28-06-1931 - குடிஅரசிலிருந்து...
நாம் இங்குதான் பாரத வீரர்கள் பீமன் சந்ததிகள் என்று மேடையேறிப் பேசிக்கொள்ளுகின்றோமே யொழிய, ஓர் அராபிதேசத்தவனை நடுத்தடத்தில் கண்ணில் பார்த்து விட்டால் நமது மக்கள் ஆண் பெண் அடங்கனும் நடுங்குகின்றன. காலுடன் மூத்திரம் பெய்ந்து கொள்ளுகின்றன. வெளிதேசத்திலிருந்து எவன் வந்தாலும் அவனைக்கண்டால் இப்படித்தான் நடுங்குகின்றோம்.
வெளிநாட்டுக்காரன் இங்கு வந்து சம்பாதித்துப் போவதற்குக் காரணமே நமக்கு வீரமும் நாணயமும் அற்றத்தன்மையேயாகும்.
நமது கிராமங்களில் ஒரு அராபி தேசத்துக்காரன் 4 ரூபாய் பெறும்படியான ஒரு சால்வையை 8 ரூபாய்க்கு கொடுத்து விட்டு 6 மாதம் பொறுத்து வந்து பணம் கேட்டால் வெற்றிலை, பாக்கு தட்டில் வைத்து சங்கராச்சாரிக்கு காணிக்கை கொடுப்பது போல் பயபக்தியுடன் கொடுத்து விடுகிறோம், அவனைக் கண்டால் நடுங்குகின்றோம்,
உள்ளூர்வாசியிடம் கடன்பட்டிருந்தாலோ, அவனுடைய கடனைக்கொடுக்க மறுப்பதுமல்லாமல் பண்ணுவதைப்பண்ணு என்றும் சொல்கிறோம். அயலூரானென்றால் நடுங்குகின்றோம். இதற்குக் காரணமென்ன? ஏனெனில் நமது தைரியம் அவ்வளவில் தானிருக்கின்றது மற்றும் ஓர் உதா ரணம் என்னவென்றால் ஒரு ரயில் வண்டியில் ஆப்கன் தேசத்தான் ஒருவன் இருந்து அவ்வண்டி முழுமையும் காலியாகயிருந்தாலும் கூட நாம் அவ்வண்டியில் ஏறமாட்டோம்.
நாம் பத்து பெயர்கள் வரை ஒரு அறையி லுட்கார்ந்து அவ்வண்டியில் இடமில்லாதிருந்த போதிலும்கூட வடதேசத்தானொருவன் தைரியமாக அங்கு வந்து உட்காருவான். நாமும் உடனே வண்டியைக் காலிசெய்துவிடுவோம். ஆனால் நாம், காளி, வீரன், கருப்பன், முனியன், சடையாண்டி முதலியவீரம் பொருந்திய தெய்வங்களை கும்பிடு கிறவர்களாகவுமிருக்கிறோம். எதற்காகக் கும்பிடு கிறோம் என்றால் அத்தெய்வங்களுக்குள்ள தைரி யம் நமக்கும் வரவேண்டுமெனவேதான் என் கிறோம்.
ஆனால், நாம் அதனால் தைரியமுடையவர்களாக வாழ்ந்திருகின்றோமா என்று பார்த்தாலோ, அப்படி யுமில்லை, நமது தைரியமெல்லாம் முதலில் அடி பார்க்கலாம் என்பதிலும் அடிவிழுந்தால் ஓடுவ தற்குள் என்ன அவசரம் என்பதிலேயே தானிருக் கின்றது. யார் அடித்தாலும், திருப்பி யடிக்கக்கூடிய நிலைமையில் நாமின்று இல்லை.
(மதுரை ஜில்லா, திண்டுக்கல் அடுத்த சித்தயங் கோட்டையில் 22.06.1931ஆம் தேதி மக்கள் விடு தலை சங்கம் திறப்பு விழாவில் ஈ.வெ. ராமசாமியின் சொற்பொழிவு)
தந்தை பெரியாரின் பொன்மொழிகள்
திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத் தன்மை இன்று நேற்றல்லாமல் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவை களாகும். திராவிட அரசர்கள் மூவேந்தர்கள், நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள். அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக்கொள்ளுபவர்களாய் இருக்கிறோம். இதன் இழிவை நம்மில் வயது வந்த வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள். ஆகவே, நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.
- விடுதலை நாளேடு, 17.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக