர்ப்பிரச்சினைக்காக விவசாயத் தொழிலாளர்கள் மாநாடு கழகத்தின் சார்பில் நடத்தப் பட்டன.
22.4.1988: நாகை, திருவாரூர், கும்ப கோணம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
7.10.1988: காவிரி நீர்ப் பிரச்சினையை நடுவர் மன்றத்திடம் (Tribunal) விடவேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்துக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் அவர்களின் மனு.
நமது தொடர் போராட்டம் காரணமாகவும், முதலமைச்சர் கலைஞர் அவர்களின் அழுத்தம் காரணமாகவும் சமூகநீதிக் காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் மூவர் கொண்ட நடுவர் மன்றத்தை அமைத்தார் (21.6.1990).
24.3.1991: தஞ்சை வல்லத்தில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், நடுவர் மன்றம், தமிழ் நாட்டுக்குக் காவிரி நீர் கிடைக்கும் வகையில் இடைக்கால ஆணை ஒன்றை வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருநாடகம் 205 டி.எம்.சி., நீரை வழங்கவேண்டும் என்ற நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது (26.6.1991).
13.7.1991 மாலை 3 மணிக்கு திருவாரூரில் உரிமைப் பேரணி.
8.8.1991 : காவிரிப் பிரச்சினையில் ஒன்றிய அரசு காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்து மேலத் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 8.8.1991 முதல் 14.8.1991 முடிய ஒருவாரம் மாவட்டம் முழுவதும் தீவிரப் பிரச்சாரப் பயணம் நடத்தப்பட்டது. கல்லணையில் 8.8.1991 முற்பகல் புறப்பட்ட பிரச்சாரப் படை மாவட்டக் கழகத் தலைவர் ஆர்.பி.சாரங் கன், மாவட்டக் கழகச் செயலாளர் ராஜகிரி கோ. தங்கராசு முன்னிலையில் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா. குப்புசாமி துவக்கி வைத்தார்.
9.11.1991: தமிழ்நாட்டுக்கும் கருநாடக மாநிலத்திற்குமான காவிரி நீர் ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று கூறிய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர் களுக்கு கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை மீனம்பாக்கத்தில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – கழகத் தொண் டர்கள் கைது!
3.12.1991: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக்குழு பிரதமரைச் சந்தித்தது. அக்குழுவில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி பங்கேற்றார். நடுவர் மன்ற தீர்ப்பினை அரசு கெசட்டில் வெளியிட வேண்டுமென்று பிரதமரை அக்குழு வலியுறுத்தியது.
20.1.1992: நடுவர் மன்ற தீர்ப்பை அரசு கெசட்டில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியது. இதன் காரணமாக கருநாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட் டனர்; சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் கழகக் குடும்பத்தினர் பல்லாயிரக் ணக்கானோர் மறியல் செய்து ைகது செய்யப்பட்டனர்.
30.4.1992: காவிரி நீர் உரிமைக்காக கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் திருவாரூரில் மறியல் நடந்தது. திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாவட்டங்களிலும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மறியலில் கழகத் தோழர்கள் விவசாயிகள் (இருபாலரும்) ஆயிரக்கணக்கில் கைது.
27.12.1995: தஞ்சாவூர், திருச்சி, காவிரி டெல்டா பகுதிகளில் ரயில் நிறுத்தப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியது.
தஞ்சையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 1,400 பேர் கைது.
22.7.1997: காவிரி நீர் உரிமைக்காக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்.
21.9.1999: காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கூட்டப் பட்டது. அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.அய், சி.பி.எம், ஜனதாதளம், மக்கள் நல உரிமைக் கழகம், தமிழ்ப் பாட்டாளி மக்கள் கட்சி, ராஷ்டிரீய ஜனதா தளம், முஸ்லிம் லீக், விவசாயிகள், தொழிலாளர் கட்சி, இந்திய தேசிய லீக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தீர்மானப்படி 28.9.1999 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரிப் படுகையில் ஒன்றியங்கள் அளவிலும் மற்ற இடங்களில் மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
5.10.1999: காவிரி பிரச்சினையும் ஒன்றிய – மாநில அரசுகளும் என்னும் தலைப்பில் உண்மை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, பண்ருட்டி ச. இராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
5.9.2002: திருவாரூரில் காவிரி நீர் உரிமைக்காக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
21.9.2002: கருநாடகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரைச் சந்திக்கச் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் பங்கு பெற்றார்.
19.2.2005: திருவாரூரில் திராவிடர் விவசாய நலன் பாதுகாப்பு மாநாடு – பேரணியுடன்; காவிரி உரிமை நதி நீர் இணைப்பு கருத்தரங்கம் – தீர்மானம்.
8.7.2005: தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி, கும்பகோணம், லால்குடி, நாகப் பட்டினம், திருவாரூர், கீழ்வேளூர், திரு மருகல், .வேதாரண்யம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருத்துறைப் பூண்டி, திருவையாறு, பாபநாசம், அம்மாப் பேட்டை, நாச்சியார் கோவில், வலங்கை மான், பட்டுக்கோட்டை, பேராவூரணி, உரத்தநாடு, மயிலாடுதுறை, மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய ஊர்களை உள்ளடக் கிய காவிரி நதி நீர்ப் படுகையில் திரா விடர் கழகத்தின் சார்பில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இன்னும் எவ்வளவோ உண்டு. தொடர்ச்சியாக வரும் 23.7.2024 செவ் வாய் மாலை தஞ்சாவூரில் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் காவிரி நீர் உரிமைகோரும் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற் போம்!
போராட்டம் எங்கள் ரத்த ஓட்டம் – இலட்சியத்தைக் காணாமல் ஓய மாட்டோம்!
வெற்றி நமதே! வாழ்க பெரியார்!
வெல்க காவிரி நீர் உரிமைப் போராட்டம்!!

விடுதலைக்கு முதற்படி பெண்கள் தைரியமாக முன்னுக்கு வருவதே… – தந்தை பெரியார்

 தந்தை பெரியார்


சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என்கின்றோமோ, எது எது உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இது நமது நாட்டில் மட்டும் அல்ல, உலக முழுவதிலுமே அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று. ஆனால் நமது நாட்டில் மற்ற நாடுகளைவிட வெகு தூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகி யவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரசன் மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக் கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில் யோக் கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல் சமரசமும், சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.
தகர்ந்தெறிந்து
ஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப்பற்றி பேசவேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடு களையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச சன்மார்க்கம் என்று சொல்லவேண்டியதாயிருக் கின்றது. இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்த மாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமுகத்தார், அடைந்த தனி மனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள் – அடைகின்றார்கள் அடைய முயற்சிக் கின்றார்கள். இவை களில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.
உதாரணமாக கடவுளையும் மதத்தையும் பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதிதான் ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட் டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை அதாவது சமரசத் திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களைப் பட் டாளத்தில் சேரச்செய்தார்கள். சிலரை விவசாயத்தில் போட்டார்கள். சிலரை வைத்தியத்தில் போட்டார்கள். வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்கப் போட்டார்கள். அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாமல், போக்கு வரவுக்கும் மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள். பணக்காரர்கள் சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்களுக்கு பூமி, தொழிலில் லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாத வர்களுக்கு படிப்பு முதலாகி யவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு சவுகரியங்கள் செய்தார்கள். இன்னும், பல காரியங்கள் செய்தார்கள். ஆனால் நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள்? யார் கேட் பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி, உயர்ந்த ஜாதிக்காரன், அரசன் ஆகிய வர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90-க்கு மேல்பட்ட வர்களாவார்கள் ஆதலால் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள். அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்? முதலாவது உங்களைக் கேட்கிறேன். நீங்கள் இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள் கின்றீர்களா? இருக்கவேண்டும் என்று சொல் கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? ஆகவே, இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு இன்றே இம்மூன்றும் ஒழிய வேண்டும் என்கிற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அநேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை.
யோசியுங்கள்
சகோதரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள், என்பதை யோசித்துப் பாருங்கள் என்ன பலன் அடைந்து இருக் கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருது கின்றீர்களா? இன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ இருக்க வேண்டும். சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன வுணர்ச்சியும், ஞானமுமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதே, இதுபோதாதா? இனி மனிதன் என்றும், ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன், என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும், செலவு செய்கின்ற மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்கு வதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன். இதைப் போன்ற அறிவீனமும், அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண்ணியத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது. ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள், அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக் கியர் களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப் பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள், இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக்கின்றார்கள்.
பொறுப்புடன்
முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா. இந்த ஜென்ம காரியங்களின் செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப்போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிக் குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்? கடவுளுக்கு இடம் கொடுத்து கோவில் கட்டி உருப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும் கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே சொல் கிறேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நட வுங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல் களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள். அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும். கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்த மானங்களும் உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள் அறிவுக்கு பூஜை போட்டீர்களே யானால் வந்து விட்டது. அன்றே சமரசம், சன்மார்க்கம், விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. தவிர, பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியி ருக்கிறது. அதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும் நடத்துகின்றார்கள். அதுவும் நமது நாட்டில் மிகவும் மோசமாய் நடத்து கிறார்கள். அந்த ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும். நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன்.
மிகவும் அநீதி
நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன். எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமா னாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுபவிப்பேன். ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும், அவன் செத்துப்போனாலும் புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு. ஆண் பெண்சேர்ந்து அனுபவிக் கும் இன்பம் என்பதாக ஒரு குணம் உண்டு என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக் கின்றது, இதற்கு கடவுள், மதம், முன்ஜன்மப்பலன் சம்பந்தப் பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கி யத்தனமுமான விஷய மாகும்.
இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக் கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள நினைப்பது சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக்கின்றது. ஆண்களைப் போலவே பெண்கள் செய்யத் தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாய கர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படி சொல்வது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும், ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் புத்தி சொல் லுங்கள் என்றும் சொல்ல வரு வார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது. கலியாணம் செய்து கொள்ளுவதே அடிமைப் பிரவேசம் என்றாய் விட்டது. ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக் கியனாகவில்லை. ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது. இது வரையில் ஆண்கள் பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம். பலனேற்படவில்லை என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம் சென்று இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல் கின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்டமில் லாதவர்கள் கலியாணத்தை ரத்து செய்து கொண்டு தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வர வேண்டும், பயப்படக்கூடாது.
பெண் விடுதலை
பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய், கண்ட படி கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது. இதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும் பிள்ளை பெறுவது கடவுள் செயல் என்றும், அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது 16 பிள்ளைகள் பிறக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்கின் றார்கள். இது அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும் என்று பயந்து கொண்டு நான் பேசவரவில்லை. ஆனால் இப்படி ஆசிர்வாதம் செய்வது எவ்வளவு முட் டாள் தனமும் பொறுப்பற்ற தன்மையும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை ஜாக்கிரதையாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத் தனைக்கத்தனை கவலையும் தொல்லையும் ஒழிந்து சுதந்திரமும், விடுதலையும் அடைந்த வர்களாவீர்கள். எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல் வதால் ஒரு சமயம் எல்லோருமே பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான். இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான் அர்த்தம். உலகம் விருத்தியாவதற்காக மனிதன் பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம், பட்சி, ஊர்வன, முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும், பொரிக்கும் குஞ்சுகளும், பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.
வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக் காதீர்கள். ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள் அபிப்பிராயப்படி எதையும் முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.
(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 8.02.1931

பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள். அதுவும் நமது நாட்டில் மிகவும் மோசமாய் நடத்துகிறார்கள். அந்த ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும். நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன்.


திங்கள், 22 ஜூலை, 2024

ஜோசியம் நிஜம் என்றால் மனிதர்கள்மீது குற்றம் சொல்லலாமா?

 

விடுதலை நாளேடு

ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முத லானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேர மாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக் குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண் டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டு பிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லா விட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்?

நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம். சாதாரணமாய் ஒரு ஜாதகம் என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சம யத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை காலை சுமார் 10 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,

இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத் திற்காக மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத் திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண் டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலை யற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடி யவே முடியாது என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் ஜாதகத்தில் ஏற்க னவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்.

இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்க லாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.

நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?

ஜாதகப்பலன்படி நடவ டிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப் பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில் பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந்தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில் இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவை களுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.

இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடி யோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

– குடிஅரசு – தலையங்கம் – 06.07.1930

சனி, 20 ஜூலை, 2024

கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

 

கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

2024 பெரியார் பேசுகிறார் ஜுலை 16-31

அறிஞர்களே! நீங்களும் நாங்களும் இன்று 1968ஆம் ஆண்டில் பகுத்தறிவு விஞ்ஞானக் காலத்தில் வசிக்கிறோம்; அதன் பயனாய் நான் கடவுள் இல்லை என்றும் அது அறிவில்லாத காலத்து முட்டாள் மனிதனது கற்பனை என்றும் சொல்லுகிறேன். இந்தப்படி நான் 50, 60 வருஷங்களாகச் சொல்லி வருகிறேன்.

மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம்

நான் சொல்லுவது ஒருபுறம் இருந்தாலும் கடவுளைப் பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் “3000 ஆண்டு”க்கு மேல் “5000 ஆண்டுக்குள்” இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் இதில் ஒரு 1000 அல்லது 500 ஆண்டுகள் வித்தியாசமாய்க் காணலாம். எப்படி ஆனாலும் அந்த 3000 ஆண்டுக்கு மேற்பட்ட காலம் பொதுவாக மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

மாற்றப்பட– _ மறுக்கப்பட வேண்டியவைகளே!

அந்தக் காலத்தில் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட, நடந்துகொண்டு வந்த, பயன்படுத்திக்கொண்டு வந்த, எண்ணிக் கொண்டு நம்பிக்கொண்டு வந்தவைகளில் இன்று மனிதன் (உணவு, உறக்கம், கல்வி என்பதைத் தவிர, கடவுள் என்பதைத் தவிர) வேறு எதைப் பின்பற்றி வருகிறான்? பயன்படுத்தி அனுபவித்துக் கொண்டு வருகிறான்? என்று சிந்திப்போமேயானால் அவையெல்லாம் மாற்றப்பட வேண்டிய, கைவிடப்படவேண்டிய, மறுக்கவேண்டிய காரியங்களாகவே இருந்து வருகின்றன.

இன்றியமையாதவைகளில் மாறி வருகிறோம்

சாதாரணமாக மனிதனுக்கு உடை, உணவு, உறைவிடம், ஊர்தி ஆகிய இன்றியமையாத இந்நான்கில் காலத்துக்குக் காலம் மாறுதல் அடைந்துகொண்டே வருகிறோம். இவற்றுள் எதற்கும் நம்மை யாரும் கட்டாயப்படுத்தாமலே நாமே மாற்றிக்கொண்டு வருகிறோம். இந்த மாற்றமும் இதோடு நிற்கப் போவதில்லை. மேலும், நாளுக்கு நாள், ஆண்டுகளுக்கு ஆண்டு மாறிக்கொண்டே போக வேண்டியவைகளாகவும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் மனிதன் கடவுளைப் பற்றிய கருத்தில் மாத்திரம் சிந்தனை அற்ற மூடனாக, முழுமூடனாகவே இருந்து வருகிறான் என்றால் காரணம் என்ன?

மருந்து வியாபாரியும் டாக்டரும்

ஒரு மருந்து வியாபாரி ஒரு மருந்தை ஒரு டாக்டரிடம் (வைத்தியனிடம்) கொடுத்து “இது இன்ன வியாதியைக் குணப்படுத்தும், வாங்கிப் பயன்படுத்துங்கள்” என்றால் அந்த டாக்டர் வியாபாரி பேச்சைக் கேட்டு உடனே வாங்கி நோயாளிக்குக் கொடுப்பாரா? எந்த டாக்டருமே கொடுக்க மாட்டார். மருந்தை வாங்கினவுடன், இதில் என்ன என்ன வஸ்து எவ்வளவு எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்றுதான் கேட்பார். அதற்கு வியாபாரி டாக்டரைப் பார்த்து “அதெல்லாம் கேட்கக்கூடாது. அதைப் புரிந்துகொள்ள உனக்கு சக்தியும் கிடையாது; அந்த மருந்தும் அதைப் பற்றி எவனும் புரிந்துகொள்ள முடியாத தன்மையுடையது. ஆதலால் (நான் சொல்லுவதை) நம்பி வாங்கி காயலாக்காரனுக்குக் கொடு” என்றால் உலகில் எந்த டாக்டர் அந்த மருந்தை வாங்கி காயலாக்காரனுக்குக் கொடுப்பார்?

ஒரு முறை இருந்தாக வேண்டும்

ஒரு மருந்து என்றால் அதற்கு ஒரு முறை இருக்க வேண்டும்; அதில் சேர்க்கப்பட்ட பண்டங்களுக்குத் தெளிவு வேண்டும்; அப்பண்டங்களின் தன்மைக்கும் ஆதாரம் வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஃபார்முலா (Formula) என்று சொல்லுவார்கள்.
அதாவது எந்த வஸ்துவானாலும் வஸ்து என்று சொல்லப்பட்டால் அதற்கு மேற்கண்டபடியான ஒரு (செய்) முறை (Formula) கூட்டுமுறை வேண்டும். அது இயற்கைப் பொருளானாலும் செயற்கைப் பொருளானாலும் அதற்கு முறை இருந்தே தீரும்.
ஆகையால், கடவுள் என்பது ஒரு பொருள் அல்லது ஒரு சக்தி என்று சொல்லப்பட்டாலும் அது பெயர்ச்சொல்லே ஒழிய, வினைச்சொல் அல்ல. பெயர்ச்சொல் ஆன பொருளுக்கு – வஸ்துவுக்கு – வஸ்து நிச்சயத்திற்கு கண்டிப்பாக செய்முறை கூட்டுப்பொருள் தன்மை “ஃபார்முலா” இருந்தே ஆகவேண்டும் அது இல்லாதது வஸ்துவே ஆகமாட்டாது. ஆதலால், கடவுளைப் பற்றிப் பேசுபவர்கள் முட்டாள்களானால் அவர்களிடம் இந்த விளக்கம் செல்லாது; அறிவுள்ளவனானால் இந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய
வனாகத்தானே இருக்க முடியும்?

அறிவுக்குப் பொருந்தா விளக்கத்தை நம்புகிறவன் மனிதன் ஆவானா?

இங்ஙனமிருக்க, “கடவுள் என்றால் விளக்கம் கேட்க வேண்டாம்.”
“கடவுள் என்றால் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.”
“அது உனக்குப் புரியக்கூடியதல்ல”
“அதை எவனாலும் அறிந்துகொள்ள முடியாது.”
“அது மனோவாக்கு காயங்களுக்கு எட்டாத பொருள்”
“கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக்கொள்ள
வேண்டியதுதான் கடவுள் என்பதற்கு விளக்கம்”
என்று சொல்லப்படுவதானால் இந்த முறைப்படி (ஃபார்முலாப்படி) கடவுளை நம்புகிறவன் அவன் எவ்வளவு அறிவுமேதாவி ஆனாலும் அவன் மனிதக்கூட்டில் சேர்க்கப்பட வேண்டியவனாவானா?
அன்றியும் எதற்காக சர்வ சக்தி, சர்வ வியாபகம்,
சர்வக்ஞன் ஆன ஒரு பொருளுக்கு இந்த மாதிரியான நிபந்தனை இருக்கவேண்டும்? அதுவும் சுமார் 5000, 3000 ஆண்டுகளுக்கு முந்திய காலமான காட்டுமிராண்டி (மனிதப் பக்குவமற்ற) காலமல்லாத இந்த – இன்றைய காலங்களில் யாராலாவது இப்படிப்பட்ட ஒரு வஸ்துவைக் கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்கிறேன்.
“கடவுளை நம்பவேண்டும்” என்பதற்கும், “மந்திரம்
ஜெபித்தால் நோய் நீங்கும்” என்பதற்கும், “பிரார்த்தனை
செய்தால் தேவையான காரியம் கைகூடும்” என்பதற்கும் என்ன வித்தியாசம் கூற முடியும்?

பகுத்தறிவுக்குப் புரியாத சர்வசக்தி உள்ள பொருள் அவசியமா?

“சர்வசக்தி உள்ள ஒரு பொருள் என்பது பகுத்தறி
வுள்ள ஒரு மனிதனால் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கவேண்டிய அவசியமென்ன?” என்பதைப் பற்றி மனிதன் சிந்திக்க வேண்டாமா? சர்வசக்தி உள்ள ஒரு கடவுள் இருந்தால் கடவுள் இல்லை என்று
கருதி இருப்பவர்களும் கடவுளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுமான ஆறறிவு படைக்கப்பட்ட மனிதர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?
மனித வாழ்வில் கடவுளால் என்ன பயன்?
அன்றியும், மனித வாழ்வில் மனிதனுக்கு கடவுள்
எந்த வகையில் என்ன காரியத்திற்குப் பயன்படு
கிறார்? ஒரு சர்வசக்தி உள்ள கடவுள் படைப்பில்,
ஜீவராசிகளுக்கு பிறப்பு – இறப்பு எதற்காக இருக்க வேண்டும்?
நன்மை – தீமை, இன்பம் – துன்பம் எதற்காக இருக்க வேண்டும்?
திருப்தி – கவலை எதற்காக இருக்க வேண்டும்?
இம்சை – சுகம் எதற்காக இருக்க வேண்டும்? இவற்றால் உலகில் யாருக்கு என்ன நன்மை? அல்லது இவற்றிற்கு என்ன தேவை?

சர்வம் முட்டாள்தனமே!

இவை எல்லாம் சர்வம் மடத்தனம், முட்டாள்தனம், அயோக்கியத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்பதல்லாமல் வேறு என்ன என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.
— ‘விடுதலை’ தலையங்கம் 13.6.1968

வியாழன், 18 ஜூலை, 2024

தகுதி திறமை மோசடி

 

விடுதலை நாளேடு
Published July 14, 2024

தந்தை பெரியார்

நமது நாட்டில். நாட்டின் உரிமையாளரான, பெருங்குடி மக்களாகிய நாம் இப்போது. அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி – இழி மக்களான சில பார்ப்பனரல்லாத. பதவிக்கு எச்சில் பொறுக்கிகள் ஆதரவாளர்களின் ஆதிக்கமும். ஒரு அளவுக்கு ஒழிக்கப்பட்ட பின்பே சிறிது மான உணர்ச்சி பெற்று. ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததன் பயனாய் நாம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வளர்ச்சி எப்படி என்றால், கல்வித் துறையில் பார்ப்பான் ஆதிக்க காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தம் நாம். மூன்றே கால் கோடி மக்களில் (16 இலட்சம்) பதினாரு இலட்சம் மக்களே படித்துக் கொண்டிருந்த நம் மக்கள் இன்று (64 இலட்சம்) அறுபத்து நான்கு இலட்சம் மக்கள் படிக்கும்படியாகவும். மற்றொரு கணக்குப்படி, ஜனத்தொகையில் 100க்கு 10 விகிதமே (நூற்றுக்கு பத்து விகிதமே) படித்திருந்த மக்கள் இன்று 100க்கு 40 விகித நூற்றுக்கு நாற்பது விகித்திற்கு மேல் படித்திருக்கிறவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன் “இனி அய்ந்து வருட காலத்திற்குள் 100க்கு 100 மக்களையும் எழுத, படிக்க கற்பித்த பிறகே உறங்குவேன் ” என்று நம் இரட்சகர் காமராஜர் திட்டம் வகுத்த பின், நம் நாட்டுக்கு குஷ்டரோகம் போல் புகுந்து – இருக்கிற பார்ப்பனர்கள் பலர் வயிறெரிந்து அய்யோ! அய்யோ!” அய்யோ! அய்யய்யோ!! கல்வித்தரம் குறைந்து போய்விட்டதே என்று கட்டுப்பாடாக மக்கள் காதடையும்படி ஊளையிடுகிறார்கள்.

தமிழன் படித்தால் தரம் குறையுமோ?
இப்படி இந்தப் பார்ப்பனர் ஊளையிடுவதை தமிழர் சமுதாயம் இனியும் பொறுத்துக் கொண்டிருப்பது தமிழர்களுக்கு மாபெரும் மானக்கேடேயாகும். ஏனென்றால் இப்போது தமிழர் பிள்ளைகள் படித்திருக்கும் படிப்பெல்லாம் தரம் குறைந்த படிப்பு என்று தானே பொருளாகிறது?

நம் நாட்டில் அண்ணாமலை யுனிவர்சிட்டி ஏற்படும் முன்பு பச்சையப்பன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மக்களை “இவன் பச்சையப்பன் காலேஜ் பி.ஏ.’ என்று ஏளனம் செய்வார்கள். பிறகு அண்ணாமலை சர்வகலா சாலை ஏற்பட்ட பிறகு பச்சையப்பன் கல்லூரியை விட்டுவிட்டு “இவன் அண்ணாமலை யுனிவர்சிட்டி பி.ஏ” என்று சமீப காலம் வரை ஏளனம் செய்து வந்தார்கள்.
ஏனென்றால், முன்பெல்லாம் அரசாங்க காலேஜும், கிருஸ்துவர் காலேஜும்தான் நாட்டில் இருந்து வந்தது. அவற்றில் பார்ப்பனருக்கும் கிருஸ்துவர்களுக்கும்தான் 100க்கு 90 பேர்களுக்கு இடம் கிடைக்கும் நம் பிள்ளைகளுக்கு கல்தாதான் கிடைக்கும்.
அப்போதெல்லாம் பச்சையப்பன் காலேஜ் இருந்ததால் நம் பிள்ளைகளுக்கு 100க்கு 50 இடமாவது கிடைத்து வந்தது. பிறகு சர்வகலாசாலையில் நம் பிள்ளைகளுக்கு சிறிது தாராளமாய் இடம் கிடைத்து வந்தது. ஆகவே நம் பிள்ளைகள் அதிகமாகச் சேர்ந்து படிக்க முடிந்ததாலேயே பார்ப்பனரின் ஆத்திரமானது இந்தப்படி இழிவாய்ச் சொல்லி படித்த மரியாதையைக் குறைத்து வந்தார்கள்; இப்போது அந்தக் கூச்சல் குறைந்துவிட்டது.

கல்வி பற்றி தரம் பேசுவது மோசடியே
ஆகவே கல்வியைத் தரமுடையதாக்குவதும், தரமற்றதாக்குவதும் பார்ப்பனருடைய நோட்டத்தில் பட்டுவிட்டது. பார்ப்பனர்களின் இந்தக் அயோக்கியத்தனத்தை நமது இரட்சகர் காமராஜர்தான். “இப்படிக் கூறுவது தங்களுக்குத்தான் கல்வி உரிமையானது: மற்றவர்கள் படிப்பது நம் வாழ்வுக்கு ஆபத்தானது என்று கருதும் அயோக்கியர்கள் கருதிச் செய்யும் மோசடி வேலை” என்று சொன்னார். அதற்குப் பிறகும் நமது அரசாங்கம், நமது கல்வி. ”தரம் குறைந்த கல்வி” ஆகிவிட்டது என்று கருதினால் அது நமது வாய்ப்புத்தான்.
நிற்க. இன்று யார்தானாகட்டும் கல்வித் தரம் குறைந்துவிட்டது என்று சொல்ல என்ன காரணம்? என்ன ஆதாரம் காட்டுகிறார்கள்? அல்லது எதைக்கொண்டு தரக்குறைவு பேசுகிறார்கள்?
தரக்குறைவு எப்படி ஏற்படும்?

பள்ளிக்கூடங்கள், காலேஜுகள் நீண்ட நாட்களாக இருந்து வந்தது போலவே தான் பார்ப்பனர்கள், கிறிஸ்துவர்கள் நிர்வாகத்தில் இன்றும் இருந்து வருகின்றன. ஆசிரியர்கள் ஹெட்மாஸ்டர்கள் (Headmasters), புரஃபசர்கள் (Professors), செனட்டர்கள் (Senators), சிண்டிகேட்டர்கள் (Syndicaters), வைஸ் சான்ஸ்லர்கள் (Vice Chancellores), பரீட்சை செய்பவர்கள் (Examiners), டெக்ஸ்ட்புக் எழுதுபவர்கள் (Text Book Writers) பலர் 100க்கு 50க்கு மேற்பட்டவர்கள் “தகுதி திறமை” பெற்ற பழைய காலப் படிப்பு பட்டம் பெற்ற பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள். மற்றும் கல்வி “தரமாய்” இருந்த காலத்தில் கல்வி அளிப்பதற்கு அரசாங்கம் செய்து வந்த ஏற்பாடுகளில் எதில் மாறுதல் ஏற்பட்டு விட்டது?
ஆசிரியர் தகுதியைக் குறைத்துவிட்டார்களா? பாடத் திட்டத்தை மாற்றி விட்டார்களா? பரீட்சையாளர்களை மாற்றிவிட்டார்களா? பரீட்சைக் கேள்விகளின் தன்மையை மாற்றி விட்டார்களா? அல்லது பரீட்சையில் தேறவேண்டிய அளவு மார்க் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்களா?
பரீட்சை பேப்பர்களைத் திருத்தும் நபர்களின் யோக்கியதையையோ அவர்களது நாணயத்தையோ குறைத்து விட்டார்களா?
கல்வி அதிகாரிகளின் யோக்கியதாம்சத்தைக் குறைத்து விட்டார்களா?
கல்லூரிகளின் கவனிப்பு குறைக்கப்பட்டு விட்டதா?

யுனிவர்சிட்டிகளின் (Universities) யோக்கியம் நாணயம் குறைந்துவிட்டதா? சிண்டிகேட் யோக்கியதை கெட்டு விட்டதா? மற்றும் எந்த விதத்தில் எந்த காரியத்தால் என்னமாறுதலால் கல்வியின் ”தரம் குறைந்து விட்டது” என்று கூறுபவன் யோக்கியனாகவோ. நாணயஸ்தனாகவோ. மானமுள்ளவனாகவோ இருந்தால் எடுத்துக்காட்ட வேண்டாமா?
சர்டிஃபிகேட் பெற யோக்கியதை என்ன?
அரசாங்கத்தின் ஏற்பாட்டுப்படி படிப்பின் யோக்கியதை பரீட்சையில் பாஸ் செய்து சர்டிபிஃகேட் (Certificate) பெறுவதுதானா? அல்லது பாஸ் செய்தாலும் இத்தனை மார்க் வாங்க வேண்டுமென்பதா?
ஆகவே படிப்பு “திறமை” யானதாக இருந்த காலத்தில் படிப்புக்காக செய்திருந்த ஏற்பாடுகளில், நிபந்தனைகளில் நிர்வாகங்களில் எது எதில் குறைக்கப்பட்டு விட்டது? என்று கேட்கிறேன்.
அல்லது படிப்பை ஆதாரமாக, அளவாகக் கொண்டு கொடுக்கப்பட்ட உத்யோகங்களில் மார்க் குறைவு காரணமாக எந்த உத்யோகஸ்தனால் என்ன கேடு ஏற்பட்டது? என்று கேட்கிறேன்.

பார்ப்பன உத்யோகஸ்தர்களின்
யோக்கியதை தெரியாதா?
சீமைக்குப் போய் அய்.சி.எஸ். பாஸ் செய்து திறமை பெற்று வந்த கெட்டிக்கார அய்.சி.எஸ்.களில் பார்ப்பனர்களில் தலா 3 பேர் நாணயக் குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டும். தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள். மற்றும் பலர் தண்டிக்கப்படும் பதவியில் இருந்து நீக்கப்பட்டும் இருக்கிறார்கள். இவர்கள் படிப்பில் தரம் குறைந்தவர்கள் அல்ல. பரீட்சையில் குறைந்த அளவு மார்க் வாங்கி பாஸ் செய்தவர்களுமல்ல.
மற்றும் பெரிய படிப்பு, மிக மிக கெட்டிக்காரர் என்று பெயர் (High Court Chief Judge) பதவி கொடுக்கப்பட்ட தகுதி, திறமை பெற்ற பார்ப்பனர் ஒருவர். தனது பிறந்த தேதியை பொய் தேதி கொடுத்து அரசாங்கத்தை மோசடி செய்த பார்ப்பனர் “தகுதி திறமை”யில் குறைந்தவரா? என்று கேட்கிறேன்.

‘தகுதி’- திறமை தமிழர்க்கு மட்டும்தான் தேவையா?
அண்மையில் சென்னை அய்க்கோர்ட்டில் பப்ளிக் பிராசிக்யூட்டராக (High Court Public Prosecutor) நியமிக்கப்பட்ட திரு.V.P.ராமன் அவர்கள் அய்க்கோர்ட்டில் தொழில் நடத்தும் வக்கீல்களில், குறிப்பாக கிரிமினல் வக்கீல்களில் எத்தனையாவது வரிசை தகுதி திறமை உடையவர் என்று கேட்கிறேன்?
மற்றும் அய்க்கோர்ட்டில் முன்பு சர்க்கார் வக்கீலாக இருந்த திரு-அழகிரிசாமி அவர்களுக்கு சர்க்கார் வக்கீல் வேலை (சுவர்மெண்ட் பிளீடர்) கொடுத்தபோது 100 (நூற்றுக்கணக்கான வக்கீல்கள் தகுதி, திறமை பற்றிக் கூப்பாடு போட்டு ஒரே கூச்சலாக ஊளையிட்ட வக்கீல்கள் இந்த அய்க்கோர்ட் ஜட்ஜைப் பற்றியோ. இந்த பப்ளிக் பிராசிக்யூட்டரைப் பற்றியோ தகுதி திறமை நாணயம் பற்றியோ யார் யார் பேசுகிறார்கள்; கேட்டார்கள்? என்று கேட்கிறேன்.

தகுதி திறமை அறிய வரம்பு என்ன?
மற்றும் இந்த தகுதி. திறமை பேசும் யோக்கியர்கள் கல்வியில் தகுதி திறமை பேசுவது: கேட்பது உத்தியோகத்தில் திறமையாய் இருக்கத் தகுந்த தகுதியான கல்வி இருக்க வேண்டியது அவசியம் என்று கேட்கிறார்களா? அல்லது ஒரு மனிதன் இன்ன அளவு கல்வி கற்றால்தான் கல்வி கற்றவன் என்று சொல்லவேண்டுமென்ற பொது நன்மையைக் குறிவைத்துக் கேட்கிறார்களா என்று கேட்கிறேன்.

உத்யோகம் ஒதுக்குகையில்
தகுதி கருதப்படுகிறதா?
உத்யோகத் திறமைக்காகக் கேட்பதாக சொல்லப்படுமானால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதற்காகவென்று எல்லாவிதமான உத்யோகங்களுக்கும் நீதி. நிர்வாக தொழில்துறை ஆகிய உத்யோகங்களுக்கும் கல்வியின் அந்தஸ்தைக் குறைத்தும். பாஸ் செய்தால் போதும் மார்க்கைப் பற்றிக் கவலை இல்லையென்றும் வயதைப் பற்றிக் கவலை இல்லை என்றும் திட்டமிட்டு சற்றேறக்குறைய மொத்த எண்ணிக்கையில் 100க்கு 40 வீதம் ஒதுக்கி வைத்துக் கொடுத்துக் கொண்டும் வரப்படுகிறதே (இது கூட பள்ளிக்கூடச் சேர்க்கையில்தானேயொழிய, உத்தியோகத்தில் இம்முறை கடைப்பிடிக்கப்படாத நிலையே இருக்கிறதென்பதையும் நாம் மறந்து விட முடியாது) இதற்குத் தகுதி திறமை எங்கே போயிற்று?

தமிழர் நிர்வாகத்தில் தவறு ஏற்பட்டதுண்டா?
இவர்களது நிர்வாகங்களில் எதில் ஒட்டை திறமைக் குறைவு. தகுதிக் குறைவு நாணயக் குறைவு, ஒழுக்கக்குறைவு ஏற்பட்டு விட்டது? என்று கேட்கிறேன்.
ஆகவே, பார்ப்பனர் கூப்பாடு போடும் தகுதி – திறமை என்பது எவ்வளவு மோசடி எவ்வளவு அயோக்கியத்தனம். எவ்வளவு இழி தன்மைகொண்ட மானம் கெட்டதனம் என்று கேட்கிறேன்.
கல்வியில் “தகுதி திறமை” என்பதில், முதலில் கல்வி நம்
மக்களுக்கு எதற்கெதற்காக வேண்டும் என்பதில் சிந்திக்க வேண்டும். பிறகு கல்வி எதற்கு வேண்டுமோ அதற்கு இப்போதிருக்கும் கல்வியின் தகுதி திறமை போதுமா? போதாதா? என்று பார்க்க வேண்டும்.
இந்த இரண்டிலும் விஷயம் தெரிந்து கொள்ளாத. ஒரு முடிவுக்கு வராத மக்கள் கல்வியில் ‘தகுதி – திறமை பேசுவது முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனம் என்று தான் சொல்லுவேன்.

கல்வியின் உபயோகம் யாது?
“இன்றையக் கல்வி உபயோகமற்றது. அறிவுக்கு ஏற்றதல்ல. உத்யோகத்திற்குத் தான் பயன்படக்கூடியது” என்பதாக சுமார் 50-60 வருஷங்களாக பல கல்வி மாநாடுகளில், மகாகனம் சீனிவாச சாஸ்திரி உட்பட பல பார்ப்பன பிரின்ஸ்பால்களும், ஹெட்மாஸ்டர்களும், பொது வாழ்வில் ஈடுபட்ட தலைவர்கள், பெரிய மனிதர்கள் என்பவர்களும் சொல்லி வந்ததும், சொல்லிவருவதும் எனக்குத் தெரியும்.
தனிப்பட்ட நோக்கங்கள்
1921இல் காந்தியார். “ஆங்கிலக் கல்வி, அடிமைகளை உற்பத்தி செய்யும் கல்வி; வெள்ளையன் தன் ஆட்சிக்கு கூலிகளைச் சேர்ப்பதற்காகக் கொடுக்கும் கல்வி இதை பகிஷ்கரியுங்கள்” என்று சொன்னதன் பின், காங்கிரஸ் கல்வியைப் பகிஷ்கரித்து தேசியப்பள்ளிக் கூடங்கள் ஏற்படச் செய்தது.
மற்றும் காந்தியார் வார்தா கல்வித் திட்டம் வகுத்தார்.
மற்றும் காங்கிரஸ் ஆட்சி ஆதாரக் கல்வித் திட்டம் வகுத்தது.
மற்றும் இராஜாஜி ஆட்சியில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களுக்கு கல்வி எதற்கு? அவனவன் படிக்க வேண்டிய கல்வி, அவனவன் ஜாதித் தொழில்தான் என்று திட்டம் வகுத்தார்.

நம்மை தற்குறிகளாகவே வைக்கின்ற சூழ்ச்சி
இந்த ‘தகுதி – திறமை’ பேசும் யோக்கியர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த பன்னூற்றாண்டு ஆதிக்கத்தில் தாங்கள் மாத்திரம் 100க்கு 100ம் படித்தவர்களாகி, தமிழர்களாகிய நம்மை 100க்கு 10 பேர்களுக்கு மேல் எழுத, படிக்க, கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களாகக் கூட செய்யாமல், தற்குறிகளாகவே வைத்திருந்ததுடன் நம்மை கீழ் மக்களாக பாமர மக்களாக வைத்திருப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டிருந்த யோக்கியர்கள்.. நாம் 100க்கு 40 பேர் படித்தவர்களானவுடன் இன்று “கல்வியில் ‘தகுதி’ குறைந்து போய் விட்டது” என்றால் இது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
முதலாவது அறிவுள்ள மனிதனானால், யோக்கியமான மனிதனாளால் ஒரு காரியம் வேண்டுமானால் அது எதற்காக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

கல்வியின் தேவையும் தகுதி வரம்பும்
இப்போது கல்வி எதற்காகத் தேவை. மனிதன் மிருகமாக இல்லாமல், காட்டாளாக இல்லாமல் எடுத்த புத்தகம் படிப்பதற்கும் உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கல்வி வேண்டும். அதற்குமேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கு உத்தியோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதிபெறவே கல்வி வேண்டும்.
மற்றபடி தொழில் துறையில் தொழில் செய்ய, வைத்தியம், எஞ்சினியரிங், விஞ்ஞானம், கணிதம் முதலிய துறைகளுக்கு அவை சம்பந்தமான கல்வி வேண்டும்.
இவற்றிற்கு அரசாங்கம் உச்ச அளவு திட்டம் வகுத்து, படிப்பித்து. பரீட்சை செய்து முத்திரை குத்தி விடுகிறது.
மற்றபடி கல்வி எதற்கு வேண்டும் – வேண்டியதற்கு தகுதி. திறமைக்கு அளவுகோல் என்ன வகுத்திருக்கிறது? வைத்திருக்கிறது? என்று கேட்கிறேன்.

ஒரு கலெக்டர் வேலைக்கு என்ன கல்வி வேண்டும்? அதற்கு என்ன தகுதி திறமை வேண்டும்?
கலெக்டர் வேலைகள், வெள்ளைக்காரன் தன் இனத்தானுக்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே அய்சி.எஸ் பரீட்சை பாஸ் செய்ய வேண்டுமென்று சொன்னான். இப்பவும் அவன் சொன்னதை நாம் எல்லோரும் கண்டித்தோம் என்ன சொல்லிக் கண்டித்தோம் “அவன் (வெள்ளையன்) அயோக்கியன். ஜாதி உணர்ச்சி கொண்டவன். தங்கள் ஜாதியாரிடமே ஆதிக்கம் இருக்க வேண்டும் என்கிறான். சுயநலக்காரன் அவனை ஒழித்தாக வேண்டும் என்று சொன்னோம். அப்படிப்பட்ட பதவிகளில் சில எலும்புத்துண்டுகளைநமக்கும் வீசி எறிந்தவுடன் அது பெரிதும் பார்ப்பனர்களுக்கே கிடைப்பதாயிருந்து தமிழர்களுக்கு கிடைக்க முடியாததாய் ஆனவுடன் பார்ப்பனர் (காங்கிரஸ்) அதற்கும் பணிந்து விட்டார்கள்.

பார்ப்பனரே பதவிக்கு வர சூழ்ச்சி
அவனை அப்படிப்பட்ட வெள்ளையனை) பின்பற்றிய இந்த பார்ப்பனர் அய்.ஏ.எஸ். என்பதாக, அய்.பி.எஸ். என்பதாக கல்வியில் சில திட்டங்களை வகுத்துக் கொண்டு அதை பெரிதும் பார்ப்பனர்களுக்கே வரும்படி செய்து கொண்டு நம்மை “உனக்குத் தகுதி இல்லை! திறமையில்லை” என்று சொல்லி நம்மை ஒதுக்கித் ;தகுதி திறமை’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்போது அய்.ஏ.எஸ். பட்டம் பெற்ற பார்ப்பானுக்கும். அந்தப் பட்டமில்லாத பி.ஏ. படித்து ரெவின்யூ இலாகாவில் கிளர்க் ஆகி, ரெவின்யூ இன்ஸ்பெக்டராகி. ஜப்டி தாசில்தாராகி, தாசில்தாராகி, ஜூனியர் சிரஸ்தாராகி, டிப்டி கலெக்டராகி, சர்வே லேண்ட் ரிக்கார்டு. பாஸ் செய்து கலெக்டருக்கு பி.ஏ. (உதவியாளர் (PA) ஆக இருக்கின்ற 50 ஆண்டு உலக அனுபவமும் வெறும் 22 ஆண்டு ரெவின்யூ இலாகா அனுபோகஸ்வர்களையும் விட இன்று அய்.ஏ.எஸ். படித்து வரும் ‘பச்சகானா ‘ இளம் பசங்கள் (பச்சகானா என்றால் சிறு பசங்கள்) அதுவும் 28. 29. 30 வயதுச் பசங்கள் எந்த விதத்தில் கலெக்டர் பதவிகளுக்கு உரிய தகுதியும். திறமையும் உடையவர்கள். கல்வி அனுபவம் உடைய அவர்கள் ஆகிவிடுவார்கள்? போலீசிலும் அப்படியே கேட்கிறேன் . ஹைகோர்ட் சுப்ரீம் அய்கோர்ட் ஜட்ஜுகளைப் பற்றியும் அப்படியே கேட்கிறேன்.

25 ஆண்டு சிவில் அனுபவம் பெற்ற ஜில்லா ஜட்ஜ் ஜில்லா ஜட்ஜாகவே ரிட்டையராகி விடுகிறான். பித்தலாட்டத்திலும், புரட்டிலும் பெயர் பெற்ற .மனசாட்சியே இல்லாதவன் தொழில்வாதத்தில் நீதி நேர்மை, யோக்கியம் அற்ற ஒரு வக்கீல், திடீரென்று ஹைகோர்ட் சுப்ரீம்கோர்ட் ஜட்ஜாகி விடுகிறான் இதில் நீதிக்கு தகுதி. திறமை அனுபவம் என்ன இருக்கிறது?
வக்கீல் எந்த புத்தியைக் கொண்டு வாதாடுகிறானோ அந்த புத்தியைக் கொண்டு தானே ஜட்ஜ்மெண்ட் எழுதுவான்? முன்சீஃப் இருந்து ஜட்ஜாகிறவன் நீதியில் ஒரு “பதிவிரதை” போல வாழ்க்கை நடத்தி பதவிக்கு வருகிறான்! வக்கீலாயிருந்து ஜட்ஜ் பதவிக்கு வருகிறவன் குச்சிக்காரிபோல் வாழ்க்கை நடத்தி பதவிக்கு வருகிறான்!

நம்மைச் சூத்திரர்களாகவே நீடிக்க வைக்கும் ஆயுதமே தகுதி- திறமை
ஆகவே இந்த இன்றைய ‘தகுதி – திறமை பார்ப்பான் பதவிக்கு வரவேண்டும்: மற்றவர்கள் அடிமைகளாகவே, சூத்திரர்களாகவே இருக்க வேண்டுமென்பதற்காகவே அயோக்கியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட “இராமபாணம் போன்றதல்லாமல் வேறு எதற்காக இந்த தகுதி- திறமை கண்டுபிடிக்கப்பட்டது? என்று கேட்கிறேன்.
இப்போது திரு கக்கன் மந்திரியாய் இருக்கிறார். திரு.மன்றாடியார் மந்திரியாய் இருக்கிறார். திரு.காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர்கள் நிர்வாகத்தில் எதில். என்ன. ஓட்டை? என்று சொல்லுங்களேன் பார்ப்போம்
100க்கு நூறு பேரும் எழுதப் படிக்கச் செய்வதே நம் இலக்கு நமக்கு எனக்கு.

நம் மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதல்லாமல், கல்வியில் தகுதி. திறமை. வெங்காயம் என்பது எனது இலட்சியம் அல்ல! தகுதி திறமைக்காகப் பொதுக் கல்வி அல்ல எனக்கு வேண்டியது நம் மக்கள் 100க்கு 100 வீதம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் நம் மக்கள் ‘பட்ட’ப் படிப்பில் பார்ப்பனர், அவர்கள் எண்ணிக்கையில் 100க்கு எத்தனை வீதம் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அத்தனை வீதம் பாஸ் முத்திரை பெற்றிருக்க வேண்டும் “தகுதி – திறமைக் குறைவு” என்று பேசுவதாலும் ”கண்டுபிடிப்பதாலும்” பொதுவான உத்யோகங்களுக்கு அதனால் எந்த விதமான குறைவோ. குற்றமோ ஏற்பட்டு விடாது ஏற்பட்டு விடுவதுமில்லை. ஒழுக்கத்துக்கும் நாணயத்திற்கும் தகுதி – திறமை சம்பந்தமில்லை.

உதாரணமாக ஒரு அய்.ஏ.எஸ். படிக்காத திரு.காளிதாஸ் நாயுடுவைவிட ஒரு அய்.ஏ.எஸ். படித்த திரு.வேதநாராயணன் கலெக்டர் வேலையில் எந்த விதத்தில் அதிகம் தகுதி. திறமை. ஒழுக்கம் நாணயம், அனுபவம் உடையவராவார்?
இன்ன இன்ன உத்தியோகத்திற்கு இன்னின்ன பட்டம் பாஸ் செய்த தகுதி வேண்டும் என்று ஏற்பாடு செய்துகொண்ட பிறகு, மேலும் தகுதி திறமை என எந்த ஏற்பாட்டின்படி குறை சொல்லப்படுகிறது?
தகுதிக்குக் குறிப்பிட்ட அளவு பாஸ் சர்ட்டிஃபிகேட்டும் திறமைக்கு.கை, கால், கண், காது, மூளை சரியாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதைத் தவிர, வேறு என்ன வேண்டும்? இதைத் தவிர வேறு என்ன இல்லாவிட்டால் குறிப்பிட்ட எந்த உத்தியோகம் பார்க்க முடியாது? என்றுதான் பார்க்க வேண்டும்.
இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சொல்ல வில்லை. “படியேறி விட்டோம். உச்சத்தி லிருக்கிறோம்” என்று கருதிக்கொண்டு “தகுதி – திறமை” பேசும் “பார்ப்பனரல்லாத”வர்களுக்கும் தான் சொல்லுகிறேன்.

– தந்தை பெரியார் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், 1966, பக்கம் 91 – 95

இந்த ‘தகுதி – திறமை’ பேசும் யோக்கியர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த பன்னூற்றாண்டு ஆதிக்கத்தில் தாங்கள் மாத்திரம் 100க்கு 100ம் படித்தவர்களாகி, தமிழர்களாகிய நம்மை 100க்கு 10 பேர்களுக்கு மேல் எழுத, படிக்க, கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களாகக் கூட செய்யாமல், தற்குறிகளாகவே வைத்திருந்ததுடன் நம்மை கீழ் மக்களாக பாமர மக்களாக வைத்திருப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டிருந்த யோக்கியர்கள்.. நாம் 100க்கு 40 பேர் படித்தவர்களானவுடன் இன்று “கல்வியில் ‘தகுதி’ குறைந்து போய் விட்டது” என்றால் இது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா என்று சிந்திக்க வேண்டுகிறேன். முதலாவது அறிவுள்ள மனிதனானால், யோக்கியமான மனிதனாளால் ஒரு காரியம் வேண்டுமானால் அது எதற்காக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.