செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

கடவுள் கருணை - சித்திரபுத்திரன் -



16.11.1930 - குடிஅரசிலிருந்து..


இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு.

பெய்சிங் (சீனா) 100000


கெய்ரோ 40000


காஷான் 40000


லிபன்   50000


மொராக்கோ   12000


தென் அமெரிக்கா   50000


அலப்போ 20000


தென் இத்தாலி  14000


மென்சோடா  12000


பெரு எக்வாடா 25000


கராகாடோ 37000


ஜப்பான்   30000


இந்தியா   20000


பிரான்ஸ்கோ, சிசிலி     77000


மத்திய இத்தாலி    30000


கான்சு சினா 300000


ஜப்பான்    220000


சில்லரையாக பல இடங்களில்    100000


ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படிப் புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர் களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில் அவர்கள் அதற்கே பிறந்தவர்கள். நிற்க.

-  விடுதலை நாளேடு, 8.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக