ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கலைவாணர் பற்றி பெரியார்



புராணம், மோட்சம், நரகம், சாஸ்திரம், கடவுள்கள் ஆகியவை பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் உயிரோடு கலந்தும், வாழ்வோடு கலந்தும், மதத்தோடு கலந்தும் பலவிதமான ஸ்தாபனங்களோடு செல்வாக்காய் பத்திரமாய் அனேக காவலாளிகளோடு இருப்பதை வெறுக்கும்படியாக சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் படியில் - அதுவும் இதைப் பார்க் கவும் கேட்கவும் பணங்கொடுத்து விட்டு வந்து பகலும் இரவும் காத்துக்கிடக்கும்படியாகச் செய்து வருகிறார் என்.எஸ். கிருஷ்ணன்.
சாகும்வரை செய்துகொண் டே இருக்கப் போகிறார் என்றால் இதைவிட ஒரு புரட்சி வீரனை நாம் எங்கு காணமுடியும்? வேறு எத்தனை பேர்தான் இருக் கிறார்கள்?  நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்ப்போம்.
(பேராசிரியர் அன்புக் கொடி நல்லதம்பி எழுதிய சிரிப்பில் மலர்ந்த சிந்தனை மலர்கள் என்ற நூலிலிருந்து....)

சிரிக்க... சிந்திக்க!
ஆஸ்திகன்: (மகனை நோக்கி) ஏய் தம்பி, நரசிம்மா! கொல்லைக் கதவைத் தாளிட்டியா? குறுக்குத் தாழ்ப்பாளைப் பார்த்தியா? தெருக்கதவைத் தாளிட்டியா? ஜன்னலை ஒழுங்காக மூடுனியா? சாவிக் கொத்தை தலைகாணிக்கு அடியில் ஜாக்ர தையா வைச்சிட்டியா? ஏன் னா ஊரெல்லாம் ஒரே திருட்டுப் பயம்!
மகன்: என்னப்பா இப்படி பயப்படுறேள்? நம்ப ஜாக்ரதையிலே என்ன இருக்கு? எல்லாம் எமை ஆளும் ஈசன் செயல்! என்னதான் பாதுகாத்தாலும், எப்படியும் போறது போவத்தான் செய்யும்! நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி...
ஆஸ்திகன்: ஊம் வாயை மூடு! என் பிரசங்கத்தை என்னிடமே காட்டுறியா? அதிகப் பிரசங்கி! அதெல்லாம் முட்டாப் பசங்களுக்குச் சொல்றப் பேச்சு! கதவைத் திறந்து போட்டுண்டு, எல்லாம் கடவுள் செயலுன்னு தூங்குற ஒரு பக்தனைக் காட்டு என்னிடம். பைத்தியக்காரா! கடவுளுக்கே பூட்டும் சாவியும் வேண்டி இருக்குடா - அதுவும் பூசணிக்காய்ப் பெரிசுலே!
------------------------------------------------------
காவலர்: திருடினதுதான் திருடினாய், சாமி நகையைத் திருடலாமா?
திருடன்: பற்றற்றவனாயிற்றே பகவான்! அவனுக்கு எதற்கு இந்த நகை என்று திருடிவிட்டேன்.
காவலர்: பகவான் நகையை உன் மனைவி கழுத்தில் சூட்டலாமோ?
திருடன்: பற்றுள்ளவளாயிற்றே அவள். பற்றற்ற திலிருந்து கிளம்பி பற்றை நோக்கிச்  செல்வதுதானே ஆத்மார்த்தம்!
------------------------------------------------------
புலி: கடவுளே! உன் கருணையே கருணை! என்னையும் படைத்து, இந்த ஆட்டையும் படைத்தாயே! இல்லாட்டிப் போனா என் வயிறு என்னாவறது? ஈசனே, உன்னைப் போற்றுகிறேன்; உன் புத்தியை மெச்சு கிறேன்!
ஆடு: நாசமாய்ப் போன கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? கருத்தில்லையா? என்னைத்தான் படைத்தாய்; இந்தப் பாழாய்ப் போன புலியையும் ஏன் படைத்தாய்? உன்னை போயும் போயும் கருணாமூர்த்தி என்கிறார்களே - இந்தக் கபோதிகள்! வெட்கக்கேடு! அசல் வெட்கக்கேடு!!
-விடுதலை,28.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக