வியாழன், 9 பிப்ரவரி, 2017

எல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே



24.08.1930-  குடிஅரசிலிருந்து...

சங்கராச்சாரி மதம் பவுத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர்களைக் கழுவேற்றி னதும்,  வைணவ மதம் புத்த விக்கரகங்களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப் போமானால் அந்த காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப் படுபவைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல. என்று தோன்றும். ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதா இல்லலையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது, மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதைத் தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களைச் சைவர்கள் கழுவேற் றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களா லேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரசாரம் செய்வதுடன் அதன் பெருமை யைக் காட்டிக் கொள்ள வருஷந்தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற்சவங்கள் நடத்திக் காட்டப்படு கின்றன. அக் கோயில்களில் இன்றும் கழுவேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டி ருக்கின்றன.

அது போலவே வைணவர்களும் புத்த மத விக் கிரகத்தை அழித்ததற்கு ஆதாரமாய் ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத் தைத் திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெருமையாகவும் எழுதி புண்ணிய சரித் திரமாகப் பாவித்து தினமும் படிக்கப்பட்டும் வரு கின்றன. இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கை களை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப் படும் வாள் பிரசாரத்திற்குச் சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.

கிறிஸ்து நாதர் ஏன் சிலுவையில் அறையப் பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப் பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒழியப்பட்டார். என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரசாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக் கின்றன என்பது விளங்கும் இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது நாஸ்திகர்களை நாக்கறுக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திரவதை செய்ய வேண்டும். நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்கின்றேன்?

மற்றும் இந்து வேத சாஸ்திரங்களைப் படித்தால் நாக்கறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும் மனதில் ஏறிவிட்டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும், என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன். மற்றும் பெரியோர் வாக்கைப் புராண இதிகாசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாதிக னாவான். அப்படிபட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும் என்பனவாகிய வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டது.

ஆகவே உலகில் மதப் பிரசாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண் டதே யொழிய அனுபவத்தில் அன்புமயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த காலத்திய வேத மதக்காரர்களுக்குத் தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண் டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க் கலாம்.

ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக் கிறார்கள்.  தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டா மையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றன.
-விடுதலை,4.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக